Thursday, September 11, 2014

பெண்கள், உடலுறவில் ஈடுபடக்கூடாது! ஏன்? எதற்கு?

எந்த மாதிரியான பெண்கள் எநதெந்த நேரத்தி ல், எந்தெந்த சூழ் நிலைகளின் போது உடலு றவில் ஈடுபடக்கூடாது.
உடல்நலக் கோளாறு காரணமாக படுக்கை யில் ஓய்வெடுக்க வேண்டும் என வலியுறுத்த ப்பட்ட பெண்கள் அந்த ஓய்வுக் காலம் முடி கிற வரை செக்ஸைத் தவிர்ப்பது நலம்.
குறிப்பாக இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைக் கான சிகிச்சையில் இருப்பவர்கள் கட்டாயம் இந்த விஷயத்தில்
எச்சரிக்கையாக இருக் க வேண்டும்.
அறுவை சிகிச்சை மேற்கொண்ட பெண்களு க்கும் குறிப்பிட்ட காலம் வரை செக்ஸ் உற வைத் தவிர்க்கச் சொல்லியே அறிவுறுத்த ப்படும். அறுவை செய்த காயம் முழுவதுமாக ஆறும் வரை செக்ஸ் கூடாது என்பார்கள் மருத்துவர்கள்.
இருவரில் யாராவது ஒருவருக்குப் பால்வி னை நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டா லோ, அப்படி இருக்குமோ என்கிற சந்தேகம் இருந்தாலோ கூட செக்ஸ் உறவு கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டு ம். இந்தக் கண்டிஷன் எய்ட்ஸுக்கு மட்டுமின்றி எல்லா விதமான பால்வினை நோய்களு க்கும் பொருந்துமாம்.

தம்பதியர் இருவரில் ஒருவருக்கு த் தொற்றும் வகையில் ஏதேனும் நோய் (அம்மை, சருமநோய் உள் பட) இருந்தாலும் அவர்கள் செக் ஸ் உறவைத் தவிர்க்க வேண்டு ம். அந்த நோய் முற்றிலும் குணமாகிற வரை அல்லது அது மற்றவ ருக்குத்தொற்றாது என்கிற நிலை உண் டாகும் வரை உறவு தவிர்க் கப்படுவது பாதுகாப்பானது என் கிறார்க ள் மருத்துவர்கள்.
உறவின் போது வலியை உணர்ந் தால், உடனடியாக அந்த உறவு நி றுத்தப்பட வேண்டுமாம். வலி எ ன்பது ஒருவரது உடலில் உண்டா கி யிருக்கிற ஏதோ ஒரு பிரச்சினைக்கான அலாரம் மாதிரி. அதை சகித்துக் கொண்டு உறவைத் தொட ர்கிற பட்சத்தில் விளைவுகள் வேறு மாதிரி மாறலாம்.

மனம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளா ல் பாதிக்கப்பட்ட தம்பதியர் செக்ஸ் உறவிலிருந்து விலகியிருப்பது நல் லது. அளவுக்கதிக மன உளைச்சல், மனச்சோர்வு, படபடப்பு போன்றவற் றால் பாதிக்கப்பட் டவர்களும் அடக்கம்.
கர்ப்பம் தரித்த ஆறாவது வாரம் முதல் பனிரெண்டாவது வாரம் வரை தாம்பத்திய உறவைத் தவி ர்ப்பது கருச்சிதைவிலிருந்து காப் பாற்றும் என்கிறார்கள் மகப்பேறு மருத்துவர்கள். கர்ப்ப காலத்தின் கடைசி இரண்டு மாதங்களும் அ தைத் தவிர்ப்பது நல்லது. கடைசி மாதங்களில் கொள்கிற உறவா னது, பனிக்குடத்தை உடையச்செய்து, ஆபத்தை உண்டாக்க லாம் என்பதே காரணமாம். பிரசவத்து க்குப் பிறகு முதல் ஆறு வாரங்க ளுக்கு செக்ஸ் வேண்டாம் என் பதே மருத்துவர்களின் பொதுவா ன அட்வைஸ். அதன்பிறகு அந்த த்தாயின் உடல் பரி சோதிக்கப் பட்டு, பிரச்சினைகள் இல்லை என்று உறுதியளிக்கப்பட்ட பிற கே செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளப்பட வேண்டும்.

தம்பதியருக்குள் சண்டை, சச்சரவு நிகழும் போது, அதற்கான ஒரு சமாதான நடவடிக் கையாக செக்ஸ் உறவைக் கையிலெடுப்ப வர் களே அதிகம். மிகப்பெரிய சண்டையைக் கூட அந்த உறவு சமாதானத்துக்குக் கொண் டு வந்து விடுவதுண்டு. ஆனால் உண்மை யில் இது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. பிரச்சினைக்கான தீர்வு முதலில் காணப்பட வேண்டும். மனங்கள் லேசாக வேண்டும். மனத்தளவில் இருவரும் நெருக்கமாக உண ர்ந்த பிறகே உடலளவிலான நெரு க்கம் தொ டர வேண்டும். இல்லாதபட்சத்தில் காலப் போக்கில் அது அந்த தம்பதியருக்கிடையே யான நெருக்கத்தையே சிதைக்கிற வாய் ப்புண்டாம்.

நாற்பது வயசாச்சா?..வாரம் ஒரு தடவை செக்ஸ் போதும்

தாம்பத்ய உறவு என்பது மருந்து போலத்தான். அதை அளவோடு வைத்துக்கொண்டால் ஆபத்தில்லை அதேசமயம் ஆசைப்பட்டு தினசரி உறவு கொண்டால் அல்லல்பட வேண்டியதுதான் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். எந்த வயதில் எத்தனை முறை உறவில் ஈடுபடலாம் என்றும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன்.

புதிதாக திருமணமான தம்பதிகள் அதிகம் ஆசையோடு இருப்பார்கள். அவர்களுக்கு ஒருவரைப் பற்றி மற்றொருவர் அறிந்து கொள்ள ஆர்வம் அதிகம் இருக்கும். எனவே அவர்கள் முதலிரவு நாளில் நான்கைந்து முறை கூட உறவில் ஈடுபடலாமாம். ஏனென்றால் அன்றைய தினம் அவர்களை தொந்தரவு செய்ய ஆளில்லையாம். அதனால்தான் தம்பதியர்களை தேனிலவுக்கு எல்லாம் அனுப்பி வைக்கின்றனராம்.

வயதாக வயதாக ஆர்வம் படிப்படியாக குறைந்து விடும். எனவே வயதிற்கு ஏற்ப தாம்பத்ய உறவின் அளவுகளையும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். எந்த வயதில் எத்தனை முறை ஈடுபடலாம் என்றும் அவர்களே கூறியுள்ளனர்.

22 முதல் 25 வயது வரை உடைய தம்பதியர் வாரத்திற்கு 3 முறை உறவு வைத்துக்கொள்ளலாமாம். 32 முதல் 35 வயது வரை உடையவர்கள் வாரத்திற்கு 2 முறையும், 41 முதல் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் வாரத்திற்கு ஒருமுறையும் உறவு வைத்துக்கொள்ளலாம் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர். அப்பொழுதுதான் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ஆரோக்கியமாக உணர முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.

ஏனெனில் வயதாக வயதாக செக்ஸ் பற்றிய ஆர்வம் படிப்படியாக குறைய ஆரம்பித்து விடுமாம். ஆணோ, பெண்ணோ நிறைய பொறுப்புகள் அதிகரிக்குமாம். எனவேதான் செக்ஸ் விசயத்தில் கணவனோ, மனைவியோ கட்டாயப்படுத்தக்கூடாது என்கின்றனர் நிபுணர்கள்.

ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் கனிவான பேச்சு, கரிசனமான செயல்பாடுகள், சின்னதாய் தலை கோதி விடுவது, அன்பாய் கை, கால் பிடித்து விடுவது போன்றவையே செக்ஸ் உறவை விட மேம்பட்டதாய் இருக்கும் என்றும் அதைத்தான் பெரும்பாலோனோர் விரும்புகின்றனர் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
திருமணமான புதிதில் ஒருவருக்கொருவர் ஆர்வக்கோளாறினாலும் தங்களை நிரூபிக்க வேண்டிய நிர்பந்தத்தினால் அடிக்கடி உறவில் ஈடுபடுவார்கள். ஆனால் குழந்தை பிறந்து சில வருடங்கள் கடந்த பின்பு பொறுப்புகளும், பணிச்சூழலும் ஒரு வித அயர்ச்சியை ஏற்படுத்திவிடும். எனவே செக்ஸில் கொஞ்சம் ஆர்வம் குறைந்து விடும். எனவேதான் தாம்பத்ய உறவுக்கு என்று சில எல்லைகளை வகுத்துக்கொண்டால் யாருக்கும் எந்த வித சிரமமும் இருக்காது வாழ்க்கையும் சிக்கல் இல்லாமல் தெளிந்த நீரோடையாய் போகும் என்கின்றனர் நிபுணர்கள்.

மார்பகம் பெருசா இருக்கா இத பண்ணுங்க ஆண்களே !

நீங்கள் ஆணா? உங்களுடைய மார்பக சதைகள் தளர்ந்து தொங்குகின்றனவா? உங்களுடைய முகத்தை கண்ணாடியில் பார்க்கும் போது வெட்கமாக உள்ளதா? மற்றவர்கள் இதனால் உங்களை கேலி செய்கிறார்களா? இந்த கேள்விகளுக்கெல்லாம் நீங்கள் ஆம் என்று பதில் சொன்னால், இந்த கட்டுரை கேள்விகளை தவிடு பொடியாக்க உங்களுக்கு உதவும் என்பதில் சந்தேகம் வேண்டாம். ஏனெனில், ஆண்களுக்கு இருக்கும் இந்த பிரச்சனைகளை சரி செய்யக் கூடிய உடற்பயிற்சிகளைப் பற்றியே இங்கு நாங்கள் தகவல்கள் தரப் போகிறோம்.

இவ்வாறு ஆண்களின் மார்புகள் தொங்குவதற்கு சில காரணங்கள் உள்ளன. அது மருந்துகளின் பக்க விளைவுகளாகவோ, அதீதமான உணவுக் கட்டுப்பாடுகளால் வந்ததாகவோ அல்லது மரபு சார்ந்த பிரச்சனையாகவோ இருக்கலாம். முதன்முறையாக ஜிம்முக்கு போறீங்களா? இதெல்லாம் ஞாபகத்துல வெச்சுக்கோங்க…

இந்த கட்டுரையின் மூலமாக தொங்கி விழும் மார்பகங்களை சரி செய்து உங்களை கவர்ச்சியாகவும், ஃபிட்டாகவும் மற்றும் முறுக்குள்ள ஆணாகவும் காட்ட உதவும் உடற்பயிற்சிகளை அறிய முடியும். ஆனால், எண்ணெய் நிரம்பிய உணவுகளையும், தேவைக்கு அதிகமாகவும் சாப்பிடாமலும் மற்றும் தினமும் முறையாக உடற்பயிற்சிகளை செய்து வந்தாலும் தான் இந்த பிரச்சனை தீரும் என்பதை மனதில் கொள்ளுங்கள். மேற்கண்ட கட்டுப்பாடுகளில் எதை நீங்கள் தவறவிட்டாலும், கிடைக்கும் பலன்களில் 60 முதல் 40 சதவிகிதம் குறைந்துவிடும். இதோ அந்த உடற்பயிற்சிகள் உங்களுக்காக…

உங்களுடைய மார்புகள் தொங்கிக் கொண்டிருக்கும் பிரச்சனையை சரி செய்ய விரும்பினால் ஓடத் துவங்குங்கள். இந்த பயிற்சியின் மூலம் உடலில் அதிகமாக உள்ள கொழுப்புகள் எரிக்கப்படும் – மார்பில் உள்ள கொழுப்புகள் மட்டுமல்லாமல் வயிறு, அடி வயிறு போன்ற இடங்களின் கொழுப்புகளும் கரையும். ஓடுவதன் மூலம் உங்களுடைய உடலின் தலை முடி முதல் கால் பாதம் வரையிலான பகுதிகள் அனைத்தும் அதிர்வடைகின்றன. இதன் மூலம் 70 முதல் 80 சதவிகித அளவிற்கு கொழுப்புகளை கரைக்க முடியும். உங்களுடைய மார்பக கொழுப்புகளை நீங்கள் கரைக்க விரும்பினால் ஒரு நாளுக்கு 2 கிமீ தூரம் ஓட வேண்டும். இதில் உங்களுக்கு நீங்கள் உண்மையாக இருக்க வேண்டியது அவசியம். இவ்வாறு ஓடத் துவங்கும் போது கடினமாக இருந்தால், மெதுவாக ஜாகிங் செய்வது போல ஓடுங்கள். ஆனால் நடந்து செல்ல வேண்டாம்.

உங்களுடைய மார்பகத்தின் தேவையற்ற கொழுப்புகளை கரைக்கும் மற்றுமொரு பயனுள்ள உடற்பயிற்சி இதுவாகும். இந்த பயிற்சி உங்களுடைய மார்பு மற்றும் பிற உடல் பகுதிகளிலிருந்து 100% கொழுப்பை கரைக்கும் பயிற்சி ஆகும். நீங்கள் இந்த பயிற்சியை தினமும் உங்களுக்கு உண்மையாக செய்து வந்தால் ஒரே மாதத்தில் நல்ல பலன் கிடைக்கும். இந்த உடற்பயிற்சியை ஓடும் போதோ அல்லது ஓடாமலோ கூட செய்யலாம். ஆனால், ஓடி முடித்த பின்னரும், உங்களுடைய ஓய்வு வேளையிலும் இந்த பயிற்சியை செய்ய மறக்க வேண்டாம். கயிறு கொண்டு ஸ்கிப்பிங் செய்வது உங்களுக்கு கடினமாக இருந்தால், மெதுவாக குதித்து இந்த பயிற்சியை தொடங்குங்கள். ஆரம்பத்தில் 90 முதல் 150 முறை ஸ்கிப்பிங் செய்யத் தொடங்கி, போகப்போக அளவை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த எண்கள் அதிகமாக இருப்பதை எண்ணி பயப்படாமல் மூன்று தடவைகளாக இந்த பயிற்சியை செய்ய தொடங்குங்கள், எண்களும் எடையும் படிப்படியாக குறையும்.

மார்பகங்களை ஆண்மைத் தன்மையுடன் காட்டுவதற்கு புஷ்-அப் பயிற்சி மிகவும் உதவும். இது சற்றே கடினமான பயிற்சியாக இருந்தாலும், செய்ய முடியாத பயிற்சி கிடையாது. புஷ்-அப் பயிற்சிகள் மார்பகங்களை முறைப்படுத்துவதற்கான ஸ்பெஷல் உடற்பயிற்சியாக இருப்பதால் அது மார்பகத்தில் உள்ள கொழுப்புகளை நேரடியாக குறைக்கிறது. இந்த பயிற்சியை தொடங்கும் போது உங்களுடைய பாதங்களில் முழுமையான அழுத்தம் தராமல் முழங்கால்களை பயன்படுத்துங்கள். ஆனால், சிறிது காலத்தில் உங்கள் கைகள் பலப்பட்ட பின்னர் முறையாக இந்த பயிற்சியை செய்யத் தொடங்க வேண்டும். ஓட்டம் மற்றும் ஸ்கிப்பிங் பயிற்சிகளுக்குப் பின்னர் இந்த உடற்பயிற்சியை நீங்கள் செய்யலாம். புஷ்-அப் பயிற்சியை செய்யத் தொடங்கும் முன்னர் உங்களை நீங்கள் சிறு சிறு பயிற்சிகள் செய்து தயார்படுத்த வேண்டியது அவசியம்

சற்றே உயர்-நிலை உடற்பயிற்சிகளில் ஒன்றான சின்-அப் பயிற்சியை செய்வது கனமான உடல்வாகு கொண்ட மனிதர்களுக்கு கடினமாக இருக்கும். ஆனால், இது உடலுக்கு மிகுந்த வலிமை தருவதுடன், கட்டுக்கோப்பாகவும் வைக்கும். இந்த பயிற்சியை செய்யும் போது மற்றவர்களின் உதவியை நீங்கள் நாடலாம். ஒரு உதவியாளர் இருந்தால் அவர் உங்களுடைய முழங்காலை தூக்கிக் கொள்ளச் செய்யலாம். உங்களுடைய கைகள் உடல் எடையைத் தாங்கிக் கொள்ளும் என்றளவிற்கு வலிமை பெற்ற பின்னர், இந்த பயிற்சியை நீங்கள் பிறர் உதவியின் செய்யலாம்.

உங்களுடைய மார்புகளுக்கு ஆண்மைத்தனமான வடிவத்தை அளிக்கும் மற்றுமொரு உடற்பயிற்சியாக டம்பெல் உள்ளது. இந்த பயிற்சி உங்களுடைய மார்பின் அகலத்தை அதிகப்படுத்தி, அதை கவர்ச்சியான அம்சமாக்கி விடும். ஒரு டேபிள் மற்றும் டம்பெல்-ஐ வைத்து இந்த பயிற்சியை செய்யலாம் அல்லது உங்களுடைய பேலன்ஸ் தவறாமல் எடையுள்ள பொருள்களை தூக்கலாம். இந்த பயிற்சியை எங்ஙனம் சரிவர செய்வது என்பதை அறிய யூ-டியூப்-ல் வரும் காட்சிகளை பாருங்கள். அதில் எண்ணற்ற செயல் காட்சிகள் படமாக விடப்பட்டுள்ளன.

பெஞ்ச் பிரஸ் இது மார்பை அழகுபடுத்தும் மற்றுமொரு பயிற்சியாகும். இந்த பயிற்சியை சாய்வாகவும், சரிவாகவும் மற்றும் நேரான நிலையிலும் செய்யக்கூடிய பயிற்சியாகும். இந்த பயிற்சி மார்பு பகுதிக்கு சரியான வடிவத்தை கொடுக்க உதவியாக இருக்கும். இவற்றில் ஏதாவது ஒரு பயிற்சியை செய்து உங்களுடைய மார்பக பகுதிகள் தொய்வாக உள்ளதை சரி செய்ய முடியும்.

டக் ஜம்ப்ஸ் பயிற்சியில் குதித்துக் கொண்டே உங்களுடைய முழங்காலைக் கொண்டு நெஞ்சைத் தொடுமாறு செய்ய வேண்டும். இது தொடக்க நிலையில் உள்ளவர்களுக்கு மிகவும் கடினமான பயிற்சியாக இருக்கும். ஆனால் நீங்கள் குதிப்பதையோ அல்லது ஸ்கிப்பிங்கையோ தினமும் செய்து வந்தால் இந்த பயிற்சியையும் எளிதாக செய்ய முடியும். இந்த உடற்பயிற்சி கடினமானது என்று நாங்கள் குறிப்பிட்டிருந்தாலும், அதே அளவு பயன் மிக்கது என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். ஒரு நாளைக்கு மூன்று வேளை என 30 டக் ஜம்ப்களை செய்தால் குறைந்தது 20% கொழுப்பை கரைக்க இயலும். நீங்கள் மேலும் மேலும் இந்த எண்ணிக்கையை கூட்டினால் பலனும் அதிகரிக்கும்.

மிகவும் தளர்வான மார்புகளை கொண்டிருக்கும் ஆண்கள் பயன்படுத்த இதனை பயன்படுத்தலாம். தங்களுடைய மார்பு பகுதி மிகவும் தொய்வாக மற்றும் அசௌகரியமாக இருக்கிறது என்று கருதுபவர்கள் ஆண்களுக்கான பிராவை அணியலாம். இந்த யோசனை இயற்கைக்கு மாறானதாக உங்களுக்குத் தோன்றினாலும், உடற்பயிற்சி செய்ய முடியாத தேகம் கொண்டவர்களுக்கு மிகவும் பயன் தரும் அம்சமாக இருக்கும். எனவே, தொடக்கத்தில் இந்த யோசனையை பயன்படுத்துங்கள். 2 அல்லது 3 மாதங்களுக்குப் பிறகு உங்களுடைய தளர்வான மார்பக சதைகள் குறைந்துவிடும்.

முதல் மூன்று உடற்பயிற்சிகளும் மிகவும் முக்கியமானவை மற்றும் அவை ஆண்களின் மார்பக சதைகளை வெகுவாக குறைக்கக் கூடியவையாகும். எனவே, நீங்கள் உண்மையிலேயே பலனடைய வேண்டும் என்று விரும்பினால், மனசாட்சிக்கு விரோதமில்லாமல் இந்த பயிற்சியை தினசரி செய்து வர வேண்டும்.

பெண்ணுடைய செக்ஸ் உணர்வுகளும் உறுப்புக்களும் – அவற்றைத்தூண்டும் முறைகளும்:

பெண்களின் செக்ஸ் உணர்வுகள்
செக்ஸ் என்கிற விசயம் காலம் காலமாக ஆண்களின் கோணத் தில் இருந்தே அணுகப்பட்டும், விவாதிக்கப்பட்டும் வந்திருக்கி றது. நிஜமாக பெண்ணின் உணர் ச்சி நிலைகள் என்ன? பெண்ணி ன் அணுகுமுறை செக்ஸ் விசயத்தில் எப்படியிருக்கும்? என்கிற பல விசயங்களை ஆராயவே இக்கட்டுரை.
பெண்ணிற்கும் உணர்ச்சிகள் உண்டு. அவ்வுணர்ச்சியை திருப்திகர மாக நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பு பெண்களுக்கு
உண்மையாக வழங்கப்பட வே ண்டும் என்றெல்லாம் ஆண்கள் பெரும்பாலும் எண்ணுவதே கிடையாது. கணவன் மனைவி யாக பல காலம் வாழ்ந்து இல்ல ற சுகம் காணும் பலரிடம்கூட இத்தகைய குறைபாடு இருக்கி றது. இதற்கு மனரீதியாக, உடல் ரிதியாக பல்வேறு காரணங்க ளும், செக்ஸ் பற்றிய முழுமையான அறியாமையும்கூட காரணங் களாக அமைந்திருக்கின்றன.
திருமணமான அனைவரும் நல மாக மனநிறைவுடன் வாழ்கிறார் களா? என்றால் 60 சதவிகிதம் முதல் 70 சதவிகிதம் தம்பதியின ர் திருமண உறவில் முழுமையா ன மகிழ்ச்சியடையாதவர்கள் என தெரிகிறது.
இதனுடைய ஒரு விளைவு இன்று எல்லோரும் கண்கூடாகக் காணு ம் திருமண உறவில் விரிசல் – விவாகரத்து போன்றவையாகும்.
எனவே திருமணம் செய்து கொண்டவர்களும் சரி, திருமண வாழ்வில் இணையப்போகும் இளம் வயதினரும் செக்ஸ் பற்றியும், மனித உணர்வுகள், உறவுகள் பற்றியும் அறிந்து வைத்திருப் பது இன்றிய மையாதது ஆகும்.
சமீப காலம்வரை பெண்களு டைய செக்ஸ் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதது மட்டுமல்ல, அவர்கள் ஆணுடைய கட்டளைக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும், அதைத்தவிர அவர்கள்விரும்புவது எதுவும் குற்றம் என்ற உணர்வே சமுதாயத்தில் மேலோ ங்கி இருந்தது. இன்று நிலை மிக வும் வேகமாக மாறி வருகி றது.
பெண்களும் முழுமையான இன் பம் அனுபவிக்க வேண்டும். அவ் வுரிமை அவர்களுக்கு உண்டு என்று ஏற்றுக் கொள்ளப்படுகிற து. இயற்கையில் பார்த்தால் ஆண் களைவிட பெண்களே அதிகமான செக்ஸ் இன்பம் அனுபவிப் பதற்கான உடலமைப்புடன் காணப்படுகின்றனர்.

இதற்கான சான்றுகளாக:
1. பெண்ணின் மார்பு
2. கிளிட்டோரிஸ்
3. பெண் உறுப்பு

ஆகிய மூன்று உறுப்புக்களின் மூலமு ம் தனித்தனியே பெண் உச்சகட்ட இன்பத்தை அடைய முடியும்.
ஆனால் ஆண்-ஆண்குறி மூலமாக மட்டுமே இவ்வின்பத்தை அடை ய முடியும். இரண்டாவதாக, ஒரு முறை உச்சக் கட்டத்தை அடைந்த பெண் இடை வெளியி ல்லாமல் பல முறை உச்ச கட்டத்தை அடைய முடியும். ஆனா ல் ஆண்கள் ஒரு முறை உச்சகட்டம் அடைந்தவுடன் 30 நிமிடங்களாவது மற் றொரு எழுச்சிக்காக காத்திருக்க வேண்டும்.
உண்மை இவ்வாறு இருந்தாலும் நடைமுறையில் பெண்கள் முழு இன்பத்தை பெரும்பாலும் அனுபவிப்பதே இல்லை இவற்றை போக்குவது எவ்வாறு?

1) பெண்ணினுடைய உணர்ச்சிக ளை தூண்டும் உறுப்புக்களையும், அதன் முறைகளைப் பற்றியும் முழு மையாக அறிந்திருத்தல்.

2)பெண்ணிடம்உள்ள செக்ஸ் குறை பாடுகளை செக்ஸ் மருத்துவர் மூல ம் சரிசெய்யமுடியும் என்பதை அறி தல்.

பெண்ணுடைய செக்ஸ் உறுப்புக்க ளும் அதனைத் தூண்டும் முறைகளும்:

1) பெண்ணுடைய மார்புகள் சிறியதாக இருந்தாலும் பெரியதாகஇருந்தாலும் அதை ஆண் தூண்டுவதன் மூல ம் பெண்கள் இன்ப மும், கிளர்ச்சியும் அடை கிறார்கள்.
உடலுறவில் ஈடுபட ஆரம்பிக்கும் போதே மார்புகளும் பெரிதாகிறது. மார்பகக் காம்பு கள் விரைத்து எழுகின்றன. சில பெண்கள் மார்பு காம்புகளை ஆண் தொடும் தூண்ட லாலேயே முழுமையான உச்சகட்டத்தை அடை கின்றனர். ஆனால் மற்றவர்கள் அந்த அளவு உணர்வுகளைப் பெறுவதில்லை.
கணவன்-மனைவியின் மார்பு காம்புகளை நாக்கினால் வருடுவதா லும், சுவைப் பதினாலும் பெ ண்ணுடைய உணர்வு களை மிகவும் தூண்டலாம். பெண் களில் 50 சதவிகிதம் பேர் ஆண்களுடைய தூண்டுதலி னால் எரிச்சடைகிறார்கள். ஏனெனில் ஆண்கள் தங்களு டைய இன்பத்திற் கேற்றவா றுதான் மனைவியின் மார்பகங்களை கையாளுகிறார்கள். பெண் கள் இந்நிலையில் மார்பகங்களை எவ்வாறு தூண்ட வேண்டும்? என தங்கள் துணைவருக்கு இனிமையாக, இணக்கமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.
கிளிட்டோரிஸ் தூண்டுதல்:
பெண்கள் மற்ற தூண்டுதல்களைவிட அதிக உணர்ச்சிக்கு ஆளாவது கிளிட்டோரிஸ் தூ ண்டுதல் மூலம்தான். சாதாரணமாகவே சை க்கிள் ஓட்டுதல், தையல் மிஷன் தைப்பது போன்றவற்றின் மூலம் கூட கிளிட்டோரிஸ் தூண்டப்படுவதால் பெண்களில் சிலர் ஓர ளவு கிளர்ச்சி அடைகின்றனர்.
செக்ஸ் ஆரம்பித்தவுடன் கணவரை கிளிட்டோரிஸை தூண்டுமாறு மனைவி கூறலாம். இதை விரல்களின் மூலமும், நாக்கின் மூலமும் தூண்ட முடியும். தொடர்ந்து பல நிமிடங்கள் தூண்டுவதன் மூலம் பெண்களை உச்சக் கட்டத்தை அடைய வைக்கலா ம்.
பெண் உறுப்பு:
இதன் வழியாக இன்பம் அடைவது அனைவரும் அறிந்த ஒன்று. ஆ னால் பல்வேறு நிலைகள், மாற்றங்களை இதில் ஏற்படுத்தி இன்பத்தை அதிகரிக்க முடியும். பெண் உறுப்பில் உடலுறவின் போது வலி ஏற்படுவது ஒரு முக்கிய பிரச்சி னை. பெண்ணுறுப்பின் நுழைவாயி ல் சிலசமயம் இறுகமூடிக்கொள்ளு ம். ஆணுறுப்பை மட்டுமின்றி கை விரலைக்கூட அனுமதிக்காத அள வு இறுக்கமாக இருக்கும். 5 சதவிகி தம் வரை பெண்களுக்கு இந்நோய் இருக்கலாம். இப்பெண்களுக்கு உடலுறவு என்றாலே பயமாக இரு க்கும்.
இவர்களுடன் ஆண் உறவு கொள்ள இயலாது. தொடர்ந்து இந்த நிலை நீடித்தால் ஆணுக்கு விரைப்பு த்தன்மைகூட ஏற்படாமல் போகக் கூடும். இது முழுமையாக குணப்படு த்தக்கூடிய பிரச்சினை என்பதை பெண்கள் தெரிந்து குணப் படுத்திக் கொள்ள முன் வரவேண்டும். இதன் மூலம் தம்பதியினர் ஆரோக்கியமா ன குடும்ப வாழ்க்கை- குழந்தைப் பேறு அடைய முடியும்.
பொதுவாக உடலுறவில் ஏற்படும் கிளர்ச்சி மட்டும் பெண்கள் உச்ச கட்டம் அடையப் போதுமானதாக இல்லை. அதற்கு மேலும் அவர்களு க்கு தூண்டுதல் தேவை. உச்சகட்டம் அடையாமல் ஒரு பெண் இருப்பதற் கு பல காரணங்கள் இருக்கலாம்.

1) தனிமை இல்லாமல் குழந்தைக ளுடன் தூங்குவது 2) நேரம், இடம் வசதி 3) கணவருடைய ஒத்துழைப்பு இல்லாமை
உச்சக்கட்டத்திற்குப் பின்பு:
உச்ச கட்டத்திற்கு பின்பும் பெண்க ள் தங்கள் உடலை ஆண்கள் வருட வேண்டும். தங்களை கட்டி அணை த்துக் கொண்டபடி தங்கள் கணவர் இருக்க வேண்டுமென நினைக்கி ன்றனர். ஏனெனில் உச்ச கட்டத்திற் கு பின்பு பெண்களின் கிளர்ச்சி உட னடியாக கீழிறங்குவதில்லை. மா றாக ஆண்கள் விந்து வெளியான வுடன் ஆழ்ந்து தூங்கத் தொடங்கி விடுகின்றனர். ஏனெனில் ஆண்களிடம் உச்ச கட்டத்திற்கு பின்பு உணர்ச்சிகள் முழுமையாக கீழே இறங்கி விடுகின்றது.
பெண்மைக் குறைவு:
ஆண்களுக்கு ஆண்மைக்குறை வு ஏற்படுவதுபோல பெண்களு க்கு பெண்மைக்குறைவு அல்ல து உடலுறவில் விருப்பமின்மை – ஏற்படலாம். இப்பெண்கள் உட லுறவில் ஈடுபட்டு கருத்தரித்து க் குழந்தைப் பேறு பெற்றாலும் இவர்கள்-உடலுறவில் இன்பத் தை முழுமையாக அனுபவிப்பதில்லை. தாம்பத்திய வாழ்க்கை யை ஒரு கடமையாகவே செய்கிறார்கள்.

இதற்கான காரணம்.
1. சிறு வயதில் ஏற்பட்ட செக்ஸ் வக்கிரங்கள்
2. வளர்ப்பு முறை
3. கற்பழி க்கப்படுதல் போன்றவை யாகும்.
பெண்களுக்கான இப்பிரச்சினைக் கு எவ்வாறு தீர்வு காண்பது?
ஆண்களுக்கான ஆண்மைக் குறைவு- விந்து முந்துதல் போன்ற பிரச்சினைகளை விஞ்ஞான முறையில் நு}று சதவிகிதம் குணப் படுத்த முடியும். அது போலவே விஞ்ஞான அடிப்படையில் பெண் களுடைய பிரச்சினைகளையும் முழுமையாக குணப்படுத்த இய லும். பிரச்சினைக்கான காரணங் களை அறிந்து அதனை முற்றிலு மாக களைந்து குணப்படுத்தலாம்.
நோயும், செக்ஸும்:
சில வகை பொதுவான நோய்களான காசநோய், புற்று நோய், இரு தய நோய், சிறுநீரக பாதிப்பு போன்ற பெரிய நோய்களின்போது அந் த நோயாளிகளுக்கு எல்லா விச யங்களிலும் கவனமும் ஆர்வமு ம் குறைந்து வருவதால் இயல் பாக செக்ஸ் விசயத்திலும் அவர் களுக்கு விருப்பமும், ஈடுபாடும் குறைந்துவிடும்.

பெண் உறுப்பு நோய்கள்:
1) செக்ஸினால் உண்டாகும் நோய்கள்
2) பெண் உறுப்பில் ஏற்படும் சிலகாளான் நோய்கள் உடல் உறவின்போது எரிச்சலை ஏற்ப டுத்தும்.
3) ஹெர்பிஸ் – இதுவும் பெண் குறியில் ஏற்படும் நோய்தான். இ தனாலும் உடல் உறவின்போது வலி ஏற்படலாம்.
4) வெஜினியஸ்மெஸ் – இது பெண் உறுப்பில் ஏற்படும் இறுக்கமாகும். இதனாலும் உடல் உறவின் போ து வலி ஏற்படும்.
இத்தகைய நோய்களை எல்லாம் சில சமயம் பெண்களின் பாலியல் உணர்ச்சி களை பாதிக்கலாம். இதனை இன் றைய நாளில் எளிதாக குணப்படுத்தி விடலாம்.

‘மார்னிங் ஷோ’ மனதிற்கும், உடலுக்கும் நல்லது – ஆய்வில் தகவல்

அதிகாலை நேரத்தில் தாம்பத்ய உறவு கொள்வது மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படுவதை தடுக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காலை நேரத்திய உறவு உணர்வு ரீதியாக மட்டுமல்ல உடல்ரீதியாகவும் நல்லது என்றும் மருத்துவர்கள் சான்றிதழ் அளித்துள்ளனர்.
அதிகாலை நேரம் ஜன்னல் வழியே ஊடுருவும் தென்றல், அருகில் கண்மூடி படுத்திருக்கும் துணையின் நிலை இதனை கண்டால் காலைநேரத்தில் காதல் உணர்வுகள் கிளர்ந்தெழும். காலையில வேற வேலையில்லையா என்று செல்லமாய் உங்கள் துணை கோபித்துக் கொண்டாலும் அதையே சம்மதமாக எடுத்து சந்தோசமாக காரியத்தை முடித்துவிடுவார்கள்.
ஆண்களில் பெரும்பாலானோருக்கும் காலை நேர உணர்வு எழுவது சகஜம். ஆனால், பெரும்பாலான பெண்களுக்கு காலை உறவில் நாட்டம் ஏற்படுவதில்லை. ஆனால் காலை நேர உறவு என்பது அன்றைய பொழுதின் மகிழ்ச்சியான தொடக்கம் மட்டுமல்ல ஆரோக்கியமானதும் கூட என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி காலை நேரத்தில் உறவில் ஈடுபடும் போது ஆக்ஸிடோசின் எனப்படும் நல்ல ரசாயனம் வெளிப்படுகிறதாம். இது நாள் முழுவதும் தம்பதியரை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கிறதாம்.

தொடர்ந்து காலை நேர உறவில் ஈடுபடுவது மனதிற்கு அமைதியை ஏற்படுத்துவதோடு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறதாம்.
நம்பினால் நம்புங்கள் காலை நேரத்தில் உறவு கொள்வதன் மூலம் சளி, காய்ச்சல் போன்ற நோய்கள் இருந்தாலும் உடனே குணமாகிறதாம். அதுபோன்ற நோய்கள் வரவே வராதாம். மேலும் கூந்தல், சருமம், நகம் போன்றவை ஆரோக்கிய வளர்ச்சி அடைகிறதாம்.

வாரத்திற்கு மூன்று முறை காலை நேரத்தில் உறவில் ஈடுபடும் தம்பதியருக்கு மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்பே இல்லை அடித்து சொல்கின்றனர் மருத்துவர்கள்.
வற்புறுத்துவது கூடாது காலை நேர உறவு என்பது நல்ல ஐடியாதான் என்கிறார்கள் மன நல மருத்துவர்கள். நல்லதொரு இரவுத் தூக்கத்தை மேற் கொள்பவர்களுக்கு காலையில் உடலும், மனமும் புத்துணர்ச்சியோடு இருக்கும். உடலில் வளர்ச்சி ஹார்மோன்கள் தூண்டப்படும். உடலும் நல்ல வலுவுடன் இருக்கும். இதனால் காலை நேரத்தில் உறவில் ஈடுபடும்போது அது நிச்சயம் சிறப்பாகவே இருக்கும். அதேசமயம், பெண்களும் நல்ல மூடில் இருக்கும்போது மட்டுமே ஆண்கள் காலை நேர உறவுக்கு முயற்சிக்கலாம். மாறாக வற்புறுத்துவது தவிர்க்கப் பட வேண்டும் என்கிறார்கள் அவர்கள்.
மென்மையை கையாளுங்கள்

எந்த நேரமாக இருந்தால் என்ன, உறவுக்கு மிக முக்கியம் மென்மையான அணுகுமுறைதான். காலையாக இருந்தாலும் சரி, இரவாக இருந்தாலும் சரி அந்த உறவை, அன்புப் பரிமாற்றமாக, அணுசரணையான நிகழ்வாக, காதலுடன் கூடியதாக மாற்றிக் கொள்வதே சிறந்தது என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். காலையில் எழுந்ததும் கண்களில் ஒரு முத்தம், காது மடல்களில் உதடுகளால் ஒரு வருடல், உதடுகளில் தென்றல் பூவைத் தீண்டுவது போல வலிக்காமல் ஒரு முத்தமிட்டு, குட்மார்னிங் சொல்லி உங்களது மனைவியை எழுப்பிப் பாருங்கள், உறவைவிட அது ஆழமாக அவரது மனதைத் தொடும் என்கின்றனர் மனநல நிபுணர்கள்.

சுய இன்பம் காண்பதன் மூலம் மட்டுமே உச்சக் கட்டம் காணும் பெண்கள் !!

திருமணமான பெண்களிடம் அவர்களது செக்ஸ் வாழ்க்கைப் பிரச்சினைகள் குறித்து சமீபத்தில் ரகசிய ஆய்வு நடத்தப்பட்டிருக் கிறது. அதன்படி நூற்றுக்கு தொண்ணுறு
பெண்களுக்கு செக்ஸ் உறவு தொடர்பான ஏதோ ஒரு பிரச்சினை இருப்பது கண்டறியப் பட்டுள்ளது.

திருமணமான பெண்களை அதிகம் பாதிக்கும் சில செக்ஸ் பிரச்சினைகளும், அவற்றுக்கான காரணங்களும், தீர்வு முறைகளும் அலசப்பட்டன. அதன்படி…. மிகக் குறைவான செக்ஸ் ஆர்வம்„

குழந்தைப் பருவத்தில் பெரும்பாலான பெண்களுக்கு ஏதோ ஒரு வகையில் மோசமான செக்ஸ் அனுபவம் கிடைக்கிறது.

செக்ஸ் என்றால் என்னவென்றே தெரியாத வயதில் அவர்கள் சந்திக்கும் இந்த அனுபவம், அவர்கள் வளர்ந்து பெரியவர்களானதும் செக்ஸ் குறித்த தவறான எண்ணத்தை உருவாக்கி விடுகிறது.

இதனால் பல பெண்களுக்குத் திருமணத்திற்குப் பிறகும் செக்ஸ் அத்தனை ரசிப்பிற்குதியதாக இல்லை.

சாப்பிடுவது, தூங்குவது என்பது மாதிரி செக்ஸ் உறவும் ஏதோ மாமூலான ஒன்று என்கிற ரிதியில் செல்லும் போதும் பெண்களுக்கு அதன் மீதான ஆர்வம் குறைகிறது.

திருமணமான புதிதில் தம்பதியர் இருவரும் சேர்ந்திருந்த சந்தோஷ தருணங்கள், இருவரையும் கிளர்ச் சியூட்டிய விஷயங்கள் ஆகியவற்றை நினைவு கூர்வது இப்பிரச் சினைக்குத் தீர்வாக அமையலாம்.

தம்பதியர் இருவரும் சேர்ந்து குளிப்பது, புதிய இடத்தில், சூழ்நிலையில் உறவு வைத்துக் கொள்வதும் இதற்குத் தீர்வாகும்.

இன்னும் சில பெண்களுக்கு பிரசவம், களைப்பு, கோபம், மாத விலக்கு சுழற்சியில் ஏற்படும் கோளாறுகள், டென்ஷன் ஆகிய வற்றின் காரணமாகக் கூட செக்ஸில் ஆர்வம் குறைகிறதாம்.

மனரிதியான பாதிப்புகளாக இருந்தால் செக்ஸ் தெரபி மற்றும் கவுன்சலிங் மூலமும், உடல் ரிதியான பாதிப்புகளுக்கு ஹhர்மோன் ரிப்ளேஸ்மென்ட் தெரபி மூலமும் சிகிச்சை அளித்து இதைக் குணப்படுத்தலாம்.
பிறப்புறுப்பு வறட்சி:

இதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு. ஈஸ்ட்ரோஜன் ஹர் மோன் அளவு குறையும் போது வறட்சி ஏற்படலாம். தாய்ப் பாலூட்டும் பெண்களுக்கும், மெனோபாஸ் காலக் கட்டத்தில் இருக்கும் பெண்களுக்கும் இது சகஜம். இதற்கும் ஹhர்மோன் ரிப்ளேஸ்மென்ட் தெரபி பலனளிக்கும்.

குடிப் பழக்கம் இருக்கும் பெண்களுக்கும் பிறப்புறுப்பு வறட்சி ஏற்படுகிறது. ஆல்கஹலே அந்த வறட்சிக்குக் காரணம். குடியை நிறுத்தவதன் மூலமும், வழுவழுப்புத் திரவங்களை உபயோகிப்ப தன் மூலமும் இதைக் குணப்படுத்தலாம்.

உறவின் போது :

உறவின் போது சில பெண்களுக்குத் தாங்கவே முடியாத அளவுக்கு வலி ஏற்படலாம். பிறப்புறுப்புப் பாதையில் இரு புறங்களிலும் பட்டாணி அளவுக்குப் பெண்களுக்கு பார்த்தோலின் சுரப்பிகள் என்று உண்டு.

இவற்றின் வேலையே உறவின்போது வழுவழுப்புத் திரவத்தைக் கசியச் செய்வதுதான். இவை பாதிக்கப் படும் போது பிறப்புறுப்பில் வீக்கம், எரிச்சல் ஏற்படுவதோடு சில சமயங்களில் நடக்கவே முடியாத அளவுக்குக் கூட வலி தீவிரமாகலாம்.

மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இதை ஆன்டிபயாடிக் மருந்துகளின் மூலமோ, தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை மூலமோ சரி செய்து விட முடியும்.

வலி ஏற்படுகிற சரியான இடத்தையும், சரியான நேரத்தையும் (உறவு தொடங்கிய உடனேயா, உறவின் இடையிலா, உச்சக் கட்டம் அடைகிற போதா) சொன்னால் மருத்துவர்களுக்கு சிகிச்சை அளிக்க உதவியாக இருக்கும்.

உறவே கொள்ள முடியாத நிலை:

ஆர்வமும், ஆரோக்கியமும் இருந்தும் கூட சில பெண்களால் உறவில் ஈடுபட முடியாத நிலை ஒன்று உண்டு. அதற்கு வாஜனிஸ்மஸ் என்று பெயர். செக்ஸைப் பற்றிய பயம், கடந்த காலக் கசப்பான செக்ஸ் அனுபவங்கள், பிரசவம் போன்றவை இதற்குக் காரணமாக இருக்கலாம்.

மெனோபாஸை அடைந்து விட்ட பெண்களுக்கு பிறப்புறுப்புத் திசுக்கள் சுருங்கியதன் விளைவாக கசிவு குறைவாக இருக்கும். இவர்களுக்கும் இந்தப் பிரச்சினை ஏற்படலாம்.

செக்ஸ் தெரபியின் மூலம் இந்தப் பெண்களுக்கு இடுப்புச் சுவர் தசைகளை எப்படி hpலாக்ஸ் செய்வது என்று கற்றுக் கொடுக்கப்படும். மேலும் பெண் மேலிருந்த நிலையில் உறவு கொள்வதும் இதற்குத் தீர்வாக அமையும்.

உச்சக் கட்டத்தை அடைய முடியாமை:

சில பெண்களுக்கு உறவின் ஏதேனும் ஒரு கட்டத்தில் உச்சக் கட்டம் சாத்தியமாகிறது. இன்னும் சிலருக்கு செக்ஸின் போது குறிப்பிட்ட சில நிலைகளைக் கையாளும் போது உச்சக் கட்டம் கிடைக்கிறது.

இன்னும் சிலர் சுய இன்பம் காண்பதன் மூலம் மட்டுமே உச்சக் கட்டம் அடைகிறார்கள். குறிப்பிட்ட சிலருக்கு உச்சக் கட்டம் என்பது எப்போதுமே சாத்தியமாவதில்லை.

உச்சக் கட்டம் அடைய முடியாத பெண்கள் செக்ஸை அனுபவிக்கத் தகுதியற்றவர்கள் என்றோ, அவர்கள் உடலளவிலோ, மனத்தளவிலோ பாதிக்கப்பட்டவர்கள் என்றோ அர்த்தமில்லை.

உறவின் போது பெரும்பாலான பெண்களது கவனம் தன் கணவன் மீதே இருக்கிறது. கணவன் தேவைகளை முழுமையாக நிறை வேற்றுகிறோமா என்பதிலேயே அவர்கள் கவனம் போய் விடுவதால் தன்னை எது உச்சக் கட்டம் அடையச் செய்யும் என்பதைப் பற்றி நினைக்கத் தவறி விடுகிறார்கள்.

இந்த மாதிரிப் பெண்கள் உறவு இல்லாத நேரங்களில் தன் உடலைத் தொட்டுப் பார்த்து அதில் எந்த இடம் அல்லது எந்த மாதிhpயான ஸ்பரிசம் தனக்குக் கிளர்ச்சியைத் தருகிறது என்று கண்டறிய வேண்டும்.

அதைத் தன் கணவனிடம் சொல்லத் தயங்கக் கூடாது. எல்லாவற்றுக்கும் மேலாக உறவின் போது அவசரம் இருக்கக் கூடாது. உச்சக் கட்டம் அடையவும் பெண்கள் மேல் நிலையில் இருந்து உறவு கொள்வது பலனளிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

தாம்பத்திய உறவில் சிறிதும் நாட்டமில்லாத பெண்களின் அதீத கவனத்திற்கு . . .

தாம்பத்திய உறவில் ஆர்வமில்லை யா?
பெண்களில் இருபத்தைந்து சதவிகி தத்தினருக்கும் மேல் தாம்பத்திய உறவில் சிறிதும் நாட்டமில்லாதவ ர்களாக இருப்பதாக ஒரு மருத்துவ ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது. நீங்களும் அந்த
ரகத்தில் ஒருவரா? உங்களுக்காக இதோ சில தகவல்கள்…
இப்பிரச்சினைக்கான காரணங்கள்….
# இயல்பாகவே சில பெண்களுக்கு செக்ஸி ல் அவ்வளவாக நாட்ட மிருக்காது. உடலுற வு என்பது அவர் களைப் பொறுத்தவரையி ல் கணவன் மட்டுமே சம்பந்தப்பட்ட விஷய ம் என்று நினைப்பார்கள். இந்நிலையில் அ ந்தப் பெண்உறவை வெறுக்கவும் மாட்டாள். அதே சமயம் அவளால் அதை முழு இன்பத்துடன் அனுபவிக்கவும் முடியா து.

# செக்ஸில் நாட்ட மில்லாப் பிரச் சினையால் பாதிக்கப்பட்ட பெண் களில் சிலருக்கு உச்சக்கட்டம் என்பதே சாத்தியமாகாது.

# விருப்பமிருந்தாலும்கூட இப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பெ ண்கள் சிலருக்கு உறவுக்கு உடல் இடம் கொடுக்காது. இணங்காது. அதனாலேயே உறவின் மீது அனா வசிய வெறுப்பு ஏற்படும்.

# உறவைப் பற்றிய தவறான மன ப்பான்மை, தேவையற்றபயங்கள் , மூட நம்பிக்கைகள் போன்றவை யும் பெண்களது இப்பிரச்சினைக் கு க் காரணங்கள்.

# முதல் உறவின் போது இரத்தம் வெளிப்படும் என்பதில், குழந்தைபிறப்பதில், பிரசவ வலியில் உள்ள தேவையற்ற பயங்களும் இதற்குக் கார ணங்களாக அமையலாம்.

# உறவின்போது கணவன் ஒரேமாதிரி யான நிலைகளைக்கையாள்வது, வெறி த்தனமான நடவடிக்கைகளைக் கையா ள்வது என்றெல்லாம் நடந்துகொ ள்கிற போதும் மனைவிக்கு செக்ஸின்மீது வெ றுப்பு ஏற்படலாம்.

கூட்டுக்குடும்பங்களில் இருக் கிறபெண்கள் பலர் இப்பிரச்சி னையால் பாதிக்கப்பட வாய்ப்பு கள் உண்டு. நிறைய பேர் சூழ இ ருப்பதால் யாராவது தம்மைக் கவனித்து விடுவார்களோ என்ற பயத்தில் அந்தரங்க உறவைத் தவிர்க்கவும், வெறுக்கவும் செய் வார்கள்.

குழந்தை பெற்றுக்கொண்டால் இளமையும், அழகும் போய் விடும் என்று பயப்படும் பெண்கள், அதன் விளைவாக உறவுகொள்வதையே தவிர்ப்பார்கள். தனக்கு அதில் ஆர்வ மே இல்லாதது போல நடி ப்பார்கள்.

# தலைவலி, மார்பகங்களில் வலி, மார்பகங்களின் அளவுகளைப் பற்றி ய கவலை, உடல்வலி, மயக்கம், உறவின் போது ஏற்படும் ஒரு விதப் படபடப்பு, அளவுக்கதிக வியர்வை போன்ற வற்றால் பாதிக்கப் படும் பெண்களுக்கு செக்ஸில் வெறுப்பு வருவது சகஜமான ஒரு விஷயம்.
சில குடும்பங்களில் ஆண் குழந்தை பெறு ம் பெண்களுக்குத் தான் மதிப்பு. ஒருவே ளை தனக்கு ஆண் குழந்தை பிறக்காமல் போய் விடுமோ என்ற பயத்தில் உறவிலி ருந்து தப்பிக்க ஏதேதோ காரணங்க ளைச் சொல்லித் தப்பிக்கும் பெண்களும் உண்டு. நாளடைவில் அதுவே நிரந்தரமாகிவிடும்.

# கணவனது தோற்றத்தில் திருப்தியில் லாத பெண்களும், தன் கணவனுக்கு தன் னையல்லாத வேறொரு பெண்ணுடன் உற வு உள்ளது என்று தெரிய வரும் பெண் களும்கூட தாம்பத்திய உற வைத் தவிர்ப்பார்கள். கணவனி ன் மீதான வெறுப்பைக் காட்ட அவர்கள் நாடும் ஒரே வழி அது வாகத்தான் இருக்கும்.

# தாம்பத்திய உறவில் நாட்டமி ன்மை என்பது எல்லாப் பெண் களுக்கும் ஒரே மாதிரி இருப்பதி ல்லை. சிலருக்கு குறிப்பிட்ட நபர்களுடன் உறவு கொள்ள வேண்டி வரும் போது நாட்டமின்றிப் போவதும், தன க்கு விருப்பமுள்ளவர்களுடன் உறவு கொ ள்ளும் போது பிடித்துப் போய் இணங்குவ தும் உண்டு.

தாம்பத்திய உறவில் நாட்டமின்மை என்ப து தீர்க்க முடியாத குறை யில்லை என்கிற து மருத்துவம். கணவனது பக்குவமான அணுகு முறை, மனைவியி டமான அவனது நடத்தை, உடல் மற்றும் மன சுகாதாரம் போன்றவையும் இப் பிரச்சினையைக் குணமாக்கும் சிகிச்சைகளில் முக் கியமாம். மருத்துவரிடம் கேட்கத் தயங்கிக் கொண்டு இதை அப்படியே விட்டு விடுவது தவறு.

ஒவ்வொரு வயதினருக்கும் ஒவ்வொரு வகையான செக்ஸ் ஃபீலிங்ஸ்

வயதுக்கேற்றார் போல சாப்பிடுகிறோம் அல்லவா. அது போலவே ஒவ்வொரு வயதினருக்கும் ஒரு வகை யான செக்ஸ் உணர்வுகள், வெளிப் பாடுகள் இருக்கும் என்கிறார் செக்ஸ் குரு டிரேஸி காக்ஸ்.
செக்ஸ்டஸி என்ற பெயரில் ஒரு புத் தகத்தை எழுதியுள்ளார் டிரேஸி. அதில் ஒவ்வொரு வயதுக்கேற்ற செக்ஸ் உணர்வுகள், அதற்குரிய வடிகால்கள் உள்ளிட்டவை குறித்து விலாவாரியாக விளக்கியுள்ளார் டிரேஸி.

அதிலிருந்து சில பகுதிகள்..

20 + வயது…
இந்த வயதில் இருக்கும் ஆண்களும் சரி, பெண்களும் சரி செக்ஸ் குறித்த கற்பனைகள், நினைவுகளில் அதிகம் மூழ்கியிருப்பராம். குறிப்பாக ஆண்களை விட பெண்களுக்கே கற்பனை உணர் வுகள் அதிகம் இருக்குமாம். நிறைய கற்பனை செய்து பார்ப்பார்களாம்.
பெண்களில் பலருக்கு செக் ஸை அனுபவித்துப் பார்த்தால் என்ன என்ற யோசனையும் அடி க்கடி வருமாம். 2006ல் எடுக்கப் பட்ட ஒரு ஆய்வின்படி, 20 வயதைக் கடந்த பெண்களுக்கு, சக பெண்களுடன் படுத்திருக் கும் போது ஆர்கசம் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 76 சதவீதம் பெண்களுக்கு இப்படி ஆர்கசம் வருமாம்.
இதுவே இந்த வயதில் ஆண்களுடன் படுக்கும் பெண்களில் 50 சதவீதம் பேருக்குத்தான் ஆர்கசம் வருமாம். அதாவது நிஜத்தை விட நிழலில் தான் இந்த வயதுப்பெண்களுக்கு செக்ஸ் ஆசை அதிகம் இருக்குமாம்.
20 வயதுகளில் உள்ள ஆண்க ளுக்கும், பெண்களுக்கும் உட லுறவுப் பொசிசன்கள் குறித்து நிறைய ஆர்வம் இருக்குமாம். அதைப் பரீட்சித்துப் பார்க்கும் ஆர்வமும் இருக்குமாம். பத்தில் ஒருவர், தங்களது 20 வயதுகளில் மூன்று பேருடனாவது உறவு வைத்திருப்பார்கள் என்கிறார் டிரேஸி.

30 + வயது…
30 வயதில் வித்தியாசமான சோதனைகளை செய்து பார்க் க விரும்புவார்களாம் ஆண் களும், பெண்களும். வீட்டுக் குள் வைத்திருந்த செக்ஸை வெளியிலும் கொண்டு போ கத் துடிப்பார்களாம்.
பூங்காக்கள், கடற்கரைகள், தோட்டம், இருளான பகுதிகள் என பல்வேறு புகலிடங்களைத் தேடி இவர்களின் செக்ஸ் மனது ஓடுமாம்.
இதுபோன்ற இடங்களில் செக்ஸ் வைத்துக் கொள்ளவே அதிகம் விரும்புவார்களாம். அதேபோ ல ஷவரில் செக்ஸ் வைத்துக் கொள்வது, பாத் டப்பில் வை த்துக் கொள்வது என்று வித்தி யாசமாகவும் திங் பண்ணுவா ர்களாம்.

அதேபோல வார இறுதி நாட் களில் ஜோடியாக சுற்றுவது, கையைப் பிடித்தபடி உலா வருவது, நெருக்கமாக இருப்பது போன்றவற்றிலும் இந்த வயதுக் காரர்களுக்கு ஆர்வம் அதிகம் இருக்குமாம்.
இந்த வயதில் பெரும்பாலானோருக்கு குழந்தைகள் வந்து விடும். எனவே அவர்களின் செக்ஸ் ஆசைகள் முன்பு இருந்ததைப் போல இல்லாமல் சற்று சுருங்கிப் போயி ருக்குமாம். ஆனால், கர்ப்ப மாக இருக்கும்போது கணவனும், மனைவியும் மாதத்திற்கு நான்கு முதல் ஐந்து முறை கூட செக்ஸ் வைத்துக் கொள்ளப் பிரியப் படுவார் களாம்.

பல பெண்கள் குழந்தை பெற்ற பின்னர் 7 வாரம் வரை லீவு விட்டு விடுவது வழக்கமாக உள்ளது. அதன் பின்னர் மாதாந்திர செக்ஸ் உறவு எண்ணிக்கை 3 அல்லது 4 முறை என்று குறைந்து விடுமாம்.
அதேசமயம், ஒருவரை ஒருவர் வருடிக் கொடுப்பது, முத்தமிடுவது, உள்ளிட்டவற் றை அதிகம் நாடுவார்களாம். குழந்தைச் செல்வங்கள் நடுவில் வந்து விட்டதால் சிலர் வாய்ப்பு கிடைக்கும்போது, பாஸ்ட் புட் ரேஞ்சுக்கு அவசர கதியில் செயல்படுவதும் உண்டாம்.
30 வயதைத் தாண்டிய பெண்களில் 90 சத வீதம் பேருக்கு ஆர்கசம் அடிக்கடி வருகிறதாம். அதே சமயம், 20 வயதுகளில் உள்ள பெண்களுக்கு இது 23 சதவீதமாகவே உள்ள தாம்.

40 + வயது…
40 வயதைத் தாண்டிய பெரும் பாலான ஆண்களுக்கு எரக்ஷன் பிரச்சினை வந்து விடுகிறதாம். மேலும், இந்த வயதில் நேரடி செக்ஸ் உறவை விட படம் பார்ப்பது, செக்ஸ் சாட்டிங் செய்வது என்று வெளி வேலைகளில் அதிக ஆர்வம் காட்டுவார்க ளாம் ஆண்கள்.
பெண்களுக்கோ இந்த வயதில் செக்ஸ் ஆசை அதிகரிக்குமாம். தங்களது கணவர் அல்லது பார்ட்னரை விட இளம் வயதினரைப் பார்க்கும்போது மோகம் பிறக்கிறதாம்.
மாதாந்திர உறவு எண்ணிக்கை இந்தவயதினர் மத்தியில் குறைவா க இருந்தாலும் மனசுக்குள் செக்ஸ் ஆசை நிறையவே இருக்குமாம். ஒரு தடவையாக இருந்தாலும் அதை நிறைவாக, நிதானமாக செய்ய வேண்டும் என்று நினை ப்பார்களாம்.
டிரேஸி கூறியுள்ளதெல்லாம் அவ ரது மேற்கத்திய கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு தெரிவி த்துள்ள கருத்துக்களாகும். ஆனால் இது நம்மூருக்கு பொருந்தாது என்றே தோன்றுகிறது.

சுய இன்பம்: சரியா? தவறா?

டீன் ஏஜ் தொடங்கும்போதே, எட்டாம் வகுப்பிலேயே பெரும்பாலான சிறுவர்கள் சுய இன்பம் அனுபவிக்கத் தொடங்கி விடுகிறார்கள். உலகத்தின் எல்லா சமூகங்களிலும் ஒரு கால கட்டத்தில், சுய இன்பம் பற்றி அறிவியல் ஆதாரம் இல்லாத கருத்துக்கள் நிலவியிருக்கின்றன. மனித உடற்கூறு பற்றிய அறிவு பெருகப் பெருகத்தான், அவற்றில் பல கருத்துக்கள் தவறானவை என்ற விழிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

தவறான கருத்துக்கள் ஆதிக்கம் செலுத்திய காலங்களில், சுய இன்பம் அனுபவிக்கும் சிறுவர்களையும் சிறுமிகளையும் பெரியவர்கள் மிரட்டவும், தண்டிக்கவும்கூட செய்திருக்கிறார்கள். சுமார் 200 வருடங்களுக்கு முன், சிலர் தங்கள் வீட்டு சிறுமிகள் சுய இன்பம் அனுபவிக்கவிடாமல் தடுப்பதற்காக, இரவு வேளையில் சிறுமியின் கைகளில் இரும்பு இழைகளாலான கையுறைகளை மாட்டிப் பூட்டியிருக்கிறார்கள். அவளுடைய பிறப்புறுப்பின் மீது, தொட்டால் எரிச்சல் ஏற்படுத்தக்கூடிய ரசாயனப் பொடி தூவியிருக்கிறார்கள். சிறுவனுக்கு பிறப்புறுப்பைத் தொட முடியாமலும், அது எழுச்சி அடைய முடியாத விதத்திலும் இறுக்கமான இரும்பு ஜட்டி அணிவித்துப் பூட்டினார்கள்.

நாகரிக வளர்ச்சியின் அடுத்த கட்டத்தில், இத்தகைய உடல் சித்ரவதை முறைகள் கைவிடப்பட்டு, மூளைச் சலவை செய்யும் மனச் சித்ரவதை முறை பின்பற்றப்பட்டது. சுய இன்பம் அனுபவித்தால் முடி கொட்டிவிடும், ஆண்மை அழிந்துவிடும், கண் குருடாகி விடும் போன்ற பிரசாரங்கள் இன்று வரை தொடர்கின்றன.

அமெரிக்க மருத்துவத் துறையின் உச்சபட்ச பதவியான சர்ஜன் ஜெனரலாக 1994ல் இருந்த டாக்டர் ஜோசலின் எல்டர்ஸ், பள்ளிக் கூடங்களில் மாணவர்களுக்கு சுய இன்பம் பற்றிக் கற்றுத் தர வேண்டும் என்று கருத்து தெரிவித்ததற்காகப் பதவியை இழந்தார். உண்மையில் அவர் சொன்னது, சுய இன்பம் பற்றிய தேவையற்ற குற்ற மனப்பான்மையை சிறுவயதிலேயே ஏற்படாமல் தடுக்க, அது குறித்த தவறான கருத்துக்களைக் களைந்து, சரியான தகவல்களை சிறுவர்களுக்குச் சொல்லித் தர வேண்டும் என்பதுதான்.

‘வகுப்பிலேயே ஒவ்வொரு மாணவரும் உடைகளை நீக்கி தன் பிறப்புறுப்பைத் தொட்டுப் பார்த்து சுய இன்ப வழிமுறைகளைக் கற்றுக்கொள்ள வகுப்பு நடத்தப் போகிறாயா’ என்று எதிர்ப்பு தெரிவித்த மத அடிப்படைவாதிகள் போட்ட கூச்சலில் ஜோசலின் சொன்னது திரிக்கப்பட்டு பிரச்னையாக்கப்பட்டது. இப்போதும் பள்ளிக் கூடத்தில் பாலியல் கல்வி என்றதும் இதே போன்ற கூக் குரல்களைத்தான் கேட்கிறோம்.

இன்னொரு பக்கம் இதற்கு எதிர் முனையில் அமெரிக்காவிலேயே, டாக்டர் பெட்டி டாட்சன் என்ற பெண் சுய இன்பம் அனுபவிப்பது எப்படி என்று பெண்களுக்குப் பிரத்யேக வகுப்புகள் எடுத்தார். ஒவ்வொரு பெண்ணும் (ஆணும்) தன் உடலைக் கொண்டாட வேண்டும்; குழந்தைகள் தங்கள் பிறப்பு உறுப்பைத் தொட்டாலே வானம் இடிந்து விழுந்துவிட்டதைப் போல அவர்களைக் கண்டித்து அவமான உணர்வை ஏற்படுத்தி வாழ்நாள் முழுவதும் குற்ற மனப்பான்மையுடன் வாழச் செய்வதை மாற்ற வேண்டும் என்று பெட்டி சொன்னார்.

சுய இன்பம் பற்றி இன்றும் சொல்லப்படும் ஒவ்வொரு கருத்தையும் பரிசீலிப்போம்.

1. ‘அது ஆபத்தானது; தவறானது; சுய இன்பத்தில் ஈடுபட்டால், கண் பார்வை போய்விடும்; சுய இன்பத்தில் ஈடுபடுவோருக்குக் கேன்சர் வரும்; உடல் நலிவு ஏற்படும்.’

எல்லாமே தவறு! உடல் நலிவு, பார்வை இழப்பு போன்றவை எல்லாம் ஆரோக்கியமான உணவுப் பழக்கம் இல்லாததால் ஏற்படுமே தவிர, சுய இன்பத்தால் அல்ல!

கேன்சரைப் பொறுத்தமட்டில், பிராஸ்ட்டேட் சுரப்பியில் கேன்சர் வரும் வாய்ப்பு சுய இன்பத்தில் ஈடுபடாத ஆண்களைவிட, ஈடுபட்ட ஆண்களுக்குக் குறைவு என்று 2004ல் ஆஸ்திரேலியாவில் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

விந்து திரவத்தில் இருக்கும் சில சுரப்புகள், நாளங்களிலேயே தேங்கிக் கிடக்கும்போது, அவை புற்று நோயை உருவாக்கும் வாய்ப்பு இருப்பதாகவும், அவ்வப்போது விந்துவை சுய இன்ப முறையிலோ உடலுறவிலோ வெளியேற்றிவிட்டால், இந்த வாய்ப்பு குறைவதாகவும் டாக்டர் கிரஹாம் கைல்ஸ் தெரிவித்திருக்கிறார். வெளியேற்றப்படாத விந்து உடலிலேயே கரைந்து விடும் என்றபோதும், விந்து திரவத்தில் உள்ள சில பொருட்களுக்கு ‘கார்சினோ ஜினிக்’ எனப்படும் புற்று நோயை உருவாக்கக்கூடிய தன்மை இருப்பதாக அவர் சொல்கிறார்.

2. ‘திருமணத்துக்குப் பின் மகிழ்ச்சியான உடல் உறவில் ஈடுபடும் சக்தி இல்லாமல் போய்விடும்; சுய இன்பத்தில் விந்துவை விரயம் செய்வதால், விந்து உற்பத்தி குறைந்துவிடும்; சுய இன்பம் செய்த ஆண்/பெண்களுக்குக் குழந்தை பிறக்கும் வாய்ப்பு குறைவு!’

இவை உண்மையானால், பூமியில் மக்கள் தொகை இந்த அளவு அதிகரித்திருக்கவே முடியாது. ஏனென்றால் 90 சதவிகிதம் பேர் சுய இன்பம் அனுபவிப்பவர்கள்தான்!

விந்து உற்பத்திக்கும் சுய இன்பத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆண்&பெண் உடல் உறவு மகிழ்ச்சி-யாக இருப்பதற்குத் தேவைப்படுவது இருவரின் ஆரோக்கியமும் உடல் உறவு பற்றிய உடல்கூறு/உளவியல் அறிவும்தான். குழந்தை பெற முடியாத மலட்டுத்தன்மை ஆணிடமோ, பெண்ணிடமோ இருப்பதற்கான மருத்துவக் காரணங்கள் வேறு. அதற்கும் சுய இன்பத்துக்கும் சம்பந்தம் இல்லை.

3. ‘ஆண்/பெண் துணை கிடைக்காதவர்கள், திருமணமாகாதவர்கள்தான் சுய இன்பத்தில் ஈடுபடுவார்கள்!’ தவறு. அவர்களும்கூட சுய இன்பத்-தில் ஈடுபடுகிறார்கள் என்பதுதான் யதார்த்தமான நிலை. உடலுறவின் போது இருவரின் உச்சமான மகிழ்ச்சியும் ஒரே சமயத்தில் நிகழாதபோதும், ஒருவர் நிறைவடைந்து மற்றவர் நிறைவடையாதபோதும், துணையின் உதவியுடனே சுய இன்பத்தில் ஈடுபட்டு நிறைவை அடைய முயற்சிப்பது சகஜமானது. அது, பாலியல் மருத்துவர்கள் பல ஜோடிகளுக்குத் தரும் ஆலோசனையுமாகும்!

4. ‘சிறுமிகள்/பெண்கள் ஈடுபடுவதில்லை.’

இதுவும் தவறான கருத்துதான். சமூகத்தில் ஒரு பெண் தன் பாலியல் பழக்க வழக்கங்கள், கருத்துக்கள் போன்றவற்றை வெளிப்படையாகத் தெரிவிப்பதில் இருக்கும் கலாசார சிக்கல்களால், அசல் எண்ணிக்கை தெரிய வருவதில்லை என்றே ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

அப்படியானால், சுய இன்பம் அனுபவிப்பதால் எந்தத் தீங்குமே இல்லையா?

சிறுவனுக்கும் சிறுமிக்கும் அதிகமாகக் கைகளால் பிறப்புறுப்பைத் தேய்த்ததனால் sஷீக்ஷீமீ sளீவீஸீ எனப்படும் தோல் அழற்சி ஏற்படலாம் என்ற சிறு அவதி தவிர, வேறு எந்த தீங்கும் இல்லை என்பதுதான் உறுதியான முடிவு. தோல் அழற்சிக்கும் தீர்வுகள் உள்ளன. தண்ணீரில் கரையக்கூடிய ஸ்கின்லோஷன்களை லூப்ரிகேஷ னுக்குப் பயன்படுத்தி சுய இன்பம் அனுபவிக்கலாம்.

சொல்லப்போனால், சுய இன்பத்தால் சில லாபங்கள்கூட இருக்கின்றன. சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பாலியல் கவர்ச்சி, ஆசை இயல்பாகவே இருந்தாலும், வடிகால் இல்லாத நிலையில் மன அழுத்தம் கடுமையாக ஏற்படுகிறது. சுய இன்பப் பழக்கத்தால் அந்த மன அழுத்தம் குறைகிறது என்பது மருத்துவர்களின் முடிவு. சுய இன்பத்தில் ஈடுபடும் சிறுமிகளுக்கு/பெண்களுக்கு மாதப்போக்கு நேரத்தில் ஏற்படும் தசைப் பிடிப்பு, விறைப்பு, வலிகள் குறைவதாகவும் கண்டறியப்பட்டு இருக்கிறது.

எந்த விஷயமும் அளவுக்கு மீறினால் பாதிப்புதான் என்ற பொது விதி & அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்ற கருத்து இதற்கும் பொருந்தும். படிப்பு, வேலை, விளையாட்டு, பொழுதுபோக்குகள் என்று வேறு பணிகளில் ஈடுபடாமல், இதிலேயே மூழ்கிக்கிடப்பதுதான் தவறானது. சுய இன்பம் மட்டுமல்ல; வாழ்க்கையில் எந்த ஒரு ஒற்றை விஷயத்தில் மட்டுமாக ஆழ்ந்து போவது என்கிற ஷீதீsமீssவீஷீஸீ உடல்/உள நலத்துக்குக் கேடானதுதான்!

பத்து வயதைத் தாண்டிய பின்னர், டீன் ஏஜை நோக்கிச் செல்லும் தங்கள் குழந்தைகளின் தேவைகள் என்னென்ன என்று பெற்றோர் கவலைப்படுவது இயல்பு. நல்ல உடை, சத்தான உணவு, நல்ல கல்வி, நேர்மை, பொய் சொல்லாமை போன்ற நல்ல பழக்க வழக்கங்கள் எல்லாம் குழந்தைகளுக்குத் தேவையானவை என்பதைப் புரிந்துகொள்வது போல, குழந்தைகளின் பாலியல் சார்ந்த தேவைகளில் சுய இன்பமும் ஒன்று என்பதை பெற்றோர் தங்கள் மனதுக்குள் ஏற்று அங்கீகரித்தாக வேண்டும்.

உடலுறவின்போது வலியும் எரிச்சலும் ஏற்படுவது எதனால்?

முதல் காரணமாக இன்ஃபெக்ஷன் இருக்கலாம். இது கிருமிகளால் ஏற்படக்கூடும். சுகாதாரமற்ற உள்ளாடைகள், மாதவிலக்கு சமயங்களில் ஈரமான நாப்கினை மாற்றாமல் வெகுநேரம் வைத்திருத்தல் போன்றவற்றால் ஏற்படக்கூடும்.

இரண்டாவது காரணம் – எண்டோமெட்ரியோஸஸ். அதாவது, உள்சுவர் வெளி வளர்ச்சி. கர்ப்பப்பையின் வெளியே இருக்கக்கூடிய சுவர் போன்ற பகுதி சிலருக்குக் கர்ப்பப்பையின் வெளியே இருக்கும். மாதவிடாய் சமயங்களில் ஏற்படும் ரத்தப்போக்கு வெளியேற வழி இல்லாமல் அங்கு தேங்கி, வலி ஏற்படுத்தும். எரிச்சல், நமைச்சல் போன்ற தொல்லைகளும் இருக்கும். அது மாதவிடாய் முடிந்த பின்னரும் கூட நீடிக்கும். இது சரிசெய்யக்கூடிய பிரச்சனைதான். நல்ல மருத்துவரை அணுகி ஆலோசிப்பது நல்லது.

ஒரு பெண், முதன்முறையாக‌ உடலுறவில் ஈடுபடும்போது . .

பெரும்பாலான பெண்கள் முதன்முறைஉடலுறவில் ஈடுபடும் போது வலியை உணர்கிறா ர்கள். வலி உண்டாவதற்கு முதன்மை காரணமாக இருப்பது, பெண் உறுப்பை மூடி இருக்கு ம், சருமத்தின் உட்புற அடுக்கான ‘கன்னி சவ்வு’ முதன் முறை உறவு கொள்ளும் போது கிழிய நேரிடுவதே ஆகும். ஆனா ல் இது எல்லா பெண்களு க்கும் ஏற்படுவதில்லை. உங்களுக்கு ‘கன்னி சவ்வு ‘ இருக்கு மானால்,
முதல்உறவின்போது, வலியோ, அல் லது சிறிய அளவிலான இரத்தப்போ க்கோ ஏற்படலாம் அல்லது ஏற்படா மல் இருக்க வும் வாய்ப்பு உள்ளது. சில பெண்கள் வலியை உணர்வதே இல்லை, அது போல் எல்லா பெண்க ளுக்கும் ‘ கன்னி சவ்வு’ கிழியும்போ து இரத்தப்போக் கு நிகழ்வதில்லை . சில பெண்களுக்கு ‘கன்னி சவ்வு’ இல்லாமலே இருக்கும்.

மேலும் சில பெண்களுக்கு, கன்னி சவ்வானது, முதன் உறவுக்கு முன்ன ரே கிழிந்திருக்கவும் வாய்ப்பு உள்ள து. இது கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடுவதாலேயோ, அல்லது விபத்திலோ, சுய இன்பத்தில் ஈடுபடுவதாலோ நிகழலாம். உறவில் ஈடுபட பால்ரீதியாக ஒரு பெண் த யாராகும் போது, அவளுக் கு தானகவே சுரக்கும் திர வமானது , உறவி ன்போது உராய்வை குறைக்கும். ஆனால் இதுஎல்லோர்க்கு ம் நிகழ்வதில்லை, அதே போல் இந்த திரவசுரப்பு ம ட்டுமே, உறவினால் ஏற்ப டும் வலியை குறைக்க போதுமானதல்ல. முதன்முறை உறவுகொள்வோர் தாங்கள் பால்ரீதியா க உடல் உறவுக்கு தயாரானவரா என் பதை உறுதி செய்துக்கொண்டு, பின் பு தயக்கம் ஏதும்இன்றி உறவில் ஈடு படலாம். உறவின்போது உராய்வை குறைக்க, கிளிசரின் அற்ற முறையா ன திரவங்களை மருந்து கடைகளில் வாங்கி பயன்படுத்தலாம்.

உறவுக்கு முன்பான, உங்கள் பொழு தை மகிழ்ச்சி தரும் சிற்றின்ப விளை யாட்டுகளில் கழிப்பது, உங்கள் உறுப் பை உடலுறவின்போது ஊடுருவலுக் கு தயாரானதாய் மாற்றும். உறவின் போது வலியானது , உறுப்பின் ஆழத்திலும், அதிகமாகவும்இருக்குமானால், அது மேற்குறிப் பிட்டதுபோல் சாதாரணமாக எல் லோர்க்கும் நிகழ்பவை அல்ல. உறவினாலான வலி கிருமிகளின் தொற்றுதலுக்கோ அல்லது வேறு ஏதாவது மருத்துவநிகழ்வின் அறி குறியாகவோ இருக்கவும் வாய்ப் பு உண்டு. பெரும்பாலும் இது, உ ங்கள் உறுப்பு, பால்ரீதியாக உறவுக்கு இன்னும் தயாராகவில்லை என்பதன் அடையாள மாக கூட இருக்கலாம். எப் போதுமே நீங்கள் உறவுகொ ள்ளும்போது வலி இருந்தா ல், உடனடியாக நீங்கள் மரு த்துவரை சந்திப்பதே நல்ல து.

உடலுறவில் ஒரு ஆணும் பெண்ணும் கடக்கும் ‘நான்கு முக்கிய நிலைகள்

உடலுறவு ஆங்கிலத்திலே COITUS அல்லது INTER COURSE எனப் படும். ஒரு ஆணு ம் பெண்ணும் உடலுறவு கொள் ளும் பொது அவ ர்கள் நான்கு நிலைகளினூடாக

பயணித்து உச்ச நிலையை (climax) அடைகிறார்கள.

அவையாவன,

EXCITEMENT PHASE- (எக்ஸைட்மெண்ட் ஃபேஸ்)

இந்த நிலையில்தான் ஒருவரு க்கு உடலுறவு மீதான எண்ணம் அல்லது ஆசை தொடங்கி அதற் கேற்றவாறு அவரின் உடல் தயா ராகிறது. ஆண்களில் ஆணுறுப் பு விறைப்படையத் தொடங்கு ம். பெண்களில் பெண் குறி விறைப்படையும், பெண் உறுப் பிலே திர வத் தன்மையான பதா ர்த்தம் சுரந்து ஈர நிலையை உரு வாக்கும். மேலும் பெண் மார் பகத்திலும் சற்று விறைப்புத்தன்மை ஏற்படும்.

PLETEAU PHASE (பிளேட்டோ ஃபேஸ்)

இந்த நிலையில் மேலே சொன்ன எல்லாமே மே லும் தீவிரம் அடையும். ஆண்களில் ஆணுறுப்பு முழுமையான விறைப்பு த் தன்மையை அடையும். பெண்களில் அதிகரித்த திரவத்தன்மை வழுக்கு ம் நிலையை உருவாக்கு ம் .

ORGASM (ஆர்கஸம்)

இந்த நிலைதான் உச்ச நிலை எனப்படுகிறது. குறிப்பாக ஆண்கள் பெண்களைவிட சற்று முன்பே உச் சநிலையை அடைந்துவிடுவார்க ள்.

RESOLUTION (ரீசொல்யூஷன்)

இப்போது முந்திய நிலைக்கு திரு ம்புவார்கள். பெண்களைப் பொ றுத்தவரை அவர்கள் மீண்டும் முந் திய நிலைக்கு திரும்பாமலே உச்ச நிலையை(ORGASM) மீண்டும் அனுபவிக்கும் ஆற்றல் இருக்கி றது. ஆனால் ஆண்கள் உச் சம் ஒருதடவை அடைந்தா ல் மீண்டும் அதை அடை வதற்கு சிறு இடைவெளி தே வை.

பொதுவாக உடலுறவின் போது ஆண்கள் முந்தி உச்ச நிலை அடைவதாலு ம் மீண்டும் அவர் அந்த நி லையை அடைவதற்கு சிலஇடைவெளிதேவைப்படுவதாலும் சில வேளைகளில் பெண் கள் உச்ச நிலை அடையாமலேயே உட லுறவு முடிந்து போகிறது.

அதாவது உடலரவின் போது ஆண் சுக்கிலப் பாயம் என ப்படும் விந்துகளைக் கொண் ட திரவம் வெளியேறியவுடன் அவர்கள் விறைப்புத் தன்மை யை இழந்து உடலுறவுக்கு முந்திய நிலையை அடைந்துவிடுவார்கள். அவர்கள் மீண்டும் விறைப்புத் தன்மையை பெற் று உறவிலே ஈடுபட சற்று நேரம் ஆகலாம். இந்த நேர இடைவெளி ஆணுக்கு ஆண் வேறுபாடும்.

ஆனால்பெண்கள் உச்சநி லை அடைந்த பின்பும் அவர் கள் உட லுறவுக்கு முந்திய நிலையை அடைந்துவிடுவ தில்லை , தொடர்ந்து உடலு றவின் படிமுறைகளிலே உணர்ச்சிவசப்பட்ட இரண் டாம் நிலை யிலே இருப்பார்கள்.

எந்த வயதில் ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவில் ஈடுபடத் தொடங்கலாம் ?
எப்போது ஒரு ஆணும் பெண்ணும் பூப்படைகிறா ர்களோ அப்போதே அவர் களது உடல் கொஞ்சம் கொஞ்சமாக உடலுறவுக் கும் குழந்தை பெறுதலுக் கும் தயாராகத் தொடங்கு கிறது. எத்த னை வயதில் ஒருவர் உறவில் ஈடுபட வேண்டும் என்பதில் கலா ச்சார ரீதியாக பல கருத்துகள் இருந்தாலும், மருத்துவ ரீதியாக எப்போது ஒரு

பெண்ணோ அல்லது ஆணோ உடல் ரீதியாகவும் மன ரீதியா கவும் உறவில் ஈடுபடத் தயா ரோ அப்போதே அவர்கள் உறவி ல் ஈடுபட லாம்.
ஆனால் முக்கியமாக கவனிக் கப் படவேண்டியது பெண்கள் இளம் வயதிலே கர்ப்பமடைவது பல பெரிய பிரச்சனைகளை அந் தப் பெண்ணுக்கு ஏற்படுத்தலாம். அதிலும் குறிப்பாக 18 வயதிற்கு உட்பட்ட பெண்கள், உடலுறவில் ஈடுபட்டு கர்ப்பம் அடைவதை முற்றாக தவிர்க்க வேண்டும்.
ஆகவே திருமணம்யாகியிருந்தா லும் கூட .18 வயதிற்கு உட்பட்ட பெண்கள் உறவில் ஈடுபடும் போது உரிய பாதுகாப்பு முறைகளை கையாண்டு கர்ப்பமடை வதைத் தவிர்க்க வேண்டும்.
அதேபோல் எத்தனை வயது வரை உறவில் ஈடுபட வேண்டும் என் பதிலும் கட்டுப்பாடு இல்லை. எத் தனை வயதுவரை அவர்களால் முடியுமோ அத்தனை வயது வ ரை அவர்கள் உடலுறவில் ஈடுபட முடியும்.
ஆனாலும் இளவயதுப்பெண்களைப்போல வயதான பெண்களும் கர்ப்பமடைவதால் பல பிரச்சி னைகள் அவர்களுக்கு உருவா க லாம்.
ஆகவே தங்கள் குடும்பத்திற்கு ரிய குழந்தைகளை பெற்றுக் கொண்ட பெண்கள் உரிய குடு ம்பக் கட்டுப் பாட்டு முறையைக் கடைப்பிடிக்க வேண்டியது அவ சியமாகும்
குறிப்பு
ஆணோ, பெண்ணோ திருமணதிற்கு முன்பு உடலுறவில் ஈடுபடு வதை தவிர்த்து, ஒழுக்க நெறியுடன் வாழ வே ண்டும். உரிய வயதில் திருமணம் செய்து கொ ண்டு இனிதான தாம்பத் தியத்தில் அதா வது உடலுறவில் ஈடுபட்டு குழந்தை பெற்றா ல் வளமான ஆரோக்கியமான வாழ்வு உங்க ளுக்கு கிட்டும்.

தாம்பத்திய உறவில் உச்சக்கட்டம் அடையாமல் போனால் ஏற்படும் எதிர்விளைவுகள்

தாம்பத்திய உறவில் உச்சக்கட்டம் எனும் ஆர்கஸம் எனும் கிளைமேக்ஸ் சரியாக அ மையாவிட்டால் உடல்ரீதி யாகவும், மனரீதியாகவும் பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வுகள் மூலம் கண்டறி யப்பட்டுள்ளது.

தாம்பத்திய உறவில் ஈடுபடு வோரால் தொடர்ந்து ஆர்கஸத் தை அடைய முடியவில்லை யென்றால் அது அனார்கஸ்மியா (anorgasmia) எனும்

செக்ஸ் குறைபாட்டில்தான் முடியும் என பாலியல்துறை ஆய்வாள ர்கள் தெரிவித்துள்ளனர்.

உறவின் போது உச்சக்க ட்டம் என்பது பால் உறுப் புகளின் தூண்டுதலில் தொடங்கி, உடலளவி லான பலவகையான மா ற்றங்களையும், மனதள விலான சில மாற்றங்க ளையும் உள்ளடக்கிய ஒ ரு எழுச்சி நிலை. இந்த எழுச்சி நிலைக்கு உடலின் பல் வேறு பாலுறுப்புகளிலி ருந்து மூளைக்கு செல் லும் ரசாயன சமிக்ஞை களும், அதற்கான மூளையின் எதிர்வினையாய் உடலின் பல்வேறு பகு திகளில் ஏற்படும் உடலியக்க மாற்றங் களுமே காரணம். இதனைத் தான் ஆங்கிலத்தில் ஆர்கஸ ம் என்கிறார்கள்.

அனார்கஸ்மியா குறைபாடு உறவில் ஈடுபடும் அனைவரு க்குமே ஆர்கஸத்தை அடை வதுதான் குறிக்கோள். ஆனா லும், இது பலருக்கும் எட்டா க்கனியாகவே இருக்கிறது என் கின்றன ர் ஆய்வாளர்கள்.

குறிப்பாக பெண்களுக்கு ஆர்கஸம் என்ற நிலை எட்டப்பட வில்லை எனி ல் எரிச்சல், மன அழுத்த ம் போன்றவைகூட ஏற்ப டுகிறதாம். செக்ஸில் ஈடுபடுவோரால் தொடர் ந்து உச்சக்கட்டத்தை அ டைய முடியவில்லை யென்றால் அது அனார்கஸ்மியா (anorgasmia) எனும் செக்ஸ் குறைபாட்டில்தான் முடியும் என்கிறார் கள் பாலியல்துறை ஆய்வாளர்கள்.

வாழ்க்கைத்தரம் பாதிக்கு ம்

அனார்கஸ்மியா குறைபா டு ஒருவரின் வாழ்க்கைத் தரத்தையும், உறவுகளையு ம் பாதிக்கக்கூடியது என்கி றார் அமெரிக்காவின், லா ஸ் ஏஞ்ஜலீஸிலுள்ள செடார்சினாய் மருத்துவ மையத்தின் உளவியல் ஆய்வாளர்வாகி வில்லியம் இஷக்.

கடந்த 2001 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 20 முதல் 40 வயதான பெ ண்களில், சுமார் 24% பெ ண்களுக்கு மாதக்கணக்கி ல் உச்சக்கட்டத்தை எட்ட முடியாமை இருப்பது கண் டறியப்பட்டது என்றும், அ னார்கஸ்மியா குறைபாட்டி னால் அவதிப்படும் இவர்களில் ஒரு சிலரே மருத்துவரை நாடுகிறார்கள் என்றும் கூறுகிறார் விஞ்ஞானி இஷக்.

காரணம், சமுதாயத்தில் செக்ஸ் செயல்பாடில் திற மையின்மை என்பது ஒரு அவமானமாக கருதப்படுகி றது என்பதே.

உளவியல் விஞ்ஞானி இ ஷக் தலைமையில் சமீபத் தில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதில், உச்சக்கட்ட த்தை எட்டமுடியாமை என்பது பெண்களிடையே ஒரு பொது வான பிரச்சினையாக இ ருக்கிறது என்று கண்டறி யப்பட்டது. மேலும் நான் கில் ஒரு பெண்ணுக்கு பகல் கனவாகவே இருக் கும் ஆர்கஸம் குறைபாட் டை தீர்க்க மருத்துவமும், இதுவரையிலான ஆய்வு களும் போதவில்லை என் று தெரியவந்துள்ளது.

101 ஆய்வுகளின் முடிவுகள்

பெண்களின் ஆர்கஸம் குறைபாடு குறித்து இதுவ ரை நடத்தப்பட்ட 101 ஆய் வுகளை அலசிய இந்த ஆய் வில், பெண்களின் செக்ஸ் பிரச்சினைகளிலேயே இ ரண்டாவது தலையாய பிர ச்சினையான உச்சக்கட்ட த்தை எட்டமுடியாமை என்பதற்கான சிகிச்சைகள் மிக மிகக் குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது என்கிறார்கள் இஷக் தலைமையிலான ஆ ய்வுக்குழு வினர்.

உளவியல் சிகிச்சை

ஆர்கஸம் தொடர்பான பிரச் சினை காரணமாக ஒருவர் மருத்துவரை அணுகினாலும் , தீர்வுக்கான சிகிச்சை சிக்க லானது. காரணம், ஆர்கஸத்தைப் பொருத்தவரை இத்தனை நாட்களில், இத்தனை தரம் உச்சக்கட்டத்தை அடைவது தான் இயல்பானது என்று சொ ல்லும் ஒரு திட்டவட்டமான வரையரை கிடையாது.

ஆக, மருத்துவர்கள் நோயாளி களின் வயது, செக்ஸ்அனுபவ ம் மற்றும் திருப்தி ஆகியவற் றைக் கொண்டே ஒரு தீர்வை காண முயலவேண்டும் என்கி றார் இஷக்!.

பெண் – ஆண் விடலைப்பருவம் (13-15 வயது) – 10 குறிப்புகள்

1. இந்த 13 -15 வயது காலகட்டத்தில், பெண் – ஆண் பாலின உறுப்புகள் வேகமாக வளர ஆரம்பிக்கின்றன. சுமார் 13 வயது பிற்பகுதியில் ஆரம்பித்த பருவ வளர்ச்சி, சுமார் 15 வயதில் கிட்டத்தட்ட 75 சதவிதம் முழு வளர்ச்சி அடைகிறது.

2. சுமார் 12-14 வயது காலகட்டத்திலேயே, ஆணும், பெண்ணும் இனவிருத்தி செய்யக்கூடிய அளவில் இருக்கிறார்கள்.

3. சுமார் 13 – 14 வயதில், பெண்ணிற்கு முதல் மாதவிடாய் ஆரம்பமாகிறது. ஆனால், அதற்கு சுமார் 2 வருடங்களுக்கு முன்பே, பாலியல் ஹார்மோன்கள் சுரப்பதால், பருவத்தின் அறிகுறிகள் ஆரம்பமாகி விடுகின்றன. இந்த வளர்ச்சி 17 – 18 வயதில் முடிவடைகிறது,

4. பெண்களுக்கு வெளிப்படையாகத் தோன்றும் மாறுதல்கள்:

அ. முகத்தில் மினுமினுப்பு கூடுதல்.
ஆ. கண்களில் அழகும் கவர்ச்சியும் தோன்றல்.
இ. புன்னைகையில் பல அர்த்தங்கள் காணல்.
ஈ. இடுப்பு எலும்புகள் அகலமாதல்.
உ. புட்டப்பகுதியில் கொழுப்பு சேர்த்து அகலமாதல், மார்புகள் சிமிழ்போல் வளர்ச்சி அடைதல்.
ஊ. பெண்குறியின் உதடுகள் சற்று தடித்தல்.
எ. தலைமுடி அடர்ந்து வளருதல் போன்றவை ஏற்படும்.

5. ஆண்களுக்கு, சுமார் 12 வயதில் ஆரம்பமாகும் பருவ மாறுதல், 13 – 17 வயதில் உச்சத்தை அடைந்து, சுமார் 18 – 19 வயதில் ஒரு நிலைக்கு வந்து விடுகிறது.

6. ஆண்களுக்கு வெளிப்படையாகத் தோன்றும் மாறுதல்கள்.

அ. ஆண்குறியின் அடிப்பாகம் மற்றும் விதைப்பைகளின் மேல் பாகத்தில் மயிர் நன்றாக வளருதல்.
ஆ. விதைகளும், விதைப்பைகளும் பெருத்தல்.
இ. குறி விறைப்பு அடிக்கடி நிகழுதல்.
ஈ. உடல் உயரமும், எடையும் திடீரென்று கூடுதல்.
உ. தோள்கள் விரிவடைதல்.
ஊ. குரல் உடைந்து வெளிப்படுதல்.
எ. மேல் உதடு, மார்பு போன்றவற்றில் மயிர் வளருதல்.
ஏ. விந்து உற்பத்தியாகி, கனவுகள் மூலம் இன்ப அதிர்வுடன் வெளியேறுதல்.

7. அடிக்கடி பாலியல் உணர்வு உந்துதலால், கல்வியைவிட, கலவியில் நாட்டம் அதிகமாக இருக்கும்! மனதை, அதன்போக்கில் சற்றுவிட்டுத் திருப்ப வேண்டும். அடக்குதல் கூடாது. எதையும் விழிப்புணர்வோடு பார்க்கவும். அதே நினைப்பு வேண்டாம்.

8. சுய இண்பம் காண பெரும் விருப்பம் ஏற்படும். இதில் எந்தக்குற்ற உணர்வும் கொள்ள வேண்டாம். இது மிகவும் இயல்பானது. இதனால் உடலுக்கு எந்தத் தீங்கும் கிடையாது. இது விஞ்ஞானரீதியாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

9. இதுவரை இருந்து வந்த தன் இன மோகம், இப்பொழுது எதிர்ப்பால் இனத்திடம் தாவும்.

10. காதலுக்கும், இனக்கவர்ச்சிக்கும் வித்தியாசம் தெரியாத பருவம். ஆகவே, இதுபாலரும் மிகவும் விழிப்பாக, அறிவுபூர்வமாக எதையும் சிந்திக்க வேண்டும்.

ஆண் – பெண் செக்ஸ் உறவுக்கு தடைகளாக இருப்பவைகள் எவை?

உயிரினங்கள் அனைத்துக்கும் இனப்பெருக்க காலம் என்று ஆண்டுக்கு சில மாதங்கள் மட்டுமே செக்ஸ் உறவுக்கு ஏற்ற காலமாக இருக்கும், அந்நேரத்தில் மட்டுமே அந்த உயிரினங்கள் உடலுறவு கொள்ளும் ஆனால் மனிதர்கள் மட்டும் ஆண்டின் எல்லா காலங்களிலும் நேரங்களிலும் உடலுறவு கொள்ள ஏற்றதாக உள்ளது. ஆண்-பெண் இருவரது உடலும் எந்த நேரமும் எல்லா காலமும் உறவுக்கு ஏற்றதாக இருக்கும் என்றாலும் பல்வேறு புறச்சுசூழல் மற்றும் உடல், மனக் குறைபாடு காரணமாக இன்பம் அனுபவிப்பதில் சில தடைகள் இருக்கவே செய்யும். அவற்றை தம்பதியர் இருவரும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். உறவுக்குத் தயார் இல்லாத நிலையில் வற்புறுத்துதல் மிகப்பெரிய மனக்கசப்பை உருவாக்குவதுடன் செக்ஸ் உறவு அனுபவத்தையும் வெறுக்கச் செய்துவிடும். ஆசை இருப்பது ஒரு நிலை என்றால் அதை அனுபவிக்கத் தூண்டுவது அடுத்த நிலை ஆசை ஏற்படாத நிலையில் உடலுறவுக்கு அழைக்கவோ அனுபவிக்கவோ கூடாது. கீழ்கண்ட பல்வேறு காரணங்களால் செக்ஸ் அனுபவிக்க ஆர்வம் இல்லாமல் இருக்கலாம். 1. உடல் அசதி 2. மன அழுத்தம் 3. மாதவிலக்கு 4. உடல் நலமின்மை 5. தம்பதிகளுக்குள் சண்டை 6. அதிக போதை 7. கடந்தமுறை செக்ஸில் நடந்த மோசமான நிகழ்வு 8. தொடர்நது ஒரே நிலையில் உறவுகொள்வதில் ஆர்வம் இன்மை மேற்கண்ட காரணங்களால் செக்ஸை தவிர்க்க நினைக்கும் போது விலகிநிற்பதே நல்லது. ஆனால் மனம், உடல் நலத்தைச் சீரமைக்க உடலுறவால் முடியும் என்பதால் மேற்கண்டவற்றை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு தன்னுடைய இணையைச் சந்தோஷம் அடைய வைத்து இந்த சிக்கலில் இருந்து செக்ஸ் மூலம் விடுதலை வாங்கித் தரவும் முடியும். ஆனால் செக்ஸ் ஆசையைத் தூண்டிவிடுதல் முக்கிய கட்டமாக இருக்க வேண்டும். இதற்கு ஆண் அல்லது பெண் மிகவும் பொறுமையாக உழைக்க வேண்டியது அவசியம். ஒரு சிலருக்கு தொட்டாலே உணர்ச்சி தூண்டப்பட்டுவிடும். இன்னும் சிலருக்கு நீண்ட காலம் பிடிக்கலாம். தன்னுடைய இணை எப்படிப்பட்டவர் என்பதை அறிந்து அதன்படி அணுகி இன்பத்துக்கு அழைப்பதுதான் சரியான வழியாகும்.

Wednesday, September 10, 2014

மீனாட்சி மேடம் வேலைக்காரனின் திருவிளையாடல்

மீனாட்சியை பற்றி முதலிலே சொல்லி
விடுகிறேன். அவள்
சென்னை வேளச்சேரி மகளிர் காவல்
நிலையத்து இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறாள்.
நல்ல வெளீர் மஞ்சள் நிறத்தவள். கொஞ்சம்
உருண்ட முகம். நடிகை தேவயாணி, சுகன்யா,
சிநேகா போல முக வெட்டு.
தலை முடி அடர்த்தியாய்
நடு முதுகு வரை நீண்டிருக்கும். ஆனால்
பெரும்பாலும் தலைமுடியை போலீஸ்
கேப்பினுக்குள் கொண்டை போட்டிருப்பாள்.
நடு வகிடு எடுத்து வாரியிருப்பாள்.
அகலமான நெற்றி. அதிலே சிறு சைஸில்
சிடிக்கர் பொட்டு. பெரும்பாலும் சிவப்பு கலர்
தான். அது தான் அவளுக்கு பிடித்த நிறம்.
உதடுகள் நீண்டவை. ஆரஞ்சு சுளைகள் போல
இருக்கும். லிப்ஸ்டிக்
இல்லாமலே சிவந்து காண்போரை கிறங்கடிக்கும்
.
வெளீர் பற்கள். உயரம் 5′ 9. தோள்கள்
தினசரி உடற்பயிற்சியால்
பரந்து விரிந்திருக்கும்.
எப்பொழுதாவது புடவை அணியும் போது,
முழு முதுகும் தெரிவது போல ஜாக்கெட்
அணிவாள். அந்த பொன் நிற
பரந்தவெளியை கண்ட ஆண்களின் லிங்கம்
ஒரு முறை உதறலெடுக்க தான் செய்யும்.
38-30-38 இது ஹவர் கிளாஸ் போல
ஒரு கிறக்கமான
தோற்றத்தை உருவாக்கியிருந்தது. டைட்டான
போலீஸ் யூனிபார்மில் அவளது பெருத்த
முலைகள் விம்மி புடைத்து நிற்கும்
அழகே தனி. அவள் நடக்கும் போது சரியான
ரிதமில் அவளது குண்டிகள் ‘லெப்ட் ரைட்’
போடும்.

இந்த வர்ணனைகளை படிக்கும்
போதே அவளது அழகும்,
நாட்டுகட்டை தோற்றமும் உங்கள் கண் முன்
நிழலாடுகிறதா? எத்தனை ஆண்கள் அவள்
பின்னால் திரிந்திருப்பார்கள் என
நினைக்கிறீர்கள். சிரிப்பு தான் வருகிறது.
அவளை கண்டாலே ஆண்கள்
பயந்து அலறுகிறார்கள். அவள்
ஒரு அறை விட்டால்
கண்களுக்கு முன்னே நட்சத்திரங்கள்
தோன்றும். வாயை திறந்தாலே அசிங்கமான
வார்த்தைகள் பிரவாகமாய் அர்ச்சனை புரியும்.
அவள் முகத்தில் எப்போதும் ஒரு கடுகடுப்பு.
யாரையும் மதிக்காத ஒரு பார்வை.
அவள் பணிபுரிந்த காவல்நிலையங்களில்
அவளுக்கு கீழே வேலை செய்தவர்கள் எல்லாம்
தற்கொலை செய்யுமளவு டார்ச்சரை
அனுபவித்து இருக்கிறார்கள். அவள் மேல்
எக்கசக்க புகார்கள். எக்கசக்கமாய் லஞ்சம்
வாங்குகிறாள்.

இதை பற்றி யாராவது மேலதிகாரி கூப்பிட்டு
விசாரித்தால்
அன்று அவர்களுக்கு தன்னுடலை விருந்து
வைப்பாள். விளைவு பெரிய அதிகாரிகள்
எல்லாம் அவளது காலடியில் இருந்தார்கள்.
அப்புறம் அவள் ஆட்டம் அதிகரிக்க
தானே செய்யும்.
அவள் வயதை சொல்ல மறந்து விட்டேனே.
சிக்கென அந்த இடை உடற்பயிற்சியால்
வந்தது. அவளுக்கு 30 வயதிருக்கும் என
எல்லாரும் நினைப்பார்கள். ஆனால்
உண்மையான வயது 35.
அவள் சொந்த ஊர் பண்ரூட்டி என
சொல்வார்கள்.
அவளது பெற்றோரையோ உறவினர்களையோ
யாரும் இதுவரை பார்த்ததில்லை.
திருமணமாகவில்லை. மடிப்பாக்கம்
இன்ஸ்பெக்டர் தயாளன் தான் எப்போதும்
அவளோடு சுத்தி கொண்டு இருப்பான்.
அவனை தவிர அவளுக்கு நண்பர்கள்
என்று யாரும் கிடையாது. ஆனால்
வாட்டசாட்டமான தயாளன் நம் கதையின்
நாயகன் அல்ல. அதோ நோஞ்சான் போல
தோற்றத்தில் அவளது வீட்டில்
பாத்திரங்களை கழுவி கொண்டு இருக்கிறானே
சுப்பையா, அவன் தான் நம் கதையின் நாயகன்.
சுப்பையாவின் இன்னொரு பெயர்
பிளேடு சுப்பு. பிக்பாக்கெட்டில் திறமைசாலி.
வேளச்சேரி விஜய நகர பஸ்
ஸ்டேண்டிலிருந்து தரமணி போகும் வழியில்
ஒரு பெரிய சேரி உண்டு. அங்கு தான் அவன்
வீடு. வயது 18 தான் ஆகிறது. ஆள் பார்க்க
நோஞ்சானாய் இருப்பான். ஆனால்
தோற்றத்தை கண்டு ஆளை எடை
போடக்கூடாது. அடிக்கடி பிக்பாக்கெட்
கேஸில் மாட்டுவான்.
மீனாட்சி அவனை ஒரு முறை புரட்டி புரட்டி
அடித்தாள்.

“தாயேளி, இனி என்
வீட்டு கக்கூஸை கழவி அங்கேயே வாழ்க்கை
நடத்து” என அவனை அவள்
விட்டு சம்பளமில்லாத வேலைக்காரனாய்
நியமித்தாள். மீனாட்சியை தவிர
அவளது வீட்டில் வேறு யாரும் கிடையாது.
அவளே இரவு தூங்க மட்டும் தான் வருவாள்.
ஆனால் அவளது விடு லஞ்ச லாவன்யத்தால்
செல்வ செழிப்புடன் இருந்தது.
அது அத்தனையும் சுப்பையா பகல்
வேளையில் அனுபவிக்க என மாறியது.
அவளே துரத்தினாலும் அந்த
வசதிகளை விட்டு அவன்
ஓடுவானா என்பது கேள்விக்குறி தான்.
இந்த வசதிகளுக்கெல்லாம்
சுப்பையா கொடுக்க வேண்டிய விலையும்
அதிகம். அந்த வீட்டின் அத்தனை வேலைகளும்
அவன் தான் செய்ய வேண்டும். அது தவிர
இரவு மீனாட்சி வீட்டிற்கு வரும்
போது அவனை வீட்டிற்கு வெளியே காவலுக்கு
வைத்த தெருநாய் போல தான் நடத்துவாள்.
சில சமயம் அடியும் உண்டு. ஆனாலும் நாய்
போல மீனாட்சி வீட்டின் வேலைக்காரனாய்
சுப்பையா மாறி போனான்.

அவள்
வீட்டிற்கு சுப்பையா வந்து சேர்ந்து ஒரு மாதம்
கழித்து அந்த சம்பவம் நடந்தது.
அது நவம்பர் மாதம். நன்றாக
மழை பெய்து கொண்டிருந்தது.
இரவு பத்து மணிக்கு மேலாகி விட்டது.
மீனாட்சி வீட்டிற்கு திரும்பி வரும் நேரம்
என்பதால் சுப்பையா நல்ல பிள்ளை போல
டீவியை அணைத்து விட்டு வேலு பிள்ளை
கடையிலிருந்து வாங்கிய
கோழி பிரியாணியை டைனிங் டேபிளில்
வைத்து விட்டு கதவிற்கு வெளியே
அமர்ந்திருந்தான்.
பதினோரு மணிக்கு மீனாட்சி ஜீப்பில்
வந்து இறங்கினாள். அவசரமாய்
சுப்பையா எழுந்து நிற்க, ஜீப்பில் வந்திறங்கிய
மீனாட்சி வீட்டிற்கு முன் இருந்த சேற்றில்
வழுக்கி விழுந்தாள். ஜீப்பை ஓட்டி வந்த
கான்ஸ்டபிள்
இறங்கி ஓடி வந்து அவளை தூக்கினான்.
அவனை உதறி விட்டு மீனாட்சி வீட்டிற்குள்
வந்தாள்.
அவளது உடையெங்கும் சேறு அப்பியிருந்தது.
அவள் சுப்பையாவை கடந்த போது அவள்
மேல் மது வாடை அடித்தது.
சுப்பையாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது. இந்த
ஒரு மாதத்தில் அவள் மேல்
மது வாடையே வீசியதில்லை. அவன்
யோசித்தபடியே நிற்கும் போது பளீரென
ஒரு அறை விழந்தது.
“தேவடியா மவனே என்னடா யோசனை. போய்
பாத்ரூம்ல குளிக்க தண்ணி எடுத்து வை”
சுப்பையாவிற்கு வலி ஒன்றும் புதிதல்ல.
அமைதியாய் பாத் ரூமில்
சுடு தண்ணீரை ரெடி செய்தான்.
தேவடியா மவன், ஒக்காளி, தாயேளி என
முனகியபடி மீனாட்சி அங்குமிங்குமாய்
நடந்தபடி இருந்தாள்.
மேற்கொண்டு அங்கு நின்றால் அடி,
உதை தான் என்பதால் சுப்பையா, “மேடம்
எல்லாம் ரெடியாயிடுச்சு” என
சொல்லி விட்டு சமையலறையில்
ஒளிந்து கொள்ளலாம் என நகர்ந்தான்.
“சுப்பையா ஆம்பளையாட நீ?
இப்படி பயந்து சாகிற? இங்கேயே நில்லு”
அடுத்ததாய் அவள் செய்த காரியம்
அவனை அதிர்ச்சியின்
உச்சத்திற்கே அழைத்து சென்றது. மஞ்சள்
பல்பு வெளிச்சத்தில் பாத் ரூம் பிரகாசமாய்
இருக்க, அவள் கதவை சாத்தாமல்
அப்படியே காக்கி பேண்ட்டையும்
ஜட்டியையும் கால் வரை இறக்கி,
உட்கார்ந்து சர் என்ற சத்தத்தில் மூத்திரம்
பெய்தாள். சுப்பையாவிற்கு அவளது பொன்
நிற அகண்ட குண்டிகள் தரிசனம் கொடுத்தன.
அவன் ஒரு டிராயரும் பனியனும்
அனிந்திருந்தான். சட்டென
அவனது டிராயரினுள் லிங்கம்
விறைத்து கொண்டது.
பனியனை இழுத்து விறைப்பை மறைக்க
முயன்றான்.
“பொம்பளை சூத்த பாத்ததே இல்லயா?
வந்து இந்த துணியெல்லாம்
துவைச்சு போடு,” மீனாட்சி சடசடவென
எல்லா துணியும் கழட்டி திகம்பரமாய்
நின்றாள்.
சுப்பையாவிற்கு நெஞ்சு படபடவென
அடித்து கொண்டது.
மூன்று முறை விபச்சாரிகளிடம்
போயிருக்கானே தவிர அவனுக்கு இதெல்லாம்
புதுசு. அந்த நாத்தம் பிடிச்ச அவிசாரிகள்
எங்கே? இந்த பொன் உடல் எங்கே?
ஆனால் மீனாட்சியின்
பார்வையிலோ செயலிலோ காமம்
எதுவுமில்லை. அவன் அந்த
துணிகளை துவைக்க, அவள்
அங்கேயே குளித்தாள்.
இப்படி ஒரு பேரழகு உடலை பார்த்ததே இல்லை
. ஆனால் அவளை பார்க்காமல் சுவர் பக்கமாய்
திரும்பி உட்கார்ந்து துணி துவைத்தான்.
டிரவுசரை கிழித்து கொண்டு லிங்கம்
வெளியே வந்து விடுமோ என பயமாக
இருந்தது.
அவள் மேலே மது வாடைக்கும்
மேலே மருதாணி வாசம் வந்தது.
துணி துவைத்து கொடியில் தொங்க
வைத்து அவன் திரும்பும் போது,
மழை பயங்கர இடி சத்தத்துடன்
பெய்து கொண்டிருந்தது. கதவுகள் சாத்தாத
பாத்ரூமில் மீனாட்சி இன்னும்
குளித்து கொண்டிருந்தாள். அவளது பெருத்த
புட்டம் கிண்னென இருந்தது. அவளது உடல்,
நீரில் பளபளக்கும் கண்ணாடியாய் இருந்தது.
திடீரென அவள் அவனை திரும்பி பார்த்தாள்.
அவன் டிரவுசருக்குள் விம்மி கொண்டிருந்த
மேட்டினை பார்த்தாள். அவள் முகத்தில்
ஒரு கேலி புன்னகை தோன்றியது.
“இங்க வாடா. நீ ஷேவ் செய்யிற பிளேட்
இருக்கா?”
“இல்ல மேடம்,” அவனுக்கு உடம்பெல்லாம்
நடுங்கியது.
“தூ! ஷேவ் செய்யிற பழக்கமே கிடையாதா?
மூஞ்சில முடி வளந்தா தானே ஷேவ் செய்வ.
டீவி பெட்டி பக்கத்துல ரேசர்
இருக்கு கொண்டு வா,” மந்திரித்து விட்ட
ஆடு மாதிரி அவன் ரேசர்
பிளேடு கொண்டு வந்தான்.
அவள் டவலால் நிர்வாண
உடலை துவட்டியபடி வெளியே வந்து
சோபாவில் ஒரு காலை நீட்டி அமர்ந்தாள்.
மற்றொரு காலை விரித்து பக்கத்தில் இருந்த
சேரில் போட்டாள். அவளது பெருத்த முலைகள்
பழுத்த பப்பாளி பழம் போல
விம்மி புடைத்து நின்றன. முலை காம்புகள்
எல்லா பெண்களுக்கும் கருப்பு நிறத்தில்
இருக்குமென தான் அவன் நினைத்திருந்தான்.
ஆனால் மேடமுக்கு பிரவுன் நிறத்தில்
அம்சமாக அல்லவா முலைகாம்புகள்
இருக்கிறது. நடிகைகள் போல இடை சின்னதாக
இருக்கிறது. தொடை வளவளவென
பளிங்கு போல மின்னுகிறதே.
அவள் கால் இரண்டையும்
விரித்து வைத்து இருந்ததில்
அவளது யோனி ரோஸ் நிறத்தில் மின்னியது.
சமீபத்தில் தான் ஷேவ் செய்திருப்பாள் போல.
மூன்று நாள் தாடி போல
யோனிக்கு மேலே கருப்பு முடி வளர்ந்திருந்தது
. அவளது உதடுகள் போலில்லாமல்
யோனி நீளம் குறைவாக இருந்தது. ஆனால்
விம்மி பெருத்திருந்தது. அந்த பெருத்த
வெடிப்பின் மேலுதடு மெலிதாய் ரோஸ்
நிறத்தில் இருந்தது. அதனுள் ஈரமாய் உள்
உதடு மடிப்புகளாய் இருந்தது. ஒரு o போல
அவனை அருகே அழைத்தது அது.
அவன் அங்கே நிற்கிறான் என்பதையெல்லாம்
கணக்கிலே கொள்ளாமல் நிர்வாணமாய்
அதே போஸில் உட்கார்ந்தபடி அவள்
கீழே ஷேவிங் பிரஷ்ஷால் நுரை ததும்ப
கிரிமை அப்பி கையில் ரேஸர் பிளேட்
எடுத்து நிதானமாய் முடிகளை அகற்றினாள்.
ஒரு சிறு முடி கூட இல்லாதளவு அவள்
ஷேவ் செய்து முடிக்கும்
வரை ‘நடப்பதெல்லாம் கனவா நனவா’ என்கிற
குழப்பத்துடன் சுப்பையா அவள்
செய்கைகளை பார்த்தவாறு நின்றிருந்தான்.
அவள் பாத்ரூமில் போய் யோனியை சுத்தமாக
கழுவி விட்டு மீண்டும் ஹாலுக்கு வந்தாள்.
அங்கே மலைத்து போய் நிற்கும்
சுப்பையாவை கண்டாள். தோளில் தட்டினாள்.
ஒரு பொன்நிற நிர்வாண உடல்
தன்னருகே நிற்பதை உணர்ந்த அவனுக்கு தன்
லிங்கம் எந்த சமயத்திலும் கக்கி விடுமென
பயமாய் இருந்தது.
அவன் டிராயரில் முட்டி கொண்டு நிற்கும்
லிங்கத்தை அவள் கவனித்தாள். சட்டென
டிராயரின் கால் பகுதியை உயர்த்தி அந்த
லிங்கத்தை கைபற்றினாள்.
சுப்பையா நடப்பதெல்லாம் கனவென
நினைத்தான். இன்ஸ்பெக்டர் மேடத்தின் பொன்
நிற உடலை பார்க்குமளவு தனக்கு அதிர்ஷ்டம்
இருக்குமென அவன் நினைக்கவில்லை.
மேடமே தனது குஞ்சை பிடித்து
இருக்குகிறார்களா? உண்மை தானா இது?
“அடேயப்பா நோஞ்சான் பயலே. யானை பூல்
மாதிரி இல்ல இருக்கு. எப்படிடா அது மட்டும்
இவ்வளவு தடியா இருக்கு?”
“மேடம் … மேடம் … ”
“என்னடா பம்மற?”
மீனாட்சி அவனுக்கு பின்னால் வந்து நின்றாள்.
அவன் கால்கள் உதறுவதை கண்டாள்.
பின்னாலிருந்து கட்டியணைத்தாள்.
சுப்பையாவிற்கு அவளது நிர்வாண உடல்
பின்னால் இருந்து அணைத்தவுடன் லிங்கம்
மேலும் துடித்தது.

மீனாட்சி லிங்கத்தை கையில் வைத்திருந்ததால்
அந்த உதறலை அவளால் உணர முடிந்தது.
“சுன்னி பயலே இவ்வளவு பெரிய
பூலை வைச்சிட்டு தான் இவ்வளவு நாள்
நோஞ்சான் மாதிரி நடிச்சியா”
“ஆங்” என முனகினான் சுப்பையா. ஏனெனில்
மேடம் டிராயருனில் இருந்த
அவனது குஞ்சை வேக வேகமாய் உருவ
தொடங்கிவிட்டார்கள்.
அவனது குஞ்சு தண்டின் கீழ்
பகுதியை இறுக்கமாய் பற்றி மேலிருந்து கீழ்
வரை உருவினார்கள். கை ஈரமாக
குளுமையாகவும் இருந்தது. அடி வயிற்றில்
இன்பமாய் எதோ சுரந்தது. மேடத்தின் பெருத்த
முலைகள்
அவனது முதுகை அழுத்தி கொண்டிருந்தது.
அவன் நகராதவாறு அவனை இறுக்கமாய்
பின்புறத்திலிருந்து கட்டி நின்றிருந்தார்கள்.
“பரவாயில்லையே இவ்வளவு நேரம்
தாங்கறீயே. நான் கை வைச்சாலே அவனவன்
கக்கிடுவான்”
மீனாட்சி வேக வேகமாய் உருவியபடி இருக்க,
சுப்பையா இன்பத்தில் தத்தளித்தான்.
“பூலா, நீ இவ்வளவு பெரிய
பூலை வைச்சிருக்கிற
விஷயமே இன்னிக்கு தானே தெரிஞ்சுது”
சுப்பையா மேடம் மேடம் என
பிதற்றி கொண்டு, நின்றபடியே கால்கள்
நடுங்க விந்தை கக்கினான்.
மீனாட்சி கடைசி சொட்டு வரும் வரை அந்த
வேகத்தை நிறுத்தவில்லை.
அவனுக்கு கூசியது. அவள் தன்
கையை அவனது டிராயரிலே துடைத்தாள்.
“சரிடா போய் இந்த அசிங்கத்தையெல்லாம்
கிளீன் பண்ணு” அவள் பாத்ரூமில் போய்
கையை கழுவி விட்டு பெட்ரூமிற்கு சென்று
விட்டாள். அவ்வளவு தானா என அவன்
அங்கேயே கொஞ்சம் நேரம்
நின்று கொண்டிருந்தான். பிறகு சட்டென
தெளிந்தவனாய் பாத்ரூம் போய் தண்ணிர்
கொண்டு வந்து தரையில் இறைந்திருந்த
விந்தினை சுத்தம் செய்தான்.
பிறகு டிராயரை சரியாய்
அணிந்து கொண்டு மீனாட்சியின்
பெட்ரூமினுள் நுழைந்தான்.
அழகிய பொன் நிற உடல், கிறங்கடிக்கும்
வளைவுகளுடன் கட்டிலில்
படுத்து இருந்தது.
“நாயை சப்பிவிட்டா திரும்பவும்
பூலை தூக்கிட்டு வருது பாரு.
என்னடா பண்ண போற”
அவன் ஒரு நிமிஷம் அவளது குரல்
தோரணையை கேட்டு பயந்து போய்
நின்று விட்டான்.

அவனது பயத்தை போக்குவதற்காக அவள்
படுத்தபடியே கால்களை மடக்கி விரித்தாள்.
அவன் கட்டிலில் ஏறியதும் அவன்
தலையை பற்றி அவளது யோனியருகே
கொண்டு போனாள்.
கட்டிலில் அவள் மதர்ப்பாய் படுத்திருக்க,
அவளது கால்கள் மடங்கி நன்றாக
விரிந்திருந்தது. அவன் கட்டிலில்
அவளது யோனிக்கு நேராக நாய் போல்
மண்டியிட்டு, பால்கிண்ணத்தில்
பாலை குடிக்கும் நாய் போல
அவளது யோனி முழுக்க நாவால் நக்கினான்.

“ம்க்ம்” என திருப்தியாய் ஒரு முனகல்
அவளிடம் கேட்டது. அவள் கைகளால் தன்
இரு கால்களையும் பற்றி இன்னும் விரித்து,
கால்களை அவனது தோள்கள் மீது போட்டாள்.
அவனுக்கு யோனியை நக்கிய
அனுபவமில்லை. நாவால் மேலும் கீழுமாய்
நக்கி கொண்டே இருந்தான். யோனியின்
மீது மருதாணி வாசனை அபரிதமாய் வீசியது.
அதோடு அந்த வாசத்திதோடு மதன நீர்
நிறைய சுரந்து ஈரமாய் இருந்தது.
“நாய் மாதிரியே நக்குற. மேல
பருப்பை நக்குடா” அவளது குரல்
கிறங்கியிருந்தது. அவன் டிராயரினுள் லிங்கம்
விஸ்வரூபம் எடுத்து நின்றது. அவன் அந்த
நாய் போஸிலே அவளது பருப்பை தேடினான்.
அவளே ஒரு விரலால் யோனியின்
மேலுதட்டின் தொடக்கத்தில் இருந்த
பருப்பை அடையாளம் காட்டினாள். தோல்
மூடியிருந்த பருப்பு சிறியதாக இருந்தது.
அதை வாயினுள் முழுங்கி மிட்டாய் போல
சப்பினான். அவன்
வாயை சுற்றி மருதாணி வாசத்துடன்
அவளது மதன நீர். அவன் பருப்பை மிட்டாய்
போல சுவைக்க, சுவைக்க, அவள்
தன்னிலை இழந்தாள்.

“ஆங் அப்படி தாண்டா, அப்படி தாண்டா,
பூலா அதை மெல்லுடா, ம், ம், ம்,
(வயிற்றை தூக்கி ஆட்டுகிறாள். ம்
என்பது எதோ இயந்திரத்தின் சத்தம் போல
இடைவிடாமல் வருகிறது) சூப்பரா பண்றடா,
அப்படியே பண்ணு, ம், ம், ம், ஆ,
நல்லா இருக்கு, ம், ம், ம் (அவளது இரு கரமும்
அவனது தலையை பற்றி அவனை யோனியோடு
அழுத்துகிறது) ஆ, நிறுத்தாத கழுத,
நிறுத்தாத, உறிஞ்சு, உறிஞ்சு,
பருப்பை உறிஞ்சு எடுத்துடு (அவள் கைகள்
அவன் தலையை மேலும்
யோனியோடு அழுத்துகிறது.
அவனுக்கு மூச்சு முட்டுகிறது.
சற்றே முகத்தை தூக்கி காற்றை
உள்வாங்குகிறான். அவன் வாயில் இருந்த
பருப்பை உறிஞ்சுவதை மட்டும்
நிறுத்தவில்லை) ஆங், ம், ம், ஆஆ
பூலா நிறுத்தாதடா சப்புடா, மிட்டாய்
மாதிரி சப்புடா, ஆங், ஆ, ம்
(அவளது தொடை இரண்டும் அவன்
தலையை அழுத்தின. அவன்
மூச்சு முட்டி திணறினான். அவளது கால்கள்
நடுங்குவதை உணர்ந்தான். அவள்
உச்சமடைந்தாள்.) ம், பூலா நீ நாய் தாண்டா”
அவள் சத்தமாய் சிரித்தாள். அதில் ஒரு சின்ன
வெட்கமிருந்தது.
அவள் தன் கால்களிலிருந்தும்
யோனியிலுமிருந்தும்
அவனுக்கு விடுதலை கொடுத்தபிறகு, அவன்
கொஞ்ச நேரம்
பெருமூச்சு விட்டபடி இருந்தான்.
“என்னடா பூலா உன்னை நசுக்கிடேனா” அவள்
கட்டிலிருந்து எழுந்து உட்கார்ந்தாள். அதற்குள்
சுப்பையா தன்
டிராயரை முட்டி வரை கழட்டி பெருத்த
லிங்கத்தை கையில் தூக்கி கொண்டு அவள்
மேல் படுக்க போனான்.
அவனை வித்தியாசமாய் பார்த்த
மீனாட்சி சிரித்தபடி அவனை ஒரு கையால்
தள்ளி விட்டாள்.

“அட நாயுக்கு என்னை ஓக்கிற
ஆசை வந்துடுச்சா? போடா அந்த பக்கம்.
ஒரு விவஸ்தை இல்ல” அவன் கட்டிலில்
பரிதாபமாய் படுத்திருந்தான்.
அவனது விறைத்த லிங்கம்
ஒரு சிறு துளி விந்தினை கட்டிலில்
சொட்டியது. அவள் அதை பார்த்தாள். அதன்
சைஸை மீண்டும் ஒரு முறை கையால்
அளந்து பார்த்தாள். அவன்
செய்வதறியாது படுத்திருந்தான். அவள் தன்
கையில் எச்சிலை துப்பினாள். அந்த
எச்சிலை அவனது லிங்கத்தின் மீது தடவி,
நன்றாக உருட்டி விட்டு மேலும் கீழுமாக
உருவினாள். அவன்
முழித்தபடி படுத்திருந்தான்.
“ஆங் கை வலிக்குதுடா, இந்தா நீயே உருவு”
அவள் கையை எடுத்து விட்டாள். அவன்
வேகவேகமாய் தன்
லிங்கத்தை உருவியபடி இருந்தான்.
அவளது பொன் நிற இரு பப்பாளிகளின்
திரட்சி அவனுள் எதோ செய்தது.
இன்று விட்டால் மீண்டும் இந்த சான்ஸ்
கிடைக்காது என தோன்றியது.
“மேடம் நான் உங்களை ஓக்கனும் மேடம், நான்
உங்களை ஓக்கனும் மேடம்” என
வெறி வந்தவன் போல அவளை கட்டியணைக்க
முயன்றான். அவள்
சிரித்தபடி “நாயே நாயே ஓக்கிற நாய்
மூஞ்சை பாரு” என சொல்லிவிட்டு அவன்
ஒரு கையை பற்றி முறுக்கி கட்டிலில் தள்ளி,
அவன் இரு கைகளையும் பின்புறமாய்
ஒரு கையால்
பிடித்து கொண்டு இன்னொரு கையால்
அவனது லிங்கத்தை உருவி விட்டாள்.
அவனால் நகர முடியாமல் கிடந்தான். மேடம்
உருவி விடுவது பெரும் சுகமாய் இருந்தது.
ஆனால் அந்த மருதாணி மணக்கும்
அவர்களது யோனியுனுள் விட முடியாமல்
போய் விட்டதே.

அவனது தலை அருகே மேடத்தின் ஒரு திரண்ட
பப்பாளி முட்டியது. அதன் துருத்திய
காம்பினை கடிக்க முடியுமா? அவன்
தலையை உயர்த்த முயன்றான். ம்கூம்
ஐயோ விந்து வந்துடும் போலிருக்கே.
அது வர கூடாது.
இப்படியே ஒரு மணி நேரமாவது இந்த இன்பம்
நீடிக்கனும்.
அவன் ஒரு முறை துடித்தான். புளிச்
புளிச்சென விந்து படுக்கையில் விழுந்தது.
“அட கழத,
படுக்கை துணியை அழுக்கு பண்ணிட்டியே”
அவன் சோர்வாய்
படுக்கையை விட்டு எழுந்திருந்தான்.
“அட என்னடா உன்
யானை பூலு எலி குஞ்சு மாதிரி ஆயிடுச்சு.
போ போ போய் கழுவிட்டு தூங்கு” அவள்
சத்தமாய் சிரித்தாள். மது வாடை,
மருதாணி வாசம், அவனது விந்தின்
புளிப்பு வாசம் என
அறையே ஒரு மாதிரி கலவையாய்
வாசமடித்தது.
அவன் பாத்ரூம் போய் திரும்பும்
போது அவளது பெட்ரூம்
கதவு சாத்தபட்டிருந்தது. அவன்
சமையலறையில் வழக்கமாய் படுக்குமிடத்தில்
போய் சோர்வாய் படுத்து தூங்கி போனான்.
அடுத்த நாள் காலை. ஜன்னல் வழியாய்
வெயில் முகத்தில் பட்ட
போது இவ்வளவு நேரம் தூங்கிட்டோமா என
அதிர்ச்சியுடன் எழுந்தான். சூப்பரான
கனவு என நினைத்தான். ஆனால் டிராயரில்
பசை போல ஒட்டி காய்ந்திருந்த திரவங்களும்,
வாயில் இன்னும் மணந்து கொண்டு இருந்த
மேடத்தின் மருதாணி வாச மதன நீர் மணமும்
நேற்றைய விஷயங்கள் கனவல்ல என
உணர்த்தின. மேடத்தின் பெட்ரூம்
கதவு திறந்திருந்தது. ஆனால் மேடம்
அங்கில்லை. ஏற்கெனவே கிளம்பி போய்
விட்டார்கள் போல.
மதியம்.
சுப்பையா பக்கத்து விட்டு கிழவியுடன்
அரட்டையடித்து கொண்டிருந்த
போது ஒரு கான்ஸ்டபிள் வந்து இன்ஸ்பெக்டர்
மேடம் கூப்பிடுவதாய்
சொல்லி அவனை ஸ்டேசனுக்கு அழைத்து
சென்றான். நேற்றிரவு குடிபோதையில்
அவர்கள் செய்த தவறுக்காக
தன்னை வீட்டை விட்டு மேடம்
அனுப்பி விடுவார்களோ என
சுப்பையா பயந்தபடி அங்கு போனான்.
இன்ஸ்பெக்டர் மீனாட்சி தன் தனி அறையினுள்
அவனை வரவழைத்து தன்
மேஜைக்கு எதிரே இருந்த சேரில்
அவனை உட்கார வைத்தாள். கான்ஸ்டபிள்
கதவை சாத்தி வெளியேறியவுடன்
மீனாட்சி ஷூக்கள் அணியாத
காலை மேஜைக்கு கீழே அவனது டிராயரினுள்
விட்டாள். கால் விரலினால்
அவனது லிங்கத்தை தடவினாள்.
சுப்பையா நெளிந்தான்.
மீனாட்சியின் செல்போன் மணி அடித்தது.
“ஹலோ, இப்ப தான் உங்களுக்கு என் ஞாபகம்
வந்ததா” (மீனாட்சியின் கால்விரலால்
சுப்பையாவின் லிங்கத்தை அழுத்தினாள்.)
“ம், இந்த பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல்
இல்லை. என்ன
சாப்பிடாச்சா?” (மீனாட்சி எழுந்து வந்து
சுப்பையாவிற்கு பின்னால் நிற்கிறாள்.)
“எந்த சாப்பாடு? அட அதெல்லாம் ஞாபகம்
இருக்கா? இன்னிக்கு வாங்க
விருந்து வைக்கிறேன்.” (மீனாட்சி சுப்பையாவின்
டிராயரை உயர்த்தி அவனது லிங்கத்தை கையில்
எடுத்து போனில் பேசியபடி உருவுகிறாள்.
சுப்பையா நெளிகிறான்.)
“ஏன் அன்னிக்கு என்ன குறைச்சல்? அதான்
ரெண்டு முறை ஒத்துட்டு போனீங்களே.
சூத்துல வேற ஓக்கனுமா?” (மேடம் உருவும்
வேகத்தில் அவனுக்கு யானை பூல் சைஸில்
விறைத்து கொள்கிறது.)
“அப்படியா? என் சூத்து தான்
உங்களுக்கு பிடிக்குமா? அசிங்கம்
பிடிச்சவனே,
வா இன்னிக்கு சூத்தை காட்றேன்.
எவ்வளவு வேணா ஓத்துக்கோ.” (அவள்
உருவி கொண்டேயிருக்கிறாள்)
“ஆமா, அது நீ போன்
பண்ணாலே ஈரமாயிடுது” (சுப்பையா ‘ஆ
மேடம்’ என முனகுகிறான்)
“ம் இப்ப கூட ஈரமா தான் இருக்கு.”
“ஏன்யா நான் ஒருத்தி இங்க விரிக்க
ரெடியா இருக்கேன். நீ அங்க கையில
ஆட்டிட்டு இருக்க.”
“ம், சரி, அதுக்குள்ள வந்துட்டுச்சா?” என
அவள் சொல்ல,
இங்கே சுப்பையாவிற்கு விந்து துப்பியது.
“சரி சரி போய்
துடைச்சிட்டு வேலையை பாருங்க” என அவள்
போனில்
சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்தாள்.
சுப்பையா டிராயரை ஒழங்காக
அணிந்து கொண்டு நல்ல பையன் போல
அமைதியாய் உட்கார்ந்திருந்தான்.
மீனாட்சி, சுப்பையா சேருக்கு எதிரே அவன்
முகத்தை உரசுவது போல
மேஜை மீது அமர்ந்தாள். யூனிபார்ம்
பேண்ட்டையும் ஜட்டியையும் கால்
வரை இறக்கினாள். சுப்பையாவின்
முகத்தை தன் யோனியின் மேல் அழுத்தினாள்.
முடிகளே இல்லாத ரோஸ் நிற
யோனி ஒரு அழகிய பிளவாய் காட்சியளித்தது.
மருதாணி வாசத்தோடு சொத சொதவென
ஈரமாக இருந்தது. அவன்
அவளது தொடைகளை நன்றாக விரித்தான்.
ஒரு O போல யோனி விரிந்தது. அதன்
மேலிருந்து கீழ் வரை அதை நன்றாக
நக்கினான். மதன நீர் கொட்டியது.
அதை குடித்தான். உப்பாக இருந்தது. அவள்
தன் விரலால் யோனியின் மேல் வீற்றிருந்த
பருப்பை நோண்டினாள். அவன்
அவளது விரலை தள்ளி விட்டு பருப்பை நக்கி
விட்டு பிறகு அதை வாயினுள் முழுமையாய்
முழுங்கி கொண்டான்.
மேஜை மீது இருந்த அவளது செல்போன்
மணியடித்தது. அவள்
மேஜை மீது படுத்து செல்போனை ஆன்
செய்து ஹலோ என்றாள். அவளது கால்கள்
அவனது தோள்கள் மீது இருந்தது. அவன்
பருப்பை முழுமையாக வாயினுள்
முழுங்குவது போல் வைத்து, மிட்டாய்
சப்புவது போல சப்பினான்.
அவனது ஒரு கைவிரல் அவளது அழகிய
சூத்து ஓட்டையினை சுற்றி விளையாடியது.
அவள் போனில் யாரிடமோ “சொல்லுய்யா”
என்றாள். அந்த
சொல்லுய்யா அவளிடமிருந்து “சொல்லுய்யா..
அ..அ..ஆ” என ஒலித்தது. கால்களை இன்னும்
விரித்து அனுபவித்தாள். இன்பமாய் இருந்தது.
எதிர்முனையில் ஒரு காண்டரக்டர்
கெஞ்சி கொண்டிருந்தான்.
“நான் அங்க வந்து சம்பந்தபட்டவங்களை …
அ… ஆ… பாக்கனும்..ம்… அப்புறம் தான்
சொல்லனும்…ம்” அவள் பதில் சொன்னாள்.
சுப்பையாவின் லிங்கம் முழு விறைப்பில்
மீண்டும் எழுந்தது. இப்பொழுது இந்த அழகிய
பொன்னிற உடலை ஓக்கவில்லையென்றால்
அப்புறம் எப்பவும் சான்ஸ் கிடைக்காது என
நினைத்தான். டிராயரை கால்
வரை இறக்கினான்.
அவளது யோனியிலிருந்து வாயை எடுத்து
எழுந்து நின்றான்.
“காண்டராக்ட் போடும் போது நல்லா தான்
பேசுன …ம்..ஆங்.. ஏய் சுப்பையா என்ன?”
சுப்பையா அவளது கண்களை பார்த்தபடி
இருந்தான். அந்த கண்களில் வழக்கமாய்
தெரியும் திமிர் இல்லை. பாதியில்
நிறுத்தாதே என்ற பரிதவிப்பு தான் இருந்தது.
தனது லிங்கத்தை அவளது யோனியில்
அழுத்தி பிளவினுள் முழு வேகத்தில்
இறக்கினான்.
“ஆ ஆ ஏய் … (அதற்குள் போனில் அந்த
காண்டிராக்டர் எதோ சொன்னான்)
ஆமாய்யா ..ஆ.. நாளைக்கு பாத்துக்கலாம்…ம்”
இறுக்கமாய் இருந்த அவளது உடல்
அவனது இடிக்கு ஏற்றவாறு ரிதமாய் அசைய
தொடங்கியது. அவளது யோனி இறுக்கமாய்
தான் இருந்தது. வெல்வெட், தேன் என தன்
அனுபவத்தை சுப்பையா சொல்லகூடும்.
முழுமையாய்
உள்ளே விட்டு உருவி உருவி அவன்
அடித்து கொண்டிருந்தான்.
அவளோடு செல்போனில் பேசிய
ஆசாமி போனை வைப்பதாய் இல்லை.
அவளோ “ம், ஆமா ஆ ஆஆ ஆமா ..ம் …ம்ம்”
என பதில் சொல்லியபடி இருந்தாள்.
அவளது குண்டியை இன்னும்
தூக்கி இடையை ஆட்டினாள்.
போலீஸ் ஸ்டேசனில் இன்ஸ்பெக்டர் அறை.
அவளுக்கு பிடித்த சிவப்பு நிறம் சுவரெங்கும்.
அவளது யூனிபார்ம் பேண்ட் தரையில்
விழுந்து கிடக்கிறது.
மேஜை மீது அவளது பாதி உடல் இருக்கிறது.
அவளது கால்கள் அவனை கட்டியிருக்கிறது.
அவன் நின்றபடி ராட்சஸ வேகத்தில்
இயங்கி கொண்டிருந்தான்.
அவனது யானை பூல் யோனியுனுள்
உராய்ந்தபடி இருப்பது அவளது உடல்
முழுவதும்
சிலிர்ப்பை உண்டு பண்ணி கொண்டிருந்தது.
இடையை ஆட்டியபடி இருந்தாள். போனில் “நீ
அந்தாளுக்கிட்ட …அ… சொல்லி..யி…
அவனை ஸ்ஸஸ்ஸபாட்டுக்கு வரச்ச்ச
சொல்லு உஉ ம் நான்ன் பாத்துக்கிறேன்ன் ம்”
இறுக்கமான யோனி வழவழப்பாய்
அவனை இன்பத்தில் சிலிர்க்க வைத்தது.
‘மேடம் நல்லா ஆ ஓக்கிறேனா ஆ?’ என
தொடர்ந்து கேட்டபடி இருந்தான்.
அவளோ போனில் பேசி கொண்டே இருந்தவள்
திடீரென
கால்களை அவனை சுற்றி இறுக்கி உடலெங்கும்
நடுங்க உச்சம் ஏய்தினாள். “சரி இ
சொன்னபடி பணத்தை எடுத்து வை..ம்..ஸ்..
டே ..டே .. ஆஆஆஆ…ஸ்” போனில்
எதிர்முனை குழப்பத்துடன் அமைதியாய்
இருந்தது. சுப்பையா கால்கள் நடுங்க அந்த
தேன் சுவை வெல்வெட் வழவழப்பில் ராட்சஸ
வேகத்தில் இயங்கி விந்தினை யோனியின்
ஆழத்தில் கக்கினான். பனியில்
சறுக்கியபடி பள்ளத்தில் இறங்கி மேட்டின்
உச்சி வரை சென்று அப்படியே அந்தரந்தத்தில்
பறப்பது போல உணர்ந்தான்.
மீனாட்சி அவனுக்கு முத்தம் கொடுக்க
நினைத்து சிற்றின்ப மயக்கத்தில்
போனிற்கு அழுத்தமாய் முத்தம் கொடுத்தாள்.
எதிர்முனையில் இருந்த
ஆளுக்கு ஓரளவு விளங்கிவிட்டது.
சுப்பையாவின் லிங்கம் இன்னும்
அவளது யோனியின் ஆழத்தில் தான் இருந்தது.
அவனது முகத்தில் ஒரு சிறு புன்னகை

Tuesday, September 9, 2014

ஜாக்கெட் ஊக்குகளை தேட

என் பெயர் கவிதா. என் வயது 30. நான் பார்ப்பதற்க்கு நடிகை அர்ச்சனா மாதிரி இருப்பேன். எனக்கு இன்னமும் திருமனம் ஆகவில்லை. ஏக்கங்களோடு வாழ்ந்துகொண்டிருந்த எனக்கு அன்று ஒருநாள் என்னையும் அறியாமல் அந்த தப்பு நடந்தது. அவன் பெயர் சங்கர். வயது 25 இருக்கும். நல்ல கட்டு மஸ்தான உடம்பு. மாநிறம். எங்கள் வீட்டு தோட்டத்துக்கு அடிக்கடி வேலைபார்க்க வருவான். அவன் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போதெல்லாம் நான் போய் அவன் என்ன செய்கிறான் என்று பார்ப்பது வழக்கம். சில நேரங்களில் என் அப்பா வெளியில் போகும்போது என்னிடம் தோட்டத்து வேலைகள் நல்ல படி நடக்கிறதா என்று பார்த்துக்கொள் என்று சொல்லிவிட்டு செல்வார். அப்படி போய் பார்த்துக் கொள்ளும்போது சங்கரிடம் சரளமாக பேசிக்கொண்டிருப்பேன். அப்போது பொழுது போவதே தெரியாது.
அப்படி பழகிப் போனதில் அவன் ஒரு நாள் வேலைக்கு வரவில்லை என்றால் எனக்கு எதையோ இழந்த மாதிரி இருக்கும். அந்த அளவுக்கு அவனும் நானும் பழகி விட்டோம்.ஒரு நாள் அப்பாவிற்க்கு முக்கியமான வேலை ஒன்று இருந்ததால் என்னை தோட்ட வேலைகளை கவனித்துக்கொள்ளச் சொல்லிவிட்டு வெளியே புறப்பட்டு போய்விட்டார். நான் இன்னமும் திருமணம் ஆகாமல் இருக்கிறேன் என்ற கவலையில் என் அம்மா என்னை அவ்வளவாக கண்டிசன் செய்வதில்லை

அதனால் அப்பா வெளியில் சென்றதும் சங்கரை பார்க்கும் ஆவளில் தோட்டத்துக்கு வந்தேன். அங்கே சங்கர் ஒரு தென்னை மரத்து உச்சியில் உட்கார்ந்துகொண்டு தேங்காயை பார்த்துக்கொண்டிருந்தான். அவன் அந்த தென்னை மரத்தில் முழங்கால் தெரிய உட்கார்ந்து இருக்கும் பொசிசன் என்னை என்னமோ செய்தது. அதற்க்கு தோதாக அவன் வேஷ்டிக்குல் போட்டிருந்த ஜட்டியும் வெளியே தெரிந்ததில் எனக்கு உள்ளூர காமம் தலை தூக்கியது. அப்போது என்னையும் அறியாமல் அவனிடம் இரட்டை அர்த்த வார்த்தைகளை பேச ஆரம்பித்தேன். என்ன சங்கர் தேங்காய் பெருசா இருக்கா என்றேன். உடனே அவன் என்னை கீழே குனிந்து பார்த்துவிட்டு ஆமா அக்கா நல்ல பெரிய தேங்காயாத்தான் இருக்கு என்றான்.
அந்த வார்த்தை எனக்கு ஜில்லென கிக் ஏத்திய மாதிரி இருந்தது.உடனே நான் பெரிசா இருக்குதுன்னா உடனே கையை வச்சிடலாமே ஏன் யோசிக்கிறாய் என்றேன். உடனே அவன் கையை வைக்கலாமுன்னுதான் ரெம்பநால பார்த்துக்கிட்டு இருக்கேன் நீங்க உத்தரவு கொடுத்தாதானே என்றான். அதற்க்கு மேல் என்னால் வேறு எதுவும் பேச முடியாமல் வாயடைத்துப்போனேன். சிறிது நேரம் மெளனத்திற்ற்க்கு பிறகு சங்கர் மர உச்சியிலிருந்து சர் ரென கீழே வந்து இரக்கினான். கீழே நின்று கொண்டிருந்த மரத்திற்க்கு பக்கத்தில் என் இடுப்பில் அவன் முளங்கால் இடிக்கும் அளவுக்கு வந்து நின்றுகொண்டு என்ன அக்கா சத்தத்தையே  கானோம். உங்களுக்கு சம்மதம் தானே என்றான்.

நான் ஏதுவும் சொல்லாமல் அப்படியே நின்று கொண்டிருந்தேன்.உடனே அவன் நான் சற்றும் எதிர்பார்க்காத வகையில் என் மார்பை சேலைக்கு மேலை கையைவைத்து அழுத்தியவாறு அக்கா இந்த தேங்காயைத் தானே தொட்டுப் பாக்கச் சொன்னீங்க என்றான். அந்த ஒரு கனம் என் உடல் முழுவதும் அனல் பறந்த மாதிரி இருந்தது. என்னுடைய பல நாள் ஏக்கத்தால் என்னால் அவன் செயலை தவிர்க்க மனம் இல்லாமல் தடுமாறிய குரலில் சங்கர் வேண்டாம் அம்மா வந்திடப்போராங்க என்றேன் லேசான குரலில். அதற்க்கு அவன் இப்ப என்ன அம்மாவுக்கு தெரியக்கூடாது அவ்வளவுதானே இங்க வாங்க என்று சொல்லிவிட்டு என் கையை பிடித்து இழுத்துக்கொண்டு என்னை கினற்றுக்கு பக்கத்தில் இருந்த மோட்டார் ரூமுக்கு கூட்டிச்சென்றான். அவன் கையை பிடித்து இழுக்கவும் என்னையும் அறியாமல் மந்திரம் போட்டதுபோல அவன் பின்னாடியே நடந்து சென்றேன். என் இதயம் மட்டும் திக் திக் என்று அடித்துக்கொண்டது. ஒவ்வொரு நொடியும் இது வேண்டுமா வேண்டாமா என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன்.

கடைசியில் நான் தோற்றுப்போனேன்.என்னை மோட்டார் ரூமுக்குல் கூட்டிச் சென்று கதவை சாத்தி உள்ளே இருந்த சின்ன தாழ்ப்பாளைப் போட்டுவிட்டு ஒரு சுவிச்சைத் தட்டினால் உள்ளே வெளிச்சத்தில் அவன் முகம் காமக் கலக்கத்தில் என் முகத்துக்கு அருகே அனல்காற்றை கக்க ஆரம்பித்தது. எனக்கு லேசாக மயக்கம் வருவதுபோல இருக்கவே அவன் பக்கம் சாய ஆரம்பித்தேன். அதை பயன்படுத்திக்கொண்ட அவன் என் தலையைப் பிடித்துகொண்டு மூச்சுவாங்கும் அளவுக்கு முத்தமழை பொழிய ஆரம்பித்தான். என் உடம்பெல்லாம் வியற்க்க ஆரம்பித்தது. நானும் என்னை அறியாமல் அவன் தலையை பிடித்துக்கொண்டு அவன் முகத்தில் முத்தமிட்டு இருவரும் உதடோடு உதடை சேர்த்து நாக்கை உள்ளே விட்டு துழாவ ஆரம்பித்தோம்.அந்த முத்த மயக்கத்தில் நான் கிறங்கிக்கொண்டிருந்த நேரத்தில் என் இடுப்பில் சொருகி இருந்த என் முந்தானையை வெடுக்கென உருவி என் மார்பை மூடி இருந்த முந்தானையை கீழே சரியவிட்டான் அதை தவிர்க்க முடியாத நான் அவன் உடம்போடு என் உடம்பை ஒட்டி என் குத்திய மார்புக் கலசத்தை அவன் நெஞ்சில் வைத்து தேய்க்க ஆரம்பித்தேன். அவனும் இறுக்கமாக என்னை கட்டி அனைத்துவிட்டு என்னை மறுபடியும் விலக்கி என் ஜாக்கெட்டுக்கு மேல் கையை வைத்து என் கலசங்களை பிசைய ஆரம்பித்தான். அவனுடைய கசக்கலின் என் இரு முலைகளும் ஜாக்கெட்டுக்கு வெளியே ஊக்குகளை பிய்த்துக்கொண்டு பாய்வதுபோல பிதுங்கியது.
அளவுக்கு மீறிய இன்பத்தை அள்ளித்தருவதுபோல அவனுடைய ஒவ்வொரு பிடியும் என் பால் முலைகளை பாடாய்ப் படுத்த ஆரம்பித்தது.

இத்தனை நாளாய் கைபடாமல் இறுகிப்போயிருந்த என் இன்பமேடுகள் பஞ்சுபோல மாறிக்கொண்டிருந்தது. அவன் கசக்கலில் என்னையிம் அறியாமல் முனக ஆரம்பித்தேன்.சிறிது நேரம் கசக்கிய அவன் கைகள் அந்த மங்கிய வெளிச்சத்தில் என் ஜாக்கெட் ஊக்குகளை தேட ஆரம்பித்தது. விம்மிப்புடைத்துப் போன மார்புகளால் என் ஜாக்கெட் ஊக்கு அவன் கழட்ட முடியாத அளவுக்கு இறுகிப்போய் இருந்தது.
அவன் அவசரத்தை புரிந்துகொண்ட நான் கொஞ்சம் எக்கிக் கொடுத்து என் ஊக்குகளை கழட்ட வழி செய்தேன். ஊக்குகளை ஒவ்வொன்றாக கழட்டிவிட்டு மறுபடியும் என் முகத்தில் அவன் முகத்தை வைத்து தேய்த்துக்கொண்டான். ஜாக்கெட்டில் இருந்து விடுதலை கிடைத்ததுபோல என் முலைகள் இரண்டும் சுதந்திரமாக விம்மிக்கொண்டிருந்தது. மறுபடியும் லூசான என் ஜாக்கெட்டுக்கு மேலேயே அவன் தன் கைகளை வைத்து என் முலைகளை பிசைந்துவிட்டான். அவன் பிசைய பிசய கொஞ்சம் கொஞ்சமாக என் முலைகளில் இருந்து ஜாக்கெட் கீழிறங்க ஆரம்பித்தான். அந்த இன்பத்தில் என் இரு தொடைக்கு நடுவிலும் ஈரம் கசிய ஆரம்பித்தது.சங்கர் என் மார்பை ஜாக்கெட்டோடு கசக்க கசக்க எனக்கு இன்பத்தில் தலை சுற்ற ஆரம்பித்தது. கண்கள் சொருகின என்னையும் அறியாமல் என் முலை மேடுகளில் இருந்து ஜாக்கெட் கீழிறங்கிக்கொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அவன் கைகள் என் ஜாக்கெட்டில் இருந்து இளம் சூடான என் இளநீர்களுக்கு மாறிக்கொண்டிருந்தது.

கடைசியில் என் இளநீர் முலைகள் அவன் கைகளில் தடை இல்லாமல் தஞ்சம் புகுந்தது. என்னால் அந்த இன்பத்தை விவரிக்க முடியாத ஒரு மாற்றம் எனக்குல் ஏற்ப்பட்டது. தோட்டத்தில் வேலைபார்த்து காச்சுப்போன அவன் கைகளின் கடினம் என் பருத்த முலைகளில் பிரவேசித்ததும் அவனுடைய கைகளின் கடினத்தன்மையை என்னால் முழுவதுமாக உணர முடிந்தது. அந்த நேரத்தில் என்னுடைய மார்புகளை எனக்கே பார்க்க கூச்சமாக இருந்தது. என்னுடைய கருத்த மார்புக் காம்புகள் இரண்டும் சங்கரின் சாகசத்தால் நீண்டு பருக்க ஆரம்பித்தது. சாதாரணமாகவே எனக்கு முலைக்காம்பு பெரிதாக இருப்பதாக என் தோழிகள் சொல்வார்கள்.

ஜாக்கெட்டுக்கு உள்ளே அது குத்திக்கொண்டு நிற்ப்பதைப் பார்த்து என் தோழிகள் அடிக்கடி என்னை கிண்டல் செய்வார்கள். இன்று அது சங்கரின் கை பட்டதும் மேலும் பெரிதான மாதிரி சிறிய சுண்டு விரல் சைசில் நீட்டிக்கொண்டு இருந்ததைப் பார்த்ததும் எனக்கே காமம் கொப்பளிக்க ஆரம்பித்துவிட்டது. அவனுடைய கசக்கலின் ஒவ்வொரு முறையும் என்னுடைய காம்புகள் மடங்கி மடங்கி நிமிரும்போது எனக்கு பேரின்பமாக இருந்தது.அதுவும் போதாதென்று சங்கர் என் காதருகே வந்து என் காம்பை இரண்டு விரலால் பிடித்து நசுக்கியவாறு என்ன அக்கா இது இவ்வளவு பெருசா இருக்கே ஆஹா.. உங்களை கட்டிக்கிறவன் கொடுத்து வைத்தவன் தான் போங்க என்றான். அந்த வாத்தையில் அதுவரையில் லேசாக கசிந்துகொண்டிருந்த எனது இன்பனீர் சர் என்று என் கால் வழியே பாய்வது மாதிரி இருந்தது. என் பாவாடை பாதி நனைந்துவிட்டது.

உடனே நான் சங்கர் இது என்ன அவ்வளவு பெரிசாவா இருக்கு என்றேன். ஆமா அக்கா இந்த மாதிரி பெரிய சைசுல முலைக்காம்பு ஆயிரத்துல ஒருத்திக்குத்தான் அமையுமுன்னு செக்ஸ் புத்தகத்துல படிச்சிருக்கேன் அது உங்களுக்கு அமைஞ்சு இருக்கு. இந்த விசயம் தெரிஞ்சதுன்னா உங்களை கல்யாணம் கட்டிக்க நான் நீன்னு போட்டி போட ஆரம்பிச்சுடுவாங்க என்று புகழ ஆரம்பிச்சான். அவன் புகழ்ச்சியில் எனக்கு அதுவரை கல்யாணம் ஆகாமல் இருந்த கவலை எல்லாம் காற்றாய் பறந்துபோன மாதிரி சந்தோசம் ஏற்ப்பட ஆரம்பித்தது.

அந்த சந்தோசத்தில் சங்கர் என் முலையை நல்லா கசக்குடா என் காம்பை பிடித்து திருகுடா என்று என்னையும் அறியாமல் புழம்ப ஆரம்பித்தேன்.அவன் கசக்கலில் கொஞ்சம் கொஞ்சமாக என்னை நான் இழந்துகொண்டிருந்த நேரத்தில் லேசாக என் காதுகளுக்கு என் அம்மா என்னை அழைப்பதுபோல சத்தம் கேட்கவே என்னுடைய காம போதை சர்ரென இறங்க ஆரம்பித்தது. மயக்கம் தெளிந்த மாதிரி சங்கரின் கைகளில் இருந்து என் கலசங்களை விடுவித்துக்கொண்டு சங்கர் அம்மா கூப்பிடராங்க நாளைக்கு பாத்துக்கலாம் என்று சொல்லிவிட்டு கதவைத் திறக்க முயற்ச்சி செய்தேன். சங்கரோ ஏமாற்றம் ஏற்ப்பட்ட மாதிரி அக்கா நாளைக்கு கட்டாயம் வரனும் என்ன சம்மதமா என்று கெஞ்சலாக கேட்டான். அவனைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.

சரிடா சங்கர் இனி நான் உனக்குத்தான் வேற எவன் என்னை தெடப்போறான் உனக்குத்தான் என் அருமை தெரிகிறது. இனி உன்னைவிட்டா எனக்கும் வேற இன்பம் என்ன இருக்கு என்று சொல்லிவிட்டு அவன் தலையைப் பிடித்து முகம் முழுதும் அவன் ஆசை அடங்கும் அளவுக்கு முத்தமழை பொழிந்துவிட்டு டேய் சங்கர் உன் கையாலையே என் ஜாக்கெட்டை மாட்டிவிடுடா என்றோன் அவனும் என் கட்டளைக்கு கட்டுப்பட்டவன் போல என் முலையை பிடித்து இரு ஜாக்கெட் கூட்டுக்குள்ளும் தள்ளிவிட்டு ஊக்குகளை கஷ்டப்பட்டு போட்டுவிட்டான்.ஜாக்கெட்டுக்கு மேலே என் காம்புமட்டும் தனியாக தள்ளிக்கொண்டு இருப்பதைப் பார்த்து ஆசையில் அக்கா ஒரே ஒரு தடவை என்று சொல்லிவிட்டு குனிந்து அதில் ஒரு முத்தம் கொடுத்தான் எனக்கு அவன் உதடு என் ஜாக்கெட்டுக்கு மேலே என் காம்பில் உரசியதும் என் உடம்பெல்லாம் சிலிர்த்தமாதிரி இருந்தது. சரி போதும்டா என்று மனம் இல்லாமல் சொல்லிவிட்டு அந்த மோட்டார் ரூமைவிட்டு நான் மட்டும் வெளியே வந்தேன். தூரத்தில் என் அம்மா எங்கேயோ என்னைத் தேடிக்கொண்டு இருந்தார்கள்.

அவர்களுக்கு தெரியாமல் வேறு பக்கம் இருந்து வருவதுபோல என்ன அம்மா கூப்பிட்டீங்களா என்று அவர்கள் பக்கம் சென்றேன். ஆமாண்டி எங்கடி அந்த சங்கர் ஒரு வேலையும் பாக்காம அவன் எங்கே போனான் என்றார்கள். அதற்க்கு நான் அம்மா நம்ம மோட்டார் சரியா ஒடலை அதனால நான் தான் அதைப்பாக்கச்சொன்னேன் அங்கதான் இருப்பான் போய்ப் பாரு என்று சொல்லிவிட்டு வீட்டுக்குல் போய்விட்டேன்.அந்த நிமிடத்தில் இருந்து என்னால் சங்கரை மறக்கமுடியவில்லை. அன்று இரவு என்னால் தூங்க முடியாமல் புரண்டு கொண்டிருந்தேன். தூக்கத்தில் என் மேலே சங்கர் வந்து விழுவதுபோலவும் என் மார்புகளை கசக்குவதுபோலவும் கனவுகண்டு விழித்து விழித்து புரண்டுகொண்டிருந்தேன். அவன் என் மார்புகளை பிடித்து கசக்குவதுபோல நினைத்துக்கொண்டு நானே என் மார்புகளைப் பிடித்து கசக்கிக்கொண்டேன். என் அம்மா நன்றாக தூங்குகிறார்களா என்று பார்த்துவிட்டு என் ஜாக்கெட் ஊக்குகளை கழட்டிவிட்டு சங்கர் என் முலைக்காம்பை பிடித்து திருகுவதுபோல நினைத்துக்கொண்டு நானே திருகிக்கொண்டேன். திடீரென அம்மா முழிப்பதுபோல சத்தம் கேட்க்கவே தூங்குவதுபோல படுத்துக்கொண்டேன். பிறகு என்னை அறியாமல் தூங்கிப்போனேன்.

அடுத்த நாள் காலை. விழித்தவுடன் எனக்கு சங்கர் நினைவுதான் வந்தது. அவன் எப்பொழுதும் சாயங்காலம்தான் தோட்ட வேலைக்கு வருவான் ஆனாலும் காலையிலேயே வந்துவிடமாட்டானா என்று என் மனம் ஏங்கிக்கொண்டிருந்தது. ஆனால் அவன் வரவில்லை ஏமாற்றத்தோடு வீட்டு வேலைகளை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்படியே நேரம் ஓடிக்கொண்டிருந்தது. சரியாக காலை 10:00 மணி இருக்கும் வெளியே சங்கரின் குரல் கேட்டது. என் அம்மா அவனோடு பேசிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. எனக்கு அவன் குரல் கேட்டதுமேல உடம்பு குப்பென வியர்க்க ஆரம்பித்துவிட்டது. லேசாக ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தேன். சங்கர் இதற்க்கு முன் இல்லாத அளவுக்கு அழகாக இருந்தான்.

சட்டை வேஷ்டி எல்லாம் பளிச்சென்று அயன் செய்து போட்டிருந்தான். என் அம்மா என்ன சங்கர் இன்னக்கி என்ன பொன்னு பாக்க போறியா என்னக்கும் இல்லாம இப்படி டிப்டாப்பா வந்திருக்கியே என்றாள். அதற்க்கு அவன் அதெல்லாம் ஒன்னுமில்லைம்மா எப்பவும்போலத்தான் இருக்கேன் என்று மலுப்பினான். எனக்கு அவன் அர்த்தம் புரிந்தது. மனசுக்குல் என்னை நினைத்து நானே சந்தோசப்பட்டுக்கொண்டேன். என் அழகைப்பார்த்து மயங்குவதற்க்கும் ஒரு ஆண் இருக்கிறானே என்று. அம்மா நேத்தைய வேலை கொஞ்சம் பாக்கி இருக்கு அதுதான் இப்பவே வந்துட்டேன் நான் போய் பாக்குறேன் என்று சத்தம்போட்டு சொல்லிவிட்டு தோட்டத்துக்குல் போனான்.
அவன் போன கொஞ்ச நேரம் கழித்து நானும் அம்மாவிடம் ஒரு சாக்கு சொல்லிவிட்டு தோட்டத்துக்குல் சென்றேன்.எங்கள் தோட்டத்தில் ஒரு பெரிய தண்ணீர் தொட்டி இருந்தது. அதன் மேல் சங்கர் உட்கார்ந்துகொண்டு என் வரவை எதிர்பார்த்துக்கொண்டிருப்பது எனக்கு தெரிந்தது. நானும் அவன் எதிர்பார்த்த மாதிரி அங்கே போய் சேர்ந்தேன். வாங்க அக்கா ஏன் இவ்வளவு நேரம் உங்களுக்காகத்தான் நான் இப்பவே வந்துட்டேன். நேத்து முழுவதும் எனக்கு தூக்கமே இல்லை என்றான். எனக்கும் அதே கதிதானே இருந்தாலும் அதை அவனிடம் சொல்ல எனக்கு மனம் இல்லை. அவனாக இறங்கி வருவதில்தான் இன்பம் இருப்பதாக எனக்கு தெரிந்தது. அதனால் உடனே நான் டேய் சங்கர் ஏண்ட இப்படி கெட்டுபோயிட்டே நான் அதை எல்லாம் நேத்தே மறந்துட்டேன் பேசாம வேலையைப் பாறு என்றேன்.

உடனே அவன் தண்ணித் தொட்டியின் மேலிருந்து தொபுக்கென்று என் பக்கத்தில் குதித்து நின்று என்ன அக்கா அதுக்குல்ல எல்லாத்தையும் மறந்துட்டீங்களா தயவுசெய்து என்னை மறந்துடாதீங்க என்று என் கையை எட்டி பிடித்துக்கொண்டான். அவன் ஸ்பரிசம் பட்டதும் எனக்கு உடம்பில் பட்டாம்பூச்சி பறந்த மாதிரி இருந்தது. டேய் என்னடா கொஞ்சம் கூட விவஷ்தை இல்லாம கையை எல்லாம் பிடிச்சிக்கிட்டு விடு முதலில் யாரும் பார்த்திடப்போறாங்க வா எங்கயாவது உட்கார்ந்து பேசுவோம் என்றேன். ஆனால் எங்கு போவது என்று எனக்கே தெரியவில்லை.உடனே அவன் அக்கா இங்க வாங்க இதுதான் நமக்கு இப்ப தோதான இடம் என்று சொல்லிவிட்டும் அந்த பெரிய தண்ணீர் டாங்குக்கு மேலே என்னை ஏத்திவிட்டான் அந்த தொட்டியில் தண்ணீர் இல்லாமல் இருந்தது. உள்ளே சிறிய படிக்கட்டு இருந்தது. அக்கா இதுக்குள்ளே போங்க யாரும் வரமாட்டாங்க என்று என்னை வழுக்கட்டாயமாக தள்ளினான்.

எனக்கும் அப்போது அது தேவை என்பதுபோல இருந்ததால் அவன் இழுப்புக்கு வலைந்துகொடுதேன். தண்ணீர் டாங்க் படி வழியாக உள்ளே சென்று கடைசி படியில் அவன் உட்கார்ந்துகொண்டு அக்கா சீக்கிரம் வந்துடுங்க என்று அவசரப்படுத்தினான். அவனுக்கு பின்னால் நான் சென்று அவன் உட்கார்ந்து இருக்கும் படிக்கு மேற்ப்படியில் நான் போய் உட்கார்ந்தேன். என்னுடைய முழங்கால் அவன் இடுப்பு பகுதியில் இடிக்கும் அளவுக்கு நாங்கள் இருவரும் மேலே கீழே என்று ஒட்டிக்கொண்டிருந்தோம்.டேய் சங்கர் எனக்கு பயமாக இருக்குடா வெட்ட வெளிமாதிரி இருக்கு யாராவது வந்து எட்டி பாத்திடப்போறாங்க என்றேன். அதெல்லாம் ஒன்னும் பயப்படாதீங்க அக்கா நானும் இரண்டு மூண்று வருசமா இங்கே வேலை பாக்கிறேன் என்னைத்தவிர வேறு யாருமே இந்த பக்கம் வருவது இல்லை ஏன் நீங்க கூட இப்பதான் இந்த பக்க வந்திருக்கீங்க என்று சொல்லிவிட்டு என்னை ஒரு மாதிரியான காமப்பார்வை பார்த்தான்.உடனே நான் சரிடா இப்ப உனக்கு என்ன வேணும் என்றேன் ஒன்னும் தெரியாதவள் போல.

அதற்க்கு அவன் இதுதான் எனக்கு வேனும் என்று என் மார்பு மீது கை வைத்து அமுக்கினான் எனக்கு இன்பலோகம் என் கண்முன்னால் வந்துபோன மாதிரி இருந்தது. என்டா சங்கர் இதுல அப்படி என்னடா இன்பம் உணக்கு தெரியுது என்றேன். அக்கா இந்த இன்பத்தைப்பத்தி உங்களுக்கு தெரியாது உங்களுக்கு இன்பம் தருரது என்கிட்ட இருக்கு எனக்கு இன்பம் தருவது உங்க கிட்டதான் இருக்கு என்றான். போடா நேத்து நீ கசக்குன கசக்குல இன்னும் என்னோடது வலிக்குது என்று அழுத்துக்கொண்டேன். உடனே அவன் அப்போ இன்னைக்கி பூப்போல பிடிச்சு விடுறேக்கா என்றான் கிரக்கத்தோடு.
ம்…ஒன்னை திருத்த முடியாதுடா என்றேன். அடுத்த என் அனுமதிக்கு காத்திறாமல் ஆவலோடு என் முந்தானையை ஒதுக்கிவிட்டு என் முலைகள் இரண்டையும் ஜாக்கெட்டோடு சேர்த்து பிடித்தான். டேய் பார்த்துடா என்று எச்சரித்தேன். என் எச்சரிக்கையை ஏற்றுக்கொண்டு என் முலை பிரதேசம் முழுவதையும் ஜாக்கெட்டுக்குமேலே பூப்போல தடவிவிட்டான்.அவனுடைய நேற்றைய முரட்டுத்தனம் என் அன்புக்கு கட்டுப்பட்டுப்போனதில் இன்று இளகிப்போனதில் எனக்கு எல்லை இல்லா இன்பம் பெருக்கெடுத்தது. என் இரண்டு முலைகளையும் பிரமிப்போடு அவன் பார்ப்பதைப்பார்த்து எனக்கு என்னவோ செய்தது. என்னுடைய முலையின் அடிப்பகுதியில் இருந்து முனைப்பகுதிவரை தடவிவிட்டு என்னை சொக்கவைத்து ஜாக்கெட் ஊக்குகளை இளகுவாக கழட்டி எடுத்தான். இன்று நான் அவனுக்காக ப்ரா போட்டு வந்தேன்.

என் சிகப்பு கலர் ஜாக்கெட்டுக்கு உள்ளே வெள்ளை கலரி ப்ராவைப்பார்த்ததும் அவனுடைய முகத்தில் சந்தோசம் பளிச்சிட்டது. அக்கா நேத்து நீங்க இது போடலையே இன்னைக்கி எனக்காகத்தானே போட்டு வந்துருக்கீங்க பின்ன ஏன் ஆசையே இல்லாத மாதிரி நடந்துக்கிறிங்க என்று சொல்லிவிட்டு என் ஜாக்கெட்டை பிரிந்து இரண்டு பக்கமும் விளக்கிவிட்டு என் ப்ராவை கண் இமைக்காமல் பார்த்தான் அவனை அறியாமல் மூச்சு வாங்குவது எனக்கு தெரிந்தது.

என் அங்கங்களைப்பார்த்து அவன் சந்தோசப்படுவதைப்பார்த்து எனக்கு உள்ளூர சந்தோசமாக இருந்தது. என்னுடைய இரண்டு முலைகளும் ப்ராவுக்குள் அடைபட்டு பிதுங்கிக்கொண்டு இருப்பதைப் பார்த்து அவனுக்கு எதுவுமே பேச முடியவில்லை. என் இரு முலைகளுக்கும் நடுவே உள்ள பல்லத்தில் தன் கையை விட்டு தடவிக்கொடுத்தான். அப்ப்பா என்னால் தாங்கமுடியவில்லை.அவன் கையைப் பிடித்து என் முலைக்கு மேல் வைத்து அமுக்கிக்கொண்டேன்.

டேய் சங்கர் என்னை ரெம்ப படுத்தாதடா கூச்சமா இருக்கு என்றேன். உடனே அவன் என் ப்ரா பட்டியை இருபக்கமும் பிடித்து இறக்கிவிட்டான் எப்போ வெளியே வருவோம் என்று காத்துஇருந்ததுபோல என் கலசங்கள் இரண்டும் வெளியே வந்து விழுந்தது. ஆஹா என்ன சுகம். சில்லென்ற குளிர்காற்றை என் முலைகள் சுவாசிக்க ஆரம்பித்தது. அப்போதுதான் அவன் தேர்ந்தெடுத இடம் நல்ல இடம்போல தெரிந்தது. மேலே ஏறிட்டு பார்தேன் தென்னை மரத்தில் காற்றில் தேங்காய் குழையோடு ஆடுவதுபோல அவன் என் ப்ராவில் இருந்து விடுவித்த முலைகள் இரண்டிலும் குளிந்த காற்று பட்டு என்னை சிலிர்க்க வைத்தது. இப்படி வெட்ட வெளியில் என் மார்புகளை இதுவரை நான் திறந்து காட்டியதுஇல்லை அதனால் எனக்கு அது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. என்னுடைய காம்பு கூம்பு வடிவில் அவன் இருந்த திசையை நோக்கி பாய்வதுபோல பார்த்தது. என்னுடைய குளிந்த மார்பில் அவன் கை பட்டதும் மறுபடியும் உஸ்னம் பரவ ஆரம்பித்தது. ஸ்…ஆ…என்று உலர ஆரம்பித்தேன்.

முயல்குட்டிகளை காதைப்பிடித்து தூக்குவதுபோல என் காம்பு இரண்டையும் பிடித்து அவன் இழுக்கும்போது என்னை இன்பலோகத்துக்கு இழுத்துச்செல்வது போல இருந்தது..ஸ்..ஆ….ஆனந்தம் அதிலும் பேரானந்தம். இப்படி எல்லாம் இன்பம் இதிலே இருக்கிறதா என்று அப்போதுதான் நான் தெரிந்துகொண்டேன்.அவனுடைய இன்ப லீலைகளில் என் அங்கம் முழுவதும் அதிர்வு ஏற்ப்பட்டு என் அடித்தளத்தில் அனல் பற்றிக்கொண்டது. அதனால் நான் என் காலை எனக்கு கொஞ்சம் கீழே உட்கார்ந்திருந்த அவன் துடை மேலே போட்டுக்கொண்டு முனக ஆரம்பித்தேன். என் கால்களை அங்கு சென்றதும் அவன் கவனம் என் கால்களுக்கு வந்துவிட்டது.

என் முலைகளை விட்டுவிட்டு என் கால்களைத் தொட்டு தடவ ஆரம்பித்தான். அவனுடைய கைகள் என் பாதத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக என் தொடைக்கு முன்னேற ஆரம்பித்தது. எனக்கு ஒரு இனம் புரியாத வேதனை என்னால் தாங்க முடியாமல் தவித்தேன். என்னையும் அறியாமல் அவன் கைகள் என் தொடையில் விளையாட வசதியாக என் தொடைகளை அகட்டிக்கொடுத்தேன். ஆ…ஹ்..என்று என் முனகலில் அவனுக்கு நா வரண்டது. என் சேலை பாவாடையை கொஞ்சம் ஏற்றிவிட்டு என் பருத்த தொடையை பூப்போல நீவி விட்டான் ஆடவர் கைபடாத அந்த இடம் இன்று அவன் பக்கம் கொடுத்துவிட்டு என்னால் அமைதிகொள்ள முடியவில்லை. என் முட்டுக்கால் வரை என் பாவாடையை ஒதுக்கி வைத்துக்கொண்டு சங்கர் தன் ஒரு கையை என் பாவாடைக்குல் விட்டு எதையோ தேட ஆரம்பித்தான்.
அவனுடைய கை என் இரு தொடைக்கு நடுவிலேயும் அங்கும் இங்கும் அலைமோத ஆரம்பித்தது. அந்த அலைமோதலில் அவனுடைய கை தந்த இன்பத்துக்கு அளவே இல்லை. எனக்கு அது விருப்பம் இல்லாததுபோல என் கால்களை மறுபடி ஒட்டிக்கொண்டு டேய் சங்கர் ச்சீ வேண்டாண்டா அங்க எல்லாம் கையை விடாதே எனக்கு பயமா இருக்கு என்று கெஞ்சினேன். அதை அவன் நான் நல்லா கையைவிட்டு தடவச்சொன்னதுபோல நினைத்துக்கொண்டு இன்னும் கொஞ்சம் ஆழமாக கையை விட்டு என் இரு தொடைக்கு நடுவே உள்ள முக்கோன பகுதியைத் தொட்டுவிட்டான்.

அவ்வளவுதான் அந்த இன்பத்தில் எனக்கு என் உடலே மேலே பறப்பதுபோல இருந்தது. அவன் லீலைகளில் கலங்கிப்போயிருந்த என் கன்னிமேட்டில் அவன் கைபட்டு ஈரத்தில் வழுக்க ஆரம்பித்ததும் எனக்கு வெக்கமாகப் போய் விட்டது.
ஆசையே இல்லாததுபோல அவனிடம் நடந்துவிட்டு இப்போது உள்ளே பொங்கிக் கொண்டிருப்பதை அவன் தெரிந்துகொண்டால் நம்மைப்பற்றி என்ன நினைப்பான் என்று எனக்கு அவன் முகத்தைப்பார்க்க ஒரு மாதிரியாக இருந்தது. அதை புரிந்துகொண்ட அவன் என் காதருகே தன் தலையைக் கொண்டு வந்து என்ன அக்கா ஒன்னுமே தெரியாத மாதிரி பேசுனீங்க உள்ளே இப்படி ஆகியிருக்கே என்றான் இரகசியமாக. அதற்க்கு நான் ச்சீ போடா பொருக்கி நீ மட்டும் என்னவாம் எவ்வளவு அசிங்கமான வேலை எல்லாம் செய்யத் துனிஞ்சிட்டே என்று அவனை செல்லமாக திட்டினேன். உடனே அவன் மறுபடியும் என் காதருகே வந்து ரக்கசியமாக அக்கா ஒரு தடவை உங்க புண்டையை நான் பார்க்கட்டுமா என்றான். அந்த வார்த்தையில் என் அங்கமெல்லாம் அதிர்ந்துவிட்டது.

இதுவரைக்கும் இந்த வார்த்தையை பெண்கள் மூலமாகக்கூட நான் கேட்டது கிடையாது. அப்படி ஒரு வார்த்தையை அவன் சொன்னதும் எனக்கு அடுத்த வார்த்தை என்ன சொல்வதென்றே தெரியவில்லை.அந்த ஒரு அதிர்ச்சியில் அவனுடைய கையை தட்டிவிட்டுவிட்டு எழுந்துவிட்டேன்.ஆனால் அவன் என்னை விடுவதாக இல்லை. என் கால் இரண்டையும் பிடித்துக்கொண்டு கெஞ்சாத குறையாக அக்கா கோவிச்சுக்காதீங்க. நான் என்ன அப்படி தப்பா கேட்டுட்டேன் நான் இதுவரைக்கும் பொம்பளைங்களோடஅந்த இடத்தை போட்டோவுலதான் பாத்துருக்கேன் நேரில பாக்கனும்னு ரெம்ப நாளா எனக்கு ஆசையா இருக்கு அதனாலதான் கேட்டேன். நீங்க இந்த அளவுக்கு என்னோட பழகிட்டு இதுக்கு போயி கோவிச்சுக்கிட்டா என்ன அர்த்தம் என்று கொஞ்சினான். அவனைப் பார்க்க எனக்கு இரக்கமாகப் போய்விட்டது.மறுபடியும் அவன் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டேன்.
ஆனால் சம்மதித்தமாதிரி காட்டிக்கொள்ளவில்லை.அவனாக என்ன செய்தாலும் சரி என்று அவன் விருப்பத்திற்க்கு விட்டு விட்டேன். அவனுக்கு கவனம் எல்லாம் என்னோட அந்த இடத்தில்தான் இருக்கு என்பதை அவன் பார்வையில் இருந்தே தெரிந்துகொண்டேன். லேசாக ஓரக்கண்ணால் அவன் இடுப்புப் பகுதியைப் பார்த்தேன் காம போதையில் அவனுடைய ஆண்மை வேஷ்டியை தூக்கிக்கொண்டுநிற்ப்பது எனக்கு பளிச்சென்று தெரிந்தது. எனக்கு உள்ளூக்குல் சந்தோசம் பீறிட்டது.மறுபடி என் கால்களைத் தூக்கி அவன் மடியில் போட்டுக்கொண்டு சோம்பல் முறிப்பதுபோல் என் கால்களால் அவன் ஆண்மையை லேசாக தட்டி உசுப்பி விட்டேன். அவனுக்கு அது வேண்டும் என்பதுபோல என் கால்களைப் பிடித்து அந்த இடத்தில் வைத்து அழுத்திக்கொண்டு என்னுடைய ஒவ்வொரு கால் விரலாக பிடித்துஇழுத்து சொடுக்கிவிட ஆரம்பித்தான்

அவனுடைய ஒவ்வொரு இழுப்புக்கும் எனக்கு காமத்தை சுண்டி இழுப்பது போல வேதனை ஏற்ப்பட ஆரம்பித்தது. வாயைத் திறந்து கையை உள்ளே விட்டு நோண்டுடா என்று சொல்ல ஆசையாக இருந்தது. ஆனால் அவனிடம் அந்த அளவுக்கு வீராப்பாக பேசிவிட்டு இனி எப்படி இறங்கிப்போவதுஎன்று யோசனையாக இருந்தது.ஆனால் அவன் விடுவதாக இல்லை. மறுபடியும் என் சம்மதம் இல்லாமலேயே தன் வேலையைஆரம்பித்துவிட்டான். இன்னமும் அவன் கழட்டி விட்ட என்னுடைய ஜாக்கெட்டும் ப்ராவும் அப்படியே தான் பிரிந்து கிடந்தது. என் பக்கத்தின் இன்னும் கொஞ்சம் நெருங்கி உட்கார்ந்துகொண்டு என் ஒரு பக்க முலையை தன் இருகைகளாலும் பிடித்து கசக்கிவிட்டு என் முலைக்காம்பில் வாயை வைத்து சப்ப ஆரம்பித்தான் நான்சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் அவன் என் முலைக்காம்பில் வாயை வைத்ததும் எனக்கு என்னசெய்வதென்றே தெரியவில்லை. உணர்ச்சிவசப்பட்டவள் போல அவன் தலையை என் மார்போடு அழுத்தி பிடித்துக்கொண்டு முனக ஆரம்பித்தேன்.

டேய் சங்கர் கூசுதுடா வேண்டாம்டா வாயை எடுடா என்று என் வாய் உலரினாலும் என் கைஎன்னை அறியாமல் அவன் தலையை அழுத்திக்கொண்டுதான் இருந்தது. என் காம்பை தன் நுனிப்பல்லால் கடித்து கடித்து சப்பி என்னை அவன் வாய் வழி இன்பத்தால் வதைசெய்ய ஆரம்பித்தான். அவனுடைய கடியின் தின்மம் போகப்போக அதிகமாகிக்கொண்டே போனது அதற்க்குமேல் தாங்க முடியாமல் அவன் தலையை வெடுக்கெனபிடுங்கி என் உதட்டோடு அவன் உதட்டை வைத்து சப்ப ஆரம்பித்தேன். சங்கர் சங்கர் போதும்டா என்று என்னை அறியாமல் உலர ஆடம்பித்தேன்.என்னுடைய உதடும் அவனுடைய உதடும் உரசிக்கொண்ட வெப்பத்தில் மீண்டு என் கீழ் உதட்டின் பிளவுக்குள்ளே மதன நீர் பொங்க ஆரம்பித்தது. அந்த நேரம் பார்த்தா சங்கரும் அங்கே கையை விட வேண்டும்.அப்பா ! ஹ்……சொல்ல முடியாத வேதனையால் துடிதுடித்தேன். என்னுடைய பாவடைக்குள்ளே மறுபடியும் கையை விட்டு என் இன்ப மேட்டை இரண்டாக பிளக்கும் முயற்ச்சியில் ஈடுபட ஆரம்பித்தான். அவன் நடுவிரல் உள்ளேயும் மற்ற நான்கு விரல்கள் வெளியேயும் இருந்து என் முக்கோனப் பெட்டகத்தை மூச்சு முட்ட வைத்துக்கொண்டிருந்தது. என்னால் தாங்க முடியவில்லை.

அதற்க்குமேல் என்னால் தடுக்கவும் சக்தியில்லை. என் காலை நன்றாக அகட்டிக்கொடுதவாறு மேலே உள்ள படிக்கெட்டில் தலைவைத்து சாய்ந்துகொண்டு அவன் லீலைகளை என் கண்களை மூடி இரசிக்க ஆரம்பித்தேன். நான் நன்றாக அகட்டி கொடுத்தததும் அவன் வசதியாக உட்கார்ந்துகொண்டு ஒரு கையால் என் இன்பச் சுரங்கத்தின் உதட்டை பிரித்து வைத்து அதன் நடுவில் நீட்டிக்கொண்டிருந்த காமப் பருப்பை மற்றொரு கையால் பிடித்து கசக்க ஆரம்பித்தான்.

கசக்கி கசக்கி விட்டு தன் நடு விரலை என் மன்மத ஓட்டைக்குள் விட்டு விட்டு எடுத்தான். அந்த இன்பத்தில் காமம் எனக்கு கரைபுரண்டு ஓட ஆரம்பித்தது. சிரிது நேரம் அவனுடைய லீலைகளால் தென்னைமரக் காற்றின் சுகத்தில் என்னை மறந்து மறுபடி நினைவு வந்த மாதிரி இருந்தது எனக்கு. என்னுடைய அந்தரங்கப் பகுதியில் ஏதோ ஊர்வதுபோல ஒரு மாற்றம் சுகமாக இருந்தது. கண் விழிதேன் சங்கர் என் இரண்டு தொடக்கு நடுவிலேயும் மண்டி இட்டு கிடக்கும் காட்சி என் நரம்புகளை சுண்டி இழுக்க ஆரம்பித்தது. என் இன்ப மேட்டின் பிளவில் தன் நாக்கை விட்டு நோண்டிக்கொண்டிருந்தான் அவன்.
அந்த இன்பத்தில் என்னை அறியாமல் என் கால் இரண்டும் அவன் தலையைச் சுற்றி அவனுடைய தோல் மேல் விழுந்தது என் கை இரண்டும் அவன் பிரடியை இருக்கிப்பிடித்து என் இன்ப மேட்டில் அழுத்திக்கொண்டது. சங்கர் சப்புடா நல்லா சப்பு உனக்குத்தாண்ட நான் உன் இஷ்டப்படி நக்குடா என்று என்னை அறியாமல் அலறினேன். அவனோ என் அடிப்பகுதியில் முகம் புதைத்து முத்தெடுத்துக்கொண்டிருந்தான்.அதற்க்குமேல் என்னால் தாங்க முடியவில்லை. சங்கர் தலையை பிரித்தெடுத்து அவனை எழுந்து நிற்க்க வைத்துஅவனுடைய வேஷ்டிக்கு மேலே தூக்கிக்கொண்டு இருந்த ஆண்மையில் கையை வைத்து அழுத்தி பினைய ஆரம்பித்தேன்.
சங்கர் இதுக்குமேல நான் தாங்க மாட்டேன் இதை உள்ளே விடு என்று அவனிடம் கெஞ்சாத குறையாக கேட்டேன். அவனும் என் நிலைமையை புரிந்துகொண்டு என்னை அப்படியே அலேக்காக தூக்கி அந்த தண்ணீர் இல்லாத தண்ணீர்தொட்டியின் தரைப்பகுதியில் படுக்கவைத்து மண்டி போட்டு என் கால் பகுதியில்உட்கார்ந்து தண்ணுடைய நீண்ட தோலாயுதத்தை என் பிளவுக்கு வைத்து தினித்தான். என்னுல்லை ஏதோ ஒன்று இம்பமாக புகுந்துகொண்ட சந்தோசம். என் கால்களை தூக்கி அவன் இடுப்பை வளைத்துக்கொண்டேன். இன்ச் பைஇன்சாக அவனுடைய ஆண்மை என் இன்ப பிளவுக்குல் சொருக ஆரம்பித்தது. மதன நீரில் பொங்கிக்கொண்டிருந்த என் மர்ம தேசம் அவன் ஆண்மைக்கு இளகுவக வழி விட்டது. கொஞ்சம் கொஞ்சமா அவன் ஆயுதம் உள்ளே சென்று என் முக்கோன பெட்டகத்தை முழுவதுமாக ……

Related Posts Plugin for WordPress, Blogger...