Thursday, September 11, 2014

பெண்கள், உடலுறவில் ஈடுபடக்கூடாது! ஏன்? எதற்கு?

எந்த மாதிரியான பெண்கள் எநதெந்த நேரத்தி ல், எந்தெந்த சூழ் நிலைகளின் போது உடலு றவில் ஈடுபடக்கூடாது.
உடல்நலக் கோளாறு காரணமாக படுக்கை யில் ஓய்வெடுக்க வேண்டும் என வலியுறுத்த ப்பட்ட பெண்கள் அந்த ஓய்வுக் காலம் முடி கிற வரை செக்ஸைத் தவிர்ப்பது நலம்.
குறிப்பாக இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைக் கான சிகிச்சையில் இருப்பவர்கள் கட்டாயம் இந்த விஷயத்தில்
எச்சரிக்கையாக இருக் க வேண்டும்.
அறுவை சிகிச்சை மேற்கொண்ட பெண்களு க்கும் குறிப்பிட்ட காலம் வரை செக்ஸ் உற வைத் தவிர்க்கச் சொல்லியே அறிவுறுத்த ப்படும். அறுவை செய்த காயம் முழுவதுமாக ஆறும் வரை செக்ஸ் கூடாது என்பார்கள் மருத்துவர்கள்.
இருவரில் யாராவது ஒருவருக்குப் பால்வி னை நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டா லோ, அப்படி இருக்குமோ என்கிற சந்தேகம் இருந்தாலோ கூட செக்ஸ் உறவு கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டு ம். இந்தக் கண்டிஷன் எய்ட்ஸுக்கு மட்டுமின்றி எல்லா விதமான பால்வினை நோய்களு க்கும் பொருந்துமாம்.

தம்பதியர் இருவரில் ஒருவருக்கு த் தொற்றும் வகையில் ஏதேனும் நோய் (அம்மை, சருமநோய் உள் பட) இருந்தாலும் அவர்கள் செக் ஸ் உறவைத் தவிர்க்க வேண்டு ம். அந்த நோய் முற்றிலும் குணமாகிற வரை அல்லது அது மற்றவ ருக்குத்தொற்றாது என்கிற நிலை உண் டாகும் வரை உறவு தவிர்க் கப்படுவது பாதுகாப்பானது என் கிறார்க ள் மருத்துவர்கள்.
உறவின் போது வலியை உணர்ந் தால், உடனடியாக அந்த உறவு நி றுத்தப்பட வேண்டுமாம். வலி எ ன்பது ஒருவரது உடலில் உண்டா கி யிருக்கிற ஏதோ ஒரு பிரச்சினைக்கான அலாரம் மாதிரி. அதை சகித்துக் கொண்டு உறவைத் தொட ர்கிற பட்சத்தில் விளைவுகள் வேறு மாதிரி மாறலாம்.

மனம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளா ல் பாதிக்கப்பட்ட தம்பதியர் செக்ஸ் உறவிலிருந்து விலகியிருப்பது நல் லது. அளவுக்கதிக மன உளைச்சல், மனச்சோர்வு, படபடப்பு போன்றவற் றால் பாதிக்கப்பட் டவர்களும் அடக்கம்.
கர்ப்பம் தரித்த ஆறாவது வாரம் முதல் பனிரெண்டாவது வாரம் வரை தாம்பத்திய உறவைத் தவி ர்ப்பது கருச்சிதைவிலிருந்து காப் பாற்றும் என்கிறார்கள் மகப்பேறு மருத்துவர்கள். கர்ப்ப காலத்தின் கடைசி இரண்டு மாதங்களும் அ தைத் தவிர்ப்பது நல்லது. கடைசி மாதங்களில் கொள்கிற உறவா னது, பனிக்குடத்தை உடையச்செய்து, ஆபத்தை உண்டாக்க லாம் என்பதே காரணமாம். பிரசவத்து க்குப் பிறகு முதல் ஆறு வாரங்க ளுக்கு செக்ஸ் வேண்டாம் என் பதே மருத்துவர்களின் பொதுவா ன அட்வைஸ். அதன்பிறகு அந்த த்தாயின் உடல் பரி சோதிக்கப் பட்டு, பிரச்சினைகள் இல்லை என்று உறுதியளிக்கப்பட்ட பிற கே செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளப்பட வேண்டும்.

தம்பதியருக்குள் சண்டை, சச்சரவு நிகழும் போது, அதற்கான ஒரு சமாதான நடவடிக் கையாக செக்ஸ் உறவைக் கையிலெடுப்ப வர் களே அதிகம். மிகப்பெரிய சண்டையைக் கூட அந்த உறவு சமாதானத்துக்குக் கொண் டு வந்து விடுவதுண்டு. ஆனால் உண்மை யில் இது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. பிரச்சினைக்கான தீர்வு முதலில் காணப்பட வேண்டும். மனங்கள் லேசாக வேண்டும். மனத்தளவில் இருவரும் நெருக்கமாக உண ர்ந்த பிறகே உடலளவிலான நெரு க்கம் தொ டர வேண்டும். இல்லாதபட்சத்தில் காலப் போக்கில் அது அந்த தம்பதியருக்கிடையே யான நெருக்கத்தையே சிதைக்கிற வாய் ப்புண்டாம்.

நாற்பது வயசாச்சா?..வாரம் ஒரு தடவை செக்ஸ் போதும்

தாம்பத்ய உறவு என்பது மருந்து போலத்தான். அதை அளவோடு வைத்துக்கொண்டால் ஆபத்தில்லை அதேசமயம் ஆசைப்பட்டு தினசரி உறவு கொண்டால் அல்லல்பட வேண்டியதுதான் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். எந்த வயதில் எத்தனை முறை உறவில் ஈடுபடலாம் என்றும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன்.

புதிதாக திருமணமான தம்பதிகள் அதிகம் ஆசையோடு இருப்பார்கள். அவர்களுக்கு ஒருவரைப் பற்றி மற்றொருவர் அறிந்து கொள்ள ஆர்வம் அதிகம் இருக்கும். எனவே அவர்கள் முதலிரவு நாளில் நான்கைந்து முறை கூட உறவில் ஈடுபடலாமாம். ஏனென்றால் அன்றைய தினம் அவர்களை தொந்தரவு செய்ய ஆளில்லையாம். அதனால்தான் தம்பதியர்களை தேனிலவுக்கு எல்லாம் அனுப்பி வைக்கின்றனராம்.

வயதாக வயதாக ஆர்வம் படிப்படியாக குறைந்து விடும். எனவே வயதிற்கு ஏற்ப தாம்பத்ய உறவின் அளவுகளையும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். எந்த வயதில் எத்தனை முறை ஈடுபடலாம் என்றும் அவர்களே கூறியுள்ளனர்.

