Sunday, March 31, 2013

சிலந்தியின் விஷம் செக்ஸ் உணர்வை தூண்டுமாம்!

மனிதர்களின் செக்ஸ் உணர்வுகளை அதிகரிக்க சத்தான உணவுகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். வாலிப வயோதிக அன்பர்களுக்கு வயக்ரா போன்ற மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் சிலந்தியி
ன் விஷம் மூலம் பாலியல் உணர்வுகளை அதிகரிக்க முடியும் என்றும் இதனால் நீண்ட சுகத்தை அனுபவிக்க முடியும் என்றும் கூறியுள்ளனர். இது தொடர்பான ஆராய்ச்சி முடிவு ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தென்அமெரிக்க நாடான பிரேசிலின் காட்டு பகுதிகளில் ‘போனுட்ரியா நிக்ரிவென்டர்’ என்ற வகை சிலந்திகள் அதிகம் காணப்படுகின்றன. உலகிலேயே அதிக விஷம் கொண்ட சிலந்திகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

இதன் கொடுக்கில் இருந்து வெளியேறும் திரவம், அதிக விஷத்தன்மை வாய்ந்தது. போனுட்ரியா சிலந்தி விஷத்தின் மருத்துவ குணம் தொடர்பாக பிரேசில் மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் இணைந்து சமீபத்தில் ஆய்வு நடத்தினர். சிலந்தியிடம் இருந்து ‘பிஎன்டிஎக்ஸ்2,6′ எனப்படும் விஷம் உறிஞ்சி எடுக்கப்பட்டது.

முதுமை காரணமாக செக்ஸ் வாழ்வில் உற்சாகம் குறைந்து காணப்பட்ட எலிகளின் உடலில் இந்த விஷம் செலுத்தப்பட்டது. அதன் பின்னர், எலிகளின் ‘மூடு’ அதிகரித்தது. இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த ஆய்வாளர்கள் தங்களில் ஆராய்ச்சி முடிவுகளை செக்ஸ் பற்றிய இதழ் ஒன்றில் வெளியிட்டுள்ளனர். அதில் சில சுவாரஸ்யமான தகவல்கள் கூறப்பட்டுள்ளன.

எலிகளின் உடலில் சிலந்தியின் விஷத்தை செலுத்தியதும் நைட்ரிக் ஆக்சைடு சுரப்பு அதிகமாகிறது. மருந்தை செலுத்திய 20 நிமிடத்தில் அது வேலை செய்ய தொடங்குகிறது. இது ரத்த தட்டுகளை விரிவடைய செய்கிறது. ரத்த தட்டுகளின் சுவர்கள் நெகிழ்வு தன்மை அடைகின்றன. ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. மர்ம உறுப்பு பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் அதிக விரைப்புத்தன்மை கிடைக்கிறது.

ஏறக்குறைய, ‘வயாக்ரா’ போன்ற செக்ஸ் வீரிய மாத்திரைகள் போலவே சிலந்தி விஷம் செயல்படுகிறது. வயதான பிறகு ஏற்படும் விரைப்புத்தன்மை கோளாறுகளுக்கு சிலந்தி விஷம் அருமையான மருந்தாக இருக்கும் என்று தெரிகிறது.

இந்த ஆராய்ச்சி இன்னமும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. மனிதர்களை வைத்து சோதனை நடத்தி, வெற்றி கிடைத்த பிறகுதான் சந்தையில் மருந்தாக அறிமுகப்படுத்தப்படும் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இதை படித்து விட்டு நம் ஊர் ஆசாமிகள் யாரும் சிலந்தியை கடிக்க வைத்து சோதனை செய்து பார்க்க வேண்டாம். அப்புறம் அலர்ஜி ஆகிவிடப்போகிறது.

செக்ஸ் மேல் ஈர்ப்பு வர பெண்களுக்கு 237 காரணம் இருக்காம்!

பாலுணர்வும், பாலியல் நினைவுகளும் இல்லாத உயிர்களே இல்லை. ஏதாவது ஒரு காரணத்திற்காக சிலருக்கு உடலுறவு பிடித்திருக்கலாம். இனப்பெருக்கத்திற்காகவும், மன அமைதிக்காவும் மட்டுமின்றி உறவானது பல நிலைகளில் நன்
மை தருகிறது என்று ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பெண்களுக்கு ஏன் அதன் மேல் அத்தனை ஆர்வம் என்று கண்டறிய நடைபெற்ற ஆய்வில் தாம்பத்ய உறவை பெண்களுக்குப் பிடிக்க 237 காரணங்கள் இருக்கிறது என்று தெரியவந்துள்ளது.

டேவிட் பஸ் என்ற உளவியல் நிபுணர் இதற்கான காரணத்தை ஆராய்ந்து தனது Why Women Have Sex என்று நூலில் எழுதியுள்ளார். 1006 பெண்களை ஆய்வுக்காக எடுத்துக்கொண்ட நிபுணர் பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளார். அதில் ஒவ்வொரு பெண்களும் ஒவ்வொருவிதமான பதிலளித்துள்ளனர். செக்ஸ் பற்றி பிடிக்க மொத்தம் 237 காரணங்களை கூறியுள்ளார்.

செக்ஸ் என்பது த்ரில்லான அனுபவம் என்று கூறியுள்ளனர் சிலர். அதுபோன்ற அனுபவத்திற்காகவே அடிக்கடி உறவில் ஈடுபடுகின்றனராம். தம்பதியரிடையேயான நெருக்கத்தை அதிகரிக்கிறது. இது சந்ததி உருவாக்கத்திற்கு என்பதையும் தாண்டி ஆரோக்கியத்தை அளிக்கிறது என்பதனால் செக்ஸ் விருப்பத்திற்குரியதாக இருக்கிறது.

ஆணின் வாசனையால் கவரப்பட்டு உறவில் ஈடுபடுவதாக சிலர் கூறியுள்ளனர். மேலும் உறவில் ஈடுபடுவதானல் தனக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கிறது என்று கூறியுள்ளனர் சிலர்.

காதலும், செக்ஸ்சும் நீண்டகால இன்சூரன்ஸ் பாலிசி போன்றது பாதுகாப்பானது என்று கூறியுள்ளனர். செக்ஸ் மூலம் உடல் ஆரோக்கியமடைகிறது. அழகான கூந்தல் கிடைக்கிறது, சருமம் மினுமினுக்கிறது என்று அதனால் அதில் ஆர்வம் காட்டுவதாக சிலர் கூறியுள்ளனர்.

செக்ஸ் மருத்துவ குணம் கொண்டுள்ளது. இது மைக்ரேன் தலைவலியை குணமாக்குவதோடு ரிலாக்ஸ் ஆக்குகிறது. இது சிறந்த வலி நிவாரணியாக செயல்படுகிறது. மாதாந்திர வலிகளை போக்குவதில் செக்ஸ் சிறந்த மருந்துப்பொருளாக செயல்படுகிறது என்கின்றனர் நிபுணர்கள்.

தூக்கக்குறைபாடு உள்ளவர்களுக்கு செக்ஸ் சிறந்த நிவாரணியாக இருந்ததாக கூறியுள்ளனர். உறவுக்குப் பின்னர் மூளை சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் இருப்பதால் அதனை விரும்புவதாக கூறியுள்ளனர்.

உளவியல் நிபுணரின் ஆய்வின் படி ரஷ்யாவில் 73 சதவிகித பெண்கள் அதீத காதலை விரும்புகின்றனர். ஜப்பானிய பெண்கள் 63 சதவிகிதம் பேரும், இங்கிலாந்தில் 75 சதவிகிதம் பேரும் காதலில் ஈடுபட விரும்புவதாக கூறியுள்ளனர். ஆனால் ஆண்கள் அந்த அளவிற்கு உற்சாகம் காட்டுவதில்லை. ஜப்பானில் 41 சதவிகிதம் ஆண்களும், ரஷ்யாவில் 61 சதவிகித ஆண்களும்தான் செக்ஸ் மீது அதீத ஆர்வம் கொண்டுள்ளனர்.

திருமணமான புதிதில் தொடங்கி நடுத்தர வயதை தாண்டியும் செக்ஸ் விருப்பத்திற்குரியதாக இருக்க இதுபோன்ற 237 காரணங்களை பெண்கள் கூறியுள்ளதாக தனது நூலில் குறிப்பிட்டுள்ளார் உளவியல் நிபுணர்கள்.

பெண்கள் கிளைமேக்ஸை அடைவது…உறவில் மட்டுமே!

பெண்களுக்கு கிளைமேக்ஸ் எனப்படும் உச்ச நிலை ஏற்படுவது உடலுறவின்போது மட்டுமே என்று தெரிவித்துள்ளனர் ஆய்வாளர்கள். மற்றபடி வேறு எந்தவிதமான தூண்டுதலும் அவர்களுக்கு உச்சநிலையைத் தருவதில்லை என்றும் இந்த புதிய
ஆய்வு தெரிவித்துள்ளது.
ஆர்கஸம் அல்லது உச்சநிலை அல்லது கிளைமேக்ஸ் என்பது ரொம்ப நாளாகவே புரியாத புதிராக இருக்கிறது. இது எப்படி ஏற்படுகிறது, எந்தக் காரணியால் ஏற்படுகிறது என்பதில் இதுவரை உறுதியான கருத்து ஏதும் சொல்லப்படவில்லை. இருப்பினும் பெண்களின் கிளிட்டோரிஸ் பகுதியானது தூண்டப்படும்போதுதான் உச்சநிலை ஏற்படுவதாக கூறப்பட்டு, கருதப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அதற்கு, இது காரணமில்லை என்ற புதிய கருத்தை இந்த ஆய்வு கூறியுள்ளது.
பெண்களின் கிளிட்டோரிஸ் பகுதியை தூண்டி விட்டால் போதும் அவர்கள் உச்சத்தை எட்டுவார்கள் என்றுதான் இத்தனை காலமாக, இந்த நிமிடம் வரை, இந்த நொடி வரை ஆண்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அப்படி அல்ல என்பதுதான் இந்தப் புதிய ஆய்வின் முடிவாக உள்ளது.
பெண்களின் பிறப்புறுப்புக்கும், கிளிட்டோரிஸ் தூண்டுதலால் ஏற்படும் உச்சத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளனவாம். சுருக்கமாகச் சொன்னால் அது வேறு, இது வேறு. மூளையின் வெவ்வேறு பகுதிகளுடன் இவை தொடர்பு கொண்டுள்ளனவாம். எனவே இரண்டுக்கும் தொடர்பில்லை என்கிறார்கள் ஆய்வை நடத்தியவர்கள்.
மேலும் பெண் குறியிலோ அல்லது கிளிட்டோரிஸில் ஏற்படும் தூண்டுதலோ பெண்களுக்கு உச்சத்தைத் தருவதில்லையாம். இவற்றில் ஏற்படும் உச்சகட்ட உணர்ச்சிகள், பெண்கள் தங்களைத் தாங்களே உச்சத்தை எட்டி விட்டதாக உணர்வூட்டுவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இதைத்தான் உச்ச நிலை என்று இது நாள் வரை அனைவரும் கருதி வந்துள்ளதாகவும் கூறுகிறார்கள்.
ஆர்கஸத்தை ஏற்படுத்தும் இடம் அதாவது ஜி ஸ்பாட் என்று இது நாள் வரை கருதி வந்தது, உண்மையிலேயே அதைச் செய்வதில்லை என்பதே இந்த ஆய்வின் சுருக்கமான சாராம்சம். நல்ல உடல் ஆரோக்கியத்தில் இருக்கும் பெண்களுக்கு, கிளிட்டோரிஸ் தூண்டுதல் இல்லாமலேயே கூட உச்ச நிலையை எட்ட முடியுமாம்.
உடல் உறவின்போது ஆண்கள் செய்யும் பல்வேறு முன்விளையாட்டுக்களால் பெண்களின் உடலில் ஆங்காங்கு உள்ள உணர்ச்சி நரம்புகள் தூண்டப்படுகின்றன. இவை அனைத்தும் மொத்தமாக சேர்ந்துதான் பெண்ணுக்கு உச்ச நிலையை ஏற்படுத்துகிறதே தவிர, கிளிட்டோரிஸால் மட்டுமே அவர்கள் உச்சத்தை அடைகிறார்கள் என்பது தவறு என்பதே இந்த ஆய்வின் கருத்தாக உள்ளது.
மொத்தத்தில் பெண்கள் உடல் உறவின்போது மட்டுமே உச்சத்தை எட்டுகிறார்கள். மற்றபடி முன் விளையாட்டுக்களோ, பிற விஷயங்களோ அவர்களுக்கு ஆர்கஸத்தை ஏற்படுத்துவதில்லை என்று இந்த ஆய்வு திட்டவட்டமாக கூறுகிறது.
வழக்கமாக, பெண்களின் மனதைப் புரிந்து கொள்வது ரொம்பக் கஷடம் என்று கூறுவார்கள். இப்போது பெண்களின் உச்சநிலைக்கு எது காரணம் என்பதைத் தெரிந்து கொள்வது அதை விட கஷ்டமானதாக இருக்கும்போலத் தெரிகிறதே…

பாலுறவின் போது ஆண்மை வலுப்பெற..!

பாலுறவின் போது ஆணின் பங்கு அதிகம் ஏனெனில் உறவின் போது ஆணின் உறுப்பு வலுப்பெற்று திடமானதாக மாறி சில நிமிடங்கள் நிலைத்திருந்து பெண்ணின் உள்சென்று அங்கு சில நிமிடங்கள் இருந்து உச்சக்கட்டத்தையும், சந்தோஷத்தையும் கொடுத்து பின்பு தானும் உச்சத்தை அடைந்து பின் விந்தை வெளியிட்டு வெளியேற வேண்டிய பல சிக்கலான கடமையும் செயல்பாடும் ஆணுக்கே உரித்தானது. ஆனால் பெண்ணைப் பொறுத்த வரை அப்படியல்ல தேவையோ தேவையில்லையோ சம்மதித்தால் மட்டுமே போதுமானது நடந்தேறிவிடும். நடத்தும் கடமை ஆணுடையது.
வயது ஏற ஏற பல ஆண்கள் இதில் தவறி விடுகின்றனர். ஏதோதோ சாக்குப்போக்குகளை சொல்லிக் கொண்டு காரணங்களை கண்டுபிடித்துக் கொண்டு காலத்தை வீணடிக்கின்றனர். பெரும்பாலும் இவற்றிற்கு ஆண்கள் சொல்லும் காரணங்கள்- மது, சர்க்கரை நோய் (நீரிழிவு), மன அழற்சி, டென்ஷன் போன்றவை வயது வரம்பு இன்றி வயது குறைந்த ஆண்கள் பலரும் இப்பிரச்சனையால் கஷ்டப்படுகின்றனர். அதே சமயம் வயது முதிர்ந்த ஆண்களும் பலர் இன்னும் இளமையுடனும் உற்சாகத்துடன் தங்கள் துணைவியரின் அன்போடு வாழத்தான் செய்கிறார்கள். இதற்கு வயது ஒரு பொருட்டேயல்ல. வயதானவர்களும் வலுவாக உள்ளனர். வயது குறைவாக உள்ளவர்களும் வலுவிழந்து நிற்கின்றனர். இதற்கு என்ன காரணம். இதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.
பெரும்பாலான ஆண்கள் பாதிக்கப்படுவது விறைப்பின்மையால் தான். இதனைத் தமிழில் நரம்புத் தளர்ச்சி என்றும் ஆண்மைக்குறைவு என்றும் பலவாறு பல்வேறு வார்த்தைகளில் பலரும் விளக்கமளித்து விட்டனர். இதனை சரியான வகையில் புரிந்து கொள்வது அவசியம்.
ஆண்மைக்குறைவு எனும் விறைப்பின்மை இரண்டு காரணங்களால் ஏற்படலாம். ஒன்று உடல் ரீதியான கோளாறு மற்றொன்று மனம் ரீதியான கோளாறு.
உடல் ரீதியான கோளாறுகள் ஆண் உறுப்புகளுக்குச் செல்லக் கூடிய நுண்ணிய நரம்புகள் பாதிப்படைவதால் ஏற்படுவது. இதனால் கிளர்ச்சி மூளையைச் சென்றடையாமல் அதன் காரணமாக உறுப்புக்குள் இரத்தம் செலுத்தப்படாமல் விறைப்பு ஏற்படாது போவது, இதற்கு காரணங்களாக அமைவது சர்க்கரை வியாதி எனும் நீரிழிவு, வயது முதிர்வு, சிறுவயதில் அதிக கைப்பழக்கம் மற்றும் தண்டுவடத்தில் ஏற்படும் அடி அல்லது கீழே விழுந்து காயப்படுவது போன்றவையாகும்.
மன ரீதியான கோளாறுகள் அதிகமான ஆண்களுக்கு இது தான் ஏற்படுகின்றது. அதாவது அவர்கள் மனதளவில் முடியாது நம்மால் முடியாது என்று எண்ணுவதால் அவர்களால் முடியாமல் போவது அதே ஆண்களால் தனியாக இருக்கும் பொழுதும் இரவில் தூங்கும் பொழுதும் விறைப்பு அடைய முடியும். ஆனால் உறவு என்று வந்தால் விறைப்படைய முடியாது. இது உடல் ரீதியான பிரச்சனை. இதனை சூழ்நிலையால் ஏற்படும் ஆண்மைக்குறைவு என்று கூறலாம்.
வயது
வயதிற்கும் ஆண்மைக்குறைவிற்கும் சம்பந்தமுண்டு என்றும் வயது ஏற ஏற ஆண்மைக்குறைவு ஏற்படுத்தும் என்றும் ஒரு எண்ணம் பரவலாக உள்ளது இது முற்றிலும் உண்மை அல்ல. ஓரளவிற்கே இது உண்மையாகும். சில ஆண்களில் வயது ஏற ஏற ஆண் ஹார்மோன்களில் சுரப்பு குறைந்து கொண்டே வரும். அதனால் சில ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படலாம். ஆனால் அவ்வாறு உள்ள ஆண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. வயது முதிர்ந்த ஆண்களின் இரத்த சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் அதிகரித்தல், மற்றும் சுக்கிலவக பெருக்கம் போன்றவற்றாலும் ஆண்மைக்குறைவு ஏற்படலாம்.
சிலர் உபயோகிக்கும் இரத்த அழுத்த மருந்துகள், சர்க்கரை நோய் மருந்துகள், மன அழுத்த மருந்துகள் போன்றவற்றாலும் கூட இது ஏற்பட வாய்ப்புள்ளது. பலருக்கு மது, புகை, பாக்கு, ஜர்தா, பான், பீர், புகையிலை போன்றவற்றாலும் கூட இது ஏற்படலாம்.
ஆரோக்கியமாக இருக்கும் ஆண்கள், நல்ல ஒத்துழைப்புக் கொடுக்கும் மனைவியை உடைய ஆண்கள், குறைவான மது மற்றும் புகைப்பழக்கம் உடைய ஆண்கள், வசீகரமான ஆண்கள், வாழ்க்கையில் வெற்றிகரமான ஆண்கள் ஆகியோருக்கு பெரிதும் இந்த ஆண்மைக்குறைவு ஏற்படுவதில்லை.

மருத்துவம்


ஆங்கில மருத்துவத்தில் இதற்கு பல வகையான மருந்துகள் உள்ளன. ஆனால் எவை நாளடைவில் செயல் இழந்து விடும் வாய்ப்பு உள்ளது. அதே சமயம் அது நாள் ஆக ஆக அதிக அளவிலும் தேவைப்படலாம். அதே சமயம் தொடர்ந்து உபயோகிக்கும் பொழுது அது பல பக்க விளைவுகளையும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே ஆங்கில மருந்துகளைத் தவிர்ப்பது நன்று.

ஆயுர்வேதம்


ஆயுர்வேத முறையில் பல்லாயிரம் ஆண்டுகளாக பல மருத்துவ குணம் உள்ள செடிகள், கொடிகள், பூக்கள், காய்கள், வேர்கள், மரப்பட்டைகள் ஆண்மைத் தன்மையை அதிகரிப்பதாகக் கண்டறியப்பட்டு வந்துள்ளது. இவ்வகை மூலிகைகளை அனுபவ ரீதியாகவும், தேவைக்கேற்பவும் பயன்படுத்தி வர நல்ல பலன்களைத் தரக் கூடியவை. பொதுவாகவே நாற்பது நாற்பத்தைந்து வயதைக் கடக்கும் பொழுது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒவ்வொரு வகையான மாற்றம் ஏற்படுகின்றது. பெண்களுக்கும் கூட புழை வறட்சி, புழை இறுக்கம், மாதவிடாய் மறையும் வேளை, புணர் புழை அழற்சி போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதே போலத்தான் ஆணின் உடலிலும் ஒரு விதமான பலஹீனம், சோர்வு, வெறுமை, நரம்புத்தளர்ச்சி போன்றவை ஏற்படுகின்றன.

எனவே நாற்பது வயதைக் கடந்த இருபாலரும் உற்சாகமளிக்கும் ஊக்க மருந்துகளைப் பயன்படுத்துவது நன்மையே தரும். இத்தகைய ஊக்கமளிக்கும் உன்னத மூலிகைகள் சிறப்பாக கேப்சூல் வடிவில் கிடைக்கின்றன. இதற்கு உபயோகிக்கக் கூடிய மூலிகைகள், அமுக்கிரா, பூனைக்காளி, சாலாமிசிறி, முருங்கை வித்து, முருங்கை பிசின், நிலைப்பனைக்கிழங்கு, குறுந்தொட்டி, அக்கிரகாரம், எட்டி விதை, குங்குமப்பூ போன்றவை ஆகும். இவற்றை தனி மூலிகைகளாகவும் கூட்டு மூலிகைகளாகவும் அன்றாடம் பயன்படுத்தி வர நல்ல பலன் கிடைக்கும். தேவைக்கேற்ப என ஒரிரு நாட்கள் மட்டும் உபயோகிக்காமல் தொடர்ந்து உபேயாகிப்பது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், சக்தியையும் தேஜனையும் வளங்கிடும்.
அஸ்வகந்தா தனி மூலிகையாகவும் கூட்டு மூலிகை கேப்சூல் நியோமஸ்கின் எனவும் கிடைக்கின்றது. இவற்றை வாங்கி பயனடைவதற்கு கடைசிப்பக்கத்தில் உள்ள ஆர்டர் படிவத்தை பயன்படுத்திடலாம்.
அஸ்வகந்தா – அமுக்கிரா – பதனிடப்படுத்தப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட தனி மூலிகைப் பொடியாகக் கிடைக்கின்றது. இது பக்குவப்படுத்தப்பட்ட மூலிகைப் பொடி இதர மூலிகைப் பொடிகள் போல தயாரிக்கப்படாமல் முறையாக தயாரிக்கப்பட்டது நல்ல பலனளிக்கக் கூடியது இதனை தினசரி இரவு ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து சூடான பாலில் கலந்து சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும். சர்க்கரை அல்லது தேன் கலந்து பருகலாம். நீரிழிவு உடையவர்கள் தண்ணீரில் கலந்து பருகலாம்.

நியோ மஸ்கின் கேப்சூல் கூட்டு மூலிகை கேப்சூல் ஆகும். இது சுமார் 32 ஆண்டுகளாக பல லட்சம் ஆண்கள் பயன்படுத்தி வந்த ஒரு உத்திரவாதம் அளிக்கும் மூலிகை கேப்சூல் ஆகும். நியோ மஸ்கினை தினசரி காலை – இரவு 1 – 2 கேப்சூல் வீதம் பாலில் உட்கொண்டு வர நல்ல பலனைத் தரும். ஆண் பெண் இருபாலரும் உபயோகிக்கலாம். தினசரி பழக்கமாக ஆக்கிக் கொள்ள விரும்புபவர்கள் தினசரி காலை உணவிற்குப் பின்பு 1 – 2 கேப்சூல் உட்கொள்ளலாம். பக்க விளைவு இல்லை பாதுகாப்பானது. மூலிகை மட்டுமே அடங்கியது நீண்ட நாட்கள் உபயோகிக்க உகந்தது.

செக்ஸ் வாழ்க்கையில ஈடுபட முடியலையே

நீரிழிவு நோயாளிகள் பெரும்பாலோனோர் தாம்பத்ய உறவில் சரியாக செயல்பட முடியாமல் சிக்கல்களை சந்திக்கின்றனர். 40 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட நீரிழிவு நோயாளிகள் செக்ஸ் வாழ்க்கையில் சிக்கல்களை சந்திப்பாக கணக்கெடுப்பு ஒன்று தெரிவிக்கின்றது. பெரும்பாலோனோர் ஈ.டி.
எனப்படும் எரெக்டைல் டிஸ்ஃபங்ஷன் (Ereticle disfunction) எனப்படும் எழுச்சியற்ற தன்மையினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.



நீரிழிவு நோயானாது உலகை அச்சுறுத்தும் மிகப்பெரிய நோயாக திகழ்கின்றது. உலகம் முழுவதும் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட ஆறு மடங்கு அதிகம் நோயாளிகள் நீரிழிவினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களின் முக்கிய பிரச்சினை தாம்பத்ய உறவில் ஏற்படும் சிக்கல்தான் என்று மருத்துவர்கள் அறிவிக்கின்றனர். உலகெங்கும் கேட்கப்படும் மருத்துவம் தொடர்பான கேள்விகளில் டயாபடீஸ் நோயாளிகளின் தாம்பத்ய வாழ்க்கை பற்றிய கேள்வி முன்னணியில் நிற்கிறது.

டெரிக் சி. போலோன்ஸ்கி தனது ‘Talking about sex’ என்ற புத்தகத்தில் ஆண்கள் பெண்கள் இரு பாலாரிலும் 20 சதவிகிதம் பேர் செக்ஸ் உறவில் பிரச்சினை என்று தெரிவிப்பதாகக் கூறுகிறார். ஆனால் இது இப்போது பெரும் பிரச்சினையாக உருவெடுத்து விட்டதால் போலோன்ஸ்கி முதலில் உடல் வியாதி என்ற நிலையில் இது ஆரம்பித்து உணர்ச்சி பூர்வமான வியாதியாகிறது என்கிறார்.

நீரிழிவு நோயானது ஆண்களில் ஜனன உறுப்பின் விறைப்பு இன்மை விவாகரத்தில் கொண்டு போய் விடுகிறது. சென்னை யில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் 40 வயதிற்கும் கீழே உள்ளோர் இந்த உறுப்பு விரைப்பு இன்மையினால் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர் என்று தெரியவந்துள்ளது.

பெண்களுக்கு நீரிழிவு பிரச்சினை ஏற்பட்டால் அதிகளவிலான பிரச்சினை தாக்குகிறது. பெண்களில் டைப் 1 நீரிழிவு நோயாளிகளை விட டைப் 2 நீரிழிவு நோயாளிகளே அதிகமாக செக்ஸ் குறைபாடு உள்ளவர்களாகத் உள்ளனர் என்று தெரியவந்துள்ளது. தாம்பத்ய உறவின் போது பிறப்புறுப்பில் வறட்சி என்ற பிரச்சினை ஏற்படுகிறது. டைப் 1 நீரிழிவினால் பாதிக்கப்பட்டவர்களை விட தங்களின் கவர்ச்சி குறைந்துவிட்டதோ என்ற கவலையும் இவர்களை ஆட்கொள்வதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இவர்களுக்கு ஏற்படும் உளவியல் சிக்கலே தாம்பத்ய உறவில் சரிவர ஈடு கொடுக்க முடியாமல் போகிறது என்கின்றனர் நிபுணர்கள்.

நீரிழிவினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆர்காஸம் இன்மை, செக்ஸில் திருப்திக் குறைவு, செக்ஸ் உறவே வேண்டாம் என்று ஒதுங்கிப் போதல், கர்ப்பிணி என்றால் அதிக பயம் என்று பல்வேறு ரூபங்களில் டயாபடீஸ் கொடுமைப்படுத்துகிறது. இதனால் மனச்சோர்வு, கவலை முதலியவற்றால் எழும் வியாதிகள் தனி நபர் பிரச்சினையிலிருந்து குடும்ப பிரச்சினையாக மாறி விடுகிறது! பெண்களுக்கு ஜனன உறுப்பில் இன்பெக்ஷன் பிரச்சினை அதிகமாக இருக்கிறது.

வயதாக ஆக ஆக செக்ஸ் உணர்வுகள் இயல்பாகவே குறையும். மேலும் செக்ஸ் உணர்ச்சி உந்தி எழுந்து உடல் உறுப்பில் அதன் தாக்கம் தெரியவும் கூடுதல் நேரம் ஆகும். ஆகவே தம்பதிகள் ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசுவதோடு தேவையென்றால் மருத்துவர் ஆலோசனையையும் நாட வேண்டும். ஒரு நல்ல நியூராலஜிஸ்டை அணுகலாம்.

டயாபடிக் நியூரோபதி என்பதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் செக்ஸ் உறவுப் பிரச்சினை மிக மெதுவாக இருப்பதில் ஆரம்பித்து ஆண்மைக் குறைவு வரை அதிகரிக்கும். முன்பு போல உடனடி விறைப்பு இல்லையே என்ற ஏக்கம் எழலாம். ஆனால் இதற்கெல்லாம் இப்போது தகுந்த மருந்துகள் வந்து விட்டன என்பதால் கவலை வேண்டாம் என்கின்றனர் நிபுணர்கள்.

ஆண்மைக் குறைவு என்று மனதிற்குள் புழுங்கி தவிப்பதை விட தனக்கு நீரிழிவு என்று அறிந்து கொண்டாலே பாதி வெற்றி கிடைத்துவிடும். மீதியை வியாதியைக் குணப்படுத்துவதன் மூலம் பூரண குணம் அடையலாம். எவ்வளவுக்கு எவ்வளவு சீக்கிரம் மருத்துவரை அணுகுகிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு விரைவாக வியாதி போய் நார்மல் நிலைக்குத் திரும்பலாம் என்கின்றனர் நிபுணர்கள். ஏனெனில் இந்த சிக்கல்களை நல்ல மருத்துவரினால் மட்டுமே தீர்க்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.

ஆண்கள் ஜனன உறுப்பில் அதிக ரத்தம் பாய்வதற்கான வழிகளை நவீன மருத்துவம் கண்டுபிடித்து செக்ஸ் வாழ்க்கையை மேம்படுத்த உதவுகிறது. மிராகிள் க்யூர் என்று எதுவுமே டயாபடீஸில் கிடையாது. அதே சமயம் குணப்படுத்த முடியாதது என்று இதை ஒதுக்கி விடும் அளவு அபாயமும் இல்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

உணவுக்கட்டுப்பாடும், நல்ல உடற்பயிற்சியும் இந்த பிரச்சினையை தீர்க்கும் என்கின்றனர் நிபுணர்கள். சரியான எடையோடு ஆரோக்கியமாக இருந்தாலே உடலில் அழகு கூடி மெருகேறும், தன்னம்பிக்கை அதிகரிக்கும். எனவே உடல் எடையை கட்டுப்படுத்த சிறிதளவு செறிவூட்டப்பட்ட உணவை அவ்வப்பொழுது எடுத்துக் கொள்ளலாம்.

கார்ப்பரேட் வாழ்க்கையில் மன அழுத்தம் அதிகம் ஏற்படுகிறது. அதேபோல் ஐடி நிறுவனங்களில் பணிபுரிபவர்களிடம் கடும் வேலைப்பளுவும் நீரிழிவை ஏற்படுத்துவதோடு பாலியல் சிக்கலை ஏற்படுத்தி விடுகிறது. ஆகவே வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருப்பதை விட ஓய்வான நிலையைத் தேடிப் பெற்று வாழ்க்கையை அனுபவிக்க இவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் மகிழ்ச்சிகரமான தாம்பத்ய வாழ்க்கையை இறுதிவரை அனுபவிக்கமுடியும் என்கின்றனர் நிபுணர்கள்.

நீண்ட இரவுதான் ஆனால் உறவுக்கு 10 நிமிடம் போதும்

திருப்திகரமான தாம்பத்ய உறவிற்கு 10 நிமிடம் மட்டுமே போதும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதுவே மகிழ்ச்சியளிக்கக் கூடிய உறவு என்று சமீபத்திய ஆய்வு
ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.



சின்ன சின்ன சீண்டலில் தொடங்கி உச்சத்தை தொடும் விளையாட்டு வரை செக்ஸ் உறவு நீடிக்கும். இதற்கெல்லாமா கால நேரம் பார்ப்பார்கள். விடியும் வரை விளையாடலாமே என்று கூறுபவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால் திருப்திகரமான செக்ஸ் உறவு என்பது பத்து நிமிடத்தில் முடிந்து விடுமாம்.

இது தொடர்பாக செக்ஸ் தெரபி மற்றும் ஆய்வுக்கழகத்தைச் சேர்ந்த 50 பேர் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின் முடிவில் மகிழ்ச்சிகரமான செக்ஸ் உறவுக்கு வெறும் 10 நிமிடம் மட்டுமே போதும் என்று கூறியுள்ளனர்.

தாம்பத்ய உறவின் போது 1 முதல் 2 நிமிடங்கள் என்பது யாருக்கும் பிரயோஜனம் இல்லாதது. மனரீதியாகவோ, உடல்ரீதியாகவோ ஏதோ சிக்கல் இருக்கிறது என்பதற்கான எச்சரிக்கை மணி அடிக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 3 முதல் 7 நிமிடங்கள் வரை எனில் அது நார்மலான உறவு. அதே சமயம் நெட், வீடியோ போன்றவைகளில் பார்க்கப்படும் படங்களில் அதிக நேரம் உறவில் ஈடுபடுவதைப்போல காட்டுவது உங்களை சூடேற்றத்தான். அதேபோல நமக்கும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தேவையற்ற சிக்கல்களை ஏற்படுத்திவிடும். எனவே 10 நிமிடம் என்பது மட்டுமே உறவுக்கு ஏற்ற சரியான அளவு என்கின்றனர் நிபுணர்கள்.அதேசமயம் முத்தம், சீண்டல் போன்ற முன்விளையாட்டுக்களுக்கு நேரம் குறிப்பிடவில்லை. அது அரைமணிநேரம் வரைக்கூட நீடிக்கலாமாம்.

இந்த ஆய்வு குறித்து கருத்து கூறியுள்ள பென் ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியர் எரிக் கார்ட்டி, நீண்ட நேரம் உறவில் ஈடுபட்டால்தான் அது சந்தோசம் என்பது கிடையாது பத்து நிமிடத்திலும் மகிழ்ச்சிகரமான உறவில் ஈடுபடமுடியும் என்று இந்த ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறினார். எனவே செக்ஸ் உறவின் உண்மையான தகவல்கள் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே தம்பதியர் நீண்ட நேர உறவிற்கு முயற்சி செய்து தோற்றுப்போவதை விட திருப்திகரமான உறவில் ஈடுபட்டு மகிழ்ச்சியடைவதே சிறந்தது என்கின்றனர் நிபுணர்கள்.

செக்ஸ் உறவை தவிர்க்க வேண்டிய தருணங்கள்..!

ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது அவள் தாம்பத்திய உறவில் ஈடுபடக் கூடாது என்று சொல்லப்படுவதுண்டு. இதைத் தவிர வேறு எந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் அவள் உறவைத் தவிர்க்க வேண்டும்…?


* கர்ப்பமாக இருக்கும் போதும் முதல் மூன்று மற்றும் கடைசி மூன்று மாதங்களைத் தவிர்த்து இடைப்பட்ட மாதங்களில் மிதமான செக்ஸ் வைத்துக் கொள்ளலாம். கர்ப்பிணி மனைவியைக் கட்டாயப்படுத்தி உறவு வைத்துக் கொண்டால், அவளது உடல் மற்றும் மனம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி பிறக்கும் குழந்தையின் மனநிலையும் பாதிக்கப் படக்கூடும்.

* பிரசவத்திற்குப் பிறகு சில தகவல்களைக் கருத்தில் கொண்டே தம்பதியர் உறவில் ஈடுபட வேண்டும். அதாவது பிரசவம் சிக்கலின்றி அமைந்ததா, சுகப் பிரசவமா அல்லது சிசேரியனா என்று பார்க்க வேண்டும்.

* சாதாரணமாக குழந்தைப் பேற்றுக்குப் பிறகு ஒரு பெண்ணின் கருப்பை சுருங்கி இயல்பு நிலையை அடைய ஆறு வாரங்களாகும். இது தோராயக் கணக்குதான். சில பெண்களுக்கு அவரவர் உடல்நிலையைப் பொறுத்து இந்தக் கணக்குக் கூடலாம். எனவே அப்பெண்ணின் உடல்நலம் சீராக இருப்பதாக மருத்துவர் உத்தரவாதம் கொடுத்த பிறகே உறவு கொள்ள வேண்டும்.

* குழந்தை பிறக்கும் போது பெண்ணின் உடலுறவுப் பாதையில் காயங்கள் ஏற்பட்டிருந்தால் அவை ஆறுகிற வரை உறவைத் தவிர்க்க வேண்டும்.

* கணவனுக்குத் தொற்றும் வகையில் ஏதேனும் நோய் இருந்தால், அது முற்றிலும் குணமாகிற வரை மனைவி அவனுடன் உறவைத் தவிர்க்க வேண்டும்.

* பிரசவத்திற்குப் பிறகு பெண்ணின் உடல்நலம் முற்றிலும் சரியாகி விட்ட போதிலும், அவளுக்கு உறவில் விருப்ப மில்லை என்று தெரிந்தால், அதற்குக் கட்டாயப் படுத்துவது கூடாது.

* உறவில் ஈடுபடும் போது உடலுறவுப் பாதையில் கடுமையான எரிச்சலோ, வலியோ இருந்தால், அதை உடனடியாகத் தவிர்ப்பது நல்லது.

* கருச் சிதைவுக்குள்ளானவர்களும், குறை மாதப் பிரசவத்துக்கு ஆளானவர்களும் மருத்துவரின் ஆலோசனையின் பேரிலேயே உறவைத் தொடங்க வேண்டும்.

* மாதவிலக்கு நாட்களில் உறவு கொண்டால், கருத்தரிக்காது என்று பலரும் அந்நாளில் உறவு கொள்ள நினைப்பதுண்டு. ஆனால் அதை முழுமையாக நம்புவதற்கில்லை. அந்நாட்களில் உறவு கொள்வதன் மூலம் கணவன்-மனைவி இருவருக்குமே தொற்று நோய்கள் பரவ வாய்ப்புகள் அதிகம்.

* பெண் நோய் வாய்ப்பட்டிருந்தால் அந்நாட்களில் உறவைத் தவிர்ப்பதே நல்லது.

* கைக் குழந்தையிருக்கும் போது உறவில் ஈடுபட்டால் தாய்ப்பால் இல்லாமல் போய் விடும் என்று பல பெண்கள் அதைத் தவிர்ப்பதுண்டு. ஆனால் இது வெறும் மூட நம்பிக்கையே. குழந்தை பிறந்து, குறுகிய காலத்திலேயே உறவு கொண்டால் கடுமையான வலி இருக்கும் என்ற பயத்திலேயே அதைத் தவிர்க்கச் சொல்கிறார்கள்.

* பிரசவித்த பெண்கள் தாய்ப்பால் கொடுப்பதே கருத்தடை முறை என்று நினைத்துக் கொண்டு, தைரியமாக உறவு கொள்வதுண்டு. ஆனால் அதை நூறு சதவிகிதம் நம்ப வேண்டாம். ஏதாவதொரு காரணத்தால் பால் வற்றி விட்டால், அந்தப் பெண் கருத்தரிக்க வாய்ப்புகள் உண்டு

பல நேரங்களில் நிர்வாணம் நல்லது

நிர்வாணம்… இதைக் கேட்டதும் பலருக்கும் பலதும் நினைவுக்கு வரும். முற்றும் துறந்த முனிவர்களைக் கேட்டால் நிர்வாணமே மோட்சம் என்பார்கள். அந்த நிர்வாணத்திற்கு அர்த்தம் வேறு. அதே சமயம், போலிச் சாமியார்களைப்
போய்க் கேட்டாலும் அவர்களும் நிர்வாணமே மோட்சம் என்பார்கள் – இவர்கள் ‘மோட்சம்’ தியேட்டரில் காட்டப்படும் பிட்டுப் பட நிர்வாணத்தை மனதில் கொண்டு சொலபவர்கள்.



செக்ஸ் உறவில் நிர்வாணம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. நிர்வாணத்திற்கு மாறினால்தான், அதாவது எல்லாவற்றையும் விட்டால்தான் செக்ஸ் உறவில் உச்சகட்ட இன்பத்தை அடைய முடியும்.

சில பெண்களுக்கு தங்களது கணவர் அல்லது காதலர் முன்பு நிர்வாணமாக தோன்றுவதற்கு கூச்சம் ஏற்படலாம். லைட்டை அணைங்க அப்புறமா டிரஸ்ஸைக் கழட்டுகிறேன் என்று சொல்லும் பெண்கள் நிறைய உண்டு. ஆனால் இதில் வெட்கப்படுவதற்கோ, கூச்சப்படுவதற்கோ அவசியமில்லை. இன்னும் சொல்லப் போனால் பல நேரங்களில் நிர்வாணம்தான் ஸ்திரமான செக்ஸ் உறவுக்கு இட்டுச் செல்லும் பாஸ்போர்ட் ஆக திகழ்கிறது என்கிறார்கள் செக்ஸ் நிபுணர்கள்.

தினசரி ஒரு மணி நேரமாவது தனிமையிலோ அல்லது பார்ட்னர்கள் முன்பாகவோ நிர்வாணமாக இருப்பது நல்லது என்றும் அவர்கள் சொல்கிறார்கள். இது மனோரீதியிலும் பல நன்மைகளைச் செய்கிறதாம்.

சரி நிர்வாணத்தால் ஏற்படும் ‘நன்மை’களைப் பார்ப்போமா…

ஒரு நாளைக்கு ஒரு முறை குறைந்தது அரை மணி நேரம் நிர்வாணமாக இருந்து பாருங்கள். இடத்தையும், நேரத்தையும் நீங்களே விருப்பம் போல தேர்வு செய்யலாம். இடம் உங்களது படுக்கை அறையாக இருக்கலாம் அல்லது பாத்ரூமாகக் கூட இருக்கலாம்.

நிர்வாணமாக இருப்பதால் செக்ஸ் உணர்வுகள் தூண்டப்படுகிறதாம். மேலும் உங்களது உடல் அமைப்பு உங்களையே ரசிக்கத் தூண்டுமாம். கவலையாக இருந்தாலோ அல்லது ஏதாவது சோகமான செய்தியைக் கேட்டாலோ கூட மனசு சரியில்லாமல் போகும். அந்த சமயங்களில் இதுபோல நிர்வாணமாக மாறிப் பாருங்கள், அத்தனையும் பறந்து உடம்பு லேசாகி விடும் என்கிறார்கள். உங்களது அழகு அங்கங்கள் உங்களுக்கு தன்னம்பிக்கையைத் தூண்டி விடும் பூஸ்டர்களாக மாறிக் காட்சி அளிக்குமாம்.

இரவில் சிலருக்கு நிர்வாணமாக படுத்துத் தூங்குவது பிடிக்கும். இது உண்மையிலேய உடம்புக்கு ரொம்ப நல்லது. இதனால் ரத்த ஓட்டம் சீராகிறதாம், பதட்டம் குறைகிறதாம். வயிற்றுப் பகுதியில் ஏற்படும் அழுத்தமும் குறைகிறதாம். மேலும் ஜட்டி, பாண்டீஸ் போன்ற அவுசகரியங்கள் இல்லாமல் படுப்பதால், ரத்த ஓட்டமும் நன்றாக இருப்பதோடு, சருமத்திற்கும் அது நல்லது செய்கிறதாம்.

நிர்வாணமாக இருப்பதால் பலன் அடையும் இன்னொரு விஷயம், தோல். வெளிச்சம் அதிக அளவில் சருமத்திற்குக் கிடைப்பதால் தோல் பளபளப்படைந்து புத்தம் புதிதாக நம்மை உணர வைக்கிறதாம். தன்னம்பிக்கை கூடுமாம்.

படுக்கை அறையில் கணவருடன் இருக்கும்போது நிர்வாணத்திற்கு மாறினால், சீக்கிரமே உறவைத் தொடங்க ஏதுவாக இருக்குமாம். அதுவும் உங்களது கணவர் முன்பு அப்படியும் இப்படியுமாக நிர்வாண கோலத்தில் கேட் வாக் போட்டுப் பாருங்கள், மின்னல் வேகத்தில் உங்களவர் செயலில் இறங்குவதைக் காணலாம்.

நோய்த் தொற்று, கிருமித் தொற்று போன்றவற்றிலிருந்தும் நம்மை நிர்வாணம் காக்கிறதாம். குறிப்பாக இரவு நேரங்களில் நிர்வாணமாக இருப்பது நிறைய நல்லது. அதிலும், பெண்களின் மர்ம உறுப்புக்கு நல்ல காற்றோட்டம் கிடைப்பதால் வெஜைனல் ஓடர் எனப்படும் பெண்ணுறுப்பின் வாசனை குறையுமாம்.

செக்ஸ் உணர்ச்சிகளைத் தூண்டுவதற்கு மட்டுமின்றி நமது உடலின் ஆரோக்கியத்திற்கும் கூட நிர்வாணம் நிறையவை கை கொடுக்கிறது.

பிறகென்ன இன்று இரவு பிறந்த மேனிக்கு மாறிப் பாருங்களேன்…!

செக்ஸ் தூண்டலுக்கு உதவும் உணவுகள்..!

பெண்களுக்கு பல பொறுப்புகள் உள்ளன. குடும்ப பராமரிப்பு, மகப்பேறு, குழந்தைகளை வளர்த்தல் முதலியன. ஆனால் ஆண்களுக்கு உள்ள பெரும் பொறுப்பு பாலியல் உறவில் மனைவியை மகிழ்விப்பது! அதில் சிறிய குறைபா
டு இருந்தால் கூட ஆண்கள் மனமுடைந்து போகின்றனர். எனவே தான் ஆதி காலத்திலிருந்து பாலுணர்வை தூண்டி உடலுறவை மேம்படுத்தும் உணவு, மருந்துகளை ஆண்கள் அதிகமாக நாடுகின்றனர். தங்கபஸ்பம், சிட்டுக்குருவி லேஹியம் முதலியன ஆணுக்கான “ரகசிய” மருந்துகளாக இருந்தன.


கஜுராஹோவையும், காம சூத்திரத்தையும் உலகுக்கு அளித்த நம் தேசத்தில் 30 கோடி ஜனங்கள் பாலியல் குறைபாடுகளுடன் வாழ்கின்றனர். புராதன இந்திய சமையல் குறிப்புகளில், காதலை தூண்டும் உணவுக் கலவையாக கருமிளகு, தேன், மிளகாய் முதலியன கூறப்படுகின்றன.


உணவுகள் காதல் செயல்பாடுகளை தூண்டுமா என்ற கேள்விக்கு விஞ்ஞானத்தில் பதில் ‘ஆமாம்’! அந்தந்த ஊருக்கு ஏற்றபடி காதல் உணவுகள் மாறுகின்றன. ஒட்டகத்தின் திமில் அரேபியர்களுக்கும் குங்குமப்பூ ஸ்பெயின் நாட்டவர்களுக்கும், கோகோ அஸ்டெக் இனத்தவருக்கும், பறவைக்கூடு சூப் சீனர்களுக்கும் முறையே ஆண்மைக்குறைவுக்கு மருத்துவ உணவாக கருதப்படுகின்றன.

சில பிரசித்தி பெற்ற உணவுகள்
ஆயுர்வேதத்தின் படி கோதுமை அரிசி, உளுத்தம் பருப்பு இவை ஆண்மையை ஊக்குவிக்கும், விந்துவின் தரத்தை உயர்த்தும்.

சோம்பு சமையலிலும் பயன்படுகிறது. மையலிலும் பயனாகிறது! இதன் விதைகளை உறிஞ்சி உண்டால் ஆசை அதிகமாகும்.

அஸ்பாரகஸ் சுவைவயுள்ள தோட்டக் கீரை.

பாதாம் பருப்பு – தொன்று தொட்டு ஆண்மையையும், மக்களைப் பெற சக்தி அளிக்கும் உணவாக கருதப்படுகிறது.

வாழைப்பழம் – வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியமும் ‘பி’ விட்டமின்களும் செக்ஸ் ஹார்மோனை தயாரிக்கத் தேவை. எனவே வாழைப்பழம் ஒரு ஆண்மையை பெருக்கும் முக்கியமான பழம்.

துளசி – உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பது துளசி. ஆண்களின் உடலுறவு ஆர்வத்தை தூண்டுகிறது.

சாக்லேட் – சாக்லேட்டில் தியோப்ரோமைன் இந்தப் பொருள் வேட்கையை பெருக்கும். தவிர சாக்லேட் ஒரு ஆன்டி – ஆக்சிடான்ட்.

காய்கறிகள் – பூமிக்கு அடியில் விளையும் கிழங்குகள், பூமியின் சக்தியை உறிஞ்சி, அதை நமக்களிக்கும். கேரட், முள்ளங்கி போன்றவை ஆண்மையை பெருக்கவல்லவை. தக்காளியும் சிறந்த பாலுணர்வு ஊக்கி. ஃப்ரான்ஸில் இதை ‘காதல் ஆப்பிள்’ என்பார்கள். வெங்காயமும் தொன்றுதொற்று இந்தியாவில், எகிப்தில், அரேபியாவில் ஆண்மை ஊக்கியாக பயன்படுத்தப்பட்டு வரும் காய்கறியாகும். அதுவும் வெள்ளை வெங்காயம் சிறந்தது. வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி உண்ண வேண்டும். “ஆனியன் சூப்” புத்துணர்ச்சி ஊட்டும். இவை தவிர குடமிளகாய், இஞ்சி, செலரி, வெள்ளரி, தனியா இவைகளும் உதவும். பிரசித்தி பெற்ற ‘அரேபிய இரவுகள்’ கதையில் ஒரு வியாபாரி 40 வருடங்களாக குழந்தையில்லாமல் இருந்து கொத்தமல்லி இலைகள் அடங்கிய மருந்தை உண்டு குழந்தை பெற்றுக் கொண்டதாக வருகிறது.

பழங்கள் – பப்பாளி, வாழைப்பழம், மாம்பழம், கொய்யாபழம் இவைகளும் சிறந்த இளமை காக்கும் பழங்கள். கொய்யாப்பழம் பெண்களின் ஜனனேந்திரிய உறுப்புக்களின் தசைகளை வலுப்படுத்தும். வாழைப்பழத்தில் உள்ள ஒரு வேதிப்பொருள் செக்ஸ் உணர்வை அதிகரிக்கும்.

பால் சார்ந்த உணவுகள் – பால் அதுவும் எருமைப்பால், தயிர்(பகலில்) மோர், வெண்ணை, நெய் இவை இல்லாமல் இந்திய உணவுகள் இல்லை. இவையெல்லாம் உடலுறவுக்கு வலிமை ஊட்டும் உணவுகள்.
மாமிசங்கள், மீன் – மாமிச வகைகளில் நீர் வாழ் பிராணிகளின் மாமிசம் உண்பது நல்லது. கடல் மீன்களை விட நதிமீன்கள் பாலியல் உணர்வை தூண்டுபவை. கடல் முத்துசிப்பி, சிறந்த ஆண்மை பெருக்கியாக கருதப்படுகிறது.

வெற்றிலை – உணவுக்கு பின் தாம்பூலம் தரிப்பது உடலுறவு ஆசையை தூண்டும். ஆனால் பாக்கு, புகையிலை, ஆல்கஹால் இவை எதிர்மாறான விளைவுகளை உண்டாக்கும்.
தேன் – எகிப்தியர்கள் காலத்திலிருந்தே பல பழங்கால மருந்துகள் தேன் அடங்கியவை. மீட் என்ற பானம் தேனிலிருந்து தயாரிக்கப்பட்டது. இது காதல் உணவை அதிகப்படுத்தும் மருந்தாக கருதப்படுகிறது.
வாசனை திரவியங்கள் – ஜாதிக்காய், ஏலக்காய், குங்குமப்பூ, இலவங்கப் பட்டை இவைகளும் ஆசையை அதிகரிக்கும் குறிப்பாக ஜாதிக்காய் “விந்து முந்துதலை” தடுக்கும். இந்த வாசனை திரவியங்களை பாலுடன் சேர்த்து உட்கொள்ள வேண்டும். ஞாபக மிருக்கட்டும் – இலவங்கப்பட்டை தான் ஆசைய ஊக்குவிக்கும். அதன் இலைகள், எதிர்மாறாக ஆண்மை ஆசையை குறைத்து விடும்.

தற்கால உணவு நிபுணர்களின் கருத்து


ஆண்மை வீரியத்தை அதிகரிக்க துத்தநாகம் இன்றியமையாதது. சர்க்கரை, மைதா மாவு, பாலிஷ் செய்யப்பட்ட பச்சரிசிகளில் துத்தநாகம் குறைவு. இந்த தாதுப்பொருளின் குறைவு பெண்களின் மாதவிடாய் சுழற்சியையும் பாதிக்கும். முழுத்தானியங்களில் துத்தநாகம் இருந்தாலும் அவற்றில் உள்ள பைடாடஸ் என்ற பொருள், உடல் துத்தநாகத்தை உட்கிரகிப்பதை தடை செய்யும். துத்தநாகம் உள்ள இதர பொருட்கள் – சிவப்பு மாமிசம், முத்துச்சிப்பிகள், பரங்கி விதைகள், அங்கக மாமிசங்கள், முட்டைகள்.


எல்லா பழங்களிலும் காய்கறிகளில் இருக்கும் பொட்டாசியம் ஆண்மை வீரியத்தை அதிகரிக்கும்.
செலினியம் உள்ள வெண்ணெய், மீன்கள், முழுக்கோதுமை, எள் முதலியவைகளும் காதல் உணவுகள்
மங்கனீஸ் அடங்கிய கொட்டைகள், விதைகள், முழுத்தானியங்கள் முதலியவைகளும் பாலியல் ஆற்றலுக்கு உதவும்.
பாஸ்பரஸ் (பரங்கிக்காய், முழுத்தானியங்கள், சூர்யகாந்தி விதைகள்) தாதுப்பொருளும் ‘தாது விருத்திக்கு’ உதவும்.

ஆண்மை வீரியத்திற்கு தேவையான விட்டமின்கள்
விட்டமின்கள்
விட்டமின் ‘இ’
விட்டமின் ‘சி’
விட்டமின் ‘ஏ’
விட்டமின் ‘பி’ காம்ப்ளெக்ஸ்
ஃபோலிக் அமிலம்
விட்டமின் பி 6
விட்டமின் பி 12

இருக்கும் உணவுகள்
முழுத்தானியங்கள், முட்டை, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, பாதாம், கீரைகள்
எல்லா காய்கறிகளும், பழங்களும் குறிப்பாக சிட்ரஸ் பழங்கள், தக்காளி, நெல்லி முதலியன
லிவர், முட்டைகள், சர்க்கரைவள்ளிக்கிழங்கு, கேரட், மீன் எண்ணெய்
முழுத்தானியங்கள், லிவர்
அஸ்பாரகஸ், இதர கீரைகள், முளைகட்டிய உணவுகள், முழுக்கோதுமை, சீஸ், பருப்புகள்
முழுக்கோதுமை, தவிடு, பால், வாழைப்பழம், வேர்க்கடலை, உலர் திராட்சை, லிவர், கிட்னி, மாமிசங்கள், மீன், இறைச்சி
பால், பால் சார்ந்த உணவுகள், முட்டை, லிவர்


பாலியல் இச்சையை குறைக்கும் உணவுகள்

ஒரு சராசரி மனிதனுக்கு தேவையான புரதம், கார்போஹைடிரேட், கொழுப்பு, விட்டமின்கள், தாதுப்பொருட்கள் செறிந்த உணவுகளை தேவையான கலோரிகளில் எடுத்துக் கொள்ளாவிட்டால், உடல் ஆரோக்கியத்துடன் பாலியல் திறனும் சிதைந்து விடும். சர்க்கரை, மதுபானங்கள், காப்பியில் உள்ள காஃபின் முதலியவை, ஊட்டச்சத்து உணவை, உடல் உட்கிரகிக்க விடாது. இதனால் ஆரோக்கியம் குன்றினால் ஆண்மையும் குறையும். எனவே அதீத காதல் உணர்வுகளால் கஷ்டப்படுபவர்கள் இனிப்பு, சோயா நிறைந்த உணவுகளால் இச்சையை ஒரளவாவது கட்டுப்படுத்திக் கொள்ளலாம். பாலியல் ஆசையை கட்டுப்படுத்த உதவும் உணவுகளில் ஒன்று சோயாவிலிருந்து தயாரிக்கப்படும் “டோஃபு”. சோயா பால் மற்றும் டோஃபூ, உடல் துத்தநாகத்தை கிரகிப்பதை தடுக்கிறது. வெள்ளரிக்காய், டர்னிப், முட்டைக்கோஸ் போன்றவைகளும் செக்ஸ் ஆசையை குறைக்கிறது. இந்த உணவுகள் தைராய்டு செயல்பாடுகளை குறைக்கும். தைராய்டு தான் பாலியல் உணவுகளை கன்ட்ரோல் செய்கிறது.

பாலியல் கல்வியும்..!! பாலியல் தொல்லையும்…!

இன்று நாம் அனைவரும் பொதுவாக விவாதிக்கும் விசயங்களில் பாலியல் கல்வி முக்கியமானது. பாலியல் கல்வியை எங்கு ஆரம்பிப்பது, பள்ளியிலேயே பாலியல் கல்வியை ஆரம்பிக்கலாமா அல்லது கல்லூரியில் அதனை
சொல்லித்தருவது சரியா என்பவை இன்னும் ஆய்வுக்குறியவையாக உள்ளன.

தற்போது பள்ளிகளைக் கவனிக்கும்போது பள்ளிக் குழந்தைகள் ‘காதல்’ என்ற விசயத்தைப் பற்றி சிறு வயதிலேயே அறிந்துவிடுகின்றனர். அந்தச்சொல்லின் முழு அர்த்தம் தெரியாவிட்டாலும் ஒரு குழப்பமும், ஆர்வமுமாக அதனை விவரிக்கின்றனர். இதனை அனுபவபூர்வமாக நாம் பல குழந்தைகளுடன் பேசும்போது அறியமுடிகிறது.

குழந்தைகளுக்கு நம்முடைய சிறப்பு கவனம் தேவை. குழந்தைகளின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியவர்களிடம்தான் குழந்தைகள் பொதுவாக அதிக நேரத்தைச் செலவிடுகின்றன. ஆகவே இவர்களுக்கு குழந்தைகளைக் காக்கவும், அறிவூட்டவுமான தார்மீகப்பொறுப்பு உள்ளது.

தாங்கள் வாழும் சூழ்நிலைகளால், பெரியவர்களை விட அதிகமாக பாதிக்கப்படக்கூடிய பலவீனமான நிலையில் குழந்தைகள் இருக்கிறார்கள். ஆகவே, மற்றெந்தப் பிரிவினரையும் விட, அவர்கள் சார்ந்த சமூகம் மற்றும் அரசாங்கங்களின் நடவடிக்கைகளாலும் நடவடிக்கையின்மையினாலும் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள்.

குழந்தைகளுக்கு உடல் ரீதியான தொல்லைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் இந்த எண்ணிக்கை மிகவும் கவலை தருவதாக உள்ளது. குழந்தைகள் பாலியல்பற்றி அறியாதவர்கள், பெரியவர்களின் பாலியல் செய்கைகள்பற்றியும் அவர்களுக்குத் தெரியாது. குழந்தைகளுக்கு எப்படி பாலியலைப் பற்றித்தெரிய முடியும்?


பாலியல் காட்சிகளை குழந்தைகளுக்குக் காண்பித்தல், பெற்றோர் இரவில் குழந்தைகளுடன் ஒரே அறையில் படுத்துறங்கும் போது அவகள் தூங்குவதாக எண்ணி உறவில் ஈடுபடுதல், குழந்தைகளை காம இச்சையுடன் தொடுதல், காம இச்சையுடன் அந்தரங்கப் பகுதிகளைக் குழந்தைகளுக்குக் காட்டுதல் ஆகியவற்றின் மூலமாகவே குழந்தைகள் பாலியல் மனக் குழப்பங்களுக்கு ஆளாகிறார்கள்.

தாங்கள் பார்த்த காட்சிகளின் தாக்கத்தால் அவர்கள் சாதாரண குழந்தைகளைப் போல் உற்சாகத்துடன் படிக்கவோ, விளையாடவோ இயலாமல் குழப்பத்துடன் காணப்படுகிறார்கள். இப்படி இருக்கும் குழந்தைகளை தாய்மார்கள் பொறுப்புடன் கவனித்து மனநல சிகிச்சை அளிக்கவேண்டியது மிக அவசியம்.

இத்தகைய கொடுமைகள் பரவலாக ஏழை,பணக்காரர் வித்தியாசமின்றி நடந்தாலும் பண வசதி,படிப்பறிவு குறைவான சூழ்நிலைகளில் பிள்ளைகளுக்கு தன் கருத்தைக் கூறும் உரிமை கிடைப்பதில்லை. அவர்களின் கருத்துக்களுக்கு பெற்றோர் மதிப்புக் கொடுப்பதும் இல்லை. அதனால் நெருங்கிய உறவினர்கள் குழந்தைகளிடம் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருப்பதுபோல் நடித்து அவர்களின் அன்பைப் பெற்று அந்த உரிமையில் தவறான் செய்கைகளைச் செய்கிறார்கள். குழந்தைகளைப் பெற்றோரும் உறவினர்களின் பொறுப்பில் விடும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

சமீபத்தில் இந்தியாவுக்குப் படிக்க வந்த இளம்பெண் தன் அப்பாவின் நண்பர் வீட்டில் தங்கியிருந்து பாலியல் தொல்லை கொலையில் முடிந்ததை  பத்திரிக்கைகளில் படித்து இருப்பீர்கள். நெருங்கிய உறவினர்களே பாலியல் தொல்லையை மிக அதிக அளவில் கொடுக்கிறார்கள் என்பது புள்ளிவிபரங்கள் மூலமாக நமக்குக் கிடைக்கும் தகவல். மேலும் பெண் குழந்தைகளை மிகுந்த அக்கரையுடன் கவனிக்க வேண்டியது அவசியம். அதே நேரத்தில் ஆண் குழந்தைகளிடம் நாம் அலட்சியப்போக்கைக் கடைப் பிடிக்கக் கூடாது.

பெண் குழந்தைகள் எந்த அளவுக்கு உடல் மற்றும் உணர்வு ரீதியாகக் கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்களோ, அதே அளவில் ஆண் குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றன. பெண் குழந்தை, சமுதாயத்தில் குறைவான அந்தஸ்தைப் பெற்றிருப்பதால் அவர்கள்தாம் பலவீனமான நிலையில் இருக்கிறார்கள் என்பது உண்மைதான்.



ஆனால் ஆண் குழந்தைகள் பள்ளிகளில், வீடுகளில், உடல் ரீதியான தண்டனை அனுபவிப்பவர்களாக இருக்கிறார்கள். பல சிறுவர்கள் இளம்  வயதிலேயே வேலைக்கு அனுப்பப்படுவது, விற்கப்படுவது போன்றவை நடக்கின்றன. இவர்களில் பலர் தாங்கள் வேலை செய்யும் இடங்களில் பல செக்ஸ் அத்துமீறல்களுக்கு உள்ளாகிறார்கள்.

இந்த சந்தர்ப்பத்தில் குடும்ப உறவினர்கள் தவிர குழந்தைகள் அதிக நேரம் செலவிடும் இடம் பள்ளிக்கூடம். அந்தப் பள்ளிக்கூடத்திற்கு பெற்றோர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் குழந்தைகளைப் பெற்றோர்கள் அனுப்பி வைக்கிறார்கள். குழந்தைகளை ஆசிரியர்கள் மிகுந்த பொறுப்புடன் கவனித்துக்கொள்வார்கள் என்று அவர்கள் நம்புவதால் அவர்கள் பள்ளியில் என்ன செய்கிறார்கள் என்று நாம் கவனிப்பதில்லை. நன்றாகப் படிக்கிறார்களா இல்லையா என்பதுமட்டுமே நமது சிந்தனையாகவுள்ளது. ஆயினும் பள்ளியிலும் சில புல்லுறுவி ஆசிரியர்கள் இருப்பது மிகவும் வேதனையளிப்பதாக உள்ளது( சக ஆசிரிய பதிவர்கள் பொறுத்தருள்க! என் ஆசிரியர்களை நான் இன்றளவும் கடவுளாகவே மதிக்கிறேன்.)  பத்திரிக்கைகளில் வந்த ஒரு செய்தியைக் கீழே தருகிறேன்.

கோயம்புத்தூர்: மதுக்கரை என்ற இடத்திற்கு அருகில் உள்ள ஒரு ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவிகளைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். மூன்றாம் வகுப்புப் படிக்கும் 8 வயதுப் பெண் அளித்த புகாரின் பேரில், போலீசார், தலைமை ஆசிரியரைக் கைது செய்துள்ளனர்.

இது ஒன்றுமட்டும் அல்ல! தினமும் நாம் பத்திரிக்கைகளில் படிக்கும் செய்திகள் மிகவும் கவலை தருவதாக உள்ளன. பெண் குழந்தைகளுக்குப் பாலியல் தொல்லை போல் ஆண் குழந்தைகளையும் ஓரினச் சேர்க்கைக்கு உட்படுத்தும் ஆசிரியர்கள் பற்றியும் கல்வித்துறை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

டில்லியை சேர்ந்த ஒரு சர்வதேச சமூக அமைப்பான, “ராகி’ மேற்கொண்ட ஆய்வில், சென்னை, மும்பை, டில்லி, கொல்கத்தா மற் றும் கோவாவில் ஆங்கிலம் பேசும் 600 குழந்தைகளிடம் சர்வே எடுத்ததில், அவர்களில் 67 சதவீதம் பேர், ஏதாவது ஒரு கட்டத்தில் பாலியல் அத்துமீறலுக்கு ஆளாகி உள்ளனர் என்பது தெரிந்தது.

மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தைகள், உடல் ஊனமுற்ற நிலையில் இருக்கும் குழந்தைகள், அவர்கள் இருக்கும் பலவீனமான நிலையால், பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாகிறார்கள்.  குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குவது என்பது, பாலினம், சமூகநிலை, இனம் ஆகிய அனைத்து நிலைகளிலும் இருந்துவருகிறது. நகரங்கள், கிராமப் பகுதிகள் என்ற எல்லா இடங்களிலும் நடக்கிறது.

ஜி.எஸ். மீனா, ஆர்.சி. ஜிலோஹா, மற்றும் எம்.எம்.சிங் ஆகியோர் இந்தியக் குழந்தைகள் மருத்துவ மையம் மற்றும் மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியின் சமூக மருந்தியல் மற்றும் உளவியல் துறை ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள். இவர்கள் 2003 – 2004ஆம் ஆண்டில், டெல்லியிலுள்ள கண்காணிப்பு இல்லம் ஒன்றில் தங்கியிருந்த ஆண்களிடம், ஆய்வு நடத்தினர்.  அதன் ஆராய்ச்சியின் முடிவாக,”கண்காணிப்பு இல்லத்திற்குக் கொண்டு வரப்பட்ட தெருவோரச் சிறுவர்களின் பாலியல் வன்கொடுமை அனுபவங்கள்” என்ற ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பித்தார்கள். இக்கட்டுரையில் பாலியல் வன்கொடுமை எந்த அளவுக்கு இருக்கிறது, எந்த முறையில் உள்ளது என்பதைப் பற்றி தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.

டெல்லியில் உள்ள இந்தக் கண்காணிப்பு  இல்லத்தில் உள்ள பெரும்பாலான சிறுவர்கள் வீட்டை விட்டு ஓடி வந்தவர்கள். இந்த இல்லத்தில் இருந்தவர்களில் 38.1% பேர் பாலியல் ரீதியான வன்கொடுமைகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள். இவர்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தியதில் பாலியல் ரீதியான கொடுமை நடந்ததற்கான உடல் ரீதியிலான அடையாளங்கள் 61.1% பேரிடம் இருந்தன. 40.2% பேரிடம் அவர்கள் நடத்தையில் அதற்கான அடையாளங்கள் தெரிந்தன. 44.4% பேர் வன்புணர்ச்சிக்கு ஆளானவர்கள். 25% பேருக்குப் பாலுறவு நோய்களுக்கான அறிகுறிகள் இருந்தன.



குழந்தைகளிடம் தாய்மார்கள் அன்புடன் பழகி அன்றாடம் அவர்களின் பள்ளியில், அவர்கள் செல்லும் இடங்களில் என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்வது மிக அவசியம். குழந்தைகளின் நலனைப் பேணவேண்டியது நம் கடமை என்பதால் அவர்களுக்கு பாலுணர்வு ,இணப்பெருக்க ஆரோக்கியம் பற்றிச் சொல்லித் தருவது மிக அவசியம், அது குழந்தைகளின் உரிமையும்கூட.

ஆனால் நிறையப் பெற்றோர்கள் குழந்தைகளின் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்று கேட்டு அறிவதில்லை. மாறாக குழந்தைக்குத் தேவையான அனைத்தையும் தாங்களே முடிவு செய்வதில் உறுதியாக இருக்கிறார்கள். இது மிகவும் தவறான அணுகுமுறை.அவர்களுடன் கலந்து பேச நாம் தயாராக இல்லாததால், இது பற்றிய பேச்சையே நாம் தவிர்த்துவிடுகிறோம். வாழ்க்கைக்குத் தேவையான கல்வியான இதைப் பற்றிக் குழந்தைகளுக்கு போதிக்க நாம் தயாராக வேண்டியது அவசியம்.

வெளிநாடுகளில் குழந்தைகளின் மீதான் பாலியல் பலாத்காரங்களை ஆராய்ந்து தகுந்த முறையில் வரையறை செய்து  அதனைச் சட்டமாக்கி கடும் தண்டனை தருகின்றனர். இந்தியாவில் அப்படி ஒரு விரிவான சட்டம் இல்லை. இப்போதுள்ள இந்தியச் சட்டத்தில், “குழந்தை செக்ஸ் அத்துமீறல் கொடுமைகள்’ சேர்க்கப்படவில்லை. மேலும் ஆண்குழந்தைகளுக்கான வரம்புமீறல்களில் நம் சட்டங்களில் தெளிவு இல்லை.

நம் குழந்தைகள் பாலியல் துன்பங்களுக்கு ஆளாகாமலும்  மனோரீதியான அழுத்தம், உடல் ரீதியான பாதிப்புக்கு உள்ளாகாமல் காக்கவேண்டியதும் நம் அனைவரின் கடமை.

”குட் டச்! பேட் டச்” பற்றிப் பேசவிருக்கும் நாம் நமது தார்மீகக் கடமையிலிருந்து தவறுவது குழந்தைகளுக்கு நாம் இழைக்கும் அநீதியாகும். உலக சுகாதார நிறுவனம் நாம் கடைப்பிடிக்க வேண்டிய  சில வழிமுறைகளைக் குறிப்பிட்டுள்ளது. அவை:

* எந்த உறுப்பும் மர்மமானதோ, ரகசியமானதோ இல்லை. ஆனால், அந்தந்த காலகட்டத்துக்கு சொல்லி உஷார் படுத்துவது நல்லது.

* யாராவது, குழந்தைக்கு முத்தம் கொடுத்தால் கூட குழந்தையை விட்டே தடுப்பது நல்லது.

* தாய்மார்கள் தங்கள் பெண் குழந்தைகளின் மார்பகம் உட்பட மறைக்கப்பட வேண்டிய உறுப்புகளை, யாரும் தொட விடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்பதைச் சொல்லிக்கொடுக்க வேண்டும்.

* குழந்தை வீட்டை விட்டு  அடிக்கடி வெளியில் போகிறாள் என்றால் அதனைக் கண்காணிக்க வேண்டும்.

* நம் தொலைக் காட்ச்சியில் திரையிடப்படும் சில நிகழ்ச்சிகளைப் பார்த்தும்கூட பிள்ளைகள் தவறான நடத்தைக்கு உட்படலாம். அதனால், அது சரி, இது தவறு என்று ஆரம்பத்தில் இருந்தே எச்சரிப்பதுடன், கண்காணிப்பது முக்கியம்.

* வெளியாட்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி அவசியம் எச்சரிக்க வேண்டும்.

*  குழந்தைகளிடம் எந்த கட்டத்திலும், தவறு என்று தெரிந்தால், உடனே போன் செய்யவோ, வெளியேறவோ அட்வைஸ் செய்து வைக்க வேண்டும்.

நம் நாட்டிலா இப்படி? நம் ஊரில் இப்படியெல்லாம் நடக்காது என்று இந்த விசயத்தை ஒதுக்கிவிடாமல் நம் குழந்தைகளைக் காத்து வளமான எதிகால சமுதாயத்தை உருவாக்குவோம்.

ஆண்கள் பெண்கள் பின்னால் சுற்றுவது எதனால்!!

ஆண்களுக்குத்தான் அதிகமாக ஆலோசனைகள் வழங்குகிறேன் ஆனால் பெண்களுக்கும் நல்ல ஆலோசனை தரவேண்டும் என்று பல பெண்கள் வேண்டிக்கொண்டனர். சில நன்பிகளோ என்னோடு பேசுவதே இல்லை அவர்களுக்காகவே இந்த ஆலோசனைகள்.



இன்று சில (பல) பெண்கள் ( பெண்கள் என்னை திட்டவேண்டாம் எல்லோரும் இல்லை என்று சொல்ல்கிறேன்). ஆண்களை ஏதோ ஒரு வகையில் தன் பின்னால் அலைய வைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். சில அப்பாவி ஆண்கள் நாய் போல் அலைந்து. கடைசியில் எல்லாம் இழந்து, எல்லாம் புரிந்து….. என்னவோ எல்லாம் நடக்குது…



சில பெண்கள் தங்கள் நண்பிகளிடம் கேட்டுக்கொள்வார்கள் “அடப்பாவி எப்படிடி இப்படி உன்னாலமட்டும் இப்படி ஆண்களை உன் பின்னால அலைய வைக்க முடியும் என்று” அது பெரிய வேலை இல்லை தங்களால் முடியவில்லையே என்று கவலைப்படுபவர்களுக்காகவே இந்த ஆலோசனைகள்.



பெண்கள் ஆண்களை தன் பின்னால் அலைய வைப்பது எப்படி
01 . ஆண்களைக் காணும்போது கடைக்கண் பார்வை பார்த்துவிட்டு ஒரு புன்னகை செய்தால் போதும்.
02. ஆண்கள் இருக்கும் அல்லது ஆண்கள் அதிகம் இருக்கின்ற இடங்களில் அடிக்கடி நடமாடுங்கள். அங்கே இருக்கின்ற ஆண்களைத்தான் நீங்கள் பார்க்க வருவதுபோல் பாவனை செயுங்கள்.
03 . அடிக்கடி வாகனங்களில் பயணம் செய்பவர் நீங்களாக இருந்தால் வாகனத்தில் வருகின்ற ஆண்களின் முகத்தை ஒரு தடவை பார்த்து சிறிய புன்னகை… அவ்வளவுதான் உங்களை பின்தொடர்வோர் அதிகமாகிவிடுவார்கள்.
04 . நீங்கள் இணையத்தில் அரட்டையடிப்பவரா? அப்படியாயின் ஆண் அரட்டை நண்பர்களுக்கு ஒரு ஹாய் (hi ) சொன்னால்போதும் உங்களை ஒரு தேவதையாக நினைத்துவிடுவார்கள்.
05 . நீங்கள் தமிழ் கலாசார ஆடைகளை தவிர்த்து நவீன நாகரிக அரை, குறை ஆடைகளோடு பவனி வாருங்கள் உங்கள் பின்னால் நாயும் அலையும்.

06 . எப்பவும் உங்கள் கையில் கைத்தொலைபேசி இருக்கட்டும். ஆண்கள் உங்கள் தொலைபேசி இலக்கத்தை கேட்கும்போது கொடுத்துவிடுங்கள். நீங்கள் அடிக்கடி ஆண்களின் தொலைபேசி இலக்கங்களுக்கு ஒரு missed call (தவறவிட்ட அழைப்பு) பண்ணினால் போதும். ஆண்கள் அழைப்பை எடுத்தால் நீங்கள் பேசவேண்டாம் அல்லது ஹாய் மட்டும் சொல்லிவிட்டு துண்டித்து விடுங்கள்.

07 . ஆண் நண்பர்களோடு பேசும்போது நெருக்கமாக காதலிப்பதுபோல் பேசிக்கொள்ளுங்க. எல்லா நண்பர்களோடும் இப்படியே பழகுங்கள் அவர்கள் உங்களை காதலிக்க ஆரம்பித்தால் நீங்கள் காதலிக்கவில்லை என்றாலும் நீங்கள் காதலிக்கவில்லை என்ற விடயத்தை தெரியப்படுத்த வேண்டாம். வழமையாக நெருக்கமாக பழகுவது போன்றே பழகுங்கள்.

08. உங்களிடம் பலர் காதலை வெளிப்படுத்தி உங்கள் சம்மதம் கேட்டிருக்கலாம், கேட்கலாம் அப்போது முடியாது என்று சொல்லவேண்டாம். பின்னர் சொல்கிறேன் என்று கேட்பவர்கள் எல்லோரிடமும் சொல்லிவிடுங்கள்.

09. உங்களோடு சில பெண் நண்பிகளை வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் உங்கள் கதை கேட்டுத்தான் செயற்படுவது போன்று காட்டிக்கொள்ளுங்கள். இந்த நண்பிகளையும் உங்கள் ஆண் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள். ஆனால் அந்த நண்பிகளை உங்கள் ஆண் நண்பர்களோடு தனிப்பட்ட தொடர்பு வைத்துக்கொள்ள விடவேண்டாம்.

10 . இதுதான் முக்கியமானது…. எங்களைப் போன்றவர்களிடம் இது மாத்திரமல்ல எதனை செய்தாலும் நாங்கள் பெண்கள் பின்னால் அலையமாட்டோம். ஆனால் பெண்களைத்தான் எங்கள் பின்னால் அலைய வைப்போம். எங்களைப் போன்றவர்களிடம் உங்கள் வேலையே காட்டி நேரத்தை வீணடித்து எங்கள் பின்னால் நீங்கள் அலைவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.

சுய இன்பம்

சுய இன்பம் (MASTUBATION) தனியாகவே பாலியல் இன்பம் பெறுதலைக் குறிக்கும்.
நம்மில் பல பேர் சுய இன்பம் என்றாலே ஒரு குற்றச்செயல் போலதான்
கருத்துக்களைச் சொல்வார்கள். வலைப் பூக்களில் கூட இது பற்றி எதிர்மறையான
கருத்துக்கள்தான் நிறைய எழுதப்படுகின்றன.

எது எப்படியோ சில நிரூபிக்கப் பட்ட உண்மைகளை மட்டும் நான் சொல்லி விடுகிறேன்.

ஒரு ஆய்விலே அறியப் பட்டது 95
வீதமான ஆண்களும் 85 வீதமான பெண்களும் சுய இன்பம் பெறுவதை ஒத்துக்
கொள்கிறார்கள். ஒத்துக் கொள்ளாதவர்களிலும் சுய இன்பம் பெறுபவர்கள்
எத்தனையோ?

திருமணமானவர்கள் கூட இடையிடையே சுய இன்பத்தில் ஈடுபடுவதையும் அந்த ஆய்வு வெளிக்கொணர்ந்தது.

ஆக சுய இன்பம் என்பது இருபாலரிலும் காணப்படும் பொதுவான ஒரு இயல்பு.

ஆரம்ப காலத்தில் இந்த சுய இன்பம் என்பது பாலியல் வேறுபாட்டு குறையாகவே
மருத்துவத்தாலும் பார்க்கப் பட்டது இருந்தாலும் இது தீங்கற்ற ஒரு சாதாரன
செயலாகவே இப்போது நோக்கப் படுகிறது.

சுய இன்பம் காரணமாக உடல் ரீதியாக எந்தத் தீங்கும் இல்லை.இருந்தாலும் இது மன ரீதியாக சில
பாதிப்புக்களை ஏற்படுத்தலாம் . குறிப்பாக சுய இன்பத்தில் அதிகம் நாட்டம்
கொண்டு இல்லற இன்பத்தை தவிர்க்கும் போது குடும்பச் சிக்கல்கள் ஏற்படலாம்.

இது தவிர சுய இன்பம் எந்தவொரு பாதிப்பையும் ஒருவருக்கு ஏற்படுத்தும் என்பதில்
எந்த உண்மையும் இல்லை.குறிப்பாக சுய இன்பம் பெறுவதால் ஆண்மைத் தன்மை
குறையும் என்பதில் எந்த உண்மையும் இல்லை.

செக்ஸ் வாழ்க்கைக்கு நெருப்பு வைக்கும் சிகரெட்

ஆண்டுக்கணக்கில் பாக்கெட் பாக்கெட்டாக சிகரெட்டை ஊதித்தள்ளுபவர்கள் உடலுறவில் நாட்டம் இன்றி போகின்றனர் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. ஆணோ, பெண்ணோ அவர்களிடையே உள்ள புகைப்பழக்கம் செக்ஸ்
ஆசையை முற்றிலும் அழித்துவிடுகிறது என்று எச்சரிக்கின்றனர்.


பல ஆண்டுகளுக்கு முன்னர் சிகரெட் புகைப்பதனால் ஏற்படுகின்ற தீமைகள் என்ற உத்தேசமாகச் சொல்லப்பட்டு வந்தவை அனைத்தும் இன்றைக்குப் பல அறிவியல் ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டு விட்டன. இவ்வகை ஆய்வுகள் மேலும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. புகைப்பதனால் விளைகின்ற தீமை களைப் பட்டியலிட்டால் அது முடிவில்லாது நீண்டு கொண்டே போகும்.


புகையிலையுள்ள நிகோடின் எனப்படும் கொடிய விஷத்தினால் குறைபாடுடைய கரு, கருச் சிதைவு போன்றவைகள் பற்றிய பல ஆய்வு முடிவுகள் வந்துள்ளன. அவற்றைத் தொடர்ந்து தற்போது புகைப்பழக்கம் இனக்கவர்ச்சி ( Sex attraction) யை அழிப்பது டன் ஆண் பெண் உடலுறவைப் பெரிதும் பாதிக்கின்றது என்று சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது. மேலும், ஆண்டுக் கணக்கில் தொடர்ந்து புகைக்கின்ற பல ஆண்கள் உடலுறவில் நாட்டம் இன்றி போகிறார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.


அண்மையில் போஸ்டன் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியின் சிறுநீரியல் துறைத் தலைவரான டாக்டர் இர்விங் கோல்ட் ஸ்டெய்ன் தலைமையில் மேற்கொண்ட ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்துள்ளன.
இரண்டு ஆய்வுகளின் மூலம் ஆண்குறி விறைப்பின்மைக்காக மருத்துவம் செய்து கொள்ள வந்த 1011 ஆண்களில் 78 சதவிகிதம் அதாவது 789 பேர்கள் தீவிரமான புகைப்பழக்கமுள்ள வர்கள் என்பது தெரியவந்ததுடன், இவர்கள் அனைவரிடமும் காணப்பட்ட பொதுவான காரணம் புகைப்பழக்கம் என்பதுதான். ஆண்குறிக்கு இரத்தத்தை எடுத்துச் செல்கின்ற இரத்தக் குழாய்கள் நிகோட்டினினால் பாதிக்கப்பட்டுக் குறுகிப் போவதே இதற்குக் காரணமாக இருக்கக் கூடுமென்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இரண்டாவது ஆய்வில் ஆண்குறி அளவு குன்றல் ஆகியவற்றிற்கு மருத்துவம் செய்துகொள்ள வந்த 120 புகைப்பழக்க முடையவர்கள் எடுத்துக் கொள்ளப்பட்டனர். நுண்ணிய கருவிகளைக் கொண்டு அவர்களது ஆண்குறிக்குச் செல்கின்ற இரத்தத்தின் அளவைக் கணக்கிட்டுப் பார்த்தபோது புகைக்கின்ற சிகரெட்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க இரத்தம் செல்கின்ற அளவு குறைந்து கொண்டே வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


இது தவிர வேறொரு ஆய்வின் மூலம் “புகைப்பழக்க முடையவர்களின் விந்தணுப்பாகில் விந்தணுக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து இருப்பதும் அறியப்பட்டுள்ளது. அத்துடன் இவர்களின் விந்தணுப்பாகில் காணப்பட்ட விந்தணுக்களில் பல குறைபாடு உடையவை களாகவும், இயல்பு நிலைக்கு மாறுபட்டவை களாகவும் இருந்தன.
புகைப்பதை வழக்கமாகக் கொண்ட பெண்கள் பாலுறவில் ஆர்வம் குன்றியவர்களாக உள்ளனர். அத்துடன் அவர்களது கருவுறும் திறனும் 43 சதவிகிதம் குறைவு பட்டிருந்தது”
மற்றுமொரு ஆய்வின்படி புகைக்கின்ற பெண்கள் பிற பெண்களை விட இரண்டாண்டுகள் முன்னரே மாதவிலக்கு நிற்கின்ற நிலையை (Menopause) அடைகின்றனர் என்று தெரியவந்தது.


மேற்கண்ட ஆய்வு முடிவுகளிலிருந்து செக்ஸ் எனும் பாலுறவு நிலைக்கும் புகைப்பழக்கத்திற்கும் மறுக்கமுடியாத தொடர்பு உள்ளது என்பது உறுதியாகின்றது. இந்த ஆய்வு முடிவுகள் அமெரிக்க மருத்துவர்கள் சங்க இதழில் வெளியிடப்பட்டுள்ளன.


ஆண்மைக் குறைவு பற்றி மனங்குமைந்து கவலைப்படுபவர்கள் புகைப் பழக்கமுடைய வர்களாக இருந்தால் உடனடியாக அப்பழக் கத்திலிருந்து மீள முயல வேண்டும். அப்பொழுதுதான் இழந்து போன இல்லற சுகத்தை மீட்கமுடியும் மேலும் குறைபாடில்லாத சந்ததியை உருவாக்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.

உறவுக்குப் பின் உடனே சாப்பிடாதீங்க

தாம்பத்ய உறவு என்பது தம்பதியர்களுக்கு இடையேயான அந்தரங்கமான உறவு. இதற்கு படம் போட்டு விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்றாலும் படுக்கை அறையில் நடந்து கொள்ளவேண்டிய முறைகளைப் பற்றி சில வி
சயங்களை தம்பதியர் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. இதனால் கணவன் மனைவி இடையே தேவையற்ற சங்கடங்கள் ஏற்படுவது தவிர்க்கப்படும்.



உடனே குளிக்காதீங்க!

தாம்பத்ய உறவிற்குப் உடலை தூய்மைப் படுத்திக்கொள்வது நல்லதுதான். அந்த நேரத்தில் ஒன்றாக குளித்தால் கூடுதல் சுகம்தான். அதற்காக உறவு முடிந்த உடனே குளியலறை நோக்கி ஓடத் தேவையில்லை என்கிறார்கள் நிபுணர்கள். வேலை முடிந்து விட்டது என்று நீங்கள் நினைத்தாலும் உங்கள் துணை இன்னும் அந்த மன நிலையில் இருக்கலாம், இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று எதிர்பார்க்கலாம். எனவேதான் உடனே குளியலறை நோக்கி ஓடினால், ஏதோ தவறு நடந்து விட்டதோ என்று நினைக்கத் தோன்றும் என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் ஆடை அணியவும் அவசரம் வேண்டாம் என்றும் அறிவுறுத்துகின்றனர். ஏனென்றால் உங்களின் துணை உங்கள் இன்னும் கொஞ்சநேரம் ரசிக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கலாம். எனவே ரசனைக்கு தடை போடும் வகையில் ஆடை அணிய அவசரம் காட்ட வேண்டாம் என்று கூறுகின்றனர்.

உடனே தூங்காதீங்க!

செக்ஸ் உறவு முடிந்ததும் இருவரில் ஒருவர் அல்லது இருவருமே உடனே தூங்கிவிடுவது தவறு. இது தாம்பத்திய உறவின் வசீகரத்தை கொன்றுவிடும் என்கிறார்கள் நிபுணர்கள். தம்பதியர் பலருக்கு இந்தப் பிரச்சனை இருக்கிறது. அதாவது உடனடியாக உறக்கத்தில் விழுவது,செக்ஸ் உறவு எவ்வாறு இருந்தது என சிந்திக்க விடாது அந்த இனிமையான மனநிலையை ரசிக்கவும் முடியாது போய்விடும்.

படிக்க வேண்டாம்

உறவின் போது தம்பதியர் மனதில் ஓடுவது என்ன என்பதற்கு இன்று வரை தெளிவான பதில் இல்லை. ஆனால்உறவிற்குப் பின் வேலை அல்லது படிப்பைக் கவனிக்கப் போகிறவர்கள் அதற்கான விடையைக் கூறி விடுகிறார்கள். தாம்பத்திய உறவு வேளையிலும் அவர்கள் மனதை வேலையோ, படிப்போதான் ஆக்கிரமித்திருக்கிறது. எப்படி படிப்பு அல்லது வேலையின் போது செக்ஸ் எண்ணங்களில் மனதை அலைபாய விடுவது தவறோ, அதைப் போல தம்பதியரின் அந்தரங்க வேளையிலும் படிப்பு, வேலை என்று சிந்தனை ஓடினால் அது உண்மையான மகிழ்ச்சியை தராது என்கின்றனர் நிபுணர்கள்.

தனித்தனியே உறங்க வேண்டாம்

தம்பதியர் தனித்தனியாக படுக்கும் பழக்கம் இருக்கலாம். ஆனால் உறவினால் மகிழ்ச்சி நிறைந்த அந்த இரவிலும் உடனே தலையணையையும்,போர்வையையும் தூக்கிக்கொண்டு தனியாக தூங்கச் செல்வது நல்லதல்ல என்கின்றனர் நிபுணர்கள். இது, அன்றைய இரவின் அழகான சூழ்நிலையைக் கெடுப்பது மட்டுமல்லாது. தொடர்ந்து வரும் இரவுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே அன்றைய தினம் மட்டுமாவது ஒருபோர்வைக்குள் இருதூக்கம் அவசியமாம்.

உடனே சாப்பிடாதீங்க

படுக்கையறைக்கு போகும் முன் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து அமர்ந்து நிதானமாக சாப்பிடுவது காதலை அதிகரிக்கச் செய்யும். ஆனால் தாம்பத்ய உறவிற்குப் பின் உடனே சாப்பிடுவது, மோசமான விசயமாகும். உங்களுக்கு உடல் பசியில்லை… குடல் பசி தான், உறவின் போது உங்களுக்கு சிந்தனை எல்லாம் சாப்பாடு மீதுதான் இருந்திருக்கிறது என்று துணையை நொந்து கொள்ளச் செய்யும் உங்கள் செயல்.

விமர்சனம் வேண்டாம்

ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவம் உண்டு. எனவே படுக்கை அறையில் உங்களின் துணை உங்களிடம் நடந்து கொள்ளும் விதம் பற்றி விமர்ச்சிக்க வேண்டாம். அது அவரை அவமானப்படுத்தியதாக அமைந்துவிடும். எனவே எதையும் விமர்ச்சிக்கும் வகையில் கூறாமல் சற்று நயமாக அப்படி நடந்து கொண்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று கூறுவதுதான் தொடரும் உறவுக்கு நன்மை தரும் என்கின்றனர் நிபுணர்கள்.

பேச்சுக்கு தடை போடுங்க

படுக்கையறையில் மகிழ்ச்சியாக இருந்துவிட்டு சில நிமிடங்கள் வரை அதை பற்றிய நினைவுகளில் மூழ்கியிருக்க வேண்டும். அதை விடுத்து அந்த நேரத்தில் தமது நண்பரை அல்லது தோழியை போனில் அழைத்துப் பேசுவது மகிழ்ச்சி வேளையில் இது ஓர் இடைஞ்சலாகவே இருக்கும். உறவில் உங்களுக்கு உண்மையான நாட்டமில்லை என்றும் துணையை எண்ணச்செய்யும். பொதுவாக தம்பதியர்கள் செய்யும் தவறுதான். எனவே நட்பு ரீதியான பேச்சுக்களை காலையில் வைத்துக்கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

குழந்தைகளுக்குத் தடை

நமது அந்தரங்கத்தில் அடுத்தவரை ஊடுருவ விடுவது, அந்தச் சந்தோசத்தின் முழுமையைச் சிதைத்து விடும். அதற்கு குழந்தைகளும் விதிவிலக்கல்ல. உறவுக்குப் பின் குழந்தைகளை உடன் படுக்க வைத்துக்கொள்ளவேண்டும் என்ற துடிப்பு, இயல்பாகவே பெண்களுக்கு அதிகம். இன்னும் “ரொமாண்டிக் மூடில்”இருந்து மாறாத கணவனுக்கு அது ஏமாற்றத்தைத் தரலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

பெண்களுக்கு ஏன் பருத்த மார்புகள் வேண்டும்

பிராவின் நோக்கம் ஆரோக்கியம் அல்ல, வர்த்தக / ஆணாதிக்க அழகியல் தான்.

[ உடலில் கொழுப்புத் திரட்சிகள் கொண்டுள்ள பெண்தான் குழந்தையைப் பெற்று வளர்க்க சக்தியுள்ள வலிமையான பெண். இதனால் பருத்த மார் கொண்ட பெண் வம்சாவளி நீட்டிக்க வேண்டும் ஆணுக்குப் பிடித்தமானவளாய் உள்ளாள். பருத்த முலைகள் இவ்வாறு பரிணாமம் தரும் பச்சை விளக்குகள் என்பது மற்றொரு சாரார் கருத்து.

பருமனான முலைகள்? ஆரம்பத்தில் சமிக்ஞைகள் பற்றிச் சொன்னதை நினைவு படுத்துங்கள். சாலையில் பச்சை விளக்கு போல் இந்த நூற்றாண்டிலும் மனிதனின் ஆழ்மனம் துணையைக் கண்டதும் சில சமிக்ஞைகள் தருகிறது. துணைத்தேர்வைப் பொறுத்த வரையில் பெண்ணின் மார்பு, இடை, புட்டம் போன்ற சில அடிப்படைக் கூறுகள் பெரும்பான்மையான ஆண்களுக்குப் பச்சை விளக்குகள். இவை மறைக்கப்படும் போது உதடுகள், கண்கள், கூந்தல் ஆகியவை கவனத்துக்குள்ளாகின்றன.

பிராவின் நோக்கம் ஆரோக்கியம் அல்ல, வர்த்தக/ஆணாதிக்க அழகியல் தான். பிரா கணுக்ககளை மறைத்தாலும், அது கூர்மையான, மேலெழுந்த, பருமனில் கச்சிதமான ஒரு மார்பு வடிவத் தோற்றம் தருகிறது. சுருக்கமாய்ச் சொல்வதானால் பிரா மார்பை மறைப்பதகற்காக அல்ல, மேலும் அழகுபடுத்துவதற்கானது. பிரா ஒழுக்கவியலாளனின் தேர்வல்ல. மாறாக, பெண்ணுடலை குழந்தை உற்பத்தி ஆலையாகக் காணும் சராசரி ஆணின் தேர்வு. ]

பெண்களுக்கு ஏன் பருத்த மார்புகள் என்ற கேள்வியை ஏன் கேட்க வேண்டும்?

1) பாலூட்டிகளில் மனித இனத்துக்குத் தான்விகிதப்படி மிகப்பெரிய மார்புகள். இது ஏன்?

2) மார்பு எனும் பாலூட்டும் உறுப்பை அதன் அடிப்படைச் செயல்பாட்டைத் தவிர, பருமனாய், துவளாமல் மேலெழுந்து கச்சிதமாய் இருக்கும்படி ஆண் எதிர்பார்ப்பது ஏன்? பொது இடங்களில் சதா தங்கள் மார்புகள் கண்காணிக்கப்படுவதை, பரிசீலனைக்கு உள்ளாவதை உணர்ந்து கூச்சமுறும் பெண்கள் கேட்க வேண்டிய கேள்வி இது. இதற்கான பதில் ஆண்களைப் புரிய பயன்படும்.

3) வரலாற்றில் பெண்ணுடல் மீதான கவனம் எப்போதுமில்லாத அவல நிலையை அடைந்துள்ளது. பிளாஸ்டிக் அறுவையாளர்களிடம் மாட்டி, நமது வெற்றிப் பெண்கள் இயல்பான உடலமைப்பை இழந்து தங்களுக்குத் தாங்களே அந்நியமாகும் பெரும் அவலம் உலகமெங்கும் நிகழ்கிறது.
லிப்போ சக்ஷன் (உடல் கொழுப்பை உறுஞ்சி எடுத்து உடலுறுப்பை வடிவாக்குவது), முகச்சுருக்கத்துக்கு பொட்டாக்ஸ் ஊசி, டக்கப் அறுவை சிகிச்சை (தொங்கும் மார்பை கட்டுக்கோப்பாக்க) எனப் பெண்ணுடலை சோதனைக்கூட கின்னி பிக்கைப் போல் அறுத்து, குழாயால் உறிஞ்சி பிளாஸ்டிக் அறுவை விற்பன்னர்கள் உலகம்பூரா கோடிக்கணக்கில் பணம் ஈட்டுகின்றனர். இது ஆணின் விருப்பத்திற்கேற்ப உடலை வடிவமைக்கும் ஆதிக்கவாதச் செயல்தான்.

ஒப்பிடுகையில் பெண்களைப் போன்று ஆண்கள் தங்கள் உடலை அறுத்து, இஞ்சு, இஞ்சாய் உறுப்புகளை வடிவமைத்து, பட்டினி கிடந்து, ஒல்லியாகும் மாத்திரை விழுங்கி சிறு நீரகத்தைப் பாழ்செய்து சுயவதை புரிவதில்லைதான்.

நமது புதுமைப்பெண் ஆணிடம் தன்னைப் புணர்ச்சிக்குத் தயாராய்க் காட்ட ஆணைவிட அதிகமாய் சிரத்தை எடுப்பதும், அத்தகைய ஒரு பிம்பத்தை அவள் மேல் ஊடகங்கள் வணிக ஆதாயத்துக்காகத் திணிப்பதும் இந்தப் பெண்விடுதலை நூற்றாண்டின் மாபெரும் நகைமுரணே.

சமூகத்தின் எத்தனையோ வார்ப்புகளில் விழுந்து, ஊடகங்கள் தொடர்ந்து உற்பத்தி செய்யும் கவர்ச்சிப் பாவை பிம்பங்களில் தானும் ஒரு பிம்பமாய்த் தொலைந்து நவீனப் பெண், சுயத்தன்மை, ஆளுமை, அறிவுத்திறனின் அடையாளங்களை இழக்கிறாள். மார்புகள் சமகாலப் பெண் பிம்பத்தின் ஒரு முக்கிய அடையாளம்.

மார்புகளின் வடிவம் பற்றிய தீவிர பிரக்ஞை பூனை கழுத்து மணி போல் நவீனப்பெண்ணுக்குள் விடாமல் ஒரு கண்காணிப்புக் குரலாக ஒலிக்கிறது. இந்தக் குரல் யாருடையது?

மூன்றாவது கேள்வியிலிருந்து நம் விசாரணையை ஆரம்பிக்கலாம்.
அக்குரல் ஆணுடையதுதான். ஆண்கள் பெண்களுக்குப் பூட்டிய ஆகப்பெரிய விலங்குகளில் மிகச் சூட்சுமமானதும் தந்திரமானதும் பிராதான். பிரா அணிவதன் பயன் என்ன? பிரா அணிவதால் தொய்வுற்ற மார்புகள் உறுதி பெற்று நிமிரும் என்றும், இவ்வாறு இதை அணியாதோரின் மார்புகள் துவண்டு தொங்கிப் போகும் என்றும் இரு வினோதமான பொய்கள் படித்த பட்டதாரிப் பெண்கள் மத்தியிலும்கூட நிலவுகிறது.

பத்தாம் வகுப்பில் என் நண்பனான ராஜா ஜட்டி அணியாமல் இருந்தால் குறி வளரும் என்றொரு கட்டுக்கதையை நம்பி சுதந்திரமாய்ச் சில காலம் திரிந்ததைப் போன்ற அபத்தம் இது.

அடுத்து இந்த நவீன நாரீமணிகள் கவனத்துக்கு: பல நாடுகளிலாய்ச் செய்யப்பட்ட ஆய்வுகளின் முடிவில் தெரிய வந்தது 70 இலிருந்து 100 % பெண்கள் சரியாய்ப் பொருந்தாத பிரா அணிந்து அவதியுறுகின்றனர் என்றே!
இவ்வாறு பொருந்தாத பிராவினால் தொள்வலி, கழுத்துவலி எனப் பல உபாதைகள் வேறு. பிரான்சில் 250 பெண்களைக் கொண்டு ஒரு ஆய்வு செய்யப்பட்டது.

இந்தப் பெண்களிடம் ஒரு வருடத்திற்கு பிரா அணிவதில்லை என்றும், தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதாகவும் ஒப்பந்தம். வருட முடிவில் நடத்தப்பட்ட ஆய்வில், பலரும் பிரா இல்லாமலே அதிக வசதியாய் உணர்வதாய், அவர்களின் மார்புகள் மேலும் உறுதியாய், மெலெழுந்தபடியாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நமக்கு இதுவரை சொல்லப்பட்ட விளக்கத்துக்கு மாறான இத்தகவல் ஒரு நிதர்சன உண்மையைச் சொல்கிறது.

பிராவின் நோக்கம் ஆரோக்கியம் அல்ல, வர்த்தக/ஆணாதிக்க அழகியல் தான். பிரா கணுக்ககளை மறைத்தாலும், அது கூர்மையான, மேலெழுந்த, பருமனில் கச்சிதமான ஒரு மார்பு வடிவத் தோற்றம் தருகிறது. சுருக்கமாய்ச் சொல்வதானால் பிரா மார்பை மறைப்பதகற்காக அல்ல, மேலும் அழகுபடுத்துவதற்கானது. பிரா ஒழுக்கவியலாளனின் தேர்வல்ல. மாறாக, பெண்ணுடலை குழந்தை உற்பத்தி ஆலையாகக் காணும் சராசரி ஆணின் தேர்வு.

அடுத்து முதல் கேள்விக்குச் செல்வோம். பருமனான முலைகள்? ஆரம்பத்தில் சமிக்ஞைகள் பற்றிச் சொன்னதை  நினைவு படுத்துங்கள். சாலையில் பச்சை விளக்கு போல் இந்த நூற்றாண்டிலும் மனிதனின் ஆழ்மனம் துணையைக் கண்டதும் சில சமிக்ஞைகள் தருகிறது. துணைத்தேர்வைப் பொறுத்த வரையில் பெண்ணின் மார்பு, இடை, புட்டம் போன்ற சில அடிப்படைக் கூறுகள் பெரும்பான்மையான ஆண்களுக்குப் பச்சை விளக்குகள். இவை மறைக்கப்படும் போது உதடுகள், கண்கள், கூந்தல் ஆகியவை கவனத்துக்குள்ளாகின்றன.

இந்த உடலுறுப்புகள் துணையின் உடல் நலன், கலாச்சாரம், பணவசதி ஆகியன பற்றிய சமிக்ஞைகளை அளிக்கின்றன. முலையின் பருமன் அதில் நிறைந்துள்ள கொழுப்புத் திசுக்களால் ஏற்படுவது. தொப்பை போல் மார்புகளும் கொழுப்பின் சேமிப்பறைகள். மகப்பேறின் போது பொதுவாய் உடல் கொழுப்பை நிறைய சேமிக்கிறது.

இதனால் மார்புகள் பெரிதாகின்றன. ஆதிகாலத்தில் குழந்தையைப் பேணுவதில் ஈடுபட்டிருக்கும் பெண்ணுக்கு வேட்டையாடி உணவு சேகரிக்க முடியாதாகையால், இந்தக் கொழுப்புத் திரட்சியைத்தான் உடல் சக்தியாக மாற்றிப் பயன்படுத்திக் கொண்டிருக்கும். இருந்தாலும் ரொம்ப நாள் இந்த சேமிப்பைச் செலவழித்தால் தாயின் உடல் மெலிவதுடன், அடுத்த மகப்பேறுக்கான காலமும் தள்ளிப் போகும்.

இதனால் ஒரு ஆதிமானுடச் சமூகத்தில் மக்கள் தொகை சமனிலை இழந்துவிடும். இதைத் தவிர்க்க இத்தகைய முலைபருத்த தாய்மார்களை கவனமாய் உணவு தந்து முன்வரலாற்று ஆண்சமூகம் பேணியிருக்க வேண்டும். இப்படி முலைப் பருமனின் வசதி கருதி பரிணாமம் இத்தகைய மார்புகளைப் பெண்களுக்கு அளித்திருக்கலாம் என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

உடலில் கொழுப்புத் திரட்சிகள் கொண்டுள்ள பெண்தான் குழந்தையைப் பெற்று வளர்க்க சக்தியுள்ள வலிமையான பெண். இதனால் பருத்த மார் கொண்ட பெண் வம்சாவளி நீட்டிக்க வேண்டும் ஆணுக்குப் பிடித்தமானவளாய் உள்ளாள். பருத்த முலைகள் இவ்வாறு பரிணாமம் தரும் பச்சை விளக்குகள் என்பது மற்றொரு சாரார் கருத்து. ஆனால் இக்கருத்தில் ஒரு அப்பட்டமான முரண் உள்ளது.

குழந்தைப் பேற்றுக்குப் பின் பெண் மீண்டும் கருத்தரிப்புக்குத் தயாராக ஒன்றரை வருடங்களாவது ஆகும்.

அவ்வாறு கருத்தரிக்காத பெண்ணை ஆண் நெருங்குவதில் பயனில்லை. குழந்தைப் பேணலில் ஈடுபட்டுள்ள பெண்ணுக்குப் பரிணாமம் ஏன் இந்தப் பருத்த கவர்ச்சி உறுப்புகளை அளித்து ஆணைக் குழப்ப வேண்டும்?
இங்குதான் இயற்கை ஆணுக்கு மற்றொரு குறிப்பைத் தருகிறது. மகப்பேற்றுக்குப் பின் அதிகமாய் கொழுப்பு சேருவதால் மார்புகள் துவண்டு தொங்கிப் போகின்றன. தொங்கும் மார்புகளை சமிக்ஞையாய் ஏற்று ஆண்  குழந்தைபேணலில் ஈடுபட்டுள்ள, கருத்தரிக்கத் தயாரல்லாத பெண்ணைத் தொந்தரவு செய்வதைத் தவிர்க்கலாம்.

இப்போது துணைத் தேடலுக்கான துல்லியமான அளவுகோல் ஏறத்தாழத் தயாராகிவிட்டது: கச்சிதமாய்ப் பருத்து, வடிவாய், துவளாமல் மெலெழுந்த மார்புகள் கொண்ட பெண்தான் ஏற்ற பெண். இதிலும் ஒரு சிக்கல் உள்ளது. பொதுவான கொழுப்பு சேர்க்கை, வயதாகுதல் ஆகிய பல மகப்பேறு தவிர்த்த காரணங்களினாலும் மார்புகள் தொங்கிப் போகும். ஆனால் இந்தப் பெண்கள் புணர்ச்சிக்குத் தயாராய் இருந்தாலும், இவர்களின் வீங்கின உறுப்புகள் மாறான செய்திகளைத் தரலாம் (அதாவது தயாரில்லை என). இதற்காகத்தான் பிரா எனும் மார்புவிலங்கும், ‘டக்-அப்’ அறுவை சிகிச்சையும்.

நூற்றாண்டுகளின் வரலாற்றில் புணர்ச்சித் துணைக்கான அளவுகோலில் பல மாற்றங்கள் ஏற்பட்டாலும், உடல் நலத்தைக் குறிப்புணர்த்தும் சில உடலியல் அம்சங்கள் இன்னும் மாறவில்லை. ஒரு உதாரணம் தருகிறேன்.
என் அலுவலகத்தில் மெடிக்கல் டிரான்கிரிப்ஷன் துறையில் பயிற்சி அளிக்கும் ஒரு ஆறரை அடி உயர இளம்  மருத்துவர் உள்ளார். மற்றபடி சுமாரான தோற்றம் கொண்ட இந்த இளைஞரைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடாத பெண்கள் என் துறையில் இல்லை. இதைவிட வினோதமான சம்பவத்தைக் கண்ணுற்றேன்.

ஆழ்வார்பேட்டையில் ஒரு ஈபப்ளிஷிங் பி.பி.ஓவுக்கு வேலை விஷயமாய்ப் போய் வரவேற்பறையில் காத்திருந்தேன். அமைதியான குளிரூட்டப்பட்ட அறையில் எதிரில் அழகிய, பெரிய கண்களுடைய பெண் வரவேற்பாளர். அப்போது கடிதம் ஒன்றை ஒப்படைப்பதற்காக மற்றொரு நிறுவனத்திலிருந்து ஒரு உயரமான கடைநிலை உதவியாளன் வந்திருந்தான். அவனைப் பார்த்து தன்னிலை மறந்து இவள் ஒரு பார்வை விட்டாள் பாருங்கள், இந்தப் பிறவியில் நான் மறக்க மாட்டேன்.

இருவருக்கும் கல்வி, அந்தஸ்தில் எம்பித் தாவினாலும் எட்டாது, ஆனாலும் இவன் தன் உயரத்தால் அந்தப் பெரிய பள்ளத்தாக்கைக்கூட நொடியில் தாண்டிவிட்டான். அந்தக் கறுத்த கடைநிலை உதவியாளனின் உயரம் அப்பெண்ணின் ஆழ்மனத்தில் உள்ள பாலியல் சேர்க்கைப் படிவத்தில், ‘வலிமை’ என்னும் கட்டத்தில் பெரிதாய் ஒரு டிக் குறியை வரைந்திருக்க வேண்டும். உடனே பச்சை விளக்கு எரிந்து விட்டது.

நாற்பது வயசாச்சா?..வாரம் ஒரு தடவை செக்ஸ் போதும்

தாம்பத்ய உறவு என்பது மருந்து போலத்தான். அதை அளவோடு வைத்துக்கொண்டால் ஆபத்தில்லை அதேசமயம் ஆசைப்பட்டு தினசரி உறவு கொண்டால் அல்லல்பட வேண்டியதுதான் என்று எச்சரிக்கின்றனர் நிபுண
ர்கள். எந்த வயதில் எத்தனை முறை உறவில் ஈடுபடலாம் என்றும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன்.
புதிதாக திருமணமான தம்பதிகள் அதிகம் ஆசையோடு இருப்பார்கள். அவர்களுக்கு ஒருவரைப் பற்றி மற்றொருவர் அறிந்து கொள்ள ஆர்வம் அதிகம் இருக்கும். எனவே அவர்கள் முதலிரவு நாளில் நான்கைந்து முறை கூட உறவில் ஈடுபடலாமாம். ஏனென்றால் அன்றைய தினம் அவர்களை தொந்தரவு செய்ய ஆளில்லையாம். அதனால்தான் தம்பதியர்களை தேனிலவுக்கு எல்லாம் அனுப்பி வைக்கின்றனராம்.
வயதாக வயதாக ஆர்வம் படிப்படியாக குறைந்து விடும். எனவே வயதிற்கு ஏற்ப தாம்பத்ய உறவின் அளவுகளையும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். எந்த வயதில் எத்தனை முறை ஈடுபடலாம் என்றும் அவர்களே கூறியுள்ளனர்.
22 முதல் 25 வயது வரை உடைய தம்பதியர் வாரத்திற்கு 3 முறை உறவு வைத்துக்கொள்ளலாமாம். 32 முதல் 35 வயது வரை உடையவர்கள் வாரத்திற்கு 2 முறையும், 41 முதல் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் வாரத்திற்கு ஒருமுறையும் உறவு வைத்துக்கொள்ளலாம் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர். அப்பொழுதுதான் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ஆரோக்கியமாக உணர முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.
ஏனெனில் வயதாக வயதாக செக்ஸ் பற்றிய ஆர்வம் படிப்படியாக குறைய ஆரம்பித்து விடுமாம். ஆணோ, பெண்ணோ நிறைய பொறுப்புகள் அதிகரிக்குமாம். எனவேதான் செக்ஸ் விசயத்தில் கணவனோ, மனைவியோ கட்டாயப்படுத்தக்கூடாது என்கின்றனர் நிபுணர்கள். ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் கனிவான பேச்சு, கரிசனமான செயல்பாடுகள், சின்னதாய் தலை கோதி விடுவது, அன்பாய் கை, கால் பிடித்து விடுவது போன்றவையே செக்ஸ் உறவை விட மேம்பட்டதாய் இருக்கும் என்றும் அதைத்தான் பெரும்பாலோனோர் விரும்புகின்றனர் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
திருமணமான புதிதில் ஒருவருக்கொருவர் ஆர்வக்கோளாறினாலும் தங்களை நிரூபிக்க வேண்டிய நிர்பந்தத்தினால் அடிக்கடி உறவில் ஈடுபடுவார்கள். ஆனால் குழந்தை பிறந்து சில வருடங்கள் கடந்த பின்பு பொறுப்புகளும், பணிச்சூழலும் ஒரு வித அயர்ச்சியை ஏற்படுத்திவிடும். எனவே செக்ஸில் கொஞ்சம் ஆர்வம் குறைந்து விடும். எனவேதான் தாம்பத்ய உறவுக்கு என்று சில எல்லைகளை வகுத்துக்கொண்டால் யாருக்கும் எந்த வித சிரமமும் இருக்காது வாழ்க்கையும் சிக்கல் இல்லாமல் தெளிந்த நீரோடையாய் போகும் என்கின்றனர் நிபுணர்கள்.

வலிக்குது சித்தி வேணாம் கொஞ்சம் மெதுவா பண்ணுங்க

சித்தி
கொஞ்சம் உடம்பு குண்டாக இருப்பாள். அதனால் காலை 4.30 மணிக்கு எழுந்து வாக்கிங்க் போவாள். தான் காலை 4.30 மணிக்கு அலாரம் வைத்து எழுந்து சித்தியை எழுப்பிவிடுவேன். இவ்வளவு நாள் ஒழுங்காகதான் இருந்தாள்.
கடந்த இரண்டு மாதமாக நான் எழுப்ப போகும் போது புண்டை தெரியும் அளவுக்கு புடவையை தூக்கி இருக்கும்.
சில நேரங்களில் குப்புற படுத்திருக்கும் போது சூத்து தெரியும் அளவுக்கு புடவையை தூக்கி இருக்கும்.சித்தியை தினமும் காலையில் நான் எழுப்பும் போது சூத்து மற்றும் புண்டையை ஒவ்வொரு விதமாக காட்டுவாள். நான் எழுப்பிவிட்டு உடனே சென்றுவிடுவேன். சித்தி பாத்ரூம் போய் குளிக்கும் போது தான் என்னை டவல் எடுத்து வர சொல்லுவாள். நானும் எடுத்துக்கொண்டு போவேன். பாத்ரூமில் கதவு இல்லாததால்
சித்தி பாவாடையை மார்பு வரை கட்டிக்கொண்டு தான் குளிபாள். அப்படி போகும் போது புண்டையை பார்ப்பேன். ஒரு நாள் போகும் மூத்திரம் போனாள். ஒரு நாள் போகும் போது புண்டையை கழுவினாள். எனவே தினமும் காலையில் நான் முழிப்பது
சித்தியின் புண்டையில் தான்.
காலையில் பார்த்ததை நினைத்து பார்த்து இரவில் சித்தியை ஓப்பதாக நினைத்து கையடிப்பேன். ஒரு நாள் 4 மணிக்கு எழுந்துவிட்டேன்.
சித்தியின் ரூம்மிற்க்கு சென்று கம்புயூட்டர் பார்த்து கொண்டிருந்தேன். கம்புயூட்டர் பீரோ சந்தில் இருக்கும். எனவே நான் இருப்பது சித்திக்கு தெரியாது. சித்தியின் ரூமில் இரவு நேரங்களில் ஒரு நைட் லேம்ப் எறிந்துகொண்டிருக்கும். 4.25க்கு சித்தியின் செல்லில் அலாரம் அடித்தது. நான் எட்டிப்பார்த்தேன். ஆனால் நான் பார்த்தது சித்திக்கு தெரியாது. அலாரம் அடித்தவுடன் சித்தி எழுந்து அலாரத்தை நிறுத்தினாள். அதுவரை புடவை ஒழுங்காகத்தான் இருந்தது. உடனே புடவையை இடுப்புக்கு மேல்வரை தூக்கினாள்.
நான் அதிர்ந்து போனேன். நான் அரை மணி நேரம் வரை பீரோ சந்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தேன்.4.30 மணியிலிருந்து சித்தி வாசலையே பார்த்துக்கொண்டிருந்தாள். அரை மணி
நேரம் கழித்து வரமாட்டேன் என்று நினைத்துக்கொண்டு மூத்திரம் போவதற்க்காக பாத்ரூம் வந்தாள். பாத்ரூம் போகும் வழியில் என்னை பார்த்துவிட்டாள். ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டேன். அதற்க்கு சலித்து கொண்டே 15 வருடமாக இந்த புண்டை சும்மா தான் இருக்கின்றது. அதான் உன் பூலை உள்ளே விடலாம்
என்ற ஆசையில் அப்படி செய்தேன். என் ஆசையை தீர்த்து வைப்பாயா என்று கேட்டுக்கொண்டே என் சுன்னியை பிடித்தாள். நான் சித்தியை கட்டிப்பிடித்துக்கொண்டே கட்டிலுக்கு சென்றேன். முலைகளை கசக்கினேன். நான் ஷாட்ஸை மட்டுமே அவிழ்த்தேன். சட்டையை அவிழ்க்கவில்லை. சித்தி எதையுமே அவிழ்க்கவில்லை. பாவாடையை இடுப்பு தூக்கினாள். அந்த அளவிற்க்கு
இருவருக்கும் அவசரம். பின் சித்தி என் பூளை ஊம்பினாள். பின் நான் அவள் புண்டையை நக்கினேன். பின் பூளை அவள் புண்டையில் சுருகி ஆட்டிக்கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் என் கஞ்கியை சித்தியின் புண்டையில் ஊற்றினேன். கொஞ்ச நேரம் கட்டிப்பிடித்துக்கொண்டே படுத்து கிடந்தோம். 6 மணி ஆனது நான் பால் வாங்குவதற்க்காக கடைக்கு சென்றுவிட்டேன். வந்து சித்தி சமையல் செய்து கொண்டிருந்தாள். அப்போது சித்தியின் முலை அமுக்குவது புண்டையை புடவையோடு சேர்த்து அமுக்குவது
என்று சித்தியின் உடம்பில் என் கைகளால் விளையாடினேன். சித்தி குளிக்க சென்றால் நானும் சித்தி கூடவே குளிக்க சென்றேன்.
சித்தி முதலில் புடவையை அவிழ்த்தாள். பின்பு ஜாக்கெட்டை அவிழ்த்தாள். பின்பு பிராவை அவிழ்த்தாள். பின்பு பாவாடையை அவிழ்த்தாள். அப்போது தான் ஒரு பெண்ணை முதன் முறையாக
அம்மனமாக பார்த்தேன். நானும் அதற்க்குள் அம்மனமானேன். இருவரும் கட்டிப்பிடித்துக்கொண்டிருந்தோம். பின் பாத்ரூமில் ஒழுத்தோம். பின் ஒன்றாகவே குளித்தோம். அம்மனமாகவே உட்கார்த்து சாப்பிட்டோம். சாப்பிடும் போது சிறிது நேரம் சித்தி மடியில் நான் உட்கார்ந்து சாப்பிட்டேன். பின் சேரில் உட்கார்த்து என் மீது சித்தி உட்கார்ந்தாள். என் பூளை சித்தியின் புண்டையில் விட்டு ஒழுத்து கொண்டே சாப்பிட்டேன்.நான் கல்லூரிக்கு சென்றுவிட்டேன். சித்தி ஆபிசுக்கு சென்றுவிட்டாள். கல்லூரியில் ஒரே காம சிந்தனை தான். மாலை சித்திக்கு போன் செய்தேன். சித்தி ஆபிஸ் முடிந்தவுடன் ஒரு கடைக்கு வரசொன்னாள். நானும் சென்றேன். அங்கு சித்தி மளிகை பொருட்களை வாங்கி கொண்டிருந்தாள். சிறிது நேரம் இருவரும் பேசிக்கொண்டிருந்தோம். பேசிக்கொண்டிருக்கும் போதே சித்தி என் பூளை பேன்டோடு பிடித்தாள். அந்த நேரம் கடையில் உள்ளவர்கள் பொருட்களை எடுக்க உள்ளே சென்றுவீட்டார்கள். கடையிலிருந்து வீட்டுக்கு கிளம்பினோம்.
நான் ரூமிற்க்கு சென்றேன். அப்போது கட்டில் ஓரமாக கம்புயூட்டர் இருந்தது. சித்தி கம்புயூட்டரில் தமிழ் டர்ட்டி ஸ்டோரீஸ்ல் ஒரு தமிழ் ஓழ்படத்தை பார்த்து கொண்டிருந்தாள். நானும் சிறிது நேரம் பார்த்து கொண்டிருந்தேன். படத்தை பார்த்து கொண்டே இருவரும் படுத்து கட்டிபிடித்து உருன்டோம். சித்தி மேலே நான் படுத்து காய்களை அழுத்தி பிசைந்தேன். பின் எழுந்து சித்தியின் பாதத்தை தொட்டேன். பின்
புடவையை பாவாடையோடு சேர்த்து கொஞ்சம் கொஞ்கமாக புண்டைக்கு மேல்வரை தூக்கினேன். புண்டைக்கு ஒரு முத்தம் கொடுத்தேன். பின் ஜாக்கெட்டை அவிழ்த்தேன். பிரா போடவில்லை. ஜாக்கெட்டை அவிழ்த்தவுடன் பெரிய முலை இரண்டையும் பிசைந்து பல் படாமல் கடித்தேன். பின் புடவையை உருவி எறிந்தேன். பாவாடை மட்டுமே சித்தியின் உடம்பில் இருந்தது. சித்தியின் உப்பிய புண்டையை பாவாடையோடு சேர்த்து அமுக்கினேன். சித்தி நெளிந்து கொண்டே இருந்தாள். பாவாடை நாடாவை உருவி
பாவாடையை கழட்டினேன். என் வாய் உடனே சித்தியின் புண்டையில் இருந்தது. 5 நிமிடம் நான் புண்டை நக்கினேன். பின் என்னை படுக்க வைத்து என் சுன்னியை ஊம்பினாள். என் சுன்னி 90 டிகிரி அளவில் நின்றது. சித்தி என் பூளை பிடித்து புண்டைக்குள் விட்ட ஓத்தாள். முதல் தடவை கஞ்சி வரும் வரை என் மேல் அவள் ஏறி ஓத்தாள். பின் இரண்டு தடவை அவள் மேல் நான் ஏறி ஓத்தேன்.
ஏசி ரூம் என்பதால் குளிர் அதிகமாகிவிட்டது. நைட்டியை மட்டும் போட்டு கொண்டு தூக்கினாள். நான் என் ரூமிற்க்கு சென்று படுத்துவிட்டேன்.

மாமி ரவிக்கை மேலே - மாமா வர லேட் ஆகும்

மாமி வாயில இருந்து நல்லா சத்தமா முனகல் வந்திகிட்டு இருந்தது அதிகாலை பொழுது. காகங்கள் போட்டி போட்டு சத்தமிட்டு கொண்டு இருந்தன. தூக்கம் கலைந்து எழுந்த நான் முதல் வேலையாக கடிகாரத்தைப் பார்த்தேன். மணி ஐந்து நாற்பத்தி ஐந்து.டெல்லியில் இருக்கும் போது இவ்வளவு
சீக்கிரம் எழுந்ததே இல்லை. இரவு எல்லாம் நண்பர்களோடு ஊர் சுற்றி வீடு திரும்பவே மணி மூன்று ஆகி விடும். தினமும் கும்மாளம்தான். அதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகத்தான் அப்பா என்னை மெட்ராசுக்கு அனுப்பி விட்டார். மெட்ராஸ் எனக்கு ஒரு புது அனுபவம். ஏதோ டைம் மெஷின் ஏறி பத்து பதினைந்து வருஷம் பின்னாலே போய்ட்ட மாதிரி இருந்தது எனக்கு. மெட்ராஸ்லே அப்பாவோட நண்பர் ஹரி இருந்தார். அவர் வீட்டிலே தங்கி காலேஜ் போய்கொண்டு இருந்தேன். வீட்டிலே ஹரி மாமாவும், சந்தியா மாமியும் மட்டும்தான். ரெண்டு பேருக்கும் குழந்தை இல்லை. மாமிக்கு வயசு 35 இருக்கும், மாமா வயசு ஜாஸ்தி 48 இருக்கும். மாமா எப்பவும் வேலை, வேலைனு ஒரே அலைச்சல். நிதம் வீட்டுக்கு வரவே 11 மணி ஆகும். வந்த புதிசிலே எனக்கு பிடிக்கவே இல்லை. ரொம்ப போர் அடிச்சது. லாங்வேஜ், சாப்பாடு அப்படினு ஒரே தகராறு. நண்பர்கள் வேறே இல்லை.இந்த கதையோட கதாநாயகி பத்தியும் சொல்லனுமே. சந்தியா மாமி ஒரே வார்த்தையில் சொல்லனும்னா செம கட்டை. 35 வயசிலேயும் சூப்பர் பிகர் . நல்ல பெரிய முலைகள் (சைஸ் 38 மாமி பிரா பாத்ரூமிலே விட்டுட்டா அதில் இருந்து கண்டு பிடிச்சது), நல்ல கலர், செக்க செவேல்னு. இடுப்பு 30 இருக்கும், லேசா லேசா ஓரே ஒரு மடிப்பு அந்த இடுப்பிலே. பருத்த குண்டி, சைஸ் 40. பார்த்தாலே ஆசை வந்திடும், அப்படி ஒரு அமைப்பு சந்தியா மாமிக்கு. ஆனா மாமா தான் மாமியை அப்படி ரசிச்ச மாதிரியோ, ருசிச்ச மாதிரியோ தெரியலே எனக்கு. மாமி நல்லா சமைப்பா, மாமா அதைகூட ரசிச்சது இல்லை. அவசர அவசரமாக அள்ளி கொட்டிட்டு ஆபிஸுக்கு ஒடிடுவார். முக்கால்வாசி நாள் நானும், மாமியும்தான் ஒன்றாக சாப்பிடுவோம். டின்னரும் அதே மாதிரிதான். மாமா வர லேட் ஆகும், நானும் மாமியும் சாப்பிடுவோம். மாமா வரும்வரை பேசிக்கொண்டு இருப்போம்.மெட்ராஸ் வந்த புதிசில் மாமியை கவனிக்கலை. டெல்லி விட்டு வந்த வருத்தத்திலே இருந்தேன்.அதிகாலை பொழுது. காகங்கள் போட்டி போட்டு சத்தமிட்டு கொண்டு இருந்தன. தூக்கம் கலைந்து எழுந்த நான் முதல் வேலையாக கடிகாரத்தைப் பார்த்தேன். மணி ஐந்து நாற்பத்தி ஐந்து.டெல்லியில் இருக்கும் போது இவ்வளவு சீக்கிரம் எழுந்ததே இல்லை. இரவு எல்லாம் நண்பர்களோடு ஊர் சுற்றி வீடு திரும்பவே மணி மூன்று ஆகி விடும். தினமும் கும்மாளம்தான். அதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகத்தான் அப்பா என்னை மெட்ராசுக்கு அனுப்பி விட்டார். மெட்ராஸ் எனக்கு ஒரு புது அனுபவம். ஏதோ டைம் மெஷின் ஏறி பத்து பதினைந்து வருஷம் பின்னாலே போய்ட்ட மாதிரி இருந்தது எனக்கு. மெட்ராஸ்லே அப்பாவோட நண்பர் ஹரி இருந்தார். அவர் வீட்டிலே தங்கி காலேஜ் போய்கொண்டு இருந்தேன். வீட்டிலே ஹரி மாமாவும், சந்தியா மாமியும் மட்டும்தான். ரெண்டு பேருக்கும் குழந்தை இல்லை. மாமிக்கு வயசு 30 , மாமா வயசு ஜாஸ்தி 42 . மாமா எப்பவும் வேலை, வேலைனு ஒரே அலைச்சல். நிதம் வீட்டுக்கு வரவே 11 மணி ஆகும். வந்த புதிசிலே எனக்கு பிடிக்கவே இல்லை. ரொம்ப போர் அடிச்சது. லாங்வேஜ், சாப்பாடு அப்படினு ஒரே தகராறு. நண்பர்கள் வேறே இல்லை.சந்தியா மாமி ஒரே வார்த்தையில் சொல்லனும்னா செம கட்டை. 30 வயசு சூப்பர் பிகர் . நல்ல பெரிய முலைகள் (சைஸ் 36மாமி பிரா பாத்ரூமிலே விட்டுட்டா அதில் இருந்து கண்டு பிடிச்சது), நல்ல கலர், செக்க செவேல்னு. இடுப்பு 28 இருக்கும், லேசா லேசா ஓரே ஒரு மடிப்பு அந்த இடுப்பிலே. பருத்த குண்டி, சைஸ் 36. பார்த்தாலே ஆசை வந்திடும், அப்படி ஒரு அமைப்பு சந்தியா மாமிக்கு. ஆனா மாமா தான் மாமியை அப்படி ரசிச்ச மாதிரியோ, ருசிச்ச மாதிரியோ தெரியலே எனக்கு. மாமி நல்லா சமைப்பா, மாமா அதைகூட ரசிச்சது இல்லை. அவசர அவசரமாக அள்ளி கொட்டிட்டு ஆபிஸுக்கு ஒடிடுவார். முக்கால்வாசி நாள் நானும், மாமியும்தான் ஒன்றாக சாப்பிடுவோம். டின்னரும் அதே மாதிரிதான். மாமா வர லேட் ஆகும், நானும் மாமியும் சாப்பிடுவோம். மாமா வரும்வரை பேசிக்கொண்டு இருப்போம்.மெட்ராஸ் வந்த புதிசில் மாமியை கவனிக்கலை. டெல்லி விட்டு வந்த வருத்தத்திலே இருந்தேன். அப்புறம் ஒரு நாள், வெள்ளிக்கிழமைனு நினைக்கிறேன். காலைலேயே அவசரம். மைலாபூர்லே பழைய காலத்து வீடு, டாய்லெட், பாத்ரூம் எல்லாம் பின்பக்கம் இருந்தது. அதுவரைக்கும் அவ்வளவு சீக்கிரம் எழுந்ததே இல்லை. அவசரத்திலே அப்படியே போட்டிருந்த அரை டிராயருடனேயே கீழே ஒடிவிட்டேன். உள்ளே போய்ட்டு வெளியே வந்தா, அப்பப்பா! என்ன ஒரு சீன். கொல்லையில் இருக்கற கொடிலே மாமி துணி காய போட்டுட்டு இருந்தாங்க. இதுவரை மாமியை இப்படி நான் பார்த்ததே இல்லை. அரை குறை வெளிச்சம், ஒரே ஒரு குண்டு பல்பு மட்டும் தான் இருந்தது அங்கே. மாமி யாரையும் எதிர்பார்க்கலைனு நினைக்கிறேன். ஒரு ஈர சேலை உடம்பை சுத்தி இருந்தாங்க. அங்கே அங்கே சேலை உடம்பிலே ஒட்டிக்கிட்டு இருந்தது. மாமிக்கு கம்பி எட்டலை. குதிங்காலை உசத்தி நின்னு துணி போட்டுட்டு இருந்ததால், மாமியோட பருத்த குண்டி டைட்டா தெரிந்தது. சேலை ஈரமாக இருந்ததினால், குண்டி மேலே ஒட்டி இருந்தது. ரெண்டு குண்டிக்கும் நடுவிலே இருந்த ஆழமான பிளவிலே சொருகி கிடந்தது சேலை. அந்த சீன் பார்த்ததுமே என்னோட சுன்னி விரைக்க ஆரம்பித்தது. ஷார்ட்ஸ் உள்ளே ஜட்டி வேறே போடலை. குத்திக்கிட்டு நிக்க ஆரம்பிச்சது சுன்னி. நின்னு பார்க்க ரொம்ப ஆசையாகத்தான் இருந்தது, ஆனால் குத்திக்கிட்டு நிக்கற என் சுன்னியை மாமி பார்த்திட்டா வம்பு. போக நினைத்து திரும்பினால், கதவிலே இடிச்சுட்டேன். சத்தம் கேட்டு மாமியும் “யாரு அது?” கேட்டுட்டே திரும்பினாள். பாதி விரைச்ச சுன்னியை மாமியோட முன்பக்கம் முழுசாக நிக்கவைத்தது. கடப்பாறை மாதிரி நட்டமாக நின்றது சுன்னி.“மாமி நான்தான், சஞ்சய்”அரை இருட்டினாலையா இல்லை என்னை சின்ன பையனா நினைச்சதாலையா தெரியலை. கூச்சமே இல்லாமல் மாமி நின்னு பேசிட்டு இருந்தாங்க. பின்பக்கம் சூப்பர்னா, முன்பக்கத்தை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. அந்த அரைகுறை வெளிச்சத்தில் மாமி ஒரு அப்சரஸ் மாதிரி தெரிந்தாள். முகத்திலே மஞ்சள் பூசி அந்த அரை இருட்டிலேயும் ஒரு ஜொலிப்பு, தங்கம் மாதிரி தக தக ன்னு மின்னியது. தலைமுடி மேலே சுருட்டி துண்டு கட்டி இருந்தது. என்னோட பார்வை கீழே இருந்தது. மாமி எங்கே என்னோட நட்டுகிட்டு இருக்கற சுன்னியை பார்த்திடுவாங்கலோனு ஒரே பயம். கீழே சேலை முழங்காலுக்கு மேலே இருந்தது. கணுக்கால் மேலே சன்னமான கொலுசு. மேலே வழவழனு வெள்ளையா கால் ரெண்டு. ஆடுசதை நல்லா பெருசா இருந்தது. ஈரமான சேலை தொடையில் பட்ட இடங்களை எடுப்பாக காட்டிட்டு இருந்தது. மாமி தொடை எல்லாம் கொஞ்சம் XL சைஸ்தான். ஆனா நல்லா வழுவழுன்னு தெரிஞ்சது.ரசிச்சு பார்த்திட்டு இருந்தவனை மாமியோட கேள்வி மறுபடி நிலைக்கு கொண்டு வந்தது.“என்ன சஞ்சய் கேட்டுட்டு இருக்கேன். பேசாம நிக்கிற. “ கீழே மாட்டிட்டு வரமாட்டேன் என்ற பார்வையை கஷ்டப்பட்டு மேலே கொண்டு வந்தேன்.“என்ன மாமி………?” கேள்வியே தெரியாமல் முழித்துக்கொண்டு நின்றேன். மாமியோட கண்ணெ பார்த்தா, கீழே இருந்தது. மாமி பார்வையை ஃபாலோ பண்ணிணா அது என்னோட சுன்னிலே முடிஞ்சது.“இல்லை மாமி, கொஞ்சம் வயத்தை கலக்கற மாதிரி இருந்தது.” சொல்லிட்டே என்னோட பார்வை மாமியோட முலை மேலே போச்சு. மாமி சைஸ்தான் சொல்லி இருக்கேனே 38. சேலை நல்லா மூடி இருந்தாலும் மாமியோட சைஸ்க்கு நல்லாவே வெளியே தெரிந்தது. ஈர சேலை முலைகள் மேலே ஒட்டி இருந்தது. ரெண்டு மலைகளுக்கு நடுவே பள்ளத்தாக்கு மாதிரி மாமியோட முலைகள் இருந்தது.“அதானே. நீ எழுந்திரிக்கவே ரொம்ப லேட் ஆகுமேனு நினைச்சிட்டு இருந்தேன். சரி இந்த துணி காயப்போட கொஞ்சம் help பண்ணுடா. எனக்கு எட்டலே.” மாமியோட பார்வை என்னோட குத்திக்கிட்டு நிக்கற சுன்னி மேலேயே இருக்கவும் எனக்கு கொஞ்சம் தைரியம் வந்தது.“கொடுங்க மாமி…..” மாமி தோளிலே போட்டிருந்த துணி வாங்க கை நீட்டினேன். எல்லாமே ஈரமாக இருந்ததனாலேயோ என்னவோ காயப்போடற துணிகளோடயே மாமி சுத்தி இருந்த சேலையும் கையோட வந்திருச்சு. ரெண்டு பேருமே அதை கவனிக்கலை. என் பார்வை மாமியோட பால் சொம்புகள் மேலே, மாமியோட பார்வை என்னோட குத்திக்கிட்டு நிக்கற சுன்னி மேலே. துணி வாங்கிட்டு ரொம்ப வருத்தத்தோட திரும்பினவனை மாமியொட “அய்யோ நில்லுடா….” திரும்பிப் பார்க்க வைச்சது. பார்த்தா சினிமால வர ரேப் சீன் மாதிரி எனக்கு இருந்தது. மாமி இடுப்பிலிருந்து குனிந்து நின்று கொண்டிருந்தாள்.முகத்திலே வெட்கம். கையில் சேலையை கயிறு மாதிரி பிடித்து இருந்தாள். மாமி உள்ளே ரவிக்கை போட்டு இருந்தாலும் கொக்கி மாட்டாம இருந்தா போலே, கீழ் கொக்கி மாட்டி மேல் கொக்கி ரெண்டும் மாட்டாம இருந்ததா. குனிந்து நிற்கவும் மாமியின் பெரிய முலைகள் கீழ் நோக்கி தொங்கிக் கொண்டு இருந்தன. சூரியவெளிச்சம் படாததாலோ என்னவோ முலைகள் வெளுத்து இருந்தன. முலை காம்புகள் ரவிக்கை உள்ளே கருப்பு நிறத்தில் தெரிந்தன. மாமி முலைக்கும் மஞ்சள் போட்டு இருந்தாள். குனிந்து நிற்கவும் மாமியின் வயிற்றில் ஒரு மடிப்பு அந்த மடிப்பில் மாமியின் தொப்புள் மறைந்திருந்தது. அளவான வயிறு லேசாக சதை போட்டு இருந்தாள் அங்கே.மாமி கையில் இருந்து கிளம்பிய திரிந்து போன சேலையின் மறு முனை என்னோட கையில். மாமியின் அழகை ரசித்து கொண்டே நின்று விட்டேன். என் சுன்னி இருந்த நிலை ஒரு குருடனுக்கு கூடஅப்பட்மாக தெரியும், அப்படி என்னுடைய டவுசரை தள்ளிக்கொண்டு நின்றது.“சஞ்சய் பார்த்திட்டு நிக்காதேடா. என் சேலையை விடுடா…..” மாமி வெட்கம் கலந்த குரலில் சொன்னாள். அவள் அழகை ரசித்துகொண்டே அவள் பக்கம் போய் சேலையை கொடுத்தேன். வெடுக்கென்று சேலையை பிடுங்கிக் கொண்டு அவசர அவசரமாக உள்ளே ஓடினாள். ஓடிய மாமியின் பருத்தகுண்டிகள் குலுங்கியதை பார்த்த எனக்கு அதற்கு மேல் தாங்க முடியவில்லை. பாத்ரூம் உள்ளே ஒடி என் சுன்னியை கையில் எடுத்தேன்.இந்த சம்பவம் நடந்த பிறகு சில நாட்களுக்கு மாமி என்னை avoid பண்ணிணாள். ஆனாலும் சிறிய வீட்டில் அடிக்கடி பார்த்து பேச வேண்டி இருந்தது. மறுபடி மாமியை அந்த கோலத்தில் பார்பதற்காகவே சீக்கிரம் எழ ஆரம்பித்தேன், ஆனால் முடியவில்லை. ஆனால் டைம் பாஸ் பண்ண மற்றொரு வேலை கிடைத்தது. ஜன்னல் வழியாக வெளியே பார்த்த எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. எதிர்த்த வீட்டு அம்புஜம் மாமி கோலம் போட்டுட்டு இருந்தாள். அம்புஜம் மாமிஒரு 45 வயசு இருப்பாள். வெண்ணையும், பருப்புமாக சாப்பிட்டு செம சைஸ். மாமியோட பிகர் 40-34-42 இருக்கும். சந்தியாவுக்கு இடுப்பில் ஒரு மடிப்புனா, அம்புஜத்திக்கு ரெண்டு மடிப்பு. சந்தியா மடிப்பு ஸ்கூட்டர் டையர்னா, அம்புஜம் கார் டையர். ஜன்னல் திறந்து பார்த்தா, அம்புஜம் மாமியோட 42 சைஸ் குண்டி தெரிந்தது. மாமி குனிந்து கோலம் போட்டுட்டு இருந்தாள். சேலை நல்லா டைட்டா இருந்ததாலே மாமி குண்டி நல்லா எடுப்பாக தெரிந்தது. கொஞ்ச நேரத்தில மாமி திரும்பினா, சைட் போஸ் பார்க்க கிடைத்தது.மாமியோட 40 சைஸ் முலை ரெண்டும் பழுத்த பழம் மாதிரி தொங்கிக்கொண்டு இருந்தன. முந்தானை நடுவிலே இருக்க முலை நடுவிலே ஆழமான பிளவும் தெரிந்தது. அப்படியே பிடிச்சு கசக்க ஆசையாக இர்ந்தது. டெய்லி பார்க்க ஆரம்பிச்சேன்.டைம் ஆக ஆக சந்தியா மாமி கொஞ்சம் நல்லா பழக ஆரம்பிச்சாங்க. மாமா வெளிலே போனதும் மாமியோட நடை உடை கொஞ்சம் மாறின மாதிரி எனக்கு தோன்றியது. சில நாள் மாமி உள்ளே பிரா போடாதது அப்பட்டமாக தெரிந்தது. ஆனாலும் எனக்கு பயம். இது மாதிரி ஒரு பிரச்சினையால்தான் நான் மெட்ராஸுக்கு வந்ததே, அதுவும் அப்பாவோடபிரண்ட் வேறே. அதனாலே கை பழக்கத்தோட நிறுத்தி வைத்தேன். சில டைம் இன்னும் சாப்பிடுடானு சொல்லி கட்டாய படுத்துவா. அப்போ மாமி முலையை என் மேலே அமுக்கற மாதிரி எனக்கு ஒரு சந்தேகம். நான் இருக்கும் போது மாமி குண்டியை ஜாஸ்தியாக ஆட்டுவாள். ஆனாலும் எல்லாமே சந்தேகமாகவே இருக்கவும் நான் எதுவும் டிரை பண்ணலை.ஒரு நாள் காலேஜ் ஸ்டிரைக். மத்தியானம் வீட்டுக்கு வந்திட்டேன். சாப்பிட்டுவிட்டு என் ரூமுக்கு போய் ரெஸ்ட் எடுத்திட்டு இருந்தேன். மாமா வேலை விஷயமாக வெளியூர் சென்று இருந்தார். எனக்கு ஒரே மூட். சரி வேற எதுவும் இல்லைனாலும், ஜஸ்ட் மாமி கூட பேசிட்டு இருக்கலாம்னு கீழே போனேன். மாமி எங்கேயுமே காணலை. பின்பக்கம் சத்தம் கேட்டது. அங்கே போனேன். மாமி உரல் முன்னால் உட்கார்ந்து மாவு ஆட்டிக்கொண்டு இருந்தாள். பார்த்ததுமே கிக் வந்தது. சேலை முழங்காலுக்கு மேலே சுருட்டி விட்டு இருந்தாள். பாவாடையும் அதோட சுருண்டு இருந்ததால, சந்தியாவோட வாழைத்தண்டு தொடை உள்ளே வரை தெரிந்தது. வேலை செய்திட்டு இருந்ததாலே வியர்வைலை ரவிக்கை நனைந்து இருந்தது. முந்தானை நடுவிலே கிடந்தது. மாமியோட ஆட்டுக்கு ஈடு கொடுத்து சந்தியாவோட இளநீர்கள் ரெண்டும் அதிர்ந்து குலுங்கிக் கொண்டு இருந்தன. என்னை பார்த்ததும் மாமி “என்னடா இன்னிக்கும் காலேஜ் கட்டா?” “ஆமாம் மாமி ஸ்டிரைக். தனியா என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க”“என்னடா உனக்கும் என்னை பார்த்தா கிண்டலாக இருக்கா. மாமியொட ஆப்பம் மட்டும் நல்லா இருக்கு, சூடா இருக்குனு மறுபடி மறுபடி சாப்பிடற, மாமி என்ன பண்றேனு தெரியலையா. தனியாக உட்கார்ந்து மாவு ஆட்டிக்கிட்டு இருக்கேன். அவர்தான் மாவு ஆட்ட ஹெல்ப் பண்ணவே மாட்டார். நீயாவது ஹெல்ப் பண்ணுடா. தனியாவே மாவு ஆட்டி ஆட்டிபோர் அடிக்குது சஞ்சய்.”“மாமி எனக்கு மாவு எல்லாம் ஆட்டி பழக்கம் இல்லையே.”“பொய் சொல்லாதே. உனக்கு அந்த பழக்கம் எல்லாம் இருக்குனு எனக்கு தெரியும். அப்படி தெரியலைனாலும் நான் இருக்கேன் சொல்லித்தர. உட்கார் இங்கே.”காலேஜ்லெ பசங்களோட பழகி கொஞ்சம் கொஞ்சம் அசிங்கமான வார்த்தைகள் எனக்கும் தெரிந்து இருந்தது. மாமி பேச பேச எனக்கு சந்தேகம். மாமி நார்மலா பேசறாளா இல்லை வேற மீனிங்லெ பேசறாளா. எதுவா இருந்தா என்ன, மாமியோட முலை அசைவதை பார்க்க இது ஒரு சந்தர்பம். எதுக்கு விடனும். நானும் மாமிமுன்னாலே உட்கார்ந்தேன்.“சரி முதல்லே தள்ளுறெயா இல்லை ஆட்டுரியா.”நான் மும்முரமாக மாமியோட முலைய ரசிச்சிகிட்டு இருந்தேன், பதில் சொல்லலை.“நானே ஆட்டுறேன் நீ தள்ளி விடுடா.” மாமி ஆட்ட ஆட்ட முதல்ல நல்லா பார்த்து கிட்டுதான் தள்ளி விட்டுகிட்டு இருந்தேன். ஆனா மாமியோட முலைகள் ஆடறது பார்க்காம இருக்க முடியலை என்னாலே. அப்படி மாமியோட முலை ஆட்டம் பார்த்திக்கிட்டே இருந்தனா, “ஐயோ அம்மா….”ன்னு அலறிட்டேன். மாமியை பார்த்திட்டே கையை குழிலே விட்டுட்டேன். விரல் நசுங்கிடுச்சு. ஜயோ என்ன ஆச்சுடா . பார்த்து தள்ளுனு சொன்னேனே……” சொல்லிட்டே என் பக்கம் மாமி வந்திட்டா. என்னை எதுவும் கேட்காமலே என் கையை பிடிச்சு இழுத்து விரலை பார்த்தாள். அடுத்து மாமி செய்தது எனக்கே ஒரு ஆச்சரியம். அப்படியே என் விரலை வாயில் விட்டு சப்ப ஆரம்பிச்சாள். ஒரு நொடி ஆடி போய் விட்டேன். ஏற்கனவே லேசா துடிச்சிகிட்டு இருந்த என் சுன்னி விரைக்க ஆரம்பித்தது. மாமி முகத்தை பார்க்க அண்ணாந்து மேலே பார்த்தேன். பார்த்துகிட்டே இருந்தேன். கீழே இருந்தே எனக்கு விருந்து இருந்தது. மாவு ஆட்ட சேலையை தூக்கி இடுப்பிலே சொருகி இருந்தாள். வலது கால் முட்டி வரை தெரிந்தது. கீழே காலிலே கொலுசு. அழகான அம்சமான பாதங்கள். ரெண்டு விரலில் மெட்டி போட்டு இருந்தாள்.இடது கால் ஆகா ஆகா என்ன அழகு என்ன அழகு. முட்டிக்கு மேலே நல்லா தெரிந்தது. தொடை வழு வழுனு வெள்ளையா இருந்தது. இன்னும் ஒரு அடி மேலே சேலையை தூக்கி இருந்தா, மாமியோட புண்டையே தெரிந்து இருக்கும். ஒரு ஏக்கத்தோடையே மேலும் மேலே பார்த்தேன். சேலை தூக்கி செருகி இருந்ததாலேயும் வேலை செய்திட்டு இருந்ததாலேயும் மாமி சேலை இடுப்புபக்கம் விலகி இருந்தது. ஒரு பக்கம் மாமியோட இடுப்பு மடிப்பு ‘என்னை தொட்டு பார்’ னு அழைப்பு விட்டிட்டு இருந்தது. இன்னொரு பக்கம் மாமியோட தொப்புள் தரிசனம். தொப்புளை பார்த்தா எனக்கு என்ன என்னவோ தோன்றியது. உரலோட ஓட்டையோட சின்ன சைஸ் மாதிரி ஆழமாக வட்டமாக இருந்தது. மாமியோட தொப்புள் மட்டும் டைரக்டர் ஏராவது பார்த்து இருந்தா அந்த காலத்திலேயே ஆம்லேட் போடவும், பம்பரம் விடவும் யூஸ் பண்ணி இருப்பாங்க. எனக்கு அப்படியே மாமியோட தொப்புள் உள்ளே என் நாக்கையோ சுன்னியையோ விட்டு ஆட்டனும் போல இருந்தது. இன்னும் மேலே பார்த்தேன். அம்மாடி என்ன ஒரு காட்சி.சேலை விலகி ரெண்டு பெரிய முலைகளும் ரெண்டு மலைகள் மாதிரி முன்பக்கமாக திமிறிக்கொண்டு இருந்தன. அங்கு அங்கே ஈரம் வியர்வையால். ஒரு கை தூக்கி இருக்கவும் அந்த அக்குள் நல்ல ஈரமாக இருந்ததை கண்டேன். மாமி முகத்தில் ஒரு இனம் தெரியாத ஒரு புன்னகை. ஒரு இன்ப அனுபவித்தில் மூழ்கி இருப்பதைப் போன்ற ஒரு பாவனை. மிகவும் அனுபவித்து என் விரலை சப்பிக்கொண்டு இருந்தாள். விரல் நசிங்கியதை சரி செய்ய சப்புவதைப் போல் தெரியவில்லை எனக்கு. ‘அடடா, இந்த விரலையே இப்படி சப்பறாளே, சுன்னியை சப்பினால் எப்படி இருக்கும்’ என்று நினைத்து கொண்டு இருந்ததில் என் சுன்னி முழுதாக விரைத்துக்கொண்டது.“மாமி போறும் விடுங்க.. ஆட்டலாம் மாமி” னு சொல்லவும் மாமி என் விரலை வருத்தத்தோடு விட்டு விட்டு உட்கார்ந்தாள். “சரிடா. நான் தள்ளறேன். நீ ஆட்டு. ஆனா ஓவர் ஸ்பீடுலெ ஆட்டாதே. மெதுவாக ஆட்டு ச்ரியா. ஆட்டு உரலை நல்லா கெட்டியாக பிடிச்சுக்கோ. நல்லா பிடிக்காம ல்லை ரொம்ப வேகமாகமாவோ ஆட்டினா உரல் ஓட்டையை விட்டு வெளியே வந்திடும். பார்த்து ஆட்டு” மாமி தள்ளி விட ஆரம்பித்தாள்.கொஞ்ச நேரம் நல்லா உரலை மட்டும் பார்த்துக்கொண்டு ஆட்டிட்டு இருந்தேன்.. ஆனால் எவ்வளவு நேரம்தான் மாவையும், ஓட்டையையும் மாமியோட வெண்டிக்காய் விரல்களையுமே பார்க்கறது. அப்போ அப்போ மாமியோட அசையும் அழகுகளையும், இடுப்பு மடிப்பையும், அந்த வாழைத்தண்டு தொடையையும் நோட்டம் விட ஆரம்பித்தேன். மாமி நான் நோட்டம் விடறதை பார்த்தாள், ஆனால் ஒன்றும் சொல்லவில்லை. ஓப்பனாவே நோட்டம் விட்டேன். அப்படி பார்க்கற்ச்சே மாமி குனிந்தாள் மாவு தள்ளி விட, அப்பொழுது முலைகள் நடுவே உள்ள பிளவு நல்லா தெரிந்தது. அந்த பிளவு உள்ளே ஒரு வியர்வை துளி உருண்டு உள்ளே ஓடியது. பார்தத எனக்கு நட்டுக்கிச்சு. அந்த மூட்லையே உரலை வேகமா ஆட்டிட்டேன். ‘க்ளக்… புளக்.’. னு சத்தத்தோட உரல் ஓட்டைல இருந்து வெளிலே வந்திடுச்சு. மாவு மாமி மேலேயும் என் மேலேயும் தெறிச்சிடுச்சு. மாமி மேலே முகத்திலே நெஞ்சிலே மடிலே எல்லாம் மாவு. பார்த்து சிரிச்சேன்.“சொன்னேனே கேட்டியா. இப்போ மாவு எல்லாம் பாரு எப்படி தெரிச்சிடுச்சு. என்ன சிரிப்பு. உன் மூஞ்சிலெயும்தான் இருக்கு மாவு.”“அய்யோ சாரி மாமி. துடைச்சுக்கோங்க…”“எப்படிடா துடைக்கரது. பாரு……..” கையை ரெண்டையும் விரிச்சு காட்டினா. கை ரெண்டும் மாவு ஒட்டி இருந்தது. “என் கை வைச்சு துடைச்சா அவ்வலோதான். இன்னும் அசிங்கம் ஆகிடும். நீ இங்கே வா. உன் கை சுத்தமா இருக்கு. நீயே துடைச்சு விடுடா. “இங்கேயோ வேற பிரச்சனை. சுன்னி நட்டுக்கிட்டு நிக்குதே எப்படி என்ன பண்றது யோசிச்சேன். ஆபத்துக்கு பாவம் இல்லை. மாமி பக்கத்திலே போனேன். முதலில் மாமி நெற்ரிலெ இருந்ததே தொடைச்சேன். அப்புறம் மாமியோட கன்னத்திலே. மாமி கன்னம் புசுபுச்ன்னு ஆப்பிள் பழம் மாதிரி இருந்தது. மாமி உதடு இயற்கையாகவே சிவந்து இருந்தது, உப்பி இருந்தது அந்த உதட்டை அப்படி கவ்வி கடிக்கனும் போல இருந்தது. கன்ட்ரோல் பண்ணிட்டு முஹம் முழுவதும் துடைத்து விட்டேன். “ஆச்சு மாமி.” “என்னடா ஆச்சு. இங்கே எல்லாம் யார் துடைக்கறது.” மாமி தலைய ஆட்டினா. மாமி தலையால் காட்டின இடம் பார்த்தேன்.மாமியோட முந்தானை லேசா விலகி இருந்தது. அங்கே அங்கே வேர்வை. சில இடங்கள் மாவு பொட்டு பொட்டாக சிதறி இருந்தது. மாமி சேலை இடுப்பிலே சொருகி இருந்ததால் இடது முலை நல்லா தெரிந்தது. எடுப்பாக தெரிந்த மாமியோட முலை மேலேயும் மாவு. வழைந்து குழைந்து இருந்த மாமியோட இடுப்பிலேயும் மாவு கோலம் போட்டு இருந்தது. மாமி உட்கார்ந்து இருந்ததால் மாமியோட முலைகள் உள்ளே வரை தெரிந்தது. “என்ன சஞ்சய். துடைச்சு விடுவியா இல்லையா.” பக்கத்திலே போனேன். உட்கார்ந்து இருந்த மாமியோட கண் முன்னனாலே என்னோட நட்டுக்கிட்டு இருக்கற சுன்னி. துணிந்து மாமியோட மார்புக்கு மேலே என் கையை வைச்சேன்.மாமியோட உடம்பு வழுவழுனு இருந்தது. அப்படியே அனுபவிச்சு மேலே துடைக்க ஆரம்பிச்சேன். மாமி மார்பை இன்னும் முன்னாலே தள்ளிக்கொடுத்தாள். மாமி கண்ணை மூடிட்டு இருந்தாள். முலை ரெண்டும் முட்டிக்கிட்டு நின்றன. மாமியோட இடது முலை மேலே கொஞ்சம் மாவு. அந்த மாவை கையால் துடைத்தேன். நல்லா மெது மெதுனு இருந்தது. முலையை என்னோட கை வைச்சு அப்பிடியே அமுக்கி பிடிச்சேன். “ஷ்ஷ்ஷ்…ஆ..ஆஆ…ஷ்ஷ்” ன்னு மாமி லேசா முனகினாள். அப்படியே கீழே உட்கார்ந்தேன். மாமியோட முந்தானையை விலக்கினேன். பெரிய பருத்த முலை ரெண்டையும் கையில் பிடித்தேன். மாமி அரை மனசோட, “டேய். என்னடா பண்றே..ஆஆஆ ………ஷ்ஷ்ஷ்ஷ்.. “. நான் விடலை. ரென்டு முலையையும் மாவு பிசையர மாதிரி பிசைய ஆரம்பிச்சேன். நல்லா கொழுகொழுனு இருந்தது மாமியோட முலை. மேலே பார்த்தேன். மாமி கண்ணை மூடிட்டு இருந்தா. கீழ் உதட்டை பல்லால் கடிச்சிட்டு இருந்தா.மாமி நெஞ்சிலே வியர்வை முத்து முத்தா தெரிந்தது. அப்படியே என்னோட வாய் வைச்சு, நாக்காலே நக்கினேன். மாமி முலையை ரவிக்கை மேலேயே வாய் வைச்சு சப்ப ஆரம்பிச்சேன். மாமி கை என் தலையிலே வைச்சு என் முடியை கோதிவிட ஆரம்பிச்சாள். நெஞ்சு பூரா நக்கி நல்ல்லா ஈரம் ஆயிட்டது. மாமியோட ரவிக்கை கொக்கிய கழட்டினேன். ரெண்டு கொக்கி கழட்டினதுமே மாமியோட பருத்த முல பிதிங்கிட்டு திமிறி வெளிலே வந்திட்டது. கொக்கி அவிழ்க்க பொருக்காத நான் அப்படியே கையில் பிடிச்சு இழுத்தேன். மீதி இருந்த கொக்கி தெறிச்சு ரவிக்கை கழன்று தொங்கியது. கைக்கு அடங்காத சைசில் ரெண்டு பழுத்த இளநீர் என் கண் முன்னால். வெளுத்த மார்லே கறுப்பா வட்டம், அந்த வட்டத்துக்கு நடுவில் ரெண்டு கருந்திராட்சைகள். ஒரு கையால் சந்தியா மாமியோட வலது முலை பிடிச்த்சுகிட்டுமாமியோட இடது காம்பை வாயால கவ்வி பிடிச்சேன். நல்லா சப்ப ஆரம்பிச்சேன். மாமியால் தாங்க முடியலை. சந்தியாவோட கை என்னோட சார்ட்ஸ் மேலாவே என்னோட பூலை பிடிச்சது.நல்லா ரெண்டு முலையையும் ஆசை தீர சப்பினேன். மாமியை அப்படியே சுவத்து மேலே சாய்ச்சு அவளை பார்த்தேன். கண்ணை மூடிட்டு அனுபவிச்சிட்டு இருந்தாள். நான் நிறுத்தவும் கண் திறந்து பார்த்தாள். “மாமி சூப்பர் பிகர் மாமிநீங்க..” னு கண் சிமிட்டினேன். வெட்கத்தோட “சீய்ய்ய் போடா….” ன்னுட்டே என் தலையை பிடிச்சு அவளோட மார் பக்கம் அழுத்தினாள்.மாமி நெஞ்சிலே வியர்வை முத்து முத்தா தெரிந்தது. அப்படியே என்னோட வாய் வைச்சு, நாக்காலே நக்கினேன். மாமி முலையை ரவிக்கை மேலேயே வாய் வைச்சு சப்ப ஆரம்பிச்சேன். மாமி கை என் தலையிலே வைச்சு என் முடியை கோதிவிட ஆரம்பிச்சாள். நெஞ்சு பூரா நக்கி நல்ல்லா ஈரம் ஆயிட்டது. மாமியோட ரவிக்கை கொக்கிய கழட்டினேன். ரெண்டு கொக்கி கழட்டினதுமே மாமியோட பருத்த முல பிதிங்கிட்டு திமிறி வெளிலே வந்திட்டது. கொக்கி அவிழ்க்க பொருக்காத நான் அப்படியே கையில் பிடிச்சு இழுத்தேன். மீதி இருந்த கொக்கி தெறிச்சு ரவிக்கை கழன்று தொங்கியது. கைக்கு அடங்காத சைசில் ரெண்டு பழுத்த இளநீர் என் கண் முன்னால். வெளுத்த மார்லே கறுப்பா வட்டம், அந்த வட்டத்துக்கு நடுவில் ரெண்டு கருந்திராட்சைகள். ஒரு கையால் சந்தியா மாமியோட வலது முலை பிடிச்த்சுகிட்டுமாமியோட இடது காம்பை வாயால கவ்வி பிடிச்சேன். நல்லா சப்ப ஆரம்பிச்சேன். மாமியால் தாங்க முடியலை. சந்தியாவோட கை என்னோட சார்ட்ஸ் மேலாவே என்னோட பூலை பிடிச்சது.நல்லா ரெண்டு முலையையும் ஆசை தீர சப்பினேன். மாமியை அப்படியே சுவத்து மேலே சாய்ச்சு அவளை பார்த்தேன். கண்ணை மூடிட்டு அனுபவிச்சிட்டு இருந்தாள். நான் நிறுத்தவும் கண் திறந்து பார்த்தாள். “மாமி சூப்பர் பிகர் மாமிநீங்க..” னு கண் சிமிட்டினேன். வெட்கத்தோட “சீய்ய்ய் போடா….” ன்னுட்டே என் தலையை பிடிச்சு அவளோட மார் பக்கம் அழுத்தினாள்.மாமி முலை ரெண்டும் ஏற்கனவே நான் நக்கினதில ஈரமா இருந்த்து. காம்பு ரெண்டும் சின்ன சுன்னி மாதிரி விறைச்சு இருந்த்து. பால்தான் குடிச்சிட்டேனே, இப்போ எனக்கு மாமியோட பலாபழத்திலே இருந்து தேன் குடிக்க ஆசையாக இருந்தது. மாமி ஆசையும் கெடுப்பானேன், சந்தியா முலையை கைலே பிடிச்சிட்டு, அப்படியே நாக்கை கீழே விட்டேன். நக்கிக்கிட்டே மாமியோட தொப்புள் வரை வந்திட்டேன். மாமியோட தொப்புளை யாரவது டைரக்டர் பார்த்திருந்த அதிலே என்ன என்ன செய்து இருப்பாங்களோ. கட்டாயம் பம்பரம் விட்டு, ஆம்லேட் போட்டு, எண்ணெய் ஊற்றி ஒரு தொப்புள்ல என்ன எல்லாம் செய்யலாமோ அது எல்லாம் செய்து இருப்பாங்க, அப்படி ஒரு தொப்புள் சந்தியா மாமியோடது. நல்ல வட்டமா, ஆழமா இருந்தது. சுற்றிலும் மாமியோட வயிறு, ரொம்ப லூசாவும் இல்லாமே, டைட்டாவும் இல்லாம அம்சமா இருந்தது. தொப்புள் உள்ளே நாக்கை விட்டு நக்கினேன், நோண்டினேன். மாமி “டேய் விடுடா கூச்சமா இருக்கு நேக்கு…” ன்னு நெளிந்தாள். இன்னும் கீழே போகப் பார்த்தேன். மாமி சேலை தடுத்தது.மேலே இருந்து போக முடியாவிட்டால் என்ன, கீழே இருந்து போகலாம் என்று நினைத்து மாமி முழங்கால் மேலே ஒரு கையை வைத்தேன். கை பட்டதுமே மாமி காலை சேர்த்துவைக்கப் பார்த்தாள். நான் விடலை. ரெண்டு முழங்காலையும் பிடிச்சு சந்தியா காலை நல்லா விரிச்சு வைச்சேன். அப்புறம் மெதுவாக சேலையை பிடித்து மெல்ல மேலே தூக்கினேன். தூக்க தூக்க மாமியோட வாழைத்தண்டு தொடைகள் தெரிய ஆரம்பித்தன. கை வைச்சு தடவிப் பார்த்தேன். நல்லா வழவழனு முடியே இல்லாமல் இருந்தது. மாமி “வேண்டாம்டா வேண்டாம்… “ன்னு சொல்லிட்டே இருந்தா. எனக்கு தெரியும் அது எல்லாம் சும்மாதான்னு. நான் விடாமல் சேலையை மேலே மேலே தூக்கினேன். மாமி வாயை மூடனுமே, நாக்கு வைச்சு மாமியோட முழங்கால் மேலே நக்கஆரம்பிச்சேன். மாமி இப்போ “ஷ்ஸ்ஸ்ஸ்… ஆஆஅஆ”ன்னு முனக ஆரம்பிச்சாள். நல்லா முழங்காலில் இருந்து நக்கிட்டே மேலே மேலே போனேன். மாமி அவளாகவே இப்போ காலை நல்லா விரிச்சு கொடுத்தாள்.மாமியோட சேலையை முழுதாகவே தூக்கிட்டேன். மாமியோட தங்கசுரங்கத்தோட முதல் தரிசனம். மாமியோட கூதியே தெரியலை, அப்படி அவளோட புண்டையை சுத்தி அவ்வளவு மயிர். கறு கறுன்னு சுருண்டு இருந்த மயிர் காட்டுக்குள்ளே இருந்து லேசா லேசா தெரிந்தது மாமியோட கூதி. மாமி புண்டை நல்லா உப்ப்பி மாமி சுடற ஆப்பம் மாதிரியே இருந்தது. கை வைச்சு அமுக்கினேன், நல்லா மெது மெதுனு இருந்தது. மாமிக்கு மூட் வந்திட்டது. மாமி கை என் தலைலே வைச்சு புண்டை பக்கமா அழுத்தினாள். மயிர் அடர்த்தியாக இருந்தாலும் மாமி புண்டையை சுத்தமா வைச்சு இருந்தா. கல்யாணம் ஆன பெண்களுக்கே உண்டான ஒரு வாசனை மாமி புண்டைலெ இருந்தது. மாமியோட வழவழ தொடைல என்முகத்தை வைச்சு மாமியோட கூதி வாசனைய ஆசை தீர மோர்ந்து பார்த்தேன். ஒரு மாதிரியான வாசனை. வாசனையே கிக்கா இருந்தது. நாக்கை வைச்சு நல்லா நக்க ஆரம்பிச்சேன். நக்க நக்க மாமி காலை நல்லா விரிச்சா. “ஷ்ஷ்ஷ்ஸ்ஸ்ஸ்ஸ்….. ஆ..ஆஆ…ஷ்” ன்னு முனக ஆரம்பிச்சா. சத்தம் முன்னே விட அதிகமாவே இருந்தது. நல்லா நக்கிட்டு மறுபடி பார்த்தேன். நக்கினதிலே மாமியோட புண்டை மயிர் எல்லாம் ஈரமாகி மாமியோட உப்பின புண்டை மேலேயே ஒட்டி இருந்தது. இப்போ புண்டை நல்லா தெரிந்தது. மாமியோட புண்டையும் நல்லா உப்பி பெருசா இருந்தது. புண்டை மூடிஇருந்தது. ரெண்டு உதடும் ஒட்டிக்கிட்டு இருந்தது. புண்டை உதடும்நல்ல பெரிய சைஸ்தான். உப்பலா வெளியே தள்ளின மாதிரி ஒரு அமைப்பு. ஒட்டிக்கிட்டு இருந்த உதடுகளுக்கு நடுவில் லேசா லேசா ஈரம் கசிஞ்ச மாதிரி தெரிந்தது.என்னோட நாக்கு நுனி மட்டும் வைச்சு அந்த உப்பின புண்டை உதடுகளை வருடினேன். கீழே இருந்து மேலே நாக்கு நுனி ரெண்டு உதடுக்கும் நடுவிலே தெரிஞ்ச ஈரத்தை நக்கிட்டே மேலே வரைக்கும் போனென். மாமி உடம்பிலே ஒரு உதறல். கரண்ட் அடிச்ச மாதிரி. “ஆஆஆஷ்ஷ்ஷ்….ஆ ஆ ஆ..”ன்னு சத்தமா முனகினாள். தொடை ரெண்டும் என்னோட முகத்தை இறுக்கி பிடித்தது. எனக்கு மூச்சு முட்டற நிலை வந்திடுச்சு. மாமியோட வழுவழு தொடைகளை கையிலே பிடிச்சிவிலக்கி விட்டேன். நல்லா இழுத்து ஒரு மூச்சு விட்டேன். இப்போ மாமியோட புண்டை கொஞ்சம் விரிஞ்சு இருந்தது. ரெண்டு உதடுகளுக்கு நடுவில் சின்னஇடைவெளி. அந்த சின்ன சந்து வழியே மாமியோட புண்டை சிவப்பா தெரிந்தது. அந்த சந்தையே நக்கினேன். நக்க நக்க புண்டை விரிஞ்சு கொடுத்தது. விரிய விரிய நானும் இன்னும் அழுத்தமாக நக்கினேன். மாமியோ முனகிக்கிட்டே இருந்தாள். “ஷ்ஷ்ஷ்…ஆஆஆஆஆஅ…. ச்ஷ்ஹ்ஹ் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ச்” ன்னுஒரே சத்தம். நான் நல்லா நாக்கு போட்டு அழுத்தமா நக்கினேன். நக்க நக்க மாமியோடபுண்டை ஈரம் அதிகமாகிட்டே போனது. மாமி கால் விடைச்சது, பாதம் நீட்டினாள், மடக்கினாள். என் தலையை அப்படியே பிடித்து புண்டையில் அமுக்கினாள். மாமிபுண்டை தேன் சொட்ட ஆரம்பித்தது. நல்ல டேஸ்ட். சந்தியா மாமியோட மட மாமா நக்கினது இல்லை போல. இதுவரை நெறய புண்டை நக்கிஇருக்கிறேன். ஆனா இப்படி ஒரு ரியாக்ஸன் பார்த்தது இல்லை. மாமியோட உடம்பு எல்லாம் ஒரு உதறல். கால் தன்னாலே விரியுது, மூடுது. ஒரே சத்தம் வேறே. நான் கை மேலே கொண்டுபோய் மாமியோட காய் ரெண்டையும் பிடிச்சு கசக்கிக்கிட்டே புண்டை நக்கினேன். நாக்கு வலிக்கறவரைக்கும் விடாமல்நக்கினேன்.மாமியோட �

புண்டை யை நக்கி தண்ணி வரவழைப்பது எப்படி

என் பெயர் கிருஷ்ணன். நான் ஒரு தனியார் கம்பெனியில் மாதம் 20 ஆயிரம் சம்பளத்துக்கு, சென்னையில் ஓரிடத்தில் வேலை பாக்கிறேன். என் வயசு 29 ஆகிறது. எனக்கு கல்யாணமாகி 4 வருடம் ஆகுது. என் மனைவி பெயர் சுவேதா.
பாக்கவே சூப்பராக இருப்பாள். எங்களுக்கு வீட்டில் ப 06;த்துதான் கல்யாணம் செய்து வைத்தார்கள் என்றாலும். கல்யாணதுக்கு பிறகு நாங்கள் நல்ல காதலர்களாக இருந்தோம். எனக்கு வேலை கிடைத்ததும் கல்யாணம் செய்துவிட்டதால், குழந்தை பெத்துக்குறதை தள்ளி போட்டுக்கலாம்னு முடிவெடுத்து இருந்தோம். எனக்கு கல்� �ாணம் ஆனதும், சீர் வரிசைக்காக பெண் வீட்டில் ஒரு அபார்ட்மெண்டில் வீடு ஒன்றை தந்தாங்கள். என் அப்பாவும், அம்மாவும் எங்கள் நலனுக்காக எங்களை அதிலேயே தனீக் குடித்தனம் வைத்திட்டனர். நாங்களும் புதிதாக கல்யாணமான தம்பதிகள் என்னென்ன செய்வார்களோ, அதற்� �ும் மேலேயே விளையாடியிருக்கோம்.

சுவேதாவை பற்றி சொல்ல வேண்டுமென்றால் அழகென்றால் அழகு. அவள் சிகப்பு தோல்காரி, பால்கனிகள் 30 சைசில் தூக்கிட்டு நிற்கும். காம்புகள் ரோஸ் கலரில் எப்போதும் நிமின்று நிற்கும். அவள் தொப்புள் குழிகள் கண்ணை மாற்றாமல் பார்க்க வைக்கும். வீட்டை வி� �்டு வெளியே சென்றால் இடுப்பு தெரியாமல் சேலைகட்டும் நேர்த்தி, வீட்டினுள் இடுப்பு தெரியுமாறு கட்டி என்னை ஏங்க வைப்பாள். பின்னே அழகான இருக்கும் குண்டிகள். நான் பல முறை பேக்சாட் போட்டும் புடைக்காமல் அழகாகவே இருக்கும். பின் மன்மத உறுப்பை ச 018;ல்ல வேண்டுமென்றால், தக்காளி பழத்தின் உள்ளே இருக்கும் சிகப்பு அவள் புண்டைக்குள் இருக்கும். தக்காளியை பிளிஞ்சால் தான் ஜீஸ் வரும், சுவேதா உறுப்பை நக்கினால் ஜீஸ் கடலே வரும்.
இன்னும் அவளை பற்றியென்றால், 10 வது வரைக்கும் படித்தவள், கொஞ்சம் கிராம வாசனை, நாகரீகம் தெரிந்தவள்.

நான் வேலை நாட்களில் காலை 9 மணிக்கு வீட்டிலிரூந்து கிளம்பினால், 9.30க்கு ஆபிஸ். 4.30 க்கு வேலை முடிந்து 5 மணிக்கு வீட்டிலீருப்பேன். சனிக்கிழமை மதியமும், ஞாயிறும் விடுமுறை. இதுதான் என் வாழ்க்கை.
எனக்கு கூடப் பிறந்தவர்கள் கிடையாது, ஆனால் சுவேதாவிற்கு தங்கை ஒருத்தி மட்டும். எங்களுக்கு கல்யாணமாகும் போது சுவேதாவுக்கு 20, எனக்கு 25 வயசு. அவள் தங்கை அப்போது 8வது படித்திட்டிருந்தாள். அதுவும் எங்கள் கல்யாணத்தின் போது, துருதுருவென்று கல்யாண ம� �்டபத்தில் ஆடி ஓடி வேலை செய்திட்டிருந்தாள். [©tamildirtystories]அதனால் அவளை அதிகமா கண்டு கொள்ளவில்லை. அவள் அப்பவே அழகாயிருப்பாள். சின்னப் பெண்ணென கண்டுக்கவில்லை. என் முதலிரவன்று சுவேதா பேசுவதற்கே வெட்கப்பட்டாள். நான்தான் அவளை கஷ்டப்பட்டு பேச வைத்தேன். அவ ள் மேல் கை வைத்ததும் அப்பப்பா, அந்த வெட்கம் எங்கிருந்துதான் வந்ததோ, முகத்தை மூடிக் கொண்டாள். நான் பல முறை சொல்லயும் கையெடுக்காததால், அவளின் முலைகளை புடவையுடன் கசக்க, அவளிடமிருந்து சினிங்கல் மட்டும் தான் வந்தது. அப்படியே அவள் மாராப்பை உருகி, ஜாக்கெட் ஹீக்குகளை கழட்டி,பிராவுடன் முலைகளை கசக்க, அவளிடமிருந்து சினுங்கல்கள் தான் என்னை தீண்டின.
Tamil_Story_120810_1
நான் அவளை கட்டியணைக்கின்ற மாதிரி பிரா ஹீக்குகளை கழட்டி, அவள் காதில் "சுவேதா, பாக்கலாமா… கையெடுக்க மாட்டியா. உன் வெட்கத்தை பாக்க ஆசையாயிருக்கு. கையெடுடா " என கெஞ்சியும் அவள் எடுப்பதாக தெரியலை. அவள் கலசங்களை கசக்கியும், திருகியும் வெறியேற்ற ம 09;னகல்கள் மட்டுமே வந்தது. புடவையை முழுவதுமா உருகிப் போட்டிட, அவள் வெட்கினாள்.
பாவாடையை தூக்கிட்டு, அவள் தொடைகள் தடவவும் அவள் முனகல் அப்படியே இருக்க, படுக்க வெச்சு அவள் பாவாடையை வயிற்றின் மேல் தூக்கி போட, அவள் புண்டை 0 வாட்ஸ் பல்ப் வெளிச்சத்தில் மின்னிக் கொண்டிருந்தது. நான் 2 நிமிடம் அப்படியே பாத்திட்டு, அவள் காதில் "சு வேதா, நீ வெளியில தான் அழகுனு நினைச்சேன். ஆனா பாவாடைக்குள் இவ்வளவு அழகா" என்க, அவள் சிரித்தாள். அவள் புண்டையை பாத்த வெறியில், முத்தமிட ஆரம்பித்தேன். அவள் புண்டையை நக்கியே தண்ணியை கழட்டினேன். அவள் கைகள் விழகி பெட்டினை கட்டி பிடிச்சிட்டு முனக ஆரம&# 3021;பித்தாள் சுவேதா. நான் அவளிடமீருந்து டப்பென எழுந்து கைகளை பிடிசிட்டு முகத்தோடு முகம் சேர்க்க, அவள் வெட்கபட்டு நழுவ முயன்றாள். நான் விடாமல் அவள் முகமெங்கும் முத்த மழை பொழிய, அவள் வெட்கப் பட்டுட்டே இருந்தாள். அப்படியே அவள் சாமானில் சொருக, அவள் சாமான் கஷ்டப்பட்டு உள்ளே விட்டது. நான் பல போராட்டதுக்கு பிறகு, அவளை நல்லா ஓக்க ஆரம்பித்திடேன். அவள் ஓக்க ஆரம்பித்ததிலிருந்து மெல்ல, மெல்ல என்றிட்டே இருந்தாள். நான் அப்போதுதான் முதல் முறையாக செக்ஸ் பன்றேன் என்பதால், சரியா தெரியாமல் வேகமாக இடி ;த்தேன். கொஞ்ச நேரத்தில் சுவேதாவிடமிருந்து விசும்பும் சத்தம்வர, நான் பாக்க அவள் கண்கள் கண்ணீரை சிந்தியிருந்தன. வலியால் தான் அழுதியீரூக்காள் என்பதை புரிந்து கொண்டு, நான் அவளுக்கு எவ்வளவோ சமாதானம் சொல்லி மீண்டும் மெல்ல ஓக்க ஆரம்பித்தோம். ப ின் கஞ்சியை வெளியே கோட்டிட்டு, அவளை மேலும் ஒரு முறை ஓத்திட்டு தூங்கிட்டோம். பின் தனிக் குடித்தனம் வந்ததால், இரவு, பகலென பாராமல் ஓழ் விளையாட்டுக்கள் தான். அவள் முதலில் மறுத்தவள், இப்போதெல்லாம் நான் எப்போது கூப்பிடாலும் வருகிறாள். நான் அவளை ; ஓத்த காலம் மாறிப் போய், அவள் என்னை ஓக்கிறாள். முதலிரவன்று அப்படி வெட்கப்பட்டவளுக்கு ஊம்புவதெப்படீ, நக்குவதெப்படி என எல்லா விஷயங்களையும் கற்று கொடுதிருக்கேன். அவளும் என்னை சுகப்படுத்துவது எப்படியென தெளிவா கற்று கொண்டாள். எங்கள் செக்ஸ் வாழ்க ்கை சுகமாகத்தான் கழிகின்றது. வாரத்தில் 4 அல்லது 5 முறையாவது ஓழ் விளையாட்டுக்களை அரங்கேற்றிகின்றொம். நாங்கள் பல விதங்களிலும் ஓத்துகிறோம். எங்கள் வீட்டு சுவர்களுக்கு கூட தெரியாது நாங்கள் எத்தனை விதங்களில் ஓத்திருக்கோம் என்று.
எங்களுக்கு கல்யாணமாகி 2 வருடத்தில் குறைந்தது 500 முறைக்கு மேலாவது ஓத்திருப்போம். ஆனால் அவளுக்கு நானும், எனக்கு அவளும் போரடித்ததே இல்லை. ஏனென்றால் நாங்கள் உண்மையாக காதலிக்கிறோம். வீட்டில் மட்டுமல்ல அவுட்டோர் செக்ஸீம் உண்டு.
Tamil_Story_120810_2
அதுவும் ரொம்ப ரொம்ப சுவாரசியமாக இருக்கும். அதற்கு வரம்பே கிடையாது.
ரெண்டு வருடமாக நன்றாக ஓத்து மகிழ்ந்தோம். ஒரு முறை ஞாயிற்றுக்கிழமை மதியம் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தேன். சுவேதா வீட்டிலிருந்து போன் வந்தது. அவள்தான் எடுத்து பேசினாள். நல்லா பேசியவள் கொஞ்ச நேரத்தில் திட்ட ஆரம்பித்திடாள். நானும் அவள் போன& #3016; வைத்ததுக்கு பிறகு, அவளிடம் என்னவென்று கேட்டேன். அதற்கு அவள், அவள் தங்கை நிவேதா 11வது பெயில் ஆகிட்டாளாம். அதற்குதான் திட்டினேன் என்றாள். நிவேதா நல்லா படிப்பாளென எனக்கு தெரியும். நான் அவர்களின் வீட்டிற்கு போன் பண்ணி கேட்க, நிவேதா என்னிடம் பே� �� மறுத்தாள். அவள் எப்போதும் மாமா, மாமாவென நன்றாக பேசுவாள். சரி என்னதான் பிரச்சினையென அடுத்த ஞாயிறு நானும், சுவேதாவும் அவங்க வீட்டிற்கே போனோம். அவங்களும் வரவேற்க, நான் நிவேதாவிடம் சென்று பேசினேன். அவள் எப்போதும் வீட்டில் பாவாடை, சட்டையில் த 006;ன் சின்னப் பெண் மாதிரி சுத்துவாள். நானும் அவளிடம் கேட்க, தயங்கிட்டே அந்த பள்ளியில் டீச்சிங் சரியில்லை என்றாள். அவள் பேச்சை அங்கே யாரும் கேட்பதாக இல்லை. உடனே அவள் அக்கா அவளிடம் "வேறெதாவது பள்ளியில் சேர்ந்து படிக்கிறீயா" எனகேட்க, சரியென தலையாட ்டினாள். ஆனால் அந்த ஏரியாவில் நல்ல பள்ளியென ஏதும் சரியா இல்லை. வயசுக்கு வந்த பெண்ணை விடுதியிலும் சேர்ந்து படிக்க வைக்க முடியாத காரணத்தினால், அப்படியே விட்டிடலாம் என நினைக்கையில், சுவேதா தீடீரென " சரி நீ எங்களுடன் வந்திடு. அங்கே ஏதாவது நல்ல பள் ளியில் சேர்த்து விடுகிறோம்" என்க, அனைவரும் அவளையே பாத்தனர். நிவேதா அமைதியாக இருக்க, நான் சுவேதாவை பாத்தேன். அவள் என்னிடம் "உங்களுக்கு ஏதேனும் ஆட்சேபம் இல்லையே" என்க, நான் ஏதும் புரியாமல் இல்லையென தலையாட்டினேன். பின் சுவேதா, அவள் தங்கையிடம் கே� ��்க, அவளும் வருகிறேனென தலையாட்டினாள். ஆனால் அவள் வீட்டார் வேண்டாமென்க, சுவேதா "நான் பாத்துகறேன்" என சொல்ல, அவங்கள் ஓர் மனதாக சம்மதித்தனர். பின் நானும், சுவேதாவும் ஓர் வாரத்தில் எல்லாத்தையும் விசாரித்து சொல்வதாக சொல்லிட்டு எங்கள் வீடு வந்து ச& #3015;ர்ந்தோம்.
வீட்டில் அவளிடம் "என்னடி நீ பாட்டுக்கு இப்படி பண்ணிட்ட"
"ஏங்க உங்களுக்கு பிடிக்கலையா"
"ஏய், அப்படியில்ல. வயசு பொண்ணு, இது கொஞ்சம் காரமான ஊர். அதான்"
"நம்ம பாத்துக்கலாம்க"
நானும் சரியென விட்டிட்டேன். ஒரு வாரத்தில் நாங்களும் நல்ல பள்ளி ஒன்றை தேடி கண்டு பிடிச்சோம். அதில் அட்மிஷன் போட்டுட்டு, யூனிஃபார்மெல்லாம் ஆர்டர் பண்ணிட்டு, அவளை கூப்பிட்டு வர சனிக்கிழமை அன்று சுவேதா அவள் ஊருக்கு போனாள். நான் ஆபிஸ் போயிட்� �ு, மதியம் லீவென வந்திரலாமென்றாள், எங்கள் பழைய பிராஜெக்ட் ஒன்று சிக்கல் தந்திட, அதை நல்ல படியா முடிச்சிட்டு மாலை 6 மணிக்கு வீடு திரும்பினேன். அவர்கள் வந்திட, காலிங் பெல்லை அடிச்சேன். நிவேதா கதவை திறந்தாள். அவள் அணிந்தியிருந்த சுடிதாரை கண்டதும& #3021; கண்கள் சொக்கின. அவளை அப்போதான் முதல் முறையாக, சுடிதாரில் பாக்கறேன். அப்படியே நிற்க, அவள் வரவேற்றாள். அவர்களும் அப்போதான் வந்ததாகவும் சொல்லி, தண்ணீர் தந்தாள். நானும் ரூம் சென்று உடைகளெல்லாம் மாத்திட்டு, அவர்களுடன் பேசிட்டிருந்தேன். அவள் சĬ 9;டிதார் கலக்க, திடீரென விழகிய துப்பட்டாவின் உதவியால் அவள் நெஞ்சு பழங்களை பாக்க நேர்ந்தது. அது சற்று வீங்கியிருக்க, அப்போதான் நிவேதா அழகாக தெரிந்தாள். உண்மையில் அவள் சுவேதாவை விட பாக்க அழகாயிருந்தாள். சின்னப் பெண்ணென நான் தாள் கண்டு கொள்ளாம� ��் விட்டிட்டேன். அவள் அழகு கண்ணை மினுக்கியது. நிவேதாவை முதல் முறையாக காமப் பார்வையுடன் பாத்தேன். ரொம்பவும் அழகாயிருந்தாள். பின் அப்படியே பேசிட்டு நாங்க தூங்க, அவளுக்கென தனியறை ஒதுக்கியிருந்தோம். அதில் அவள் தூங்கினாள்.
அடுத்த நாள் ஞாயிறு என்பதால் நாங்கள் காலை சினிமாவுக்கு போனோம். அப்போது நிவேதா தாவணியுடன் வந்தாள். நான் டிரஸ் மாட்டுட்டு தலை வாறிட்டிருக்க, நிவேதா தாவணியுடன் ரெடியா இருந்தாள். அவள் இடுப்பு வெள்ளை கலரில் பளபளக்க, நான் அதை கவனித்தேன். உடனே சுவ& #3015;தா வர திரும்பிட்டென். சுவேதா அவளை ரூமுக்கு கூட்டி போயி, இடுப்பு தெரியாமல் தாவணி போட்டுட்டாள். அவளும் அப்படியே வர, நாங்கள் படத்துக்கு போனோம். தியேட்டரில் இளைஞர்கள் பட்டாளம் எங்களை வெறித்தன. படம் முடிந்து மதியம் வீட்டிற்கு வந்து சிக்கன் செ� �்து சாப்பிடுட்டு, நான் தூங்க அவள்கள் பேசிடிருந்தாங்க. மாலை 6 மணிக்குதான் எழுந்தேன். அப்படியே என் அலுவலக வேலைகளை பாக்க, சாப்பாடு டைம்ஆனது. மூவரும் ஒன்றாக உக்காந்து சாப்பிட்டு முடிச்சு, தூங்க போயிட்டோம். சுவேதா தூங்கிடிருக்க, மதியம் தூங்க 07;யதால் எனக்கு தூக்கம் வரலை. என் கண்ணில் நிவேதாவின் இடுப்பு வந்து வந்து போக, சுண்ணி தூக்கிக் கொண்டது. அப்படியே சுவேதாவைப் பாக்க, அவள் புடவை விழகி தூங்கிட்டிருந்தாள்.அவள் காயகளை கசக்கி, புடவையை மேலேத்தி வயிற்றின் மேல் போட்டேன்.அவள் சினுங்க, ந 006;ன் அவள் புண்டைக்குள் நுழைத்து வேக வேகமாக இடிக்க ஆரம்பித்தேன்.
Tamil_Story_120810_3
நிவேதாவின் இடுப்பை நினைத்துக் கொண்டே, சுவேதா முலைகளை கசக்கினேன். அவளுக்கும் முழிப்பு தட்ட, நான் காம வெறியேறி சுவேதா புண்டையை கிழிக்க ஆரம்பித்தேன். சுவேதாவும் பொறீத்து பாத்திட்டு, மெல்ல மெல்ல என கதறினாள். நான் விடாமல் அவள் காய்களை கசக்க& #3007;ட்டே, கண் மூடுத்தனமாக இடித்தேன். சுவேதாவும் என்னை கட்டுப்படுத்த முயன்று தோற்றுபோக, நான் இடுப்பை மட்டும் தூக்கி தூக்கி அடிக்க, அவள் புண்டை ரப்பராட்டம் குலைந்தது. பின் தண்ணியை கக்க, சுவேதா அதிசயித்தாள். அவளே பாராட்டினாள், ரொம்ப வேகமென்று. அவ ள் இப்படி சொல்லி ரொம்ப நாளாச்சு.
பின் அடுத்த நாள் வேலைக்கு வழக்கமாக போக, நிவேதாவும் கொஞ்ச நாளில் பள்ளி துவங்க அவளும் சென்றாள். பள்ளிக்கு ஸ்கூல் பஸ்ஸிலேயே அனுப்பி வெச்சோம். 5 மணி என் கையில் வந்திருவாள். இப்படியே நாள் போக, எனக்கு நிவேதா மேல் செக்ஸ் வெறி வளர்ந்தது. அதை சுவேதாவ 007;ன் புண்டைக்குள் இடிச்சு குறைக்க ஆரம்பித்தேன். ஆனாலும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்திட்டேதான் இருந்ததூ. ஓரிரு மாதம் போக, நிவேதா முதல் எக்ஸாமில் ஒரு பெயில் மட்டுமாகி, மற்றதிலெல்லாம் தேறினாள். அவளை அந்த பாடத்தில் மட்டும் முயன்று படிக்க வைத்தோம ். அவளும் கஷ்டபட்டு படிக்க ஆரம்பித்தாள்.

Related Posts Plugin for WordPress, Blogger...