22 முதல் 25 வயது வரை உடைய தம்பதியர் வாரத்திற்கு 3 முறை உறவு வைத்துக்கொள்ளலாமாம். 32 முதல் 35 வயது வரை உடையவர்கள் வாரத்திற்கு 2 முறையும், 41 முதல் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் வாரத்திற்கு ஒருமுறையும் உறவு வைத்துக்கொள்ளலாம் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர். அப்பொழுதுதான் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ஆரோக்கியமாக உணர முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.

ஏனெனில் வயதாக வயதாக செக்ஸ் பற்றிய ஆர்வம் படிப்படியாக குறைய ஆரம்பித்து விடுமாம். ஆணோ, பெண்ணோ நிறைய பொறுப்புகள் அதிகரிக்குமாம். எனவேதான் செக்ஸ் விசயத்தில் கணவனோ, மனைவியோ கட்டாயப்படுத்தக்கூடாது என்கின்றனர் நிபுணர்கள்.

ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் கனிவான பேச்சு, கரிசனமான செயல்பாடுகள், சின்னதாய் தலை கோதி விடுவது, அன்பாய் கை, கால் பிடித்து விடுவது போன்றவையே செக்ஸ் உறவை விட மேம்பட்டதாய் இருக்கும் என்றும் அதைத்தான் பெரும்பாலோனோர் விரும்புகின்றனர் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
திருமணமான புதிதில் ஒருவருக்கொருவர் ஆர்வக்கோளாறினாலும் தங்களை நிரூபிக்க வேண்டிய நிர்பந்தத்தினால் அடிக்கடி உறவில் ஈடுபடுவார்கள். ஆனால் குழந்தை பிறந்து சில வருடங்கள் கடந்த பின்பு பொறுப்புகளும், பணிச்சூழலும் ஒரு வித அயர்ச்சியை ஏற்படுத்திவிடும். எனவே செக்ஸில் கொஞ்சம் ஆர்வம் குறைந்து விடும். எனவேதான் தாம்பத்ய உறவுக்கு என்று சில எல்லைகளை வகுத்துக்கொண்டால் யாருக்கும் எந்த வித சிரமமும் இருக்காது வாழ்க்கையும் சிக்கல் இல்லாமல் தெளிந்த நீரோடையாய் போகும் என்கின்றனர் நிபுணர்கள்.

மார்பகம் பெருசா இருக்கா இத பண்ணுங்க ஆண்களே !

நீங்கள் ஆணா? உங்களுடைய மார்பக சதைகள் தளர்ந்து தொங்குகின்றனவா? உங்களுடைய முகத்தை கண்ணாடியில் பார்க்கும் போது வெட்கமாக உள்ளதா? மற்றவர்கள் இதனால் உங்களை கேலி செய்கிறார்களா? இந்த கேள்விகளுக்கெல்லாம் நீங்கள் ஆம் என்று பதில் சொன்னால், இந்த கட்டுரை கேள்விகளை தவிடு பொடியாக்க உங்களுக்கு உதவும் என்பதில் சந்தேகம் வேண்டாம். ஏனெனில், ஆண்களுக்கு இருக்கும் இந்த பிரச்சனைகளை சரி செய்யக் கூடிய உடற்பயிற்சிகளைப் பற்றியே இங்கு நாங்கள் தகவல்கள் தரப் போகிறோம்.

இவ்வாறு ஆண்களின் மார்புகள் தொங்குவதற்கு சில காரணங்கள் உள்ளன. அது மருந்துகளின் பக்க விளைவுகளாகவோ, அதீதமான உணவுக் கட்டுப்பாடுகளால் வந்ததாகவோ அல்லது மரபு சார்ந்த பிரச்சனையாகவோ இருக்கலாம். முதன்முறையாக ஜிம்முக்கு போறீங்களா? இதெல்லாம் ஞாபகத்துல வெச்சுக்கோங்க…

இந்த கட்டுரையின் மூலமாக தொங்கி விழும் மார்பகங்களை சரி செய்து உங்களை கவர்ச்சியாகவும், ஃபிட்டாகவும் மற்றும் முறுக்குள்ள ஆணாகவும் காட்ட உதவும் உடற்பயிற்சிகளை அறிய முடியும். ஆனால், எண்ணெய் நிரம்பிய உணவுகளையும், தேவைக்கு அதிகமாகவும் சாப்பிடாமலும் மற்றும் தினமும் முறையாக உடற்பயிற்சிகளை செய்து வந்தாலும் தான் இந்த பிரச்சனை தீரும் என்பதை மனதில் கொள்ளுங்கள். மேற்கண்ட கட்டுப்பாடுகளில் எதை நீங்கள் தவறவிட்டாலும், கிடைக்கும் பலன்களில் 60 முதல் 40 சதவிகிதம் குறைந்துவிடும். இதோ அந்த உடற்பயிற்சிகள் உங்களுக்காக…

உங்களுடைய மார்புகள் தொங்கிக் கொண்டிருக்கும் பிரச்சனையை சரி செய்ய விரும்பினால் ஓடத் துவங்குங்கள். இந்த பயிற்சியின் மூலம் உடலில் அதிகமாக உள்ள கொழுப்புகள் எரிக்கப்படும் – மார்பில் உள்ள கொழுப்புகள் மட்டுமல்லாமல் வயிறு, அடி வயிறு போன்ற இடங்களின் கொழுப்புகளும் கரையும். ஓடுவதன் மூலம் உங்களுடைய உடலின் தலை முடி முதல் கால் பாதம் வரையிலான பகுதிகள் அனைத்தும் அதிர்வடைகின்றன. இதன் மூலம் 70 முதல் 80 சதவிகித அளவிற்கு கொழுப்புகளை கரைக்க முடியும். உங்களுடைய மார்பக கொழுப்புகளை நீங்கள் கரைக்க விரும்பினால் ஒரு நாளுக்கு 2 கிமீ தூரம் ஓட வேண்டும். இதில் உங்களுக்கு நீங்கள் உண்மையாக இருக்க வேண்டியது அவசியம். இவ்வாறு ஓடத் துவங்கும் போது கடினமாக இருந்தால், மெதுவாக ஜாகிங் செய்வது போல ஓடுங்கள். ஆனால் நடந்து செல்ல வேண்டாம்.

உங்களுடைய மார்பகத்தின் தேவையற்ற கொழுப்புகளை கரைக்கும் மற்றுமொரு பயனுள்ள உடற்பயிற்சி இதுவாகும். இந்த பயிற்சி உங்களுடைய மார்பு மற்றும் பிற உடல் பகுதிகளிலிருந்து 100% கொழுப்பை கரைக்கும் பயிற்சி ஆகும். நீங்கள் இந்த பயிற்சியை தினமும் உங்களுக்கு உண்மையாக செய்து வந்தால் ஒரே மாதத்தில் நல்ல பலன் கிடைக்கும். இந்த உடற்பயிற்சியை ஓடும் போதோ அல்லது ஓடாமலோ கூட செய்யலாம். ஆனால், ஓடி முடித்த பின்னரும், உங்களுடைய ஓய்வு வேளையிலும் இந்த பயிற்சியை செய்ய மறக்க வேண்டாம். கயிறு கொண்டு ஸ்கிப்பிங் செய்வது உங்களுக்கு கடினமாக இருந்தால், மெதுவாக குதித்து இந்த பயிற்சியை தொடங்குங்கள். ஆரம்பத்தில் 90 முதல் 150 முறை ஸ்கிப்பிங் செய்யத் தொடங்கி, போகப்போக அளவை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த எண்கள் அதிகமாக இருப்பதை எண்ணி பயப்படாமல் மூன்று தடவைகளாக இந்த பயிற்சியை செய்ய தொடங்குங்கள், எண்களும் எடையும் படிப்படியாக குறையும்.

மார்பகங்களை ஆண்மைத் தன்மையுடன் காட்டுவதற்கு புஷ்-அப் பயிற்சி மிகவும் உதவும். இது சற்றே கடினமான பயிற்சியாக இருந்தாலும், செய்ய முடியாத பயிற்சி கிடையாது. புஷ்-அப் பயிற்சிகள் மார்பகங்களை முறைப்படுத்துவதற்கான ஸ்பெஷல் உடற்பயிற்சியாக இருப்பதால் அது மார்பகத்தில் உள்ள கொழுப்புகளை நேரடியாக குறைக்கிறது. இந்த பயிற்சியை தொடங்கும் போது உங்களுடைய பாதங்களில் முழுமையான அழுத்தம் தராமல் முழங்கால்களை பயன்படுத்துங்கள். ஆனால், சிறிது காலத்தில் உங்கள் கைகள் பலப்பட்ட பின்னர் முறையாக இந்த பயிற்சியை செய்யத் தொடங்க வேண்டும். ஓட்டம் மற்றும் ஸ்கிப்பிங் பயிற்சிகளுக்குப் பின்னர் இந்த உடற்பயிற்சியை நீங்கள் செய்யலாம். புஷ்-அப் பயிற்சியை செய்யத் தொடங்கும் முன்னர் உங்களை நீங்கள் சிறு சிறு பயிற்சிகள் செய்து தயார்படுத்த வேண்டியது அவசியம்

சற்றே உயர்-நிலை உடற்பயிற்சிகளில் ஒன்றான சின்-அப் பயிற்சியை செய்வது கனமான உடல்வாகு கொண்ட மனிதர்களுக்கு கடினமாக இருக்கும். ஆனால், இது உடலுக்கு மிகுந்த வலிமை தருவதுடன், கட்டுக்கோப்பாகவும் வைக்கும். இந்த பயிற்சியை செய்யும் போது மற்றவர்களின் உதவியை நீங்கள் நாடலாம். ஒரு உதவியாளர் இருந்தால் அவர் உங்களுடைய முழங்காலை தூக்கிக் கொள்ளச் செய்யலாம். உங்களுடைய கைகள் உடல் எடையைத் தாங்கிக் கொள்ளும் என்றளவிற்கு வலிமை பெற்ற பின்னர், இந்த பயிற்சியை நீங்கள் பிறர் உதவியின் செய்யலாம்.

உங்களுடைய மார்புகளுக்கு ஆண்மைத்தனமான வடிவத்தை அளிக்கும் மற்றுமொரு உடற்பயிற்சியாக டம்பெல் உள்ளது. இந்த பயிற்சி உங்களுடைய மார்பின் அகலத்தை அதிகப்படுத்தி, அதை கவர்ச்சியான அம்சமாக்கி விடும். ஒரு டேபிள் மற்றும் டம்பெல்-ஐ வைத்து இந்த பயிற்சியை செய்யலாம் அல்லது உங்களுடைய பேலன்ஸ் தவறாமல் எடையுள்ள பொருள்களை தூக்கலாம். இந்த பயிற்சியை எங்ஙனம் சரிவர செய்வது என்பதை அறிய யூ-டியூப்-ல் வரும் காட்சிகளை பாருங்கள். அதில் எண்ணற்ற செயல் காட்சிகள் படமாக விடப்பட்டுள்ளன.

பெஞ்ச் பிரஸ் இது மார்பை அழகுபடுத்தும் மற்றுமொரு பயிற்சியாகும். இந்த பயிற்சியை சாய்வாகவும், சரிவாகவும் மற்றும் நேரான நிலையிலும் செய்யக்கூடிய பயிற்சியாகும். இந்த பயிற்சி மார்பு பகுதிக்கு சரியான வடிவத்தை கொடுக்க உதவியாக இருக்கும். இவற்றில் ஏதாவது ஒரு பயிற்சியை செய்து உங்களுடைய மார்பக பகுதிகள் தொய்வாக உள்ளதை சரி செய்ய முடியும்.

டக் ஜம்ப்ஸ் பயிற்சியில் குதித்துக் கொண்டே உங்களுடைய முழங்காலைக் கொண்டு நெஞ்சைத் தொடுமாறு செய்ய வேண்டும். இது தொடக்க நிலையில் உள்ளவர்களுக்கு மிகவும் கடினமான பயிற்சியாக இருக்கும். ஆனால் நீங்கள் குதிப்பதையோ அல்லது ஸ்கிப்பிங்கையோ தினமும் செய்து வந்தால் இந்த பயிற்சியையும் எளிதாக செய்ய முடியும். இந்த உடற்பயிற்சி கடினமானது என்று நாங்கள் குறிப்பிட்டிருந்தாலும், அதே அளவு பயன் மிக்கது என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். ஒரு நாளைக்கு மூன்று வேளை என 30 டக் ஜம்ப்களை செய்தால் குறைந்தது 20% கொழுப்பை கரைக்க இயலும். நீங்கள் மேலும் மேலும் இந்த எண்ணிக்கையை கூட்டினால் பலனும் அதிகரிக்கும்.

மிகவும் தளர்வான மார்புகளை கொண்டிருக்கும் ஆண்கள் பயன்படுத்த இதனை பயன்படுத்தலாம். தங்களுடைய மார்பு பகுதி மிகவும் தொய்வாக மற்றும் அசௌகரியமாக இருக்கிறது என்று கருதுபவர்கள் ஆண்களுக்கான பிராவை அணியலாம். இந்த யோசனை இயற்கைக்கு மாறானதாக உங்களுக்குத் தோன்றினாலும், உடற்பயிற்சி செய்ய முடியாத தேகம் கொண்டவர்களுக்கு மிகவும் பயன் தரும் அம்சமாக இருக்கும். எனவே, தொடக்கத்தில் இந்த யோசனையை பயன்படுத்துங்கள். 2 அல்லது 3 மாதங்களுக்குப் பிறகு உங்களுடைய தளர்வான மார்பக சதைகள் குறைந்துவிடும்.

முதல் மூன்று உடற்பயிற்சிகளும் மிகவும் முக்கியமானவை மற்றும் அவை ஆண்களின் மார்பக சதைகளை வெகுவாக குறைக்கக் கூடியவையாகும். எனவே, நீங்கள் உண்மையிலேயே பலனடைய வேண்டும் என்று விரும்பினால், மனசாட்சிக்கு விரோதமில்லாமல் இந்த பயிற்சியை தினசரி செய்து வர வேண்டும்.

பெண்ணுடைய செக்ஸ் உணர்வுகளும் உறுப்புக்களும் – அவற்றைத்தூண்டும் முறைகளும்:

பெண்களின் செக்ஸ் உணர்வுகள்
செக்ஸ் என்கிற விசயம் காலம் காலமாக ஆண்களின் கோணத் தில் இருந்தே அணுகப்பட்டும், விவாதிக்கப்பட்டும் வந்திருக்கி றது. நிஜமாக பெண்ணின் உணர் ச்சி நிலைகள் என்ன? பெண்ணி ன் அணுகுமுறை செக்ஸ் விசயத்தில் எப்படியிருக்கும்? என்கிற பல விசயங்களை ஆராயவே இக்கட்டுரை.
பெண்ணிற்கும் உணர்ச்சிகள் உண்டு. அவ்வுணர்ச்சியை திருப்திகர மாக நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பு பெண்களுக்கு
உண்மையாக வழங்கப்பட வே ண்டும் என்றெல்லாம் ஆண்கள் பெரும்பாலும் எண்ணுவதே கிடையாது. கணவன் மனைவி யாக பல காலம் வாழ்ந்து இல்ல ற சுகம் காணும் பலரிடம்கூட இத்தகைய குறைபாடு இருக்கி றது. இதற்கு மனரீதியாக, உடல் ரிதியாக பல்வேறு காரணங்க ளும், செக்ஸ் பற்றிய முழுமையான அறியாமையும்கூட காரணங் களாக அமைந்திருக்கின்றன.
திருமணமான அனைவரும் நல மாக மனநிறைவுடன் வாழ்கிறார் களா? என்றால் 60 சதவிகிதம் முதல் 70 சதவிகிதம் தம்பதியின ர் திருமண உறவில் முழுமையா ன மகிழ்ச்சியடையாதவர்கள் என தெரிகிறது.
இதனுடைய ஒரு விளைவு இன்று எல்லோரும் கண்கூடாகக் காணு ம் திருமண உறவில் விரிசல் – விவாகரத்து போன்றவையாகும்.
எனவே திருமணம் செய்து கொண்டவர்களும் சரி, திருமண வாழ்வில் இணையப்போகும் இளம் வயதினரும் செக்ஸ் பற்றியும், மனித உணர்வுகள், உறவுகள் பற்றியும் அறிந்து வைத்திருப் பது இன்றிய மையாதது ஆகும்.
சமீப காலம்வரை பெண்களு டைய செக்ஸ் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதது மட்டுமல்ல, அவர்கள் ஆணுடைய கட்டளைக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும், அதைத்தவிர அவர்கள்விரும்புவது எதுவும் குற்றம் என்ற உணர்வே சமுதாயத்தில் மேலோ ங்கி இருந்தது. இன்று நிலை மிக வும் வேகமாக மாறி வருகி றது.
பெண்களும் முழுமையான இன் பம் அனுபவிக்க வேண்டும். அவ் வுரிமை அவர்களுக்கு உண்டு என்று ஏற்றுக் கொள்ளப்படுகிற து. இயற்கையில் பார்த்தால் ஆண் களைவிட பெண்களே அதிகமான செக்ஸ் இன்பம் அனுபவிப் பதற்கான உடலமைப்புடன் காணப்படுகின்றனர்.

இதற்கான சான்றுகளாக:
1. பெண்ணின் மார்பு
2. கிளிட்டோரிஸ்
3. பெண் உறுப்பு

ஆகிய மூன்று உறுப்புக்களின் மூலமு ம் தனித்தனியே பெண் உச்சகட்ட இன்பத்தை அடைய முடியும்.
ஆனால் ஆண்-ஆண்குறி மூலமாக மட்டுமே இவ்வின்பத்தை அடை ய முடியும். இரண்டாவதாக, ஒரு முறை உச்சக் கட்டத்தை அடைந்த பெண் இடை வெளியி ல்லாமல் பல முறை உச்ச கட்டத்தை அடைய முடியும். ஆனா ல் ஆண்கள் ஒரு முறை உச்சகட்டம் அடைந்தவுடன் 30 நிமிடங்களாவது மற் றொரு எழுச்சிக்காக காத்திருக்க வேண்டும்.
உண்மை இவ்வாறு இருந்தாலும் நடைமுறையில் பெண்கள் முழு இன்பத்தை பெரும்பாலும் அனுபவிப்பதே இல்லை இவற்றை போக்குவது எவ்வாறு?

1) பெண்ணினுடைய உணர்ச்சிக ளை தூண்டும் உறுப்புக்களையும், அதன் முறைகளைப் பற்றியும் முழு மையாக அறிந்திருத்தல்.

2)பெண்ணிடம்உள்ள செக்ஸ் குறை பாடுகளை செக்ஸ் மருத்துவர் மூல ம் சரிசெய்யமுடியும் என்பதை அறி தல்.

பெண்ணுடைய செக்ஸ் உறுப்புக்க ளும் அதனைத் தூண்டும் முறைகளும்:

1) பெண்ணுடைய மார்புகள் சிறியதாக இருந்தாலும் பெரியதாகஇருந்தாலும் அதை ஆண் தூண்டுவதன் மூல ம் பெண்கள் இன்ப மும், கிளர்ச்சியும் அடை கிறார்கள்.
உடலுறவில் ஈடுபட ஆரம்பிக்கும் போதே மார்புகளும் பெரிதாகிறது. மார்பகக் காம்பு கள் விரைத்து எழுகின்றன. சில பெண்கள் மார்பு காம்புகளை ஆண் தொடும் தூண்ட லாலேயே முழுமையான உச்சகட்டத்தை அடை கின்றனர். ஆனால் மற்றவர்கள் அந்த அளவு உணர்வுகளைப் பெறுவதில்லை.
கணவன்-மனைவியின் மார்பு காம்புகளை நாக்கினால் வருடுவதா லும், சுவைப் பதினாலும் பெ ண்ணுடைய உணர்வு களை மிகவும் தூண்டலாம். பெண் களில் 50 சதவிகிதம் பேர் ஆண்களுடைய தூண்டுதலி னால் எரிச்சடைகிறார்கள். ஏனெனில் ஆண்கள் தங்களு டைய இன்பத்திற் கேற்றவா றுதான் மனைவியின் மார்பகங்களை கையாளுகிறார்கள். பெண் கள் இந்நிலையில் மார்பகங்களை எவ்வாறு தூண்ட வேண்டும்? என தங்கள் துணைவருக்கு இனிமையாக, இணக்கமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.
கிளிட்டோரிஸ் தூண்டுதல்:
பெண்கள் மற்ற தூண்டுதல்களைவிட அதிக உணர்ச்சிக்கு ஆளாவது கிளிட்டோரிஸ் தூ ண்டுதல் மூலம்தான். சாதாரணமாகவே சை க்கிள் ஓட்டுதல், தையல் மிஷன் தைப்பது போன்றவற்றின் மூலம் கூட கிளிட்டோரிஸ் தூண்டப்படுவதால் பெண்களில் சிலர் ஓர ளவு கிளர்ச்சி அடைகின்றனர்.
செக்ஸ் ஆரம்பித்தவுடன் கணவரை கிளிட்டோரிஸை தூண்டுமாறு மனைவி கூறலாம். இதை விரல்களின் மூலமும், நாக்கின் மூலமும் தூண்ட முடியும். தொடர்ந்து பல நிமிடங்கள் தூண்டுவதன் மூலம் பெண்களை உச்சக் கட்டத்தை அடைய வைக்கலா ம்.
பெண் உறுப்பு:
இதன் வழியாக இன்பம் அடைவது அனைவரும் அறிந்த ஒன்று. ஆ னால் பல்வேறு நிலைகள், மாற்றங்களை இதில் ஏற்படுத்தி இன்பத்தை அதிகரிக்க முடியும். பெண் உறுப்பில் உடலுறவின் போது வலி ஏற்படுவது ஒரு முக்கிய பிரச்சி னை. பெண்ணுறுப்பின் நுழைவாயி ல் சிலசமயம் இறுகமூடிக்கொள்ளு ம். ஆணுறுப்பை மட்டுமின்றி கை விரலைக்கூட அனுமதிக்காத அள வு இறுக்கமாக இருக்கும். 5 சதவிகி தம் வரை பெண்களுக்கு இந்நோய் இருக்கலாம். இப்பெண்களுக்கு உடலுறவு என்றாலே பயமாக இரு க்கும்.
இவர்களுடன் ஆண் உறவு கொள்ள இயலாது. தொடர்ந்து இந்த நிலை நீடித்தால் ஆணுக்கு விரைப்பு த்தன்மைகூட ஏற்படாமல் போகக் கூடும். இது முழுமையாக குணப்படு த்தக்கூடிய பிரச்சினை என்பதை பெண்கள் தெரிந்து குணப் படுத்திக் கொள்ள முன் வரவேண்டும். இதன் மூலம் தம்பதியினர் ஆரோக்கியமா ன குடும்ப வாழ்க்கை- குழந்தைப் பேறு அடைய முடியும்.
பொதுவாக உடலுறவில் ஏற்படும் கிளர்ச்சி மட்டும் பெண்கள் உச்ச கட்டம் அடையப் போதுமானதாக இல்லை. அதற்கு மேலும் அவர்களு க்கு தூண்டுதல் தேவை. உச்சகட்டம் அடையாமல் ஒரு பெண் இருப்பதற் கு பல காரணங்கள் இருக்கலாம்.

1) தனிமை இல்லாமல் குழந்தைக ளுடன் தூங்குவது 2) நேரம், இடம் வசதி 3) கணவருடைய ஒத்துழைப்பு இல்லாமை
உச்சக்கட்டத்திற்குப் பின்பு:
உச்ச கட்டத்திற்கு பின்பும் பெண்க ள் தங்கள் உடலை ஆண்கள் வருட வேண்டும். தங்களை கட்டி அணை த்துக் கொண்டபடி தங்கள் கணவர் இருக்க வேண்டுமென நினைக்கி ன்றனர். ஏனெனில் உச்ச கட்டத்திற் கு பின்பு பெண்களின் கிளர்ச்சி உட னடியாக கீழிறங்குவதில்லை. மா றாக ஆண்கள் விந்து வெளியான வுடன் ஆழ்ந்து தூங்கத் தொடங்கி விடுகின்றனர். ஏனெனில் ஆண்களிடம் உச்ச கட்டத்திற்கு பின்பு உணர்ச்சிகள் முழுமையாக கீழே இறங்கி விடுகின்றது.
பெண்மைக் குறைவு:
ஆண்களுக்கு ஆண்மைக்குறை வு ஏற்படுவதுபோல பெண்களு க்கு பெண்மைக்குறைவு அல்ல து உடலுறவில் விருப்பமின்மை – ஏற்படலாம். இப்பெண்கள் உட லுறவில் ஈடுபட்டு கருத்தரித்து க் குழந்தைப் பேறு பெற்றாலும் இவர்கள்-உடலுறவில் இன்பத் தை முழுமையாக அனுபவிப்பதில்லை. தாம்பத்திய வாழ்க்கை யை ஒரு கடமையாகவே செய்கிறார்கள்.

இதற்கான காரணம்.
1. சிறு வயதில் ஏற்பட்ட செக்ஸ் வக்கிரங்கள்
2. வளர்ப்பு முறை
3. கற்பழி க்கப்படுதல் போன்றவை யாகும்.
பெண்களுக்கான இப்பிரச்சினைக் கு எவ்வாறு தீர்வு காண்பது?
ஆண்களுக்கான ஆண்மைக் குறைவு- விந்து முந்துதல் போன்ற பிரச்சினைகளை விஞ்ஞான முறையில் நு}று சதவிகிதம் குணப் படுத்த முடியும். அது போலவே விஞ்ஞான அடிப்படையில் பெண் களுடைய பிரச்சினைகளையும் முழுமையாக குணப்படுத்த இய லும். பிரச்சினைக்கான காரணங் களை அறிந்து அதனை முற்றிலு மாக களைந்து குணப்படுத்தலாம்.
நோயும், செக்ஸும்:
சில வகை பொதுவான நோய்களான காசநோய், புற்று நோய், இரு தய நோய், சிறுநீரக பாதிப்பு போன்ற பெரிய நோய்களின்போது அந் த நோயாளிகளுக்கு எல்லா விச யங்களிலும் கவனமும் ஆர்வமு ம் குறைந்து வருவதால் இயல் பாக செக்ஸ் விசயத்திலும் அவர் களுக்கு விருப்பமும், ஈடுபாடும் குறைந்துவிடும்.

பெண் உறுப்பு நோய்கள்:
1) செக்ஸினால் உண்டாகும் நோய்கள்
2) பெண் உறுப்பில் ஏற்படும் சிலகாளான் நோய்கள் உடல் உறவின்போது எரிச்சலை ஏற்ப டுத்தும்.
3) ஹெர்பிஸ் – இதுவும் பெண் குறியில் ஏற்படும் நோய்தான். இ தனாலும் உடல் உறவின்போது வலி ஏற்படலாம்.
4) வெஜினியஸ்மெஸ் – இது பெண் உறுப்பில் ஏற்படும் இறுக்கமாகும். இதனாலும் உடல் உறவின் போ து வலி ஏற்படும்.
இத்தகைய நோய்களை எல்லாம் சில சமயம் பெண்களின் பாலியல் உணர்ச்சி களை பாதிக்கலாம். இதனை இன் றைய நாளில் எளிதாக குணப்படுத்தி விடலாம்.

‘மார்னிங் ஷோ’ மனதிற்கும், உடலுக்கும் நல்லது – ஆய்வில் தகவல்

அதிகாலை நேரத்தில் தாம்பத்ய உறவு கொள்வது மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படுவதை தடுக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காலை நேரத்திய உறவு உணர்வு ரீதியாக மட்டுமல்ல உடல்ரீதியாகவும் நல்லது என்றும் மருத்துவர்கள் சான்றிதழ் அளித்துள்ளனர்.
அதிகாலை நேரம் ஜன்னல் வழியே ஊடுருவும் தென்றல், அருகில் கண்மூடி படுத்திருக்கும் துணையின் நிலை இதனை கண்டால் காலைநேரத்தில் காதல் உணர்வுகள் கிளர்ந்தெழும். காலையில வேற வேலையில்லையா என்று செல்லமாய் உங்கள் துணை கோபித்துக் கொண்டாலும் அதையே சம்மதமாக எடுத்து சந்தோசமாக காரியத்தை முடித்துவிடுவார்கள்.
ஆண்களில் பெரும்பாலானோருக்கும் காலை நேர உணர்வு எழுவது சகஜம். ஆனால், பெரும்பாலான பெண்களுக்கு காலை உறவில் நாட்டம் ஏற்படுவதில்லை. ஆனால் காலை நேர உறவு என்பது அன்றைய பொழுதின் மகிழ்ச்சியான தொடக்கம் மட்டுமல்ல ஆரோக்கியமானதும் கூட என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி காலை நேரத்தில் உறவில் ஈடுபடும் போது ஆக்ஸிடோசின் எனப்படும் நல்ல ரசாயனம் வெளிப்படுகிறதாம். இது நாள் முழுவதும் தம்பதியரை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கிறதாம்.

தொடர்ந்து காலை நேர உறவில் ஈடுபடுவது மனதிற்கு அமைதியை ஏற்படுத்துவதோடு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறதாம்.
நம்பினால் நம்புங்கள் காலை நேரத்தில் உறவு கொள்வதன் மூலம் சளி, காய்ச்சல் போன்ற நோய்கள் இருந்தாலும் உடனே குணமாகிறதாம். அதுபோன்ற நோய்கள் வரவே வராதாம். மேலும் கூந்தல், சருமம், நகம் போன்றவை ஆரோக்கிய வளர்ச்சி அடைகிறதாம்.

வாரத்திற்கு மூன்று முறை காலை நேரத்தில் உறவில் ஈடுபடும் தம்பதியருக்கு மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்பே இல்லை அடித்து சொல்கின்றனர் மருத்துவர்கள்.
வற்புறுத்துவது கூடாது காலை நேர உறவு என்பது நல்ல ஐடியாதான் என்கிறார்கள் மன நல மருத்துவர்கள். நல்லதொரு இரவுத் தூக்கத்தை மேற் கொள்பவர்களுக்கு காலையில் உடலும், மனமும் புத்துணர்ச்சியோடு இருக்கும். உடலில் வளர்ச்சி ஹார்மோன்கள் தூண்டப்படும். உடலும் நல்ல வலுவுடன் இருக்கும். இதனால் காலை நேரத்தில் உறவில் ஈடுபடும்போது அது நிச்சயம் சிறப்பாகவே இருக்கும். அதேசமயம், பெண்களும் நல்ல மூடில் இருக்கும்போது மட்டுமே ஆண்கள் காலை நேர உறவுக்கு முயற்சிக்கலாம். மாறாக வற்புறுத்துவது தவிர்க்கப் பட வேண்டும் என்கிறார்கள் அவர்கள்.
மென்மையை கையாளுங்கள்

எந்த நேரமாக இருந்தால் என்ன, உறவுக்கு மிக முக்கியம் மென்மையான அணுகுமுறைதான். காலையாக இருந்தாலும் சரி, இரவாக இருந்தாலும் சரி அந்த உறவை, அன்புப் பரிமாற்றமாக, அணுசரணையான நிகழ்வாக, காதலுடன் கூடியதாக மாற்றிக் கொள்வதே சிறந்தது என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். காலையில் எழுந்ததும் கண்களில் ஒரு முத்தம், காது மடல்களில் உதடுகளால் ஒரு வருடல், உதடுகளில் தென்றல் பூவைத் தீண்டுவது போல வலிக்காமல் ஒரு முத்தமிட்டு, குட்மார்னிங் சொல்லி உங்களது மனைவியை எழுப்பிப் பாருங்கள், உறவைவிட அது ஆழமாக அவரது மனதைத் தொடும் என்கின்றனர் மனநல நிபுணர்கள்.

சுய இன்பம் காண்பதன் மூலம் மட்டுமே உச்சக் கட்டம் காணும் பெண்கள் !!

திருமணமான பெண்களிடம் அவர்களது செக்ஸ் வாழ்க்கைப் பிரச்சினைகள் குறித்து சமீபத்தில் ரகசிய ஆய்வு நடத்தப்பட்டிருக் கிறது. அதன்படி நூற்றுக்கு தொண்ணுறு
பெண்களுக்கு செக்ஸ் உறவு தொடர்பான ஏதோ ஒரு பிரச்சினை இருப்பது கண்டறியப் பட்டுள்ளது.

திருமணமான பெண்களை அதிகம் பாதிக்கும் சில செக்ஸ் பிரச்சினைகளும், அவற்றுக்கான காரணங்களும், தீர்வு முறைகளும் அலசப்பட்டன. அதன்படி…. மிகக் குறைவான செக்ஸ் ஆர்வம்„

குழந்தைப் பருவத்தில் பெரும்பாலான பெண்களுக்கு ஏதோ ஒரு வகையில் மோசமான செக்ஸ் அனுபவம் கிடைக்கிறது.

செக்ஸ் என்றால் என்னவென்றே தெரியாத வயதில் அவர்கள் சந்திக்கும் இந்த அனுபவம், அவர்கள் வளர்ந்து பெரியவர்களானதும் செக்ஸ் குறித்த தவறான எண்ணத்தை உருவாக்கி விடுகிறது.

இதனால் பல பெண்களுக்குத் திருமணத்திற்குப் பிறகும் செக்ஸ் அத்தனை ரசிப்பிற்குதியதாக இல்லை.

சாப்பிடுவது, தூங்குவது என்பது மாதிரி செக்ஸ் உறவும் ஏதோ மாமூலான ஒன்று என்கிற ரிதியில் செல்லும் போதும் பெண்களுக்கு அதன் மீதான ஆர்வம் குறைகிறது.

திருமணமான புதிதில் தம்பதியர் இருவரும் சேர்ந்திருந்த சந்தோஷ தருணங்கள், இருவரையும் கிளர்ச் சியூட்டிய விஷயங்கள் ஆகியவற்றை நினைவு கூர்வது இப்பிரச் சினைக்குத் தீர்வாக அமையலாம்.

தம்பதியர் இருவரும் சேர்ந்து குளிப்பது, புதிய இடத்தில், சூழ்நிலையில் உறவு வைத்துக் கொள்வதும் இதற்குத் தீர்வாகும்.

இன்னும் சில பெண்களுக்கு பிரசவம், களைப்பு, கோபம், மாத விலக்கு சுழற்சியில் ஏற்படும் கோளாறுகள், டென்ஷன் ஆகிய வற்றின் காரணமாகக் கூட செக்ஸில் ஆர்வம் குறைகிறதாம்.

மனரிதியான பாதிப்புகளாக இருந்தால் செக்ஸ் தெரபி மற்றும் கவுன்சலிங் மூலமும், உடல் ரிதியான பாதிப்புகளுக்கு ஹhர்மோன் ரிப்ளேஸ்மென்ட் தெரபி மூலமும் சிகிச்சை அளித்து இதைக் குணப்படுத்தலாம்.
பிறப்புறுப்பு வறட்சி:

இதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு. ஈஸ்ட்ரோஜன் ஹர் மோன் அளவு குறையும் போது வறட்சி ஏற்படலாம். தாய்ப் பாலூட்டும் பெண்களுக்கும், மெனோபாஸ் காலக் கட்டத்தில் இருக்கும் பெண்களுக்கும் இது சகஜம். இதற்கும் ஹhர்மோன் ரிப்ளேஸ்மென்ட் தெரபி பலனளிக்கும்.

குடிப் பழக்கம் இருக்கும் பெண்களுக்கும் பிறப்புறுப்பு வறட்சி ஏற்படுகிறது. ஆல்கஹலே அந்த வறட்சிக்குக் காரணம். குடியை நிறுத்தவதன் மூலமும், வழுவழுப்புத் திரவங்களை உபயோகிப்ப தன் மூலமும் இதைக் குணப்படுத்தலாம்.

உறவின் போது :

உறவின் போது சில பெண்களுக்குத் தாங்கவே முடியாத அளவுக்கு வலி ஏற்படலாம். பிறப்புறுப்புப் பாதையில் இரு புறங்களிலும் பட்டாணி அளவுக்குப் பெண்களுக்கு பார்த்தோலின் சுரப்பிகள் என்று உண்டு.

இவற்றின் வேலையே உறவின்போது வழுவழுப்புத் திரவத்தைக் கசியச் செய்வதுதான். இவை பாதிக்கப் படும் போது பிறப்புறுப்பில் வீக்கம், எரிச்சல் ஏற்படுவதோடு சில சமயங்களில் நடக்கவே முடியாத அளவுக்குக் கூட வலி தீவிரமாகலாம்.

மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இதை ஆன்டிபயாடிக் மருந்துகளின் மூலமோ, தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை மூலமோ சரி செய்து விட முடியும்.

வலி ஏற்படுகிற சரியான இடத்தையும், சரியான நேரத்தையும் (உறவு தொடங்கிய உடனேயா, உறவின் இடையிலா, உச்சக் கட்டம் அடைகிற போதா) சொன்னால் மருத்துவர்களுக்கு சிகிச்சை அளிக்க உதவியாக இருக்கும்.

உறவே கொள்ள முடியாத நிலை:

ஆர்வமும், ஆரோக்கியமும் இருந்தும் கூட சில பெண்களால் உறவில் ஈடுபட முடியாத நிலை ஒன்று உண்டு. அதற்கு வாஜனிஸ்மஸ் என்று பெயர். செக்ஸைப் பற்றிய பயம், கடந்த காலக் கசப்பான செக்ஸ் அனுபவங்கள், பிரசவம் போன்றவை இதற்குக் காரணமாக இருக்கலாம்.

மெனோபாஸை அடைந்து விட்ட பெண்களுக்கு பிறப்புறுப்புத் திசுக்கள் சுருங்கியதன் விளைவாக கசிவு குறைவாக இருக்கும். இவர்களுக்கும் இந்தப் பிரச்சினை ஏற்படலாம்.

செக்ஸ் தெரபியின் மூலம் இந்தப் பெண்களுக்கு இடுப்புச் சுவர் தசைகளை எப்படி hpலாக்ஸ் செய்வது என்று கற்றுக் கொடுக்கப்படும். மேலும் பெண் மேலிருந்த நிலையில் உறவு கொள்வதும் இதற்குத் தீர்வாக அமையும்.

உச்சக் கட்டத்தை அடைய முடியாமை:

சில பெண்களுக்கு உறவின் ஏதேனும் ஒரு கட்டத்தில் உச்சக் கட்டம் சாத்தியமாகிறது. இன்னும் சிலருக்கு செக்ஸின் போது குறிப்பிட்ட சில நிலைகளைக் கையாளும் போது உச்சக் கட்டம் கிடைக்கிறது.

இன்னும் சிலர் சுய இன்பம் காண்பதன் மூலம் மட்டுமே உச்சக் கட்டம் அடைகிறார்கள். குறிப்பிட்ட சிலருக்கு உச்சக் கட்டம் என்பது எப்போதுமே சாத்தியமாவதில்லை.

உச்சக் கட்டம் அடைய முடியாத பெண்கள் செக்ஸை அனுபவிக்கத் தகுதியற்றவர்கள் என்றோ, அவர்கள் உடலளவிலோ, மனத்தளவிலோ பாதிக்கப்பட்டவர்கள் என்றோ அர்த்தமில்லை.

உறவின் போது பெரும்பாலான பெண்களது கவனம் தன் கணவன் மீதே இருக்கிறது. கணவன் தேவைகளை முழுமையாக நிறை வேற்றுகிறோமா என்பதிலேயே அவர்கள் கவனம் போய் விடுவதால் தன்னை எது உச்சக் கட்டம் அடையச் செய்யும் என்பதைப் பற்றி நினைக்கத் தவறி விடுகிறார்கள்.

இந்த மாதிரிப் பெண்கள் உறவு இல்லாத நேரங்களில் தன் உடலைத் தொட்டுப் பார்த்து அதில் எந்த இடம் அல்லது எந்த மாதிhpயான ஸ்பரிசம் தனக்குக் கிளர்ச்சியைத் தருகிறது என்று கண்டறிய வேண்டும்.

அதைத் தன் கணவனிடம் சொல்லத் தயங்கக் கூடாது. எல்லாவற்றுக்கும் மேலாக உறவின் போது அவசரம் இருக்கக் கூடாது. உச்சக் கட்டம் அடையவும் பெண்கள் மேல் நிலையில் இருந்து உறவு கொள்வது பலனளிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

தாம்பத்திய உறவில் சிறிதும் நாட்டமில்லாத பெண்களின் அதீத கவனத்திற்கு . . .

தாம்பத்திய உறவில் ஆர்வமில்லை யா?
பெண்களில் இருபத்தைந்து சதவிகி தத்தினருக்கும் மேல் தாம்பத்திய உறவில் சிறிதும் நாட்டமில்லாதவ ர்களாக இருப்பதாக ஒரு மருத்துவ ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது. நீங்களும் அந்த
ரகத்தில் ஒருவரா? உங்களுக்காக இதோ சில தகவல்கள்…
இப்பிரச்சினைக்கான காரணங்கள்….
# இயல்பாகவே சில பெண்களுக்கு செக்ஸி ல் அவ்வளவாக நாட்ட மிருக்காது. உடலுற வு என்பது அவர் களைப் பொறுத்தவரையி ல் கணவன் மட்டுமே சம்பந்தப்பட்ட விஷய ம் என்று நினைப்பார்கள். இந்நிலையில் அ ந்தப் பெண்உறவை வெறுக்கவும் மாட்டாள். அதே சமயம் அவளால் அதை முழு இன்பத்துடன் அனுபவிக்கவும் முடியா து.

# செக்ஸில் நாட்ட மில்லாப் பிரச் சினையால் பாதிக்கப்பட்ட பெண் களில் சிலருக்கு உச்சக்கட்டம் என்பதே சாத்தியமாகாது.

# விருப்பமிருந்தாலும்கூட இப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பெ ண்கள் சிலருக்கு உறவுக்கு உடல் இடம் கொடுக்காது. இணங்காது. அதனாலேயே உறவின் மீது அனா வசிய வெறுப்பு ஏற்படும்.

# உறவைப் பற்றிய தவறான மன ப்பான்மை, தேவையற்றபயங்கள் , மூட நம்பிக்கைகள் போன்றவை யும் பெண்களது இப்பிரச்சினைக் கு க் காரணங்கள்.

# முதல் உறவின் போது இரத்தம் வெளிப்படும் என்பதில், குழந்தைபிறப்பதில், பிரசவ வலியில் உள்ள தேவையற்ற பயங்களும் இதற்குக் கார ணங்களாக அமையலாம்.

# உறவின்போது கணவன் ஒரேமாதிரி யான நிலைகளைக்கையாள்வது, வெறி த்தனமான நடவடிக்கைகளைக் கையா ள்வது என்றெல்லாம் நடந்துகொ ள்கிற போதும் மனைவிக்கு செக்ஸின்மீது வெ றுப்பு ஏற்படலாம்.

கூட்டுக்குடும்பங்களில் இருக் கிறபெண்கள் பலர் இப்பிரச்சி னையால் பாதிக்கப்பட வாய்ப்பு கள் உண்டு. நிறைய பேர் சூழ இ ருப்பதால் யாராவது தம்மைக் கவனித்து விடுவார்களோ என்ற பயத்தில் அந்தரங்க உறவைத் தவிர்க்கவும், வெறுக்கவும் செய் வார்கள்.

குழந்தை பெற்றுக்கொண்டால் இளமையும், அழகும் போய் விடும் என்று பயப்படும் பெண்கள், அதன் விளைவாக உறவுகொள்வதையே தவிர்ப்பார்கள். தனக்கு அதில் ஆர்வ மே இல்லாதது போல நடி ப்பார்கள்.

# தலைவலி, மார்பகங்களில் வலி, மார்பகங்களின் அளவுகளைப் பற்றி ய கவலை, உடல்வலி, மயக்கம், உறவின் போது ஏற்படும் ஒரு விதப் படபடப்பு, அளவுக்கதிக வியர்வை போன்ற வற்றால் பாதிக்கப் படும் பெண்களுக்கு செக்ஸில் வெறுப்பு வருவது சகஜமான ஒரு விஷயம்.
சில குடும்பங்களில் ஆண் குழந்தை பெறு ம் பெண்களுக்குத் தான் மதிப்பு. ஒருவே ளை தனக்கு ஆண் குழந்தை பிறக்காமல் போய் விடுமோ என்ற பயத்தில் உறவிலி ருந்து தப்பிக்க ஏதேதோ காரணங்க ளைச் சொல்லித் தப்பிக்கும் பெண்களும் உண்டு. நாளடைவில் அதுவே நிரந்தரமாகிவிடும்.

# கணவனது தோற்றத்தில் திருப்தியில் லாத பெண்களும், தன் கணவனுக்கு தன் னையல்லாத வேறொரு பெண்ணுடன் உற வு உள்ளது என்று தெரிய வரும் பெண் களும்கூட தாம்பத்திய உற வைத் தவிர்ப்பார்கள். கணவனி ன் மீதான வெறுப்பைக் காட்ட அவர்கள் நாடும் ஒரே வழி அது வாகத்தான் இருக்கும்.

# தாம்பத்திய உறவில் நாட்டமி ன்மை என்பது எல்லாப் பெண் களுக்கும் ஒரே மாதிரி இருப்பதி ல்லை. சிலருக்கு குறிப்பிட்ட நபர்களுடன் உறவு கொள்ள வேண்டி வரும் போது நாட்டமின்றிப் போவதும், தன க்கு விருப்பமுள்ளவர்களுடன் உறவு கொ ள்ளும் போது பிடித்துப் போய் இணங்குவ தும் உண்டு.

தாம்பத்திய உறவில் நாட்டமின்மை என்ப து தீர்க்க முடியாத குறை யில்லை என்கிற து மருத்துவம். கணவனது பக்குவமான அணுகு முறை, மனைவியி டமான அவனது நடத்தை, உடல் மற்றும் மன சுகாதாரம் போன்றவையும் இப் பிரச்சினையைக் குணமாக்கும் சிகிச்சைகளில் முக் கியமாம். மருத்துவரிடம் கேட்கத் தயங்கிக் கொண்டு இதை அப்படியே விட்டு விடுவது தவறு.

Related Posts Plugin for WordPress, Blogger